search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai water"

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்ட விவசாய கிணறுகளில் இருந்து தினமும் 8 கோடி முதல் 12 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன.

    கடந்த ஆண்டு எதிர்பார்த்த மழை பெய்யாததால் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் 353 மி.மீட்டர் மழை மட்டுமே பெய்தது. இது வழக்கமாக பெய்யும் மழை அளவை விட 55 சதவீதம் குறைவு ஆகும்.

    ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் சென்னையில் வினியோகிக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    இதனால் இப்போதே சில இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலைதூக்கி உள்ளது.

    குடிநீர் தேவையை சமாளிக்க மாற்று ஏற்பாடுக்கு அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். தற்போது சென்னை மக்களுக்கு தேவையான குடிநீர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் 20 கோடி லிட்டர், வீராணம் திட்டத்தில் இருந்து 18 கோடி லிட்டர், ஏரிகளில் இருந்து 27 கோடி லிட்டர் என மொத்தம் 65 கோடி லிட்டர் பெறப்பட்டு வருகிறது.

    ஏரிகளில் தண்ணீர் தீர்ந்து விடும் நிலையில் இருப்பதால் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்ட விவசாய கிணறுகளில் இருந்து தினமும் 8 கோடி முதல் 12 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இது தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும் போது, ‘சென்னை குடிநீர் தேவைக்கு திருவள்ளூர் மாவட்ட விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    இதற்காக விருப்பம் உள்ள விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    மேலும் தேவைக்கு ஏற்ப சிக்கராயபுரம் கல்குவாரி, போரூர், கொளத்தூர், ரெட்டேரி ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்கவும் பணிகள் நடக்கிறது’ என்றார்.

    சென்னை நகர மக்களுக்கு புதிய நீர் ஆதாரமான ஏரி-குவாரிகளில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும் பட்சத்தில் குடிநீர் சப்ளை முழுமையாக பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ChennaiWater

    சென்னை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. கோடை காலத்தில் ஏரிகளில் நீர் இருப்பு குறையும் போது சென்னைக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது போரூர் ஏரி, சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து வினியோகிக்கப்பட்டது. இதனால் குடிநீர் தட்டுப் பாட்டை சமாளிக்க முடிந்தது.

    இதைத் தொடர்ந்து சென்னை குடிநீர் ஆதாரங்களை விரிவுபடுத்தவும் புதிய நீர் ஆதாரங்களை கண்டறியவும் சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் அசோக் டோஸ்ரே, செயல் இயக்குனர் பிரபு சங்கர் ஆகியோரின் கீழ் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டது.

    அவர்கள் பொதுப்பணித் துறை, மத்திய நிலத்தடி நீர் ஆணையம், அண்ணா பல்கலைக்கழகம், கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வு மற்றும் திட்டம் வகுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் சென்னையின் புதிய குடிநீர் ஆதாரங்களாக போரூர் ஏரி, ரெட்டேரி, மணிமங்கலம் அயனம்பாக்கம், திருநீர்மலை, நேமம், அயப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், தென்னேரி, தையூர், சிட்லபாக்கம், மாம்பாக்கம், அரசன் கழனி, பெரும்பாக்கம், கொரட்டூர் ஆகிய 15 ஏரிகள் கண்டறியப்பட்டு உள்ளன.

    இதே போல சிக்கராயபுரம், எருமையூர், நன்மங்கலம், பம்மல், பல்லாவரம், திருநீர்மலை, நல்லம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள 7 கல்குவாரி நீரையும் பயன் படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    புதிதாக கண்டறியப்பட்டுள்ள நீர் ஆதாரங்களான ஏரிகள் மற்றும் கல்குவாரிகளில் இருந்து தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இதன் முடிவை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இதற்கிடையே பலகட்ட ஆய்வுக்கு பிறகு ரெட்டேரியில் உள்ள நீரை சுத்திகரித்து குடிநீருக்கு பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி சென்னை குடிநீருக்கு தினசரி 1 கோடி லிட்டர் பெறும் வகையில் ரெட்டேரியில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

    சென்னை நகர மக்களுக்கு புதிய நீர் ஆதாரமான ஏரி-குவாரிகளில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும் பட்சத்தில் குடிநீர் சப்ளை முழுமையாக பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ChennaiWater

    ×