search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருவேல மரங்கள்"

    • கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏற்படும் அபாயத்தில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவாடனை

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினதில் இருந்து எஸ்.பி.பட்டினம் வரை கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் பேருந்துகள் அதிக அளவில் செல்வது வழக்கம்.

    தேவிப்பட்டினத்தில் இருந்து எஸ்.பி. பட்டினம் வரை உள்ள இருபுறமும் சாலையில் காட்டு கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருப்பதால் போக்கு வரத்துக்கு இடையூராக உள்ளது.

    இதனால் வாகன ஓட்டி கள் மிகுந்த அச்சத்தில் சாலையில் பயணிக் வேண்டி உள்ளது. மேலும் சாலையின் வளைவுகளில் எதிரில் வரும் வாகனம் தெரியாமல் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.

    இதேபோல் இரண்டு சக்கர வாகனத்தில் செல் வோர் சாலையில் செல்லும் போது எதிரில் கனரக வாகனம் வந்தால் ஒதுங்கக் குட முடியாத சூழ்நிலை ஏற் படுகிறது. இதனால் வாகன யோட்டிகளுக்கு காயம் மற்றும் விபத்தும் ஏற்படுகிறது.

    இதனை நெடுஞ்சாலை துறையினரிடம் பல முறை புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் அலட்சிய மாக உள்ளனர்.

    இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவாடானையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவாடானை

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இருந்து ஓரியூர் வரை பாண்டுகுடி வழியாக செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் கனரக வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    திருவாடானை அருகே உள்ள ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் அன்னை வேளாங்கண்ணி பேராலயமும் உலக பிரசித்தி பெற்றது.

    இத்திருத்தலங்களின் திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8, 9-ந்தேதிகளில் முடிவடையும். அதே போல் இந்த வருடமும் தற்போது திருவிழா தொடங்கி நடைபெற்று வருவதால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் வழிபட்டு பின்பு வேளாங் கண்ணிக்கு சென்று அங்கு உள்ள புனித ஆரோக்கிய மாதாவை வழிபட பக்தர்கள் நடைபயணமாகவும், வாகனங்களிலும் பயணிக்கின்றனர்.

    பக்தர்களும், வாகன ஓட்டிகளும் திருவாடா னையில் இருந்து பாண்டுகுடி வழியாக ஓரியூர் செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் உள்ள கருவேல மரங்களால் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    அதே போல் அஞ்சுகோட்டை சாலை பிரிவில் ஓரியூர் செல்ல வழிகாட்டும் பெயர் பலகை இல்லாததாலும் பயணிகள் வழி மாறி செல்வது மிகவும் வேதனையளிக்கிறது.

    எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருபுறமும் உள்ள கருவேல மரங்களை அகற்றவும், அஞ்சுகோட்டை சாலை பிரிவில் வழிகாட்டி பெயர் பலகை அமைக்கவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அரசு நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சோமன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா, தானிபட்டி கிராமத்தில் உள்ள வில்லூர் கண்மாய், பிள்ளையா கண்மாய், வண்ணாரக் கண்மாய், புது ஊரணி மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சுமார் 13 லட்சம் மதிப்புள்ள சீமை கருவேல மரங்கள், நாட்டு கருவேல மரங்கள் மற்றும் இதர மரங்களை தானிபட்டி கிராம பொதுமக்கள் சார்பாக சுப்பிரமணி என்பவர் அரசின் உரிய அனுமதியின்றி சட்ட விரோ தமாக வெட்டி விற்பனை செய்ய முயற்சித்து வருகிறார்.

    ஆகவே அரசு சார்பில் மரங்களை வெட்டுவதற்கு பொது ஏலம் நடத்தினால் அரசிற்கு வருவாய் கிடைக்கும். எனவே தானிபட்டி கிராமத்தில் உள்ள வில்லூர் கண்மாய், பிள்ளையா கண்மாய், வண்ணாரக் கண்மாய், புது ஊரணி மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள், நாட்டு கருவேல மரங்கள் மற்றும் இதர மரங்களை வெட்டி சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அரசிற்கு வருவாய் கிடைக்கும் வகையில் பொது ஏலம் நடத்தவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தானிப்பட்டி கிராம கண்மாய்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டு வதற்கான ஒப்பந்தங்கள் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதிகள் வழக்கு குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • அபிராமம் அருகே கருவேல மரங்களை அகற்றி நூலக கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை விடப்பட்டது.
    • நத்தம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது இதன் சுவர்கள், தரைதளம், மேல்தளம் சேதமடைந்து உள்ளது. நூலகம் ஊருக்கு ஒதுக்குபபுறமாக இடத்தில் உள்ளதால் மக்கள் நீண்ட தூரம் செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

    சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் எந்த நடவடி க்கையும் எடுக்காததால் கருவேல மரங்களால் புதர் மண்டி கிடக்கிறது. இரவு நேரங்களில் குடிமகன்கள் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    இதுகுறித்து நத்தம் கிராம மக்கள் கூறுகையில், நூலகத்திற்க்கு சொந்த கட்டிட வசதி இருந்தும் அதை சீரமைக்கவில்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் நூலகத்திற்க்கு யாரும் படிக்க செல்வது கிடையாது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் செல்வது கிடையாது. இந்த நூலகத்தை ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் பயன்ப டுத்தி வந்த நிலையில், நூலக கட்டிடம் சேதமடைந்ததால் யாரும் செல்லவில்லை.

    பொதுமக்கள் நடமாட்ட முள்ள பகுதியில் நூலகம் அமைத்து அனை வரும் பயன்படுத்தும் வகையில் நூலக கட்டிடத்தை கொண்டுவர வேண்டும். சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைத்து, கருவேல மரங்களை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நூலக கட்டிடத்தை கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அபிராமம் பகுதியில் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மரங்கள் வளர்க்க அபிராமம் பகுதி சமுக ஆர்வலர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி, வானம் பார்த்த பூமி, காட்டு கருவேல மரங்கள் நிறைந்த மாவட்டம் என்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் அபிராமம் பகுதியில் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மரங்கள் வளர்க்க அபிராமம் பகுதி சமுக ஆர்வலர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையான சூழலை உருவாக்க கலெக்டர் ஜானிடாம் வர்கீசை தலைவராக கொண்டு மாவட்ட வன அலுவலர் பகான் ஜக்தீஸ் சுதாகர் தலைமையில் பசுமை அமைப்ப்பு அமைக்ககப்பட்டுள்ளது.

    இதில் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை, அனைத்து கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

    இந்த அமைப்பு மூலம் 2023-ல் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மரங்களை வளர்த்து ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு புங்கன், பூவரசு. புளி மற்றும் மாதுளை, சீதா நெல்லி, வேப்பம் மரம் ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட மரங்களை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக அமைப்புகளும் செயல்பட அழைப்பு விடப்பட்டுள்ளது.

    இதையே அழைப்பாக ஏற்று அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சமூகப்பணி செய்துவரும் அபிராமம் பகுதி சமூக சேவை அமைப்பு மற்றும் இளைஞர்கள் தங்கள் பகுதியில் முனைப்பு டன் செயல்பட்டு காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மரங்களை நட்டு அபிராமம் பகுதியை பசுமை பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • பாம்பன் நுழைவுப்பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பாறாங்கற்களில் சரிவு ஏற்பட்டு பாலம் சேதமடைய வாய்ப்புள்ளது.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் தீவையும் மண்டப பகுதியையும் இணைக்கும் வகையில் கடல் பரப்பில் 2.5 கி.மீட்டர் தூரத்திற்கு சாலை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பாலத்தில் 2 புறமும் தொடங்கும் பகுதியில் கருவேல மரங்கள் அதிகமாக காணப்படுகிறது.

    இந்த மரங்கள் சாலைக்கு பாதுகாப்பாக பாறாங்கற்களால் அமைக்கப்பட்டுள்ள சரிவு பகுதிகளில் அதிகமாக வளர்ந்துள்ளன. இதனால் பாறாங்கற்களில் சரிவு ஏற்பட்டு பாலம் சேதமடைய வாய்ப்புள்ளது.

    இந்த கருவேல மரங்களால் சாலை பாலத்தில் இரு புறமும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் நுழையும்போது அழகு மிகுந்த நீண்ட பரப்புடைய கடல் பகுதியையும், கடலில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் தண்டவாளத்தையும், கடலில் அமைக்கப்பட்டுள்ள வளைவான சாலை பாலத்தையும், ரெயில் செல்லும் அழகையும் ரசிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

    சாலை விபத்தை தவிர்க்கும் வகையில் இந்த மரங்களை அகற்ற வேண்டும் என்று இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

    • கருவேல மரங்களை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது என்று அமைச்சர் கூறினார்.
    • சிறுதானியங்களை ரேசன் கடைகளில் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது

    மதுரை

    மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் மாநில அளவிலான உழவர் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக அங்கு பிரத்தியேக ஸ்டால்கள் போடப்பட்டு உள்ளன. அங்கு வேளாண் விதைகள் மற்றும் கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

    இதனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    விவசாயிகளின் வளர்ச்சியை தடுக்கும் கருவேல மரங்களை அகற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இது விவசாய தொழிலை நாசமாக்கி வருகிறது. கருவேல மரங்களை எப்படி அகற்றினாலும் மீண்டும் வந்து விடுகிறது.

    தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சிறுதானியங்களை ரேசன் கடைகளில் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.

    நிகழ்ச்சியில் தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஸ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் காலோன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முதன்மை செயலாளர் சமயமூர்த்தி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணை வேந்தர் கீதாலடசுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாலாற்று படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
    • வெள்ள நீர் புகுந்துவிடும் என கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியை சுற்றி அமைந்துள்ள திருங்காக் கோட்டை, முட்டாக்கட்டி, பிரான்மலை, எஸ்.வி. மங்க லம், காளாப்பூர், கண்ண மங்கலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்க ளாக மாலை நேரத்தில் கனமழை பெய்தது. இதனால் இரவு நேரத்தில் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் ஓடியது. மேலும் சிங்கம்புணரி ஒன்றிய பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு செல்லும் வாய்க்கால்கள் சரிவர பராமரிக்கப்படாததால் மழை நீர் சேமிக்க இயலாமல் வீணாகியது.மேலும் சிங்கம்புணரி வழியாக ஓடும் பாலாற்றில் கடுமையான சீமக்கருவை முள் ஆக்கிரமித்துள்ளதால் பாலாற்று படுகை அருகில் உள்ள அணைக்கரைப்பட்டி, ஓசாரிப்பட்டி, பட்ட கோவில் குளம், காளாப்பூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்குள் காட்டாற்று வெள்ளநீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது.

    அக்டோபர் நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ள பருவமழை காரணமாக காட்டாற்று வெள்ளமாக வரும். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் பாலாற்று படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • நிலத்தடி நீருக்கு வேட்டு வைக்கும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பிற தாவரங்களை விட அதிக கார்பன்-டை ஆக்சைடு வெளியிட்டு காற்றை மாசுபடுத்துகிறது.

    கீழக்கரை

    ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா உட்பட 129 நாடுகளில் சீமை கருவேல மரங்கள் உள்ளது. 1870ல் சமையலுக்கான எரி பொருளாகவும் பயிர்களுக்கு வேலிகளாகவும் முதன் முதலில் கருவேல மரங்கள் இந்தியாவில் அறிமுகமானது. அடுத்த 20 ஆண்டுகளில் வேகமாக ஆந்திரா, டெல்லி அரியானா, பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பரவியது. காலப்போக்கில் எரிபொருள் பயன்பாடு குறைந்த சூழலில் எளிதில் பரவி வளரும் தன்மை கொண்ட கருவேல மரங்கள் விளை நிலங்களிலும், பராமரிக்காமல் விடப்பட்ட நீர்நிலைகளிலும், பொது இடங்களிலும் செழித்து வளர்ந்தன.

    இது நிலத்தின் ஆழத்தில் ஊடுருவி சென்று பிற தாவரங்களுக்கு நீர் கிடைக்க விடாமல் அதன் வளர்ச்சியை தடுக்கிறது. மழை இல்லாத சூழலில் ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் வெப்பம் அதிகரிக்கிறது. மழை வாய்ப்பினையும் குறைத்து விடுகிறது. இதன் ஆணிவேர் மட்டுமின்றி பக்க வேர்களும் வலிமையானவை.

    மழை நீர் ஊடுருவி நிலத்திற்குள் செல்வதை கருவேல மரங்களின் வேர்கள் தடுக்கின்றன. பிற தாவரங்களை விட அதிக கார்பன்-டை ஆக்சைடு வெளியிட்டு காற்றை மாசுபடுத்துகிறது. கருவேல மரங்களை அழிக்க கோர்ட்டு உத்தரவிட்டபோதும் செயல்படுத்தலில் தாமதம் நீடிக்கிறது.

    கீழக்கரை பகுதிகளில் சீமைக்கருவேல மரங்களின் அசுர வளர்ச்சியால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. மக்கள் குடியிருக்கும் பகுதியிலும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருப்பதால் விஷ விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    கொடிய நோய் போல் பரவி வரும் இந்த மரங்களை முற்றிலுமாக அழித்து விவசாயம், குடிநீர் மட்டுமின்றி சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டியது தற்போதைய அவசியமாக உள்ளது. இதை முழுவதுமாக அகற்றுவதோடு, பொது இடங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பூங்காக்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள், நீராதார கரைகளில் பலன் தரும் மரக்கன்றுகளை நட உள்ளாட்சி நிர்வாகங்கள் முன் வர வேண்டும்.

