search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லறை திருநாள்"

    • தரும்புரியில் கிருஸ்துவர்களின் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.
    • கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்தனர்.

    கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது பொது வாக கல்லறைகளில் அடக்கம் செய்யப் படுகின்றனர். கல்லறை களுக்குச் சென்று அவர்களை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாள், சகல ஆத்துமாக்களின் திருநாள் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்த தினத்தையொட்டி தருமபுரி சந்தை ப்பேட்டையில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லறை தோட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் கல்ல றைகளை கழுவி, பூக்களால் அலங்க ரித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி, ஜெபப் புத்தகத்தை படித்து, பாடல்களைப் பாடி, பின்னர் கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்தனர். 

    • கல்லறைகளை தூய்மைப்படுத்தி மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி, வழிபடுவார்கள்.
    • கல்லறைகளில் வைப்பதற்கு என சிலுவைகளை வாங்கி சென்றனர்.

    பூதலூர்:

    உலகமெங்கிலும் கிறிஸ்தவர்கள் இறந்து போன தங்கள் குடும்ப உறுப்பினர்களை நினைவு கூறும் நிகழ்வாக அனுசரிக்கப்படுவது கல்லறை திருநாள். இந்த நாளில் இறந்து போன தங்கள் குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளை தூய்மைப்படுத்தி மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி, வழிபடுவார்கள். கல்லறை திருநாளை முன்னிட்டு இன்று காலை பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    இதில்பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் ,துணை அதிபர் ரூபன் அந்தோனிராஜ் ,தியான மையஇயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவிபங்குதந்தையர்கள்அமலவில்லியம், அன்பு ராஜ், ஆன்மிக தந்தை அருளானந்தம்ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினார்கள். திருப்பலி முடிவடைந்ததும் பூண்டி மாதா பேராலயத்தில் அருட்தந்தையாக பணியாற்றி மறைந்து பூண்டி மாதா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்ட அருட்தந்தை லூர்து சேவியர் அடிகளாரின் கல்லறை புனிதம் செய்து வழிபட்டனர்.இதனை முன்னிட்டு லூர்து சேவியர் கல்லறை மலர் அலங்காரம் செய்யப்பட்டு மெழுகு வர்த்தி ஏற்றி வைக்கப்பட்டு இருந்தது.பக்தர்கள் லூர்து சேவியர் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.பூண்டி மாதா பேராலய கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்ட அருட்தந்தை ராயப்பர் அடிகளார் கல்லறையும் மந்திரிக்கப்பட்டது. இன்று மாலைபூண்டி மாதா பேராலய பங்கு கிராமங்களில் அமைந்துள்ள கல்லறைகள் பூண்டி மாதா பேராலய அருட் தந்தையர்கள் நேரில் சென்று புனிதம் செய்து வழிபாடு நடத்துவார்கள். கல்லறை திருநாளைமுன்னிட்டு இந்த பகுதியில் உள்ள கிறித்துவ கல்லறைகள் தூய்மை செய்யப்பட்டு மலர் மாலை அணிவித்து சாம்பிராணி போட்டு உருக்கமாக வழிபட்டனர். திருக்காட்டுபள்ளியில் கல்லறைகளில் புதிய மரச்சிலுவை வைப்பதற்கு என சிறியதும் பெரியதும் ஆன சிலுவைகள் விற்பனை செய்ய வைத்து இருந்தனர். கல்லறைகளில் வைப்பதற்கு என சிலுவைகளை வாங்கி சென்றனர்.

    • போரில் மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை நடைபெற்றது.
    • வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய தினத்தை கல்லறை தினமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

    கல்லறைத் திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி இன்று நடைபெற்றது. இதில் இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு வரவும், போரில் மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    புனிதஆரோக்கிய மாதா பேராலயத்தில் அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட குருக்கள் துறவியர்கள், விசுவாசிகள், சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து ஆன்மாக்களுக்கும் அவர்களுடைய உறவினர்களின் கல்லறை களை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து படையலிட்டு, மெழுகு வர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லறைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த கல்லறை திருநாளில் வெளிநாடு, வெளி மாவட்டங்கள், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் பங்கேற்றனர்.

    • கல்லறைகளுக்கு சுண்ணாம்பு தெளித்தும், வர்ணம் பூசும் பணியையும் மேற்கொண்டனர்.
    • காலை முதலே கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    நாகர்கோவில் :

    உலகம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்த வர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந்தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான கல்ல றைத்திருநாள் இன்று (வியாழக் கிழமை) கடை பிடிக்கப்பட்டது.

    குமரி மாவட்டத்திலும், இன்று கத்தோலிக்க கிறிஸ்த வர்கள் மற்றும் சி.எஸ்.ஐ. சபை கிறிஸ்தவர்களால் கல்லறைத்திருநாள் அனு சரிக்கப்பட்டது. இதை யொட்டி கிறிஸ்தவர்கள் தங்களுடைய உறவினர்கள், முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை களில் வளர்ந்து கிடக்கும் செடி-கொடிகள், புற்கள் போன்றவற்றை அகற்றி, கல்லறைகளை சுத்தம் செய்து ஆயத்த பணிகளை மேற்கொண்டனர். சிலர் கல்லறைகளுக்கு சுண்ணாம்பு தெளித்தும், வர்ணம் பூசும் பணியையும் மேற்கொண்டனர்.

    கல்லறைத்திருநாளான இன்று கிறிஸ்தவர்கள் குடும்பம், குடும்பமாக கல்லறைத்தோட்டங்களுக்கு சென்று தங்களுடைய குடும் பத்தினர், உறவினர்கள் மற்றும் முன்னோர்க ளுடைய கல்லறைகளில் மலர் மாலைகள் அணி வித்தும், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும் பிரார்த்தனை செய்து, அஞ்சலி செலுத்தினர். இதனால் இன்று காலை முதலே கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இன்று மாலை கத்தோ லிக்க ஆலயங்களை சேர்ந்த பங்குத்தந்தையர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கல்லறைத்தோட்டங்களுக்கு சென்று புனித நீரால் மந்தி ரிப்பார்கள். இதேபோல் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்களும் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் நினைவாக அந்தந்த பகுதிகளில் உள்ள கல்லறைத்தோட்டங்களுக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மரணம் இல்லாத வீடு என்பது மன்னுலகத்தில் இருக்க முடியாது.
    • மரணம் மானுட மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடை.

    கிறித்தவ சமயத்தில் நவம்பர் முதல் இரண்டு நாட்களும் கனத்த இதயங்களுடன் மக்கள் அவரவர் குடும்பங்களில் மரணித்தவர்களின் நினைவுகளை சுமந்து அதன் வலியும், வேதனையும் உணர்வுகளை சிதைக்கின்ற காரணத்தால் சோகம் நிறைந்த சிந்தனைகளோடு கல்லறைகளை சுற்றி அலைவர். மரணம் இல்லாத வீடு என்பது மன்னுலகத்தில் இருக்க முடியாது. ஏனெனில் மரணம் மானுட மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடைகளில் மிகவும் முக்கியமானது.

    கிறித்துவத்தில் மரணம் வித்தியாசமாக புரியப்படுகிறது. அதாவது மரணம் பொய்யுலக வாழ்வையும், மெய்யுலக வாழ்வையும் வரையறுக்க கூறுகிறது. அதற்கு மரணம் தான் வழி வகுக்கிறது என்பது புரிதல் அப்படியானால் மரணித்தவருடைய உடல் மண்ணாகவும் அவர்களது ஆன்மா மனித உடலில் இருந்து பிரிந்து எகிருந்து வந்ததோ அதே தத்துவத்தை அடைந்து விடுகிறது. இதைத்தான் மோட்சம், பரலோகம், சிவலோகம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

    புரிதல் என்னவென்றால் மரணித்த மனித உடலில் இருந்து விடுபட்டு அவரது உயிர் ஜீவன் என்பது அழிவில்லா தத்துவத்தை அடைகிறது. அதாவது இறைவனோடு கடவுளோடு சங்கமித்துவிடுகிறது. இவ்வாறு மண்ணுலக வாழ்வில் இருந்து விடுபட்டு விண்ணுலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுவதும், நம்பிக்கை புகட்டுவதும் தான் சிறப்பு.

    அதேவேளையில் உயிர்தெழுதல் நாள் வரும்போது இதுபோன்ற ஆன்மாக்கள் மாற்றுடல் பெற்று எழுவார்கள் என்பது நம்பிக்கை. ஆயினும் மரணித்தவர்களின் உடலை மண்ணுக்கே கொடுத்துவிடுகிறோம். ஏனென்றால் மனிதன் மண்ணானவன் என்பது புரிதல் ஆகும். உலகத்தின் எந்த மூலைக்கும் இதுவே புரிதலுக்குள்ளான தத்துவமாகும்.

    1048-ல் தான் 11-ம் நூற்றாண்டில் அபாட் ஓஷலோ என்ற துறவி தனது 54 ஆண்டுகால துறவரத்தை அவர் கொண்டிருந்த துறவர மடத்திலயே மரணத்தின் மூலம் முடிந்தார். இவர்தான் அனைத்து ஆன்மாக்களின் தினம் என்ற ஒரு சிறப்பு நாளை உருவாக்கினார்.

    இதனால் தான் மரணம் அடைந்தோரின் நினைவு நாளை உலகமெல்லாம் உள்ள அனைத்து கிறித்தவர்களும் குடும்பங்களாக அவரவர் தங்கள் உறவுகளின் கல்லறைக்குச் சென்று சுத்தம் செய்து சிறப்பு பிரார்த்தனை செய்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து தங்கள் கடமையை நிறைவேற்றுவது வழக்கம்.

    C.SI லூத்திரன் மற்றும் கத்தோலிக்க திருச்சபைகள் இந்த நாளை நினைவேந்தி வழிபடவேண்டும் என்று மக்களுக்கு ஆவலை ஊட்டுகின்றன. அதே வகையில் மேற்படி திருச்சபைகளே கல்லறைத் தோட்டங்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்துகின்றன.

    சென்னை போன்ற பெருநகரங்களிலும் ஏன் இந்தியாவில் மட்டும்மல்லாது உலக அளவில் இந்த நவம்பர் 2-ம் நாள் நீத்தார் நினைவேந்தல் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

    • கல்லறைகளை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணி நடைபெற்றது.
    • கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டம் பிரபலமானது.

    சென்னை:

    கிறிஸ்தவர்கள் சகல ஆத்மாக்கள் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் அனுசரித்து வருகிறார்கள். அந்த நாளில் மரித்த முன்னோர்களை நினைவு கூர்ந்து விஷேச பிரார்த்தனை மேற்கொள்வார்கள். முன்னோர்களின் கல்லறைகளுக்கு சென்று மாலை அணிவித்தும் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்துவார்கள்.

    அதன்படி கல்லறை திருநாள் நாளை (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டங்கள் கடந்த சில நாட்களாக தூய்மைப் படுத்தும் பணி நடந்தது. கல்லறைகளை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனர்.

    சென்னையில் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டம் பிரபலமானது. அங்கு பல ஆயிரக்கணக்கான கல்லறைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை பாதுகாத்து பராமரித்து வருவதற்கு தனி அமைப்பு செயல்பட்டு வருகிறது.

    இதேபோல் காசிமேடு கல்லறை தோட்டமும் மிகப்பெரியது. இதுதவிர ஒவ்வொரு கிறிஸ்தவ திருச்சபைகளுக்கும் தனித்தனியாக கல்லறைகள் உள்ளன.

    கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., பெந்தேகோஸ்து, லுத்தரன் உள்ளிட்ட பல்வேறு பிரிவு களை சேர்ந்த கிறிஸ்தவர்க ளும் கல்லறை திருநாளான நாளை காலையில் இருந்தே கல்லறைகளுக்கு சென்று முன்னோர்களை நினைவு கூர்ந்து வேண்டுதல் செய்வார்கள். கல்லறை தோட்டங்களில் சிறப்பு வழிபாடும் நாளை நடைபெறும்.

    குடும்பம் குடும்பமாக சென்று பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கல்லறைகளுக்கும் மரியாதை செலுத்துகின்றனர். மதபோதகர்கள் சிறப்பு பிராத்ததனை செய்கிறார்கள்.

    • நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது.
    • கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

    இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர்.

    அந்த வகையில் கல்லறை தினத்தையொட்டி சென்னை கல்லறை வாரியத்துக்குட்பட்ட கீழ்ப்பாக்கம், காசிமேடு, பட்டினப்பாக்கம் கல்லறை தோட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.

    ஆனால் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் மக்கள் அவர்களாக வந்து, இறந்துபோன தங்களுடைய மூதாதையர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

    அதன்படி நேற்று கிறிஸ்தவ மக்கள் பலரும் கல்லறை தோட்டங்களுக்கு வந்து தங்கள் அன்புக்குரியவர்களின் கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து, அவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தி, பிரார்த்தனை செய்தனர்.

    கல்லறை தினத்தையொட்டி ஒரு சிலர் வெளிநாடுகளில் இருந்து வந்து இறந்துபோன உறவினர்களை நினைவுகூர்ந்து, அஞ்சலி செலுத்தியதை பார்க்க முடிந்தது.

    அடுத்த ஆண்டு முதல் வழக்கமான முறையில் கல்லறை தோட்டங்களில் திருப்பலி, பிரார்த்தனைகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இறந்தவர்களின் ஆத்துமா கர்த்தரிடத்தில் இளைப் பாறுகின்றது.
    • மரித்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் குடும்பத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி வழிபட்டனர்

    திருப்பூர் :

    சகல ஆத்துமாக்கள் தினத்தை கிறிஸ்தவர்கள் இன்று கல்லறை திருநாளாக அனுசரிக்கிறார்கள். இறந்தவர்களின் ஆத்துமா கர்த்தரிடத்தில் இளைப் பாறுகின்றது.அடிப்படை யில் அவர்களை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.மரித்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் குடும்பத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி வழிபட்டனர்.

