search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery water"

    • மோடியின் சிறப்பான ஆட்சியால் இந்தியா, முதல் பணக்கார நாடாக மாறும் எனவும் அவர் தெரிவித்தார்.
    • மோடிக்கு எதிராக பிரதமர் பதவிக்கு போட்டியிட இந்தியா கூட்டணியில் யாருமே இல்லை.

    கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி நீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    பஞ்சப்பட்டி பகுதியில் பிரசாரம் செய்த பெரம்பலூர் தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தரை தொண்டர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் அவர் பேசினார். அப்போது, குடும்ப ஆட்சி அகற்ற வேண்டும் எனவும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தான் எம்.பி ஆனால் பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி நீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து வேங்காம்பட்டி கிராமத்தில் டாக்டர் பாரிவேந்தர் ஆதரவு திரட்டினார்.

    அப்போது எம்.பி தொகுதி நிதி 17 கோடி ரூபாயை பெரம்பலூர் தொகுதிக்கு, தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முழுமையாக செலவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வாக்குறுதியின்படி ஆயிரத்து 1200 பேரை பட்டதாரிகளாக மாற்றியுள்ளதாக அவர் கூறினார். மோடியின் சிறப்பான ஆட்சியால் இந்தியா, முதல் பணக்கார நாடாக மாறும் எனவும் அவர் தெரிவித்தார். நல்லவர்களை MPயாக அனுப்புங்கள், ஊழல் வாதிகளை தேர்ந்தெடுக்கