search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செக்ஸ் தொல்லை"

    திருவண்ணாமலை அருகே தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் 9 ஆண்டுகளாக செக்ஸ் தொல்லைக்கு ஆளான அனாதை இல்ல மாணவிகள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். #Orphanage #GirlsHarassment

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிபட்டு பகுதியில் தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் 47 சிறுமிகள் தங்கியிருந்தனர். கலெக்டர் கந்தசாமி கடந்த 17-ந் தேதி திடீர் ஆய்வு நடத்தினார். சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்பதால், அங்கிருந்த மாணவிளை பெரும்பாகத்தில் உள்ள காப்பகத்துக்கு மாற்ற உத்தரவிட்டார்.

    பின்னர் இந்த சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை அதிகாரிகளிடையே தெரிவித்தனர்.

    இதையடுத்து காப்பக உரிமையாளர் லூபன்குமார், அவரது மனைவி மெர்சிராணி, உறவினர் மணவாளன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காப்பகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது.

    இந்த காப்பகத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமிகள் அனைத்து மகளிர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர்.

    நான் தாய், தந்தையை இழந்த நிலையில் இந்த காப்பகத்தில் சேர்க்கப்பட்டேன். எனக்கு தற்போது 16 வயதாகிறது.

    காப்பபத்தில் கடந்த 9 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல நரக வேதனையை அனுபவித்து வந்தேன். வெளியில் சொல்ல எந்த உறவுகளும் இல்லை. காப்பகத்துக்கு வந்து பார்த்து செல்ல சொந்தங்களும் இல்லை என்று கதறி அழுதபடி தெரிவித்துள்ளார்.

    அவர்கள் சொல்வதை கேட்கவில்லை என்பதற்காக 9ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டனர். காப்பகத்துக்கு சொந்தமான பசு மாடுகளை மேய்க்க வைத்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த காப்பகத்தில் குறிப்பிட்ட 3 மாணவிகள் அதிக ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு தனி அறை ஒதுக்கி கொடுத்துள்ளனர்.

    அந்த 3 சிறுமிகளுக்கும் பெற்றோர் இல்லை கேட்க ஆள் இல்லாததால் அவர்களிடம் காப்பக நிர்வாகிகள் பயங்கரமாக தொந்தரவு செய்து வந்துள்ளனர். #Orphanage #GirlsHarassment

    காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி மாணவிக்கு ‘லிப்டில்’ செக்ஸ் தொல்லை கொடுத்த துப்புரவு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். #Arrested
    செங்கல்பட்டு:

    காட்டாங்கொளத்தூரில் பிரபல தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக் கழக வளாகத்திலேயே மாணவ-மாணவிகள் தங்குவதற்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கி உள்ளனர்.

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி பி.இ. இன்பர்மே‌ஷன் டெக்னாலஜி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று இந்த படிப்புக்கான தேர்வு மழையால் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு மாணவ-மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து தேர்வு உடனடியாக நடத்த வேண்டும் என்று நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நிர்வாகம் இதனை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆண்கள் விடுதியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் செட்டி புண்ணியம் பகுதியை சேர்ந்த அர்ஜூன் என்பவர் பெண்கள் விடுதியில் உள்ள கழிவு பொருட்களை எடுப்பதற்காக சென்றார்.

    அப்போது அவர் ‘லிப்ட்’ மூலமாக ஏறினார். அந்த நேரத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவியும் அதே லிப்ட்டில் ஏறினார். லிப்ட் சென்று கொண்டிருந்த போது அர்ஜூன் மாணவியிடம் ஆபாசமாக பேசினார்.

    மேலும் தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி மாணவிக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். இதற்குள் அந்த லிப்ட் குறிப்பிட்ட தளத்தை அடைந்து திறந்தது.

    உடனடியாக மாணவி அலறியடித்தபடி வெளியே ஓடினார். இதனைக்கண்ட மற்ற மாணவிகள் தொழிலாளி அர்ஜூனை பிடிக்க முயன்றனர். இதற்குள் அவர் தப்பி ஓடி விட்டார்.

    மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், மறைமலை நகர் போலீசிலும் மாணவிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் நேற்று நள்ளிரவு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் போலீஸ் தடுப்புகளை தாண்டி சாலையில் வந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒத்திவைக்கப்பட்ட தேர்வை ஜனவரி மாதத்தில் நடத்தவும், மாணவிக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்த தொழிலாளியை கைது செய்யவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனர். இதற்கிடையே மாணவிக்கு தொல்லை கொடுத்த தொழிலாளி அர்ஜூனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Arrested
    நெல்லை கலெக்டர் அலுவலக பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக அதிகாரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    நெல்லை:

    திருப்பூரை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மகள் சரண்யா (வயது27). இவருக்கும் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அபிநயா(8), கிருஷ்ணா(2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி கோர்ட்டில் சரண்யா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து தனது குழந்தைகளுடன் சரண்யா செங்கோட்டையில் தனியாக வசித்து வருகிறார்.

