search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலிதா ஜியா"

    ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா டிசம்பர் 30-ம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #Bangladeshicourt #KhaledaZia #Bangladeshelections
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா(73) ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கலிதா ஜியாவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஒரு வழக்கிலும் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவர் டாக்கா நகரில் உள்ள தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், வங்காளதேசம் பாராளுமன்றத்துக்கு டிசம்பர் 30-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட வங்காளதேசம் தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரும் இரு ஊழல் வழக்குகளில் சிறையில் தண்டனை அனுபவித்து வருபவருமான கலிதா ஜியா நீதிமன்றத்தை நாடி இருந்தார்.



    இந்த தண்டனைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்து, வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கலிதாவின் வழக்கறிஞர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த டாக்கா உயர்நீதி மன்றம், தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தாலும் இரண்டாண்டுகளுக்கு அதிகமான காலம் சிறைவாசம் விதிக்கப்பட்ட ஒருவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க முடியாது என்று அறிவித்து விட்டது. #Bangladeshicourt #KhaledaZia #Bangladeshelections
    வங்காளதேசம் நாட்டு பாராளுமன்றத்துக்கு வரும் டிசம்பர் 23-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தேதியில் இன்று திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #Bangladeshelection
    டாக்கா:

    வங்காளதேசத்தின் தலைமை தேர்தல் ஆணையர் நுருல் ஹூடா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    300 உறுப்பினர்களை கொண்ட வங்காளதேசம் பாராளுமன்றத்துக்கு டிசம்பர் 23ம் தேதி தேர்தல் நடைபெறும். இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் நவம்பர் 19-ம் தேதி எனவும்,  வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் நவம்பர் 29-ம் தேதி எனவும் அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் நுருல் ஹூடா கடந்த 8-11-2018 அன்று அறிவித்திருந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்திருந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேசம் தேசியவாத கட்சி இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளது.

    ஜாட்டியா ஓய்க்கியா முன்னணியில் இணைந்து இந்த தேர்தலை எதிர்கொள்வதாக சிறையில் இருக்கும் கலிதா ஜியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கேற்ப தேர்தல் தேதியை ஒருமாதத்துக்கு பிறகு ஒத்திவைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் 23-ம் தேதிக்கு பதிலாக 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களின் கண்காட்சியை இன்று பார்வையிட்ட தலைமை தேர்தல் ஆணையர் நுருல் ஹூடா அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். #Bangladeshelection
    ஆதரவற்றோர் அறக்கட்டளை முறைகேட்டில் மேல்முறையீடு வழக்கில் கலிதா ஜியாவுக்கு இன்று 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வங்காளதேச கோர்ட்டு தீர்ப்பளித்தது. #KhaledaZia #KhaledaZiaGraftCase
    டாக்கா:

    வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

    இந்த நிலையில் ஆதரவற்றோர் அறக்கட்டளை முறைகேட்டில் மேல்முறையீடு வழக்கில் கலிதா ஜியாவுக்கு இன்று 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வங்காளதேச கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    ஆதரவற்றோர் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து ரூ.1.6 கோடி முறைகேடாக பெற்றதாக கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரகுமான் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக டாக்காவில் உள்ள கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பிப்ரவரி மாதம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இதனை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த வங்காள தேச ஐகோர்ட்டு, கீழ் கோர்ட்டு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்தி தீர்ப்பளித்தது. #KhaledaZia #KhaledaZiaGraftCase
    வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீதான ஊழல் வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #KhaledaZia #KhaledaZiaGraftCase
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது கணவரின் பெயரிலான அறக்கட்டளைக்கு நிதி சேர்த்ததாக கலிதா ஜியா மீது டாக்கா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கலிதா ஜியா (வயது 73), அவரது ஆட்சிக்காலத்தில் அரசியல் செயலாளராக இருந்த ஹாரிஸ் சவுத்தரி, ஹாரிஸ் சவுத்தரியின் தனிஉதவியாளர் ஜியாவுல் இஸ்லாம் முன்னா மற்றும் டாக்கா நகர முன்னாள் மேயர் சாதிக் உசேன் கோக்கா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    வங்காளதேச ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது. #KhaledaZia #KhaledaZiaGraftCase 
    ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட வங்காளதேசம் நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இன்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். #KhaledaZia #Khaledaadmitted
    டாக்கா:

    ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட வங்காளதேசம் நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இன்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    வங்காளதேசம் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தின்போது பேருந்து மீது வெடிகுண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவும் குற்றவாளியாக இணைக்கப்பட்டார்.
     
    ஏற்கனவே ஊழல் வழக்கில் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கலிதா ஜியாவுக்கு இந்த கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜாமின் அளித்தது. இந்த ஜாமினுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, டாக்கா நகரில் உள்ள பிரிட்டிஷ் காலத்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலிதா ஜியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

    அவரை மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்கா உயர்நீதி மன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரது உடல்நிலையை பரிசோதிக்க 5 டாக்டர்கள் கொண்ட குழுவை அமர்த்தியது.



