search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலாற்று படுகையில் சீமைகருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
    X

    பாலாற்று படுகையில் சீமைகருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

    • பாலாற்று படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
    • வெள்ள நீர் புகுந்துவிடும் என கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியை சுற்றி அமைந்துள்ள திருங்காக் கோட்டை, முட்டாக்கட்டி, பிரான்மலை, எஸ்.வி. மங்க லம், காளாப்பூர், கண்ண மங்கலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்க ளாக மாலை நேரத்தில் கனமழை பெய்தது. இதனால் இரவு நேரத்தில் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் ஓடியது. மேலும் சிங்கம்புணரி ஒன்றிய பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு செல்லும் வாய்க்கால்கள் சரிவர பராமரிக்கப்படாததால் மழை நீர் சேமிக்க இயலாமல் வீணாகியது.மேலும் சிங்கம்புணரி வழியாக ஓடும் பாலாற்றில் கடுமையான சீமக்கருவை முள் ஆக்கிரமித்துள்ளதால் பாலாற்று படுகை அருகில் உள்ள அணைக்கரைப்பட்டி, ஓசாரிப்பட்டி, பட்ட கோவில் குளம், காளாப்பூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்குள் காட்டாற்று வெள்ளநீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது.

    அக்டோபர் நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ள பருவமழை காரணமாக காட்டாற்று வெள்ளமாக வரும். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் பாலாற்று படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×