search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்க்கும் முகாம்"

    • மக்களுடன் முதல்வர் என்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் கொடைக்கானலில் நடந்தது.
    • திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கொடைக்கானல்:

    மக்களுடன் முதல்வர் என்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் கொடைக்கானலில் நடந்தது. கொடைக்கானல் நகராட்சியில் உள்ள 17, 18, 21 ஆகிய 3 வார்டுகளை தேர்வு செய்து அந்த பகுதியில் உள்ள மக்களின் குறைகளை ஆன்லைன் மூலம் பெற்று அதற்கான தீர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொடை க்கானல் நகர் மன்ற தலை வர் செல்லதுரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு மனுக்கள் பெற்றனர். 500க்கும் அதிகமான பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய மனுக்கள் அளித்தனர்.

    இவர்களுக்கு உடனடி யாக ஆன்லைன் மூலம் பதில் அளிக்க ப்பட்டது. குறைதீர்க்கும் முகாமில் புதிய இலவச வீட்டு மனை பட்டாக்கள், புதிய வீட்டு வரி மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் ஆன்லைன் மூலம் அளிக்கப்பட்டது. 30 தினங்களுக்குள் இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்க ப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒரே இடத்தில் அனைத்து துறை அலுவலர்கள் ஒன்று சேர்ந்து பொது மக்களுடைய குறைகளை கேட்டறிந்து அவர்களுக்குரிய நிவா ரணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    • தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
    • குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20ந் தேதி காலை 11.00 மணியளவில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

    எனவே, தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம். இந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அடுத்து நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகளிடம் நேரிடையாக தெரிவிக்கப்படும்.

    எனவே, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • 250 மனுக்கள் பெறப்பட்டது

    சிவகங்கை

    திருப்பத்தூரில் தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணையம், சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர் பான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. தேசிய குழந்தை உரிமை கள் பாதுகாப்பு ஆணைய பதிவாளர் கோமதி மனோஜா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் இருந்து 250 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களில் 8 மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செவித் திறன் கருவி, மடக்கு சக்கர நாற்காலி, மாற்றுத் திறனாளி அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டது.

    இதில் கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், காவல்துறை, குழந்தைகள் நலக்குழு, இளைஞர்; நீதிக் குழுமம், சட்டப் பணிகள் ஆணைக்குழு, தொழிலாளர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலகம் ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நாளை (13-ந் தேதி) ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்
    • பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர் அறிவுரைப்படி சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நாளை (13-ந் தேதி) ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

    இக்குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். செல்போன் எண் பதிவு மற்றும் செல்போன் எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்று உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.நாளை (13-ந் தேதி) ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில்

    பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்- 2019 -ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    தேசிய குழந்தை உரிமை கள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் நாளை (14-ந் தேதி) திருப்பத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    இதில், காணாமல் போன குழந்தைகள், கடத்தி செல்லப்பட்ட குழந்தைகள், நிதி ஆதரவு (மாதம் ரூ.4000 வீதம்) குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்> ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் தேவைப்படும் குழந்தைகள், குழந்தை திருமணம், கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம், சட்ட உதவி, குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளார், கொத்தடிமை குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள், சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகள், போதை பொருள் பயன்பாடு ஆகியவை தொடர்பாக பொதுமக்கள், குழந்தைகள் இம்அமர்வில் கலந்து கொண்டு நேரடியாக புகார் மனுக்களை அளிக்கலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பல்லடம் தாலுகாவில் பொங்கலூர் கிராமத்துக்கு பொங்கலூர் தமிழ்நாடு வாழ்வாதார இயக்க இ-சேவை மையத்திலும் முகாம் நடக்கிறது.
    • பொதுமக்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல்,புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்: 

    திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வருகிற 14-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களிலும் நடைபெறுகிறது. அதன்படி அவினாசி தாலுகாவில் சேவூர் கிராமத்திலும், தாராபுரம் தாலுகாவில் சூரியநல்லூர் கிராமத்திலும், மடத்துக்குளம் தாலுகாவில் துங்காவி கிராமத்திலும், திருப்பூர் வடக்கு தாலுகாவில் கணக்கம்பாளையம் கிராமத்திலும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் மங்கலம் கிராமத்திலும், உடுமலை தாலுகாவில் கணபதிபாளையம் கிராமத்திலும், ஊத்துக்குளி தாலுகாவில் விருமாண்டம் பாளையம் கிராமத்திலும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    காங்கயம் தாலுகாவில் சேனாபதி பாளையம் கிராமத்துக்கு வேலப்ப நாயக்கன் வலசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், பல்லடம் தாலுகாவில் பொங்கலூர் கிராமத்துக்கு பொங்கலூர் தமிழ்நாடு வாழ்வாதார இயக்க இ-சேவை மையத்திலும் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் அனைத்து குடிமை பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு மனுக்களுக்கு உடனடி தீர்வு காண்பார்கள். பொதுமக்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல்,புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 512 மனுக்கள் பெறப்பட்டன.
    • துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலெக்டர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த 512 மனுக்கள் பெறப்பட்டன.

    பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

    கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு நிவாரணத் தொகையாக 2 பயனாளி களுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை, ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள், 2 பயனாளி களுக்கு சலவை பெட்டி களும் என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாநகராட்சி சார்பில் 5-ந்தேதி குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • காலை 10 மணி முதல் 12.30 வரை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி வருகிற 5-ந்தேதி (செவ்வாய்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் தலைமையில் நடைபெற உள்ளது. மண்டலம் 4-ல் உள்ள வார்டுகள் செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவத நல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜபுரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லெட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழவெளி வீதி, கீரைத்துறை, வில்லா புரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய வார்டு பகுதி மக்கள் பங்கேற்கலாம்.

    இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெற இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    • நிலத்தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுக்கப்பட்ட மொத்தம் 118 புகார் மனுக்களும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
    • போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனு தாரர்ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்ட னர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட போலீசார் சார்பில் வாரந் தோறும் புதன்கிழமை தரும புரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொது மக்கள்குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்களை நேரில் வர வழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    நிலத்தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுக்கப்பட்ட மொத்தம் 118 புகார் மனுக்களும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த விசாரணையில் 97 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 21 மனுக்கள் தொடர் விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முகாமில் தருமபுரி டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, சரவணன், செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • மேலும் விபரங்களுக்கு, 91500 57749 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    சிவகங்கை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிவ கங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2-வது செவ்வாய்கி ழமை சிவகங்கை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டப் பயனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.

    அதில் முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் இ-சேவை மையம் மூலமாக விண்ண் பித்து பல வருடங்கள் கடந்தும் வைப்புத்தொகை ரசீதுகள் கிடைக்கப் பெறாமல் உள்ள பயனாளி கள் ஒப்புகை ரசீதுடன் கூடிய இணைய வழி விண்ணப்பத்துடனும், 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுத் தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகளும், வைப்புத்தொகை பத்திர நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் பயனாளியின் நடப்பில் உள்ள வங்கிக் கணக்கு புத்தக முகப்பு நகல், பயனாளியின் (தாய் மற்றும் மகள்) 2 பாஸ்போர்ட் புகைப்படம் ஆகிய உரிய சான்றுகளுடன், இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு, 91500 57749 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 256 மனுக்கள் பெறப்பட்டது.
    • உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 256 மனுக்கள் பெறப்பட்டது. மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

    பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்க ளுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்க ளிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவு றுத்தினார்

    தொடர்ந்து, அழகன்குளம் ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த சித்ராதேவி இயற்கை மரணம் அடைந்ததை யொட்டி ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை தாட்கோ தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வாரிசுதாரரிடம் கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) அபிதா ஹனிப், மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன், தாட்கோ மாவட்ட மேலாளர் தியாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாநகராட்சி மண்டலம் 2-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
    • இந்த தகவல் மதுரை மாநகராட்சியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்க ளுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வருகிற

    22-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற உள்ளது.

    மண்டலம் 2 (வடக்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: விளாங்குடி, கரிசல்குளம், ஜவஹர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின் ரோடு, அய்யனார் கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்ன சொக்கிக்குளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய வார்டுகள்.

    இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு காணலாம்.

    இந்த தகவல் மதுரை மாநகராட்சியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×