

திருப்பூர்:
திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 22-ந் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.