    இதனை பயன்படுத்தி இழந்த சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் நடவடி–க்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • நீராதாரங்களில் கடந்த சில வருடங்களாகவே பெரியளவில் மழை பெய்யவில்லை.
    • நிலத்தடி நீர் இருப்பையும் உயர்த்திக் கொள்ள முடியும்.

    உடுமலை :

    மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் வடக்கு முகமான சரிவுகளில் உற்பத்தியாகும் பாலாற்றை தடுத்து திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது. அணை நிரம்பிய பின்பு ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரானது உடுமலை தேவனூர்புதூர் அருகே நல்லாற்றுடன் இணைந்து பயணித்து ஆழியாற்றுடன் கலக்கிறது. இந்த இடைப்பட்ட தூரத்தில் ஏராளமான கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளின் நிலத்தடி நீராதாரத்தை உயர்த்தி விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது.

    ஆனால் திருமூர்த்தி அணை மற்றும் நல்லாற்றின் நீராதாரங்களில் கடந்த சில வருடங்களாகவே பெரியளவில் மழை பெய்யவில்லை. இதனால் அணை நிரம்புவதிலும் தடங்கல்கள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக பாலாறு மற்றும் அதன் துணை ஆறான நல்லாறும் நீர்வரத்து இல்லாமல் தவித்து வந்தது. ஆனால் மழைக்காலங்களில் வயல்வெளியில் தேங்கியுள்ள தண்ணீரில் பாலாற்றில் வழிந்து நல்லாற்றுடன் இணைந்து செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திருமூர்த்தி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் மலைப்பொழிவு குறைந்துவிட்டது. இதனால் அணை நிரம்பிய பின்பு உபரி நீரை பெற்று வந்த பாலாறு திருமூர்த்தி அணையின் உதவி இல்லாமல் தவித்து வருகிறது. மேலும் நல்லாறும் பாலாற்றுக்கு தண்ணீர் வரத்தை அளிக்காமல் கைவிட்டு விட்டது. இதன் காரணமாக ஆற்றிலும் பெரிதளவு நீர்வரத்து ஏற்படவில்லை. அத்துடன் அதில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளாதலால் வேப்பன்,புங்கன்.சீமை கருவேலம் உள்ளிட்ட மரங்களும்,செடிகளும் வளர்ந்து புதர் போல் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படும்போது ஆற்றில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கரைகளை வலுவிழக்க செய்து வருகிறது.

    மேலும் ஆற்றின் கரையோரத்தில் ஒரு சில நபர்கள் தென்னை மரங்களையும் நடவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆறு படிப்படியாக அதன் பொலிவை இழந்து ஓடை போன்று காட்சி அளித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஆற்றில் புதர் மண்டி உள்ளதைச் ஆதாரமாகக் கொண்டு மர்ம ஆசாமிகள் சமூகவிரோத செயல்களை ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.எனவே நல்லாற்றில் வளர்ந்துள்ள செடிகள்,மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் கரையை பலப்படுத்துவதற்கும் தண்ணீர் தேங்குவதற்கு வசதியாக ஆங்காங்கே தடுப்பணைகளையும் கட்டி தண்ணீரை தேக்குவதற்கு முன்வர வேண்டும். இதனால் நிலத்தடி நீர் இருப்பையும் உயர்த்திக் கொள்ள முடியும். இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்பதால் சாகுபடி பணிகளிலும் ஊக்கத்தோடு ஈடுமுடியும் என்றனர்.

    • சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.இந்த நிலையில் சுமார் 2 ஆண்டுகளாக  சுகாதார வளாகம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது.
    • போர்வெலில் உள்ள மோட்டாரை மர்ம நபர்கள் அடிக்கடி திருடி செல்வதால் தண்ணீர் இல்லாமல் போய் விடு கிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் மற்றும் உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் நலன் கருதி மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கட்டிடம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.இந்த நிலையில் சுமார் 2 ஆண்டுகளாக  சுகாதார வளாகம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது.

    மேலும் சுகாதார  வளாகத்தின் பின்புறம் போர்வெல் அமைக்க ப்பட்டுள்ளது.இந்த போர்வெலில் உள்ள மோட்டாரை மர்ம நபர்கள் அடிக்கடி திருடி செல்வதால் தண்ணீர் இல்லாமல் போய் விடு கிறது.

    மேலும் சுகாதார வளாகத்தை சுற்றி கருவேல மரங்கள் முள்புதர்கள் காடு போல மண்டி கிடக்கி றது.இதனால் சுகாதார வளாகத்தின் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதுகுறித்து சம்ம ந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மகளிர்மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தை புதுப்பித்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×