search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallarai Thirunal"

    • நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது.
    • கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

    இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர்.

    அந்த வகையில் கல்லறை தினத்தையொட்டி சென்னை கல்லறை வாரியத்துக்குட்பட்ட கீழ்ப்பாக்கம், காசிமேடு, பட்டினப்பாக்கம் கல்லறை தோட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.

    ஆனால் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் மக்கள் அவர்களாக வந்து, இறந்துபோன தங்களுடைய மூதாதையர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

    அதன்படி நேற்று கிறிஸ்தவ மக்கள் பலரும் கல்லறை தோட்டங்களுக்கு வந்து தங்கள் அன்புக்குரியவர்களின் கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து, அவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தி, பிரார்த்தனை செய்தனர்.

    கல்லறை தினத்தையொட்டி ஒரு சிலர் வெளிநாடுகளில் இருந்து வந்து இறந்துபோன உறவினர்களை நினைவுகூர்ந்து, அஞ்சலி செலுத்தியதை பார்க்க முடிந்தது.

    அடுத்த ஆண்டு முதல் வழக்கமான முறையில் கல்லறை தோட்டங்களில் திருப்பலி, பிரார்த்தனைகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சகல ஆத்துமாக்களின் திருநாள் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது.
    • இன்று இறந்தவர்களின் கல்லறையில் அஞ்சலி செலுத்துவது வழக்கமாக உள்ளது.

    கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது பொதுவாக கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர். கல்லறைகளுக்குச் சென்று அவர்களை நினைவுகூர்வதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாள், சகல ஆத்துமாக்களின் திருநாள் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்த தினத்தையொட்டி சென்னை கல்லறை வாரியத்துக்கு உட்பட்ட கீழ்ப்பாக்கம், காசிமேடு, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள கல்லறை தோட்டங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த கல்லறை தோட்டங்கள் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. கல்லறைகளைப் பார்ப்பதற்கு மக்கள் இன்று மாலை வரை வந்து செல்வார்கள் என்பதால் விளக்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    கல்லறைகளை கழுவி, பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி, ஜெபப் புத்தகத்தை படித்து, பாடல்களைப் பாடி, பின்னர் கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்வதும், கண்ணீர் அஞ்சலி செலுத்துவதும் வழக்கமாக உள்ளது. மேலும், இந்தத் தினத்தையொட்டி அங்கு குவிந்திருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கிறிஸ்தவர்கள் பலர் உதவிகளைச் செய்வதும் வழக்கம். கல்லறை திருநாள் நிகழ்ச்சிக்கு தேவையான பூ, மாலை, ஊதுபத்தி போன்ற பொருட்கள் பெருமளவில் கல்லறை தோட்டத்துக்கு வெளியே விற்பனை செய்யப்படும்.

    நாகை, வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கண்ணீர் மல்க இறந்தவர்களின் கல்லறையில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
    ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகின்றனர். இறந்த தங்களது உறவினர்களை நினைவுகூரும் வகையிலும், அவர்களது ஆத்மா சாந்தியடையவும் வேண்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்படும்.

    தொடர்நது உறவினர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களை வைத்து அலங்கரித்து அவர்களுக்கு பிடித்தமான உணவு பொருட்களை வைத்து படையலிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வார்கள்.

    அதன்படி கல்லறை திருநாளான நேற்று நாகை புனித மாதரசி மாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்குப் பின்னர் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைகளை பங்குத்தந்தை புனிதநீர் தெளித்து பிரார்த்தனை நடத்தினார். தொடாந்து மலர்களால் அலங்கரித்து வைத்திருந்த கல்லறைகளில் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ராயப்பன் கல்லறைதோட்டம் உள்பட நாகையை சுற்றியுள்ள கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது. இதில் கிறிஸ்துவர்கள் தங்கள் உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.அப்போது வேளாங்கன்னி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்டுள்ள பாதிரியார்களின் கல்லறைக்கு பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் புனிதம் செய்யப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குத் தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்குத்தந்தை ஆண்டோ ஜேசுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து வேளாங்கண்ணியில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியில் இறந்தவர்களின் கல்லறை தோட்டத்தில் வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்கள் மூதாதையர்கள், குடும்பத்தினருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
    கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய குடும்பத்தின் மூதாதையர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் யாராவது இறந்து போய் இருந்தால் அவர்களை நினைவுகூரும் வகையில், கல்லறை தோட்டங்களுக்கு சென்று அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

