என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கீதா"

    • ஒரே காரில் வந்த இருவரும், ஒரே நிறத்தில் ஆடைகள் அணிந்துவந்ததும் கவனம் ஈர்த்துவருகிறது.
    • நடிகை ஒருவருடன் உடனான தகாத உறவே விவாகரத்திற்கு காரணம்

    AGS குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமணம் இன்று சென்னையில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் மாலை திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    ஒரே காரில் வந்த இருவரும், ஒரே நிறத்தில் ஆடைகள் அணிந்துவந்ததும் கவனம் ஈர்த்துவருகிறது. கடந்தவாரம் விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடமிருந்து விவாகரத்துக்கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நடிகை ஒருவருடன் உடனான தகாத உறவே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த விவாகரத்திற்கு நடிகை த்ரிஷாவுடனான தொடர்புதான் காரணம் என சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. எனினும், இது குறித்து விஜய் அல்லது த்ரிஷா தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வமான விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இருவரும் ஒன்றாக விழாவில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
    • கடந்த 2 நாட்களாக இவ்விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின.

    நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் விஜய். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஹா என்ற மகளும் உள்ளனர். சினிமாத்துறையில் விஜய் பயணித்த காலத்திலேயே அவர் குடும்பத்தினருடன் விலகி இருந்ததாக தகவல் வெளியாகி வந்தன. இதற்கு இருதரப்பினரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

    இதனிடையே விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி கடந்த 27-ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் அவரது மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளதாகவும் இம்மனு மீது ஏப்ரல் 20-ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது. மனுவில் விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். கடந்த 2 நாட்களாக இவ்விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின.

    இந்த நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாகிராம் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது இன்ஸ்டாவில் தனது தந்தை விஜயைப் பின்தொடர்வதை ஜேசன் நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    விவகாரத்து குறித்த தகவல் வெளியான பிறகே Unfollow செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் சிலர் ஜேசன், விஜயின் இன்ஸ்டா பக்கத்தை பின் தொடர்ந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் கூறுகின்றனர்.

    • விஜய் இடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளள்ளார்.
    • பிரபல நடிகை உடனான தொடர்பே இந்த விவாகரத்து முடிவுக்கு காரணம் என சங்கீதா தெரிவித்துள்ளார்.

    முக்குலத்தோர் புதுப்படைத் தலைவர் கருணாஸ் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி குறித்து திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், "வரும் சட்டமன்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று தெரிவித்தார்.

    அப்போது விஜய் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அந்த கேள்வியால் கடுப்பான கருணாஸ், "ஹேப்பி மூடுல இருக்கேன்.. இப்ப எதுக்கு விஜய் பற்றி? அவரே மன உளைச்சல்ல இருப்பார்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    தவெக தலைவரான விஜய் இடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளள்ளார். பிரபல நடிகை உடனான தொடர்பே இந்த விவாகரத்து முடிவுக்கு காரணம் என சங்கீதா தெரிவித்துள்ளார். இதை குறிப்பிடும் வகையில் தான் கருணாஸ் அவரே மன உளைச்சல்ல இருப்பார் என்று தெரிவித்துள்ளார். 

    • பிரபல நடிகை ஒருவருடன் விஜய்க்கு தகாத உறவு இருப்பதே இந்த முடிவுக்கு காரணம் எனவும் தெரிவித்தார்.
    • இந்த செய்தி விஜய் ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தவெக தலைவருமான விஜய் இடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் ஒன்றாக இல்லை என்றும், குடும்பத்தில் பிரச்சனை என்றும் தகவல்கள் வெளியான நிலையில் இன்று அது உறுதியாகி உள்ளது. பிரபல நடிகை உடனான தொடர்பே இந்த விவாகரத்து முடிவுக்கு காரணம் என சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.

    இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போதுவரை இந்த குற்றச்சாட்டுக்கு விஜய் தரப்பிலிருந்து எந்தப் பதிலும், மறுப்பும் வரவில்லை. இந்த வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் ஏப்.20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

    விஜய் மற்றும் சங்கீதா ஆகியோருக்கு 1999-இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

    சங்கீதாவின் விவாகரத்து மனு இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், இதுகுறித்து பேசிய ஒரு இளம்பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், தளபதிக்கு 1000 தங்கச்சி இருக்கும், 1000 அக்கா இருக்கோம், பொண்டாட்டியா கூட இருந்துட்டு போறோம், எங்க தளபதிக்காக நாங்க நிப்போம்" என்று அப்பெண் பேசியுள்ளார். 

    • எம்.ஜி.ஆருக்கும் சோதனைகள் ஏற்பட்டது.
    • அநாகரிகமான அரசியல் செய்பவன் நான் அல்ல.

    சென்னை:

    நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படும் இந்த விவகாரம் பற்றி முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

    நடிகர் விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி கடந்த டிசம்பர் மாதமே செங்கல்பட்டு கோர்ட்டில் மனு கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தை பொறுத்தவரை விஜய், அவரது மனைவி சங்கீதா, நீதித்துறை ஆகிய 3 பேருக்கும் சம்பந்தப்பட்டது. அதுவும் தனிப்பட்ட மனிதருக்கான, தனிப்பட்ட வாழ்க்கை விஷயம்.

    விஜய்யின் அரசியல் பற்றி கருத்து கேட்டால் எப்போதும் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. மனைவி, கணவர் ஆகிய இருவரும் எங்கிருந்தாலும் அவர்களுக்குள் சந்தோசம் நிலைக்கட்டும். அவர்களுக்கு அமைதி கிடைக்கட்டும்.

    அரசியல் ரீதியாக இதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் இந்த விவகாரம் விஜய்க்கும், அவரது மனைவிக்கும் நீதித்துறைக்கும் இடையேயான பிரச்சனையாகத்தான் பார்க்கிறேன்.

    எப்போதுமே அரசியலுக்கு வந்துவிட்டால் தீப்பந்தத்துக்குள் நுழைந்து வெளியே வருவது மாதிரி தான். அதுவரை தோண்டப்படாத தனிப்பட்ட வாழ்க்கையையும் தோண்டுவார்கள். இது விஜய்க்கு மட்டுமல்ல, எல்லா தலைவர்களுக்கும் இருந்ததுதான்.

    அரசியலுக்கு வரும் போதே இதை விஜய்யும் உணர்ந்தே வந்திருப்பார் என்று நினைக்கிறேன். இதையும் கடந்துதான் அவர் போக வேண்டும். இதையும் தாண்டிதான் அவரது அரசியல் இருக்கிறது. இவற்றை எல்லாம் பார்த்து மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? என்பது எல்லாம் தேர்தலில்தான் தெரிய வரும்.

    விஜய்யை பொறுத்தவரை இது அவருக்கு தீயை எதிர்கொள்ளும் சோதனையை போன்றதுதான். அரசியலுக்கு வராமல் நிம்மதியாக வீட்டில் இருந்து இருக்கலாம். நட்சத்திர அந்தஸ்துடன் இருந்து இருக்கலாம். நான் கையை தூக்கினால் 1 லட்சம் பேர் ஆரவாரம் செய்வார்கள் என்றெல்லாம் நினைக்கலாம்.

    சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான். எத்தனையோ பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வந்த பிறகு இதைப் போன்ற அழுத்தங்களையும், சோதனைகளையும் தாண்டியே வந்து இருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கும் சோதனைகள் ஏற்பட்டது. எனவே இதில் பாசிட்டிவ், நெகட்டிவ் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை.

    விஜய் இதை எல்லாம் கடந்துதான் சென்றாக வேண்டும். இதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டும். நியாய தர்மங்களை தாண்டிதான் அவர் பயணம் செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட ஒருவருடைய வாழ்க்கையாகவே பார்க்கிறேன். தனிப்பட்ட மனிதனைப் பற்றி விமர்சனம் செய்து அநாகரிகமான அரசியல் செய்பவன் நான் அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை
    • கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    பிரபல நடிகை ஒருவருடன் விஜய்க்கு தகாத உறவு இருப்பதே இந்த முடிவுக்கு காரணம் எனவும் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், சுமூகமாகப் பிரிய பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்ததால் நீதிமன்றத்தை நாடியதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போதுவரை இந்த குற்றச்சாட்டுக்கு விஜய் தரப்பிலிருந்து எந்தப் பதிலும், மறுப்பும் வரவில்லை. இந்த வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் ஏப்.20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

    விஜய் மற்றும் சங்கீதா ஆகியோருக்கு 1999-இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

     

    • முழுவழக்கு விசாரணையும் கேமராவில் பதிவுசெய்யப்படவேண்டும்.
    • நடிகை இருவரும் இருக்கும் படங்களை தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுவந்தார்.

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தவெக தலைவருமான விஜய் இடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் ஒன்றாக இல்லை என்றும், குடும்பத்தில் பிரச்சனை என்றும் தகவல்கள் வெளியான நிலையில் இன்று அது உறுதியாகி உள்ளது. பிரபல நடிகை உடனான தொடர்பே இந்த விவாகரத்து முடிவுக்கு காரணம் என சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.

    செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது;

    ஆரம்பத்தில் திருமணவாழ்க்கை சுமூகமாகவும், நன்றாகவும் சென்றது. அவர் வசதியான வாழ்க்கைமுறையை கொடுத்தார். நான் எனது வாழ்க்கையை வீட்டிற்காகவும், குழந்தைகளுக்காவும், அவருடைய நலனுக்காகவும் அர்ப்பணித்தேன்.

    குடும்பத்துடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றோம். நான் ஆண்டுதோறும் லண்டனில் உள்ள எனது பெற்றோரை சந்தித்துவந்தேன். அவர் என்னை திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துச் சென்றார்.  திருமண வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சனை வந்தாலும், அதனை சமாளித்து வாழ்க்கையை தொடர்ந்தோம். 

    இச்சூழலில் 2021-ல் அவர் வேறு நடிகையுடன் தவறான உறவில் இருந்ததை அறிந்தேன். இது எனக்கு ஆழ்ந்த மனவேதனையும், மன உளைச்சலையும் தந்தது. இது திருமண உறவின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கைக்கு இழைத்த துரோகமாகும். நடிகை உடனான உறவை முறித்துக்கொள்வதாக என்னிடம் உறுதியளித்தப் பின்னும் எவ்வித குற்ற உணர்வும் இன்றி, மீண்டும் அந்த தவறான உறவைத் தொடர்ந்தார். இது என்னை மேலும் மேலும் வேதனைக்கு உட்படுத்தியது.

    செப்டம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை வழக்கறிஞர் மூலம் பேசி பிரச்சனையை தீர்க்க முயன்றோம். ஆனால் எந்த உடன்பாடும் எட்டவில்லை. மறுபுறம் குழந்தைகளின் படிப்பு மற்றும் அவர்களின் உணர்வுகளை கருத்தில்கொண்டு இந்த வழக்கை ஒத்திவைத்தோம்.

    இதனைத்தொடர்ந்து என்னை உடல், உணர்ச்சி, மனரீதியாக ஒதுக்கிவைத்தார். என்னுடனான தாம்பத்ய வாழ்க்கையிலிருந்து முழுமையாக விலகி, சமூக மற்றும் தொழில் வாழ்க்கை என அனைத்திலும் என்னை ஒதுக்கிவைத்தார். ஒரே வீட்டிற்குள் தனித்தனியாக வாழ்ந்துவந்தோம்.

    மறுபுறம் அந்த குறிப்பிட்ட நடிகையுடன் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டார். நடிகை அதுதொடர்பான படங்களை தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுவந்தார். ஆனால் அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், மறைமுகமாக ஆதரவு கொடுத்துவந்தார். இந்தப் பதிவுகள் எனக்கும், எனது குழந்தைகளுக்கும் மீண்டும் மீண்டும் அவமானத்தை தந்தது. இந்த செயல் எங்களுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை கொடுத்தது.

