search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
    X

    சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

    சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைந்துள்ளதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த அளவே மழை பெய்து இருக்கிறது.

    சென்னையில் இதுவரை வடகிழக்கு பருவமழை 84 செ.மீ. பெய்து இருக்க வேண்டும். ஆனால் 35 செ.மீ. மட்டுமே பெய்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டில் 31 செ.மீ. மழைதான் பெய்து இருந்தது. தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

    பொதுவாக சென்னை மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 140 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 83 செ.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது.

    கடந்த 2003-ம் ஆண்டில் 31 செ.மீ. மழையே பெய்து இருந்ததால் அப்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உருவானது. அதே நிலை தற்போதும் ஏற்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர். சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் மூலம் இன்னும் 2 மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும்.



    எனவே குன்றத்தூர் அருகே உள்ள சிக்கராயபுரம் மற்றும் எருமையூரில் உள்ள கல்குவாரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ரெட்டேரி, அயனம்பாக்கம், பெரும்பாக்கம் ஏரிகளில் இருந்து குடிநீர் வழங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    மேலும் நெய்வேலியில் 240 மீட்டர் ஆழத்தில் 9 ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைத்து அதன்மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×