search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீராணம் ஏரி வறண்ட நிலையில் சென்னை குடிநீர் தேவைக்கு உதவும் நெம்மேலி கடல் குடிநீர் திட்டம்
    X

    வீராணம் ஏரி வறண்ட நிலையில் சென்னை குடிநீர் தேவைக்கு உதவும் நெம்மேலி கடல் குடிநீர் திட்டம்

    • சென்னையின் குடிநீர் தேவையில் 3-ல் ஒரு பங்கை வீராணம் ஏரி பூர்த்தி செய்து வந்தது.
    • 6 மாத காலத்திற்கு தேவையான குடிநீர் கைவசம் இருப்பதால் சென்னைக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

    சென்னை:

    சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மட்டுமின்றி வீராணம் ஏரியில் இருந்தும் ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தென்சென்னை பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இதில் வீராணம் ஏரி இப்போது வறண்டு விட்ட நிலையில் நெம்மேலியில் இருந்து வீராணம் குழாய் வழியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதுவும் தற்போது குறைந்துவிட்டது. இதனால் தென்சென்னை பகுதி மக்களுக்கு இப்போது நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தினமும் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையின் குடிநீர் தேவையில் 3-ல் ஒரு பங்கை வீராணம் ஏரி பூர்த்தி செய்து வந்தது. வீராணம் ஏரியில் இருந்து கிட்டத்தட்ட 90 மில்லியன் லிட்டர் தண்ணீரும் அங்குள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 90 மில்லியன் லிட்டர் என்.எல்.சி. தண்ணீரும் சென்னைக்கு வந்தது.

    ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வீராணம் ஏரி வறண்டதால் நெம்மேலியில் உள்ள கடல் குடிநீர் மூலம் தினமும் 200 எம்.எல்.டி.க்கு மேல் குடிநீர் கிடைத்து வருகிறது. இதன் மூலம் தென் சென்னை பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    இது மட்டுமின்றி திரிசூலம் கல்குவாரி மாங்காடு சிக்கராயபுரம், எருமையூர் கல்குவாரிகளில் இருந்தும் குடிநீர் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    6 மாத காலத்திற்கு தேவையான குடிநீர் கைவசம் இருப்பதால் சென்னைக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×