search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "love couple"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு
    • பெற்றோர்களை வரவழைத்து போலீசார் அறிவுரை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த நயனசெருவு பகுதியைச் சேர்ந்த கர்ணன் மகன் ராஜ்குமார் (வயது 26) இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகள் சாய் சினேகா (21) ஆகிய இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதன் காரணமாக காதல் ஜோடி கடந்த 23-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருப்பூருக்கு சென்று காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு இருவரும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். விசாரணை மேற்கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    காதல் ஜோடி இருவரும் மேஜர் என்பதால் இரு தரப்பு பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் காதல் திருமணம் செய்து கொண்ட சாய்சினேகா கணவருடன் வீட்டிற்கு சென்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெற்றோர் மிரட்டல் விடுப்பதாக புகார்
    • பாதுகாப்பு கேட்டு சென்றனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தர்மம் பேட்டை திருஞானசம்பந்தர் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 22). பி.எஸ்.சி. பட்டதாரி. பிச்சனூரை சேர்ந்தவர் கணேஷ். இவர் ஆசிரியர் பயிற்சி முடித்து சுயமாக தொழில் செய்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்களது காதல் விவகாரம் தமிழ்செல்வியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் காதல் ஜோடி இருவரும் கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருப்பதிக்கு சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். காதல் ஜோடிக்கு தமிழ்ச்செல்வி பெற்றோர் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் காதல் ஜோடி இருவரும் பாதுகாப்பு கேட்டு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோலாண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராபின்(23), பிரமிளா (19), நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் பகுதியில் உள்ள இவரும் அதே மில்லில் வேலை செய்து வருகிறார்கள்.
    • சேலம் வந்து காதலன் ராபினை ஓமலூர் அருகே பொட்டியபுரம் பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மாட்டுக் காரனூர் மோலாண் டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராபின்(23), நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூல் மில்லில் வேலை செய்து வருகிறார்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காடச்ச நல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரமிளா (19), இவரும் அதே மில்லில் வேலை செய்து வருகிறார். இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்களது காதல் விவகாரம் பிரமிளாவின் பெற்றோருக்கு தெரியவர இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் வேறு ஒரு நபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய பிரமிளா சேலம் வந்து காதலன் ராபினை ஓமலூர் அருகே பொட்டியபுரம் பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து இருவரும் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு ஓமலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து ஓமலூர் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெற்றோர்கள் எதிர்ப்பு
    • வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை பூசாரி பச்சையப்பன் தெருவை சேர்ந்தவர் சரவணன்.இவருடைய மகன் சூரியபிரசாத். வாலாஜாபேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவரும், சின்னதகரகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகள் கவுதமி என்பவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    பெற்றோர்கள் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சரவணனும், கவுதமியும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

    பாதுகாப்பு கேட்டு நெமிலி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

    இது சம்பந்தமாக நெமிலி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி இருவரின் பெற்றோரையும் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டனர் என தெரிவித்து, காதல் கணவருடன் இளம் பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 4 பேர் மீது வழக்கு பதிவு
    • ஆசை வார்த்தை கூறி தனது மகளை கடத்தியதாக கூறியிருந்தார்.

    கடலூர்:

    புதுப்பேட்டை அடுத்த சிறுகிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகள்கோமதி (19 ) இவர்பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டிலிருந்து வந்தார். கடந்த 3-ந் தேதி இரவு11மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கோமதி திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் அவரது தந்தை ஆறுமுகம் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரில் பலாப்பட்டுவை சேர்ந்தர் பாலமுருகன் ஆசை வார்த்தை கூறி தனது மகளை கடத்தியதாக கூறியிருந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன கோமதி, பாலமுருகனை திருமணம் செய்து கொண்டு நேற்று மாலை புதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போதுஇரு குடும்பத்தை சேர்ந்த மற்றும் ஊர் தரப்பினர்கள் 30 பேர்கள் அங்கு திரண்டனர் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் காதல் திருமணத்திற்கு உதவியாக இருந்ததாகபலாப்பட்டு பசுபதி (29), லட்சுமிபதி (31),ஆகிய இருவருக்கும் அடி உதை விழுந்தது இதில் காயமடைந்த இருவரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டன இதுகுறித்து பசுபதி கொடுத்த புகாரின் பேரில் சிறு கிராமத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், சிவசுப்பிரமணியன், மணிகண்டன்,கிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்துள்ளனர்
    • பெற்றோர்கள் வர மறுத்ததால் சங்கர்-பிரியதர்ஷினிக்கு திருமண வயது தாண்டி விட்டதால் இருவரும் சேர்ந்து வாழ்வதாக எழுதிக்கொடுத்தனர்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியை சேர்ந்தவர் அழகர் மகன் சங்கர் (வயது 28). இவரும், கொத்தமங்கலத்தை சேர்ந்த ராமநாதன் மகள் பிரியதர்ஷினி (26) என்பவரும் காதலித்து அப்பகுதியில் உள்ள கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோர்கள் வர மறுத்ததால் சங்கர்-பிரியதர்ஷினிக்கு திருமண வயது தாண்டி விட்டதால் இருவரும் சேர்ந்து வாழ்வதாக எழுதிக்கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்
    • பெற்றோர்களை வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த நாயன அத்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் இவருடைய மகன் சரத் (வயது 23) இவர் வேலூரில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    ஜவ்வாது மலை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகள் பூஜா (20) இவர் வேலூரில் நர்சிங் முடித்துவிட்டு அங்கேயே தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

    இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் சரத்தின் வீட்டிற்கு பூஜா வந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று கிருஷ்ணகிரியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் இருவரின் பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடிகளை அனுப்பி வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த கருப்பு கொடிகளை அகற்றினர்.
    • உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 22). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். இவர்கள் வெ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடிகள் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினர். காந்தி நகர் அருகே உள்ள மாந்தோப்புக்கு சென்று அங்குள்ள மரத்தில் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இதனால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் சமாதானம் அடைந்த பெண்ணின் பெற்றோர் உடலை வாங்கிச் சென்றனர். ஆனால் மாரிமுத்துவின் உறவினர்கள் உடலை வாங்கவில்லை. மாரிமுத்துவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று இந்திய ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் பெரியகுளம் அருகே காந்திநகர் கும்பக்கரை பிரிவு பகுதியில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த கருப்பு கொடிகளை அகற்றினர். மேலும் கொடிகளை கட்டியதாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 8 நாட்களாக மாரிமுத்துவின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெற்றோருடன் பாச போராட்டம்
    • போலீசார் இருவரிடமும் கடிதம் வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்

    அணைக்கட்டு:

    பொள்ளாச்சியில் காணாமல் போன இளம் பெண்ணை தேடி வந்த போலீசார். இதனை அறிந்து வேப்பங்குப்பம் போலீசின் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமானார்கள். இன்னிலையில் காதலன் தான் வேண்டும் என்று இளம் பெண் போலீஸ் நிலையத்தில் கதறி அழுதார்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி நகர், அசோக் தெரு சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் நாகஜோதி (வயது 22) இளம்பெண் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வணிக தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 22) என்பவரை காதலித்து வந்தனர்.

    கடந்த 26-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து பெண்ணின் தாயார் பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் அவர்களை தேடி ஒடுகத்தூர் பகுதிக்கு வந்திருந்தனர். இதையடுத்து இளம் ஜோடியான நாகஜோதி மற்றும் சுரேஷ் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை அழைத்து செல்வதாக கூறினார்கள். சுரேஷை விட்டு நாகஜோதி பிரிய மனமில்லாமல் எனக்கு சுரேஷ் தான் வேணும் என்று போலீஸ் நிலையத்தில் கதறி அழுதார்.

    இதன் பின் பெண்ணின் உறவினர்கள் நாகஜோதி வேண்டாம் என கூறி இங்கேயை விட்டுவிட்டு பொள்ளாச்சிக்கு சென்றனர்.

    வேப்பங்குப்பம் போலீசார் இருவரிடமும் கடிதம் வாங்கிக்கொண்டு வழி அனுப்பி வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் ஓட்டல் அறையில் சோதனை நடத்தினர்
    • குறிப்பிட்ட இடத்தில் ரகசிய கேமராவுடன் இணைந்த கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை 100 அடி சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள தனியார் ஓட்டலில், மூலக்குளத்தை சேர்ந்த வாலிபர், தனது காதலியுடன் அறை எடுத்து தங்கினார்.

    அப்போது தங்கியிருந்த அறையில் எலக்ட்ரிக்கல் சுவிட்ச் பாக்ஸில், இன்டர்காம் தொலைபேசியை இணைக்கும் பிளக்பாயிண்டில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த ரகசிய கேமராவை கழற்றி எடுத்த ஜோடி, உடனடியாக அறையை காலி செய்தது. இது குறித்து ரெசிடென்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, சரியான பதில் கிடைக்காததால் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

    இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் ஓட்டல் அறையில் சோதனை நடத்தினர்.

    அப்போது குறிப்பிட்ட இடத்தில் ரகசிய கேமராவுடன் இணைந்த கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில், ஓட்டல் மேலாளர் தேங்காய்த்திட்டு வசந்த்நகரை சேர்ந்த ஆனந்த் (வயது25) மற்றும் ஓட்டல் ஊழியர் அரியாங்குப்பம் ஓடை வெளியை சேர்ந்த ரூம் பாய் ஆப்ரகாம் (22) ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 354 (சி)பெண்களை ஆபாசமாக படம் பிடித்தல், தகவல் தொழில் நுட்ப பிரிவு 66 (இ) ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்தல், கேபிள் மூலம் அனுப்புதல், தடயங்களை மறைத்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    மேலும் ஓட்டல் அறையில் தங்குபவர்களை ஆபாசமாக வீடியோ எடுக்க கேமரா மறைத்து வைத்துள்ளனரா அல்லது ரகசிய கேமரா காட்சிகளை நேரடியாக இணையதளம் வழியாக கண்டு ரசித்து வந்தனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin