search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman employee"

    கிருஷ்ணகிரியில் உள்ள வங்கியில் கவரிங் நகைகளை வைத்து பெண் ஊழியர் லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக ஒரு பெண் உள்ளார். இவர் நகையை தரம்பார்த்து விட்டு அனுமதி கொடுத்த பிறகு தான் நகை கடன் கொடுப்பார்கள்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த பெண் ஊழியர் சிலரது துணையுடன் கவரிங் நகைகளை தங்க நகை என்று கூறி அடகு வைத்து பணம் மோசடி செய்து உள்ளார். இதேபோல வாடிக்கையாளர்கள் வைத்த நகைகளையும் மாற்றி அதற்கு பதிலாக கவரிங் நகைகளை லாக்கரில் வைத்து உள்ளார்.

    சமீபத்தில் வங்கி லாக்கரை மானேஜர் திறந்து பார்த்தபோது நகைகள் கருத்திருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்து இது குறித்து அந்த பெண் ஊழியரிடம் கேட்டார். அப்போது தான் கவரிங் நகைகளை தங்க நகை என்று கூறி அடகு வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு அந்த பெண் ஊழியரின் கணவரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசில் எதுவும் புகார் செய்யவில்லை. தற்போது அந்த வங்கியில் நகை கடன் கொடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நகைக்கடன் வாங்கியவர்கள் தொடர்பான விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

    இந்த ஆய்வு பணி முடிந்த பிறகு தான் எவ்வளவு மோசடி நடந்துள்ளது என்பது தெரியவரும். அதன் பிறகு போலீசில் புகார் கொடுத்து அந்த பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க மானேஜர் திட்டமிட்டுள்ளார்.
    புதுச்சேரியில் பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாடலிங்காக பணியாற்றி வந்த பெண் ஊழியருக்கு ‘செக்ஸ்’ தொல்லை உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தில் அரசுக்கு சொந்தமான பாரதியார் பல்கலைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு கலைகள் தொடர்பான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பல்கலைக்கூடத்தில் அரியாங்குப்பம் வீராம்பட்டினம் தெருவை சேர்ந்த சுசிலா (வயது 63) என்ற பெண் மாடலிங்காக வேலை பார்த்து வந்தார்.

    சிற்பங்கள் வடிவமைக்க மற்றும் ஓவியங்கள் வரைய மாடலிங்காக போஸ் கொடுப்பது இவரது பணியாகும். பல்கலைக்கூடத்தில் ராஜேந்திரன் (58) என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று சுசிலா பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது ராஜேந்திரன் சுசிலாவிடம் சிறிய வேலை இருக்கிறது. எனது அறைக்கு வா என்று கூறினார்.

    அங்கு வந்த சுசிலாவிடம் ராஜேந்திரன் செக்ஸ் ரீதியாக அத்துமீற முயன்றதாக தெரிகிறது. உடனே சுசிலா அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

    இதுபற்றி அவர் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஆரணியில் தோஷம் கழிப்பதாக கூறி தனியார் நிதி நிறுவன பெண் ஊழியரிடம் நூதன முறையில் ரூ.4 ஆயிரத்து 100-ஐ மோசடி செய்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி காந்தி ரோடு பகுதியில் தனியார் கூட்டுறவு சங்க நிதிநிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிதி நிறுவனத்தில் அம்சவேணி (வயது 22) என்ற ஊழியர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை 11 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது லுங்கி உடுத்திக்கொண்டு ஒரு நபர் வந்து அவரிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவர் உங்களுக்கு திருமணம் நடைபெறாததற்கு காரணம் தோஷம் உள்ளது. அதை நீக்கினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறினார்.

    இதையடுத்து அந்த நபர் மாந்திரீக செயலில் ஈடுபடுவது போன்று சைகை காட்டினார். பின்னர் அம்சவேணி சுயநினைவை இழந்து விட்டார்.

    அப்போது அவர் பணப்பெட்டியில் இருக்கும் பணத்தை கேட்டவுடன் அதில் இருந்த பணத்தை அம்சவேணி எடுத்து அவரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த நபர் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

    சிறிதுநேரம் கழித்து சுயநினைவு வந்ததும் அம்சவேணி பணப்பெட்டியை பார்த்தபோது அதில் இருந்த ரூ.4 ஆயிரத்து 100-ஐ காணவில்லை. அந்த நபர் பணத்தை நூதன முறையில் அபேஸ் செய்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து நிதிநிறுவன ஊழியர்களிடம் அம்சவேணி தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து ஊழியர்கள் வெளியே சென்று அவரை தேடினர். அப்போது அந்த நபர் பக்கத்து தெருவில் நின்று கொண்டிருந்தார். அவரை ஊழியர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து பணத்தை வாங்கிக் கொண்டு அவரை ஆரணி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் செய்யாறு தாலுகா மேல்பூதேரி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 25) என்பதும், ‘பூம்பூம்’ மாட்டுக்காரர் என்பதும் தெரிய வந்தது. மேலும் சந்தோசிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×