search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்க்கும் நாள்"

    • திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
    • 22-ந் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 22-ந் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 382 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துணை ஆணையாளர் (கலால்) ராம்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவுத்துறை குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் நாளை (23-ந்தேதி) கூட்டுறவுத்துறை சார்பில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நாளை மாவட்ட கலெக்டர் தலைமையில் கொட்டாம்பட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதால், கூட்டுறவுத்துறை குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு, அன்று மாலை 3 மணியளவில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடத்தப்பட உள்ளது. அந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இந்த தகவலை மதுரை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். 

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 638 மனுக்கள் வரப்பெற்றன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 638 மனுக்கள் வரப்பெற்றன.

    இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட கலெக்டர் சாந்தி, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இக்கூட்டத்தில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன், உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) தமிழரசன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் விவசாயிய, விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீர்வுகாணலாம்.

    தேனி:

    பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக வருகிற 21-ந்தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும்கூட்டம் நடைபெற உள்ளது.

    மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிய, விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீர்வுகாணலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது.
    • இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 109 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.15 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வழங்கினார்.

    சேலம்:

    ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், இன்று மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா அவர்கள் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 295 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், மாற்றுத்திறனாளி களிடமிருந்து 16 மனுக்கள் வரப்பெற்றன.

    முன்னதாக, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 109 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.15 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வழங்கினார்.

    இக்கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
    • ரூ.1.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அம்ரித் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 83 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இதையடுத்து ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி கோரும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில், வருவாய்த்துறை சார்பில், பந்தலூர் வட்டம் புஞ்சவ யல் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரின் மகன்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சிக்காகவும், கோத்தகிரி வட்டம் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட அருவங்காடு பகுதியை சேர்ந்த செல்வன், உதயகுமாருக்கு இந்திய சர்வதேச அளவிலான மல்யுத்த போட்டியில் கலந்து கொள்வதற்காகவும், மாவட்ட கலெக்டர் விருப்புரிமை நிதியிலி ருந்து ரூ.50 ஆயிரம் காசோலையி னையும், மாவட்ட மா ற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், சுற்றுலாத்துறை அமைச்சரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6,840 மதிப்பில் 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும் என மொத்தம் ரூ.1.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள புத்தகம் மற்றும் இலக்கிய திருவிழா 2023-ஐ முன்னிட்டு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சார்பில் ரூ.25 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பில் காசோலைகள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) தனபிரியா, மணிகண்டன், கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் மலர்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், ஸ்ரீதர், மோகனகுமாரமங்கலம், ஜனார்த்தனன் (கோத்தகிரி) உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்வருகின்ற 25-ந் தேதி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 10.30 மணி முதல் 01.30 மணி வரை நடைபெற உள்ளது.
    • பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்வருகின்ற 25-ந் தேதி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 10.30 மணி முதல் 01.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்துமனுக்கள் அளிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் கலைஞரின் அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் சூரிய நீர் இறைப்பானை மாநில த்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததற்காக வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 2021-22-ம் ஆண்டில் வட்டியில்லா விவசாய கடன் அட்டை பயிர்க்கடன் வழங்கியதில் முதல் 3 இடங்கள் பெற்ற சங்க செயலாளர்கள் கவுரவிக்கப்பட்டார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்கும் வகையில் காட்டுப்பன்றிகளை விரட்டும் நுகர்மருந்துகளை விவசாய பயனாளிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பனை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தோட்டக்க லைத் துறையின் மூலம் பனைவிதைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

    இதில் கலெக்டர் பேசுகையில், நடப்பு நிதியாண்டின் ரபி பருவத்திற்கு விவசாயிகள் பயிர் செய்துள்ள பயிர்க ளுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    பிரதமரின் விவசாயி ஊக்கத்தொகை பெறும் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள 84 ஆயிரத்து 399 விவசாயிகளையும் கள ஆய்வு செய்து தகுதியுள்ள விவசாயிகளுக்கு 12-வது தவணைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நடைபெறும் விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உரக்கடைகளிலும் போது மான அளவில் இருப்பில் உள்ளது.

    விவசாய கடன் அட்டைகள் பெற விண்ணப்பித்த 25 ஆயிரத்து 290 விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்ப ட்டுள்ளது. வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் விவசாயிகளிடமிருந்து வேளாண்மை தொட ர்பான பொதுவான கோரிக்கைகளுக்கு கருத்துக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அனைத்து வரத்துக் கால்வாய்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • 144 தடை உத்தரவு நீக்கம்: கள்ளக்குறிச்சியில் நாளை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
    • சமூக இடை வெளியினை கடை பிடித்து கோரிக்கை மனுக்களை நேரடியாக வழங்கலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள க்குறிச்சி வட்டம் முழுவதும், சின்னசேலம் வட்டத்தில் சின்னசேலம் மற்றும் நயினார்பாளையம் ஆகிய குறுவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ங்களுக்கும் 18.07.2022 அன்று முதல் 31.07.2022 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவு தற்போது விலக்கி கொள்ளப்பட்டது. அதன்படி கள்ள க்குறிச்சிமாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் நாளை (1-ந் தேதி) அன்று முதல் ஒவ்வொரு திங்கள் கிழமை தோறும் கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்ப ற்றி பொதுமக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அனிந்து, சமூக இடை வெளியினை கடை பிடித்து கோரிக்கை மனுக்களை நேரடியாக வழங்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    • விழுப்புரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பயனாளிகளுக்கு ரூ.21.27 லட்சம் மதிப்பீட்டில் கலெக்டர் மோகன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். 

    இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 427 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். மேலும், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர் களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, மாவட்ட தாட்கோ மூலம், மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியாக 10 பயனாளிகளுக்கு ரூ.21,15,000-க்கான காசோலையினையும், 3 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.12,000-க்கான காசோலையினையும், 20 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டையும் என மொத்தம் 33 பயனாளிகளுக்கு ரூ.21.27 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கினார். முன்னதாக, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொதுமக்களுக்கு மாவட்ட மகளிர் திட்ட துறையின் மூலம், இலவசமாக மனுக்கள் எழுதிக்கொடுக்கப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, பொதுமக்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் எண்ணிக்கையில் பணியாளர்கள் பணி மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை குறித்த மனுக்களை பெற்றுக்கொண்டதுடன், மகளிர் குழுக்கள் மூலம், உற்பத்தி செய்யும் பொருட்கள் பொதுமக்களுக்காக விற்பனை செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், மக்களை கவர்ந்திடும் வண்ணம் அழகு சாதனப் பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்திட வேண்டும் என மகளிர் குழுக்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் காஞ்சனா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் யசோதா, மாவட்ட தாட்கோ மேலாளர் குப்புசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. 

    நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் 228 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த  மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் வட்டக்கிணறு நடைமேடை மண் சரிந்து புதையுண்டு இறந்தவரின் வாரிசுதாரர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையினையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5 ஆயிரத்து 341 மதிப்பீட்டில் சலவை பெட்டியும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 479 மதிப்பீட்டில் தையல் எந்திரங்களையும், பள்ளிக்கல்வித்துறை மற்றும் கலால்துறை சார்பில் நடத்தப்பட்ட மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி களில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணே சன், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×