search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomb Thirunal"

    • கல்லறைகளை தூய்மைப்படுத்தி மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி, வழிபடுவார்கள்.
    • கல்லறைகளில் வைப்பதற்கு என சிலுவைகளை வாங்கி சென்றனர்.

    பூதலூர்:

    உலகமெங்கிலும் கிறிஸ்தவர்கள் இறந்து போன தங்கள் குடும்ப உறுப்பினர்களை நினைவு கூறும் நிகழ்வாக அனுசரிக்கப்படுவது கல்லறை திருநாள். இந்த நாளில் இறந்து போன தங்கள் குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளை தூய்மைப்படுத்தி மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி, வழிபடுவார்கள். கல்லறை திருநாளை முன்னிட்டு இன்று காலை பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    இதில்பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் ,துணை அதிபர் ரூபன் அந்தோனிராஜ் ,தியான மையஇயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவிபங்குதந்தையர்கள்அமலவில்லியம், அன்பு ராஜ், ஆன்மிக தந்தை அருளானந்தம்ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினார்கள். திருப்பலி முடிவடைந்ததும் பூண்டி மாதா பேராலயத்தில் அருட்தந்தையாக பணியாற்றி மறைந்து பூண்டி மாதா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்ட அருட்தந்தை லூர்து சேவியர் அடிகளாரின் கல்லறை புனிதம் செய்து வழிபட்டனர்.இதனை முன்னிட்டு லூர்து சேவியர் கல்லறை மலர் அலங்காரம் செய்யப்பட்டு மெழுகு வர்த்தி ஏற்றி வைக்கப்பட்டு இருந்தது.பக்தர்கள் லூர்து சேவியர் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.பூண்டி மாதா பேராலய கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்ட அருட்தந்தை ராயப்பர் அடிகளார் கல்லறையும் மந்திரிக்கப்பட்டது. இன்று மாலைபூண்டி மாதா பேராலய பங்கு கிராமங்களில் அமைந்துள்ள கல்லறைகள் பூண்டி மாதா பேராலய அருட் தந்தையர்கள் நேரில் சென்று புனிதம் செய்து வழிபாடு நடத்துவார்கள். கல்லறை திருநாளைமுன்னிட்டு இந்த பகுதியில் உள்ள கிறித்துவ கல்லறைகள் தூய்மை செய்யப்பட்டு மலர் மாலை அணிவித்து சாம்பிராணி போட்டு உருக்கமாக வழிபட்டனர். திருக்காட்டுபள்ளியில் கல்லறைகளில் புதிய மரச்சிலுவை வைப்பதற்கு என சிறியதும் பெரியதும் ஆன சிலுவைகள் விற்பனை செய்ய வைத்து இருந்தனர். கல்லறைகளில் வைப்பதற்கு என சிலுவைகளை வாங்கி சென்றனர்.

    • போரில் மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை நடைபெற்றது.
    • வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய தினத்தை கல்லறை தினமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

    கல்லறைத் திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி இன்று நடைபெற்றது. இதில் இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு வரவும், போரில் மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    புனிதஆரோக்கிய மாதா பேராலயத்தில் அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட குருக்கள் துறவியர்கள், விசுவாசிகள், சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து ஆன்மாக்களுக்கும் அவர்களுடைய உறவினர்களின் கல்லறை களை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து படையலிட்டு, மெழுகு வர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லறைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த கல்லறை திருநாளில் வெளிநாடு, வெளி மாவட்டங்கள், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் பங்கேற்றனர்.

    ×