    திருப்பூரில் உள்ள கல்லறை தோட்டங்களுக்கு கிறிஸ்தவர்கள் காலையில் இருந்து குடும்பம் குடும்ப மாக வரத் தொடங்கினார் கள்.கார்களிலும், இரு சக்கர வாகனத்திலும் மாலை மற்றும் மலர்களை வாங்கி எடுத்து வந்தனர். இன்று மாலை 3 மணிக்கு பிறகு கூட்டம் அதிகரிக்கும். ஆயிரக்கணக்கான கிறிஸ்த வர்கள் கல்லறை களின் முன்பு சிறிது நேரம் மவுனமாக இருந்து ஜெபித்து சென்றனர். சிறு வர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக வந்தனர்.அனைத்து திருச்சபையை சேர்ந்த கிறிஸ்தவர்களும் தங்களது உறவினர்கள், குடும்ப உறுப்பினர்களை நினைவு கூர்ந்து ஜெபத் துடன் வழி பட்டனர்.ஒரு சில கல்லறை தோட்டங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.  

    • சகல ஆத்துமாக்கள் தினம் என்னும் கல்லறை திருநாள் கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
    • இதில் திரளான கிறிஸ்தவர்கள் மலர்களை தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் மறைந்த முன்னோர்களின் நினைவுகளை கூர்ந்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.

    திருச்சி,

    சகல ஆத்துமாக்கள் தினம் என்னும் கல்லறை திருநாள் கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இறந்த முதியவர்கள், முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் ஆத்துமா இறைவனிடத்தில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் என்ற விசுவாசத்தின் அடிப்படையில் அவர்களை நினைவு கூறும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வார்கள். இந்த நாளே கல்லறை திருநாள் என்று கிறிஸ்தவர்களால் அழைக் கப்படுகிறது.

    அந்த வகையில் இன்று கல்லறை திருநாள் கடைபிடிக்கப்படு கிறது. முன்னதாக கடந்த 2 நாட்களாக கத்தோலிக்க திருச்சபை, தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ), மெத்தடிஸ்ட், ஆற்காடு லூத்ரன், பெந்தேகோஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் கல்லறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    ஒவ்வொரு திருச்சபை மற்றும் பங்குகளுக்கு சம்பந்தப்பட்ட கல்லறை தோட்டங்களில் உள்ள கல்லறைகளை உறவினர்கள் புணரமைக்கும் பணியினை செய்தனர். அதன்படி இன்று நடந்த கல்லறை திருநாளில் மரித்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் அவர்களை நினைவு கூர்ந்து ஜெபித்து, மலர் தூவினர். குடும்பம் குடும்பமாக சென்று மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

    கிறிஸ்தவ திருச்சபை சார்பில் அங்கு சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டது. ஆயர்கள், பாதிரியார்கள் கல்லறைகளுக்கு சென்று ஜெபம் செய்து பிரார்த்தனைகளை நடத்தினர்.

    திருச்சியில் கல்லறை தினத்தையொட்டி இன்று மேலப்புதூர் மார்சிங்பேட்டை வேர்ஹவுஸ் கல்லறை தோட்டம், ஆண்டாள் வீதி, கோர்ட்டு அருகில் உள்ள கல்லறை தோட்டம், மணல் வாரித்துறை கல்லறை தோட்டம், ஜேம்ஸ் சர்ச் கல்லறை தோட்டம், ஜி கார்னர் கல்லறை தோட்டம், பொன்மலைப்பட்டி உள்ளிட்ட கல்லறை தோட்டங்களில் கல்லறைகள் இன்று சுத்தம் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

    இதில் திரளான கிறிஸ்தவர்கள் மலர்களை தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் மறைந்த முன்னோர்களின் நினைவுகளை கூர்ந்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.

    • மதுரையில் நடந்த கல்லறை திருநாளில் கிறிஸ்தவர்கள் மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.
    • குடும்பத்துடன் வந்து மலர்தூவி வழிபாடு செய்தனர்.

    மதுரை

    மதுரையில் கல்லறை திருநாளையொட்டி முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் சென்று கல்லறை தோட்டங்களில் மலர் தூவி, படையல் செய்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி உயிர் நீத்த முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ள தங்களது முன்னோர்களின் கல்லறைகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் கல்லறை தோட்டங்களில் கல்லறை திருநாள் வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து மனம் உருகி கண்ணீரோடு வழிபாடு நடத்துவது வழக்கம்.இன்று (2-ந்தேதி) மதுரையில் கல்லறை திருநாள் அனுஷ்டிக்கப்பட்டது. மதுரையில் மகபூப் பாளையம், தத்தனேரி, பாக்கியநாதபுரம், புதூர், அழகரடி, கூடல் நகர், கீரைத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ள முன்னோர்களை நினைவு கூறும் வகையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் இன்று காலை குடும்பத்துடன் சென்று வழிபாடு நடத்தினர்.

    கல்லறைகளை சுத்தம் செய்து மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி கொளுத்தி பிரார்த்தனை செய்தனர். இதை தொடர்ந்து முன்னோர்களுக்கு பிடித்த பலகாரங்கள் மற்றும் உணவுப் பொருட்களை படையல்களாக படைத்து மனம் உருகி கண்ணீருடன் இறைவழிபாடு செய்தனர். இறந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருப்பாதத்தில் இளைப்பாறும் வகையில் இறை வேண்டுதல்களும் செய்யப்பட்டன.பல்வேறு கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு காலஞ்சென்ற முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கல்லறைத் தோட்டத்தில் சில ஆண்டுகளாக கல்லறை திருநாள் அனுஷ்டிக்கப்படவில்லை. தற்போது அங்கு கல்லறைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து கல்லறை தோட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் அமைதியான முறையில் தங்களது முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    • சகல ஆத்துமாக்களின் திருநாள் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது.
    • இன்று இறந்தவர்களின் கல்லறையில் அஞ்சலி செலுத்துவது வழக்கமாக உள்ளது.

    கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது பொதுவாக கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர். கல்லறைகளுக்குச் சென்று அவர்களை நினைவுகூர்வதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாள், சகல ஆத்துமாக்களின் திருநாள் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்த தினத்தையொட்டி சென்னை கல்லறை வாரியத்துக்கு உட்பட்ட கீழ்ப்பாக்கம், காசிமேடு, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள கல்லறை தோட்டங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த கல்லறை தோட்டங்கள் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. கல்லறைகளைப் பார்ப்பதற்கு மக்கள் இன்று மாலை வரை வந்து செல்வார்கள் என்பதால் விளக்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    கல்லறைகளை கழுவி, பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி, ஜெபப் புத்தகத்தை படித்து, பாடல்களைப் பாடி, பின்னர் கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்வதும், கண்ணீர் அஞ்சலி செலுத்துவதும் வழக்கமாக உள்ளது. மேலும், இந்தத் தினத்தையொட்டி அங்கு குவிந்திருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கிறிஸ்தவர்கள் பலர் உதவிகளைச் செய்வதும் வழக்கம். கல்லறை திருநாள் நிகழ்ச்சிக்கு தேவையான பூ, மாலை, ஊதுபத்தி போன்ற பொருட்கள் பெருமளவில் கல்லறை தோட்டத்துக்கு வெளியே விற்பனை செய்யப்படும்.

    • நவம்பர் 2-ஆம் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளாக கடைப்பிடித்து வருகின்றனர்.
    • கல்லறைத் தோட்டத்தில் திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடத்தப்படும்.

    கடலூர்:

    கல்லறைத் திருநாளை முன்னிட்டு, கடலூரில் உள்ள கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்புத் திருப்பலி நடத்தினர். இறந்தவர்களை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ஆம் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளாக கடைப்பிடித்து வருகின்றனர். இது அனைத்து ஆன்மாக்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. கல்லறைத் திருநாள் அன்று கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்துக்குச் சென்று இறந்த தங்கள் உறவினர்களின் கல்ல றையில் அவர்களின் ஆன்மா இளைப்பாற ஜெபம் செய்வது வழக்கம்.

    மேலும், கல்லறைத் தோட்டத்தில் திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடத்தப்படும். அதன்படி, கடலூரில் உள்ள புனித கார்மேல் அன்னை கல்லறைத்தோட்டம், ஏ.எல்.சி. கல்லறைத் தோட்டம், புனித எபிநேசர் கல்லறைத் தோட்டம், ஆர்.சி. கத்தோலிக்க கல்லறைத் தோட்டம், கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் கல்லறைத் தோட்டம், அரசு தலைமை மருத்துவமனை பின்புறம் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் சென்று பிரார்த்தனை நடத்தினர். மேலும் தங்கள் உறவினர் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்கள் தூவி மாலை அணிவித்து முன்னோ ர்களை நினைவு கூர்ந்தனர். 

    ×