search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பப்பை"

    • அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
    • 5 கிலோ எடை–யி–லான கட்டி இருப்–பது கண்–டறி–யப்–பட்டது.

    விழுப்புரம்:

    வேலூர் மாவட்டம் வாழப்–பந்–தல் கிரா–மத்தை சேர்ந்–த–வர் மொழிச்–செல்–வம் மனைவி பரி–மளா(வயது 33). இவ–ருக்கு கடந்த ஜூலை மாதம் கடு–மை–யான வயிற்று வலி ஏற்–பட்டது. இதை–ய–டுத்து அவர் சிகிச்–சைக்–காக முண்–டி–யம்–பாக்–கத்–தில் உள்ள விழுப்–பு–ரம் அரசு மருத்–து–வக்–கல்–லூரி மருத்–து–வ–ம–னையில் அனு–ம–திக்–கப்–பட்டார். அவ–ருக்கு கர்ப்–பப்–பை–யில் 5 கிலோ எடை–யி–லான கட்டி இருப்–பது கண்–டறி–யப்–பட்டது.

    அதைத் தொடர்ந்து கல்–லூரி முதல்–வர் கீதாஞ்–சலி தலை–மையில் மக–ளிர் மற்–றும் மகப்–பேறு துறை தலை–வர் ராஜேஸ்–வரி தலை–மை–யில் டாக்–டர்–கள் சங்–கீதா, இளை–ய–ராஜா, நித்–திய பிரி–ய–தர்–ஷினி, சிறு–நீ–ர–கத்–துறை நிபு–ணர்–கள் அரு–ண–கிரி, பாஸ்–கர், மயக்–க–வி–யல் நிபு–ணர் டாக்–டர்–கள் செந்–தில்–கு–மார், மகேந்–தி–ரன், திருச்–செல்–வம் உள்–ளிட்டோர் கொண்ட மருத்–துவ குழு–வி–னர் அறுவை சிகிச்சை செய்து, கட்–டியை அகற்றி சாதனை படைத்–த–னர்.

    இது–கு–றித்து முதல்–வர் கீதாஞ்–சலி கூறு–கை–யில், இது போன்ற அறுவை சிகிச்–சையைதனி–யார் மருத்–து–வ–ம–னை–யில் செய்–தால் ரூ.2 லட்சம் வரை செல–வா–கும். ஆகவே ஏழை, எளிய மக்–கள் இது போன்ற அறுவை சிகிச்–சை–க–ளுக்கு அரசு மருத்–து–வ–மனையை பயன்–ப–டுத்–திக் கொள்ள வேண்–டும் என்–றார். அப்–போது மருத்–துவ துணை கண்–கா–ணிப்–பா–ளர் புக–ழேந்தி, நிலைய மருத்–துவ அலு–வ–லர் ரவிக்–கு–மார், உதவி நிலை மருத்–துவ அலு–வ–லர் நிஷாந்த், நிர்–வாக அலு–வ–லர் சக்–தி–வேல் மற்–றும் அறுவை சிகிச்சை செய்த டாக்–டர்–கள் குழு–வி–னர் உடன் இருந்தனர்.

    • சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
    • குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இதுபோன்ற சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.

    காஞ்சிபுரம்:

    கர்ப்பப்பை பிரச்சினைகளால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத நிலை வரும்போது செயற்கைமுறையில் கருத்தரித்தல், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல், குழந்தையை தத்தெடுத்தல் போன்ற ஏதாவது ஒரு முறையை தேர்வு செய்யும்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

    நவீன மருத்துவத்தில் இதயம், கல்லீரம், சிறுநீரகம் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளை போல் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்தும் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.

    பெரும்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தமிழகத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவரும், ஆந்திராவை சேர்ந்த 28 வயது பெண் ஒருவரும் கருவுற முடியாததால் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பிறவியிலேயே இருவருக்கும் கர்ப்பப்பை இல்லாமல் போனதால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததை விளக்கி இருக்கிறார்கள்.

    வாடகைத்தாய் மூலம் முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். அதற்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் உறுப்புமாற்று சிகிச்சை முறையில் கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ள விரும்பி இருக்கிறார்கள்.

    அந்த பெண்களுக்கு கர்ப்பப்பை இல்லை. ஆனால் கருமுட்டைகள் உருவாகும் ஓவரி மற்றும் கருமுட்டைகளை கொண்டு செல்லும் குழாய் ஆகியவை நல்ல நிலையில் உள்ளன. இதையடுத்து கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பெண்ணுக்கு அவரது தாயும், மற்றொருவருக்கு அவரது அத்தையும் கர்ப்பப்பை தானம் கொடுக்க முன்வந்தனர்.

    அவர்கள் இருவரும் 54 மற்றும் 56 வயதுடையவர்கள் மாதவிடாய் நின்று போனவர்கள். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தனர். இதனால் அவர்கள் கர்ப்பப்பையை எடுக்க சோதனைகள் நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆபரேசன் தேதி குறிக்கப்பட்டது. குறிப்பிடப்பட்ட நாளில் தானம் செய்யும் பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பை அகற்றப்பட்டு இரண்டு பெண்களுக்கும் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 16 மணிநேரம் நீடித்துள்ளது.

    இந்த சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

    இந்த மாதிரி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது சில நேரங்களில் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு உறுப்பை ஏற்றுக் கொள்ளாது. அதை தவிர்க்க விலை உயர்ந்த ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்படும்.

    அந்த வகையில் இந்த இரு பெண்களும் 3 மாதங்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். வருகிற மே மாதம் செயற்கை கருவூட்டல் முறையில் கருமுட்டையை உருவாக்கி கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டு குழந்தை வளர்ச்சி கண்காணிக்கப்படும். பின்னர் ஆபரேசன் மூலம் பிரசவம் செய்யப்படும்.

    இந்த மாதிரி கர்ப்பப்பை புதிதாக பொருத்தப்படுவது 5 வருடங்கள் வரை கருவுறும் தன்மை பெற்றிருக்கும். இந்த கால கட்டத்துக்குள் 2 அல்லது 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள முடியும்.

    தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.

    ×