    தேவையற்ற விளம்பரத்தை தவிர்க்கவும், அனைத்து தரப்பினரின் மாண்பை காக்கும்வகையிலும் அந்த நடிகையின் பெயரை குறிப்பிடுவதை தவிர்க்கிறேன். ஆனால் தேவைப்படும் பட்சத்தில் அவரை இரண்டாவது பிரதிவாதியாக சேர்ப்பேன். குறிப்பிட்ட நடிகையை 2வது பிரதிவாதியாகச் சேர்க்க நீதிமன்றம் அனுமதி அளிக்கவேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை தேவை ஏற்பட்டால் அதற்கான ஆதாரங்களையும் சமர்பிப்பேன்.

    2024-ல் நடிகை மற்றும் அவர் தொடர்பான செய்திகள் அதிகம் வெளிவந்தபோது மன உளைச்சல் அதிகமானது. பொது அவதூறுகளை தவிர்க்காமல், அமைதியாக இருந்தார். வருத்தப்படுவதற்கு பதிலாக வீட்டில் எனக்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தார். பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். 

    ஒவ்வொரு முறையும் தனது வழக்கறிஞர்மூலம் அவர் அளிக்கும் பதில்கள் அவரது நிதி உதவி மற்றும் மேலாதிக்கத்தையே பிரதிபலித்தன. இது எனக்கு மேலும் அவமானத்தை தந்தது. இதை ஒருபோதும் என்னால் மன்னிக்கமுடியாது, இந்த செயலை ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன். தேவைப்பட்டால் அந்த கடிதங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க அனுமதி கோருகிறேன். 

    எப்போதோ இந்த பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. வெறும் காகிதத்தில் மட்டும்தான் இந்த உறவு நீடிக்கிறது. மீண்டும் சரிசெய்ய முடியாத அளவிற்கு இந்த உறவு முறிந்துவிட்டது. தொடர்ச்சியான மன வேதனை, கண்ணியமின்மை, அவமானம் மற்றும் துயரத்தின் ஊற்றாக மாறியுள்ள இந்த உறவில் என்னால் இனி தொடரமுடியாது. 

    அவரின் தகாத உறவினால் பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் தொடர்ச்சியான அவமானங்கள் எழுந்தபோதும் அவரது பொது வாழ்க்கையையும், புகழையும் கருத்தில் கொண்டு, இப்பிரச்சனையை சுமூகமாக தீர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். ஒருபுறம் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினாலும், மறுபுறம் அவரை நேரடியாக சந்தித்து இருவரும் கௌரவமான முறையில் பிரிந்து செல்வது குறித்து பேசினேன். இதில் கடைசி முயற்சி 09.11.2025 அன்று நடைபெற்றது. எனது அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. 

    எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனவேதான் இந்த நீதிமன்றத்தை நாடி விவாகரத்துக் கோருகிறேன். இந்த முழுவழக்கு விசாரணையும் கேமராவில் பதிவுசெய்யப்படவேண்டும். யூடியூப், ஃபேஸ்புக் போன்ற எந்த சமூக ஊடங்களிலும் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கும், அச்சு ஊடகங்களிலும் எங்கள் விவாகரத்து தொடர்பான செய்திகளை வெளியிடவேண்டும் எனவும் கேட்டுகொள்கிறேன். 

    மேலும் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரையில் திருமண வீட்டில் வசிக்கும் உரிமையை எனக்கு வழங்கவேண்டும். அவரது வருமானம், சமூக அந்தஸ்துக்கு ஏற்ப நியாயமான மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் வழங்கவும் உத்தரவிட வேண்டும். வழக்கு விசாரணைக்காக செலவுகளையும் அவரே ஏற்க உத்தரவிடவேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார்.
    • அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார்.

    நடிகரும், தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு 73வது எண்ணாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், விஜய்க்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரியவந்தது.

    நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.

    இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம்.

    விஜயுடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை 'அந்த நடிகை' சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

    அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார்.

    நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக முதலில் கூறியும், நடவடிக்கையில் மாற்றமில்லை.

    திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.

    நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள கள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • சங்கீதா விஜயை பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் விவாகரத்து கோரி மனு.
    • விஜய்க்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகக் குற்றச்சாட்டு.

    நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சங்கீதா, விஜயை பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    விஜய்க்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகக் குற்றம்சாட்டி சங்கீதா விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • மதுரை மாவட்டத்தின் 3-வது பெண் கலெக்டராக சங்கீதா இன்று பொறுப்பேற்றார்.
    • தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியை சேர்ந்தவர்.

    மதுரை

    தமிழக அரசு அண்மை யில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்ட கலெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மாவட்ட கலெக்ட ராக இருந்த அனீஷ் சேகர் இடமாற்றம் செய்யப்பட்டு எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

    வணிக வரித்துறை இணை கமிஷனராக இருந்த சங்கீதா மதுரை மாவட்ட கலெக்டராக நியமிக்கப் பட்டார். அவர் இன்று மதுரை கலெக்டர் அலுவல கத்தில் கோப்பில் கையெ ழுத்திட்டு கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண் டார்.

    தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம் பட்டியை சேர்ந்த சங்கீதா, தமிழக அரசின் குரூப் 1 அலுவலராக பணி நியமனம் பெற்று, 2016 -ம் ஆண்டு பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். தகுதி பெற்றார். அதன்பின் தற்போது மதுரை மாவட்ட கலெக்டராக சங்கீதா பொறுப்பேற்று உள்ளார்.

    மதுரை மாவட்ட கலெக்டராக சந்திரலேகா 1984-85-ம் ஆண்டிலும், கிரிஜா வைத்தியநாதன் 1991-92-ம் ஆண்டிலும் பணிபுரிந்துள்ளனர். தற்போது மாவட்டத்தின் 3-வது பெண் கலெக்டராக சங்கீதா பொறுப்பேற்று உள்ளார்.

    • ‘மாஸ்டர்’, ‘வீட்டுல விசேஷம்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை சங்கீதா.
    • இவர் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    சென்னை, கே.கே.நகர் பிடிராஜன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை சங்கீதா. இவர் நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்', ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான 'வீட்டுல விசேஷம்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகை சங்கீதாவின் வீட்டு வாசலில் இருந்து காலணிகள் மாயமாகிவுள்ளது. இதையடுத்து நடிகை சங்கீதா குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில், இரண்டு இளைஞர்கள் அவரது காலணிகளை திருடிக் கொண்டு லிப்டில் சென்றது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்சியடைந்த சங்கீதா இந்த செயலுக்கு எச்சரிக்கை தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், பாதுகாப்புக்காக தான் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறோம். சாதாரணமாக இரண்டு பேர் உள்ளே நுழைந்து காலணிகளை திருடிச் சென்றது வேதனை அளிக்கிறது. எந்த நோக்கத்திற்காக அந்த இளைஞர்கள் இங்கு வந்தார்கள், எதுவும் கிடைக்காததால் காலணிகளை திருடிச் சென்றார்களா? என்று தெரியவில்லை என கூறினார். மேலும், ஒரு எச்சரிக்கைக்காக இந்த வீடியோவை வெளியிடுவதாகவும் இது குறித்து போலீசில் புகாரளிக்கவுள்ளதாகவும் நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • ரெடின் கிங்ஸ்லி கட்டா குஸ்தி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், ஜெயிலர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
    • சீரியல் நடிகை சங்கீதா பாரிஸ் ஜெயராஜ், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. வித்தியாசமான முக பாவனைகளால் சிரிக்க வைக்கும் இவரது காமெடிக்கு ரசிகர் கூட்டம் உள்ளது.

    இவர் கோலமாவு கோகிலா, எல்.கே.ஜி., டாக்டர், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், ஏஜண்ட் கண்ணாயிரம், காரி, கட்டா குஸ்தி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், ஜெயிலர் என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சீரியல் நடிகையான சங்கீதா பாரிஸ் ஜெயராஜ், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

     

     

    தமிழ் சினிமாவில் தனி கவனம் பெற்று வரும் காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துள்ளார். இவரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திருமணம் செய்து கொண்டுள்ள ரெடின் மற்றும் சங்கீதா தம்பதிக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    ×