    அடிக்கடி கால் மற்றும் கை மரத்துப்போகும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள கலிதா ஜியாவை டாக்காவில் உள்ள பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு கடந்த 4-10-2018 அன்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இதைதொடர்ந்து, சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று அழைத்து வரப்பட்ட கலிதா ஜியா(73) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #KhaledaZia #Khaledaadmitted  
    வங்காளதேசத்தில் பஸ் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்த வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஐகோர்ட் அளித்த ஜாமினை சுப்ரீம் கோர்ட் இன்று உறுதிப்படுத்தியது. #KhaledaZia #Bangladesh #KhaledaZiabail
    டாக்கா:

    வங்காளதேசத்தில் கடந்த 2015-ம் ஆண்டு அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்துக்கு முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான தேசியவாத கட்சி மற்றும் தேசியவாத ஜமாத் கூட்டணி அழைப்பு விடுத்தது.

    நாடு தழுவிய அளவில் நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த தொடர் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையின் போது 3-2-2015 அன்று கொமில்லா மாவட்டம், சிட்டாகாங் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து இந்த வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் வன்முறையை தூண்டியதாகவும், கொலை மற்றும் வெடிப்பொருட்கள் தடை சட்டத்தின்கீழ்  முன்னாள் பிரதமர் கலிதா ஜியா உள்ளிட்டோர் மீது இரு வழக்குகள் செய்யப்பட்டன.

    கொமில்லா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை பின்னர் சிறப்பு அதிகார சட்டத்தின்கீழ் பயங்கரவாத வழக்காக மாற்றப்பட்டது. 

    இதற்கிடையில், தனது கணவரின் பெயரில் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் பெயரால் வெளிநாடுகளில் இருந்து சுமார் இரண்டரை லட்சம் டாலர்கள் நிதி பெற்றதாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. 

    அவர் தற்போது டாக்கா நகரில் உள்ள 200 ஆண்டுகள் பழைமையான சிறையில் கைதியாக அடைத்து  வைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், பஸ் தாக்குதல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு ஜாமின் கோரி சமீபத்தில் டாக்கா ஐகோர்ட்டில் அவரது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு 6 மாத இடைக்கால ஜாமீன் அளித்து கடந்த 6-ம் தேதி உத்தரவிட்டனர். 

    இந்த உத்தரவை எதிர்த்தும் அவரை ஜாமினில் விடுவிக்க கூடாது என்று வலியுறுத்தியும் கடந்த 7-ம் தேதி அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சையத் மஹ்முத் ஹொசைன் தலைமையிலான 4 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், டாக்கா ஐகோர்ட் முன்னர் அளித்த ஜாமினை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை ஆக முடியாத அளவில் கலிதா ஜியா(72) மீது மேலும் சில வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #KhaledaZia #Bangladesh #KhaledaZiabail
    வங்காளதேசத்தில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற வன்முறைக்கு தூண்டுகோலாக இருந்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 6 மாத ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. #KhaledaZia #Bangladesh
    டாக்கா:

    வங்காளதேசத்தில் 2015-ம் ஆண்டு அரசுக்கு எதிராக மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த விபத்தில் சுமார் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து இந்த வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீது வன்முறையை தூண்டியதாக கைது செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், குமில்லா சிறப்பு நீதிமன்றத்தில் கலிதா ஜியா சார்பில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 6 மாத இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளனர். #KhaledaZia #Bangladesh
    வங்காளதேசம் நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு கொலை வழக்கில் அளிக்கப்பட்ட ஜாமினுக்கு எதிரான தடையை மீண்டும் சுப்ரீம் கோர்ட் உறுதிப்படுத்தியுள்ளது.
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தின்போது பேருந்து மீது வெடிகுண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவும் குற்றவாளியாக இணைக்கப்பட்டார்.

    ஏற்கனவே ஊழல் வழக்கில் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கலிதா ஜியாவுக்கு இந்த கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜாமின் அளித்தது. இந்த ஜாமினுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், முன்னர் ஜாமினுக்கு விதித்திருந்த தடையை உறுதிப்படுத்தி இன்று உத்தரவிட்டுள்ளது.

    தேவைப்பட்டால், ஐகோர்ட்டை அணுகி கலிதா ஜியா நிவாரணம் காணலாம். கலிதாவுக்கு ஜாமின் வழங்குவது தொடர்பாக ஐகோர்ட் இன்னும் நான்கு வாரங்களுக்குள் தீர்மானிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியுள்ளது. #KhaledaZia #BanglaSC 
    ஊழல் வழக்கில் 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட வங்கதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. #KhaledaZiaBail
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கலிதா ஜியா அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டாக்காவில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம, கலிதா ஜியாவுக்கு (வயது 72) 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் கலிதா ஜியா மேல்முறையீடு செய்தார். அத்துடன் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், கலிதா ஜியாவுக்கு கடந்த மார்ச் 12-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது.

    இதனை எதிர்த்து அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கலிதா ஜியாவுக்கு ஐகோர்ட் வழங்கிய ஜாமீனை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

    இதற்கிடையே கலிதா ஜியாவின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வரும் ஐகோர்ட், ஜூலை மாதம் 31-ம் தேதி தீர்ப்பளிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. #KhaledaZiaBail
    ×