    அந்தவகையில் சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் உள்ள கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் பலர் குடும்பத்தினருடன் வந்து இறந்த தங்களுடைய மூதாதையர்கள், குடும்பத்தினர், உறவினர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியதோடு, பிரார்த்தனை மேற்கொண்டதையும் பார்க்க முடிந்தது.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கல்லறை திருநாள் அனுசரிக்க அனுமதிக்கவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து கல்லறை தோட்டங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    திருச்சபை பாதிரியார்கள், கல்லறை தோட்டங்களில் சிறப்பு திருப்பலியை நடத்தினர்.
    இன்று காலையில் கிறிஸ்தவ ஆலயங்களிலும், மாலை 5 மணிக்கு கல்லறை தோட்டங்களிலும் இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி அல்லது சிறப்பு வழிபாடு நடைபெறும்.
    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அன்று மலர் அஞ்சலி செலுத்துவார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி(இன்று) இறந்தவர்கள் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அன்று அனைத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களிலும் இருக்கும் புல் பூண்டுகள் வெட்டி அகற்றப்பட்டு சுண்ணாம்பு தெளித்து சீரமைக்கப்படும். பின்னர் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி, ஊதுபத்தி எரியவிட்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    இன்று காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் திரளாக சென்று கல்லறை தோட்டங்களில் அஞ்சலி செலுத்துவதால் அந்த நாள் கல்லறை திருநாள் என்று அழைக்கப்படுகிறது. இன்று காலையில் கிறிஸ்தவ ஆலயங்களிலும், மாலை 5 மணிக்கு கல்லறை தோட்டங்களிலும் இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி அல்லது சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    அதைத்தொடர்ந்து கல்லறைகளை பங்கு அருட்பணியாளர்கள் புனித நீரால் தெளிப்பார்கள். கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் ஊர்களில் தற்காலிக பூக்கடைகள் அமைக்கப்படுகிறது.
    உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரிக்கிறார்கள். திண்டுக்கல் கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
    உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரிக்கிறார்கள். இதையொட்டி அன்றைய நாளில் முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, அவர்கள் விரும்பி உண்ணும் உணவை படைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்வது வழக்கம். அதன்படி திண்டுக்கல்-திருச்சி ரோடு கல்லறை தோட்டத்தில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தன.

    இதையொட்டி நேற்று முன்தினம் கல்லறை தோட்டம் முழுவதும் புற்கள், செடிகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணியளவில் இருந்து ஏராளமான மக்கள் குடும்பத்துடன் கல்லறை தோட்டத்துக்கு வருகை தந்தனர். அவர்கள், தங்களது முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து உணவு படைத்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து மாலை 4 மணியளவில் திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ்பால்சாமி தலைமையில் இறந்தவர்களின் ஆன்மாக்களுக்காக கூட்டுத்திருப்பலி நடந்தது. பங்குத்தந்தை ஸ்டான்லி ராபின்சன் உள்பட பாதிரியார்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றினர்.