    சரண்யாவுக்கு தீக்காயத்தால் உடல் ஊனம் ஏற்பட்டது. இதையடுத்து கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்கவேண்டும் என நெல்லை கலெக்டரிடம் அவர் முறையிட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவில் தட்டச்சராக தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் சரண்யா மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சுகுணாசிங் ஆகியோரிடம் இன்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருக்கும் போது உயர் அதிகாரி ஒருவர் அடிக்கடி என்னிடம் இரட்டை அர்த்த வசனத்தில் பேசி வந்தார். விடுமுறை நாட்களிலும் என்னை பணிக்கு வரச்சொல்லி எனது அருகே அமர்ந்து எனக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்து வந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலுவலகத்தில் இருந்து வெளியேறி மாவட்ட உயர் அதிகாரியிடம் புகார் கூறினேன். பின்னர் மன உளைச்சல் காரணமாக 2நாள் விடுமுறை எடுத்து விட்டு பணிக்கு வந்தேன். அப்போது எனக்கு பதில் மற்றொருவர் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.

    விபரம் கேட்டதற்கு எனக்கு பணி இல்லை என மறுத்து விட்டனர். என்னிடம் ‘செக்ஸ் சில்மி‌ஷம்’ செய்த உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    அப்போது அவருடன் நெல்லை மாவட்ட ஜனநாயக மாதர் சங்க தலைவர் கற்பகம், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
    புதுக்கடை அருகே வீட்டில் தனியாக இருந்த பட்டதாரி பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    புதுக்கடை அருகே உள்ள கிள்ளியூர் வாழபழஞ்சிவிளையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவரது பக்கத்து வீட்டில் 22 வயது இளம்பெண் வசிக்கிறார். எம்.ஏ. பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. நேற்று இவரது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்தார்.

    அப்போது ராஜேஷ் அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தார். திடீரென அவர் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து செக்ஸ் தொல்லை கொடுத்தார். இதனால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். உடனே ராஜேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அந்த பகுதியினர் அங்கு கூடினர். ராஜேசின் செயல், அந்த பெண்ணுக்கு வேதனையை ஏற்படுத்தியது. இதனால் மனம் உடைந்த பெண், உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் இளம்பெண்ணிடம் நாகர்கோவில் மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற்றார். அவரிடம் அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜேஷ் எனக்கு அண்ணன் முறையாவார். நேற்று எனது பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டுக்கு வந்தார். சுத்தியல் வேண்டும் என என்னிடம் கேட்டார். எனது வீட்டில் டி.வி. சரியாக தெரியாததால் அதனை சரி செய்து தரும்படி அவரிடம் கூறினேன். அப்போது திடீரென அவர் என் மீது பாய்ந்து எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார். இதனால் ஏற்பட்ட மனவேதனையில் நான் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

    அதன்பேரில் புதுக்கடை போலீசார் ராஜேஷ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    கோவையை சேர்ந்த 38 வயது பெண்ணுக்க பேஸ்புக் மூலம் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக சோமனூரை சேர்ந்த தம்பதி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    வடவள்ளி:

    கோவை வடவள்ளியை சேர்ந்த 38 வயது பெண் சென்னையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு கோவை சோமனூரை சேர்ந்த ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டனர். அதன் பின்னர் நட்பு ரீதியாக பேசி வந்தனர்.

    இந்த நிலையில் அப்பெண் சென்னையில் இருந்து வடவள்ளி வந்து விட்டார். அதன் பின்னரும் சோமனூரை சேர்ந்தவர் நட்புடன் பேசி வந்தார். இதனால் அவரது பேஸ்புக்கிற்கு வடவள்ளியை சேர்ந்த பெண் தனது மகளுடன் இருக்கும் படத்தை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனை பார்த்த அவர் உன்னை விட உனது மகள் அழகாக இருக்கிறார் என கூறி அவரது மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக தெரிகிறது. மேலும் மார்பிங் செய்த படத்தை வெளியிட்டு விடுவேன். உனது மகள் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்து உள்ளார். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வடவள்ளி பெண் தனது பேஸ்புக்கில் சோமனூரை சேர்ந்தவர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை போலீசில் புகார் செய்து விடுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஆனால் தொடர்ந்து பேஸ்புக் மூலம் மிரட்டல் விடுத்து வந்ததால் அப்பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இது குறித்து விசாரணை நடத்தும் படி வடவள்ளி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து வடவள்ளி போலீசார் சோமனூரை சேர்ந்தவர், அவரது மனைவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்ததல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ள வடவள்ளி பெண் சென்னையில் வேலை பார்த்த போது இது போல் 4 பேர் மீது புகார் கொடுத்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    புதுச்சேரியில் பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாடலிங்காக பணியாற்றி வந்த பெண் ஊழியருக்கு ‘செக்ஸ்’ தொல்லை உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தில் அரசுக்கு சொந்தமான பாரதியார் பல்கலைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு கலைகள் தொடர்பான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பல்கலைக்கூடத்தில் அரியாங்குப்பம் வீராம்பட்டினம் தெருவை சேர்ந்த சுசிலா (வயது 63) என்ற பெண் மாடலிங்காக வேலை பார்த்து வந்தார்.

    சிற்பங்கள் வடிவமைக்க மற்றும் ஓவியங்கள் வரைய மாடலிங்காக போஸ் கொடுப்பது இவரது பணியாகும். பல்கலைக்கூடத்தில் ராஜேந்திரன் (58) என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று சுசிலா பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது ராஜேந்திரன் சுசிலாவிடம் சிறிய வேலை இருக்கிறது. எனது அறைக்கு வா என்று கூறினார்.

    அங்கு வந்த சுசிலாவிடம் ராஜேந்திரன் செக்ஸ் ரீதியாக அத்துமீற முயன்றதாக தெரிகிறது. உடனே சுசிலா அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

    இதுபற்றி அவர் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    ×