என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லண்டன் பயணம்"

    • கலிதா ஜியாவை இங்கிலாந்தின் லண்டனுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முடிவு.
    • ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்திற்கு நாளை காலை 8 மணிக்கு தரையிறங்கும் இடம் ஒதுக்கீடு.

    வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (வயது 80). இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே கலிதா ஜியாவை இங்கிலாந்தின் லண்டனுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவர் நாளை ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் லண்டனுக்கு அழைத்து செல்லப்பட உள்ளார்.

    இதுதொடர்பாக வங்காளதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது," ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்திற்கு நாளை காலை 8 மணிக்கு தரையிறங்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்று இரவு 9 மணிக்கு புறப்படும் நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது" என்றார்.

    இந்த விமானம், ஜெர்மனியை தளமாகக் கொண்ட எப்.ஏ.ஐ விமானக் குழுமத்திடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக பா.ஜனதா தலைவராக அண்ணாமலையே நீடிப்பார்.
    • தேசிய தலைமையும் அதைத்தான் விரும்புகிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்பை மேற்கொள்ள லண்டன் செல்ல இருக்கிறார். இதனால் அவர் அதற் கான பணிகளையும் கவ னித்து வருகிறார். லண்டனில் 3 மாதம் தங்கியிருந்து, அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து படிக்க உள்ளார்.

    இந்த நிலையில், அண்ணாமலை லண்டன் சென்றால், தமிழக பா.ஜ.க.வில் மாநில தலைவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி பா.ஜ.க.வினர் இடையே நிலவுகிறது.

    இதுதொடர்பாக டெல்லி தலைமையும் ஆலோசனை மேற்கொண்டது. இது குறித்து பா.ஜனதா நிர்வாகிகள் கூறியதாவது:-

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந் தேதி லண்டன் செல்ல உள்ளார். ஆக்ஸ் போர்டு பல்கலைக் கழகத்தில் செப்டம்பர் 2-ந்தேதி முதல் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை தொடங்க உள்ளார். 3 மாத காலம் லண்டனில் தங்கி இருக்கும் அவர், அங்கிருந் தபடியே, கட்சி விவகாரங்களை கவனித்துக் கொள்வார்.

    2026 சட்டப்பேரவை தேர்தலிலும் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையே நீடிப்பார். தேசிய தலைமையும் அதைத்தான் விரும்புகிறது. கட்சியின் அமைப்பு ரீதியான பணிகளை வழக்கம்போல கேசவ விநாயகம் கவனித்துக் கொள்வார்.

    அடுத்த 3 மாதங்களில், தேவைப் பட்டால் பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் காணொலியில் அண்ணா மலையுடன் கலந்து ஆலோசித்து, முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

    இவ்வாறு கட்சி நிர்வாகிகள் கூறினர்.

    ×