    அதேபோல் திண்டுக்கல் மேட்டுப்பட்டி, சவேரியார்பாளையம், குமரன் திருநகர் உள்பட திண்டுக்கல் மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகளிலும் கல்லறைத்திருவிழா கூட்டுத்திருப்பலி அந்தந்த பங்குதந்தைகள் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானலில், வத்தலக்குண்டு சாலை கல்லறைத் தோட்டத்தில், கல்லறைத் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு முன்னோர்களின் கல்லறைககளில் மலர்கள் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி, அவர்களுக்கு பிடித்த உணவுகளை வைத்து பிரார்த்தனை செய்தனர். இதில் வட்டார அதிபர் எட்வின் சகாயராஜ், பங்குத்தந்தைகள் பீட்டர்சகாயராஜா, அடைக்கலராஜ், ஏஞ்சல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் செந்துறையில் கல்லறைத்திருநாள் நடந்தது. இதில் செந்துறை புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தைகள் ஆரோக்கியம், ஜான் ஜெயபால், பிரிட்டோ ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தினர்.
    திருவண்ணாமலை கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறையை சுத்தம் செய்து, பல்வேறு பூக்களை கொண்டு அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
    கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரத்தில் நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்தனர். பின்னர் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஆராதனைகளில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை கல்லறையில் கூட்டு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடந்தது.

    திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறையை சுத்தம் செய்து, பல்வேறு பூக்களை கொண்டு அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் பெருந்துறை பட்டு, அள்ளிகொண்டாபட்டு, இளையங்கன்னி, அந்தோணியார்புரம், தென் கரும்பனூர், கூடலூர், தண்டரை, விருது விளங்கினான், பெருமணம் உள்ளிட்ட பகுதியில் உள்ள கல்லறையில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தங்களின் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
    கல்லறை திருநாளை முன்னிட்டு மறைந்த உறவினர்களுக்கு ஏராளமான கிறிஸ்தவர்கள், கல்லறைக்கு சென்று இன்று கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
    கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது பொதுவாக கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர். கல்லறைகளுக்குச் சென்று அவர்களை நினைவுகூர்வதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாள், சகல ஆத்துமாக்களின் திருநாள் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்த தினத்தையொட்டி சென்னை கல்லறை வாரியத்துக்கு உட்பட்ட கீழ்ப்பாக்கம், காசிமேடு, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள கல்லறை தோட்டங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அந்த கல்லறை தோட்டங்கள் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. கல்லறைகளைப் பார்ப்பதற்கு மக்கள் இன்று மாலை வரை வந்து செல்வார்கள் என்பதால் விளக்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    கல்லறைகளை கழுவி, பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி, ஜெபப் புத்தகத்தை படித்து, பாடல்களைப் பாடி, பின்னர் கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்வதும், கண்ணீர் அஞ்சலி செலுத்துவதும் வழக்கமாக உள்ளது. மேலும், இந்தத் தினத்தையொட்டி அங்கு குவிந்திருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கிறிஸ்தவர்கள் பலர் உதவிகளைச் செய்வதும் வழக்கம்.

    கல்லறை திருநாள் நிகழ்ச்சிக்கு தேவையான பூ, மாலை, ஊதுபத்தி போன்ற பொருட்கள் பெருமளவில் கல்லறை தோட்டத்துக்கு வெளியே விற்பனை செய்யப்படும். மக்கள் அதிகம் கூடுவதால் அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் காவல் பணியில் ஈடுபடுவர்.
    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்கள் நினைவாக கல்லறை திருநாளாக கடைப்பிடிக்கிறார்கள்.
    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்கள் நினைவாக கல்லறை திருநாளாக கடைப்பிடிக்கிறார்கள். அன்று, இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களின் கல்லறைகளுக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலி செலுத்துவார்கள்.

    இந்த ஆண்டு கல்லறை திருநாள் நாளை (வெள்ளிக் கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அன்று அனைத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களும் புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்படும். பின்னர் மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி எரியவிட்டு அஞ்சலி செலுத்துவார்கள்.

    அன்று காலையில் கிறிஸ்தவ ஆலயங்களிலும், மாலை 5 மணிக்கு கல்லறை தோட்டங்களிலும் இறந்தவர்களின் நினைவாக திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். இந்த பிரார்த்தனைகளின் போது கல்லறைகளில் பங்கு அருட்பணியாளர்கள் புனித நீர் தெளிப்பார்கள். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

    கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் ஊர்களில் தற்காலிக பூக்கடைகள் அமைத்து விற்பனை நடைபெறும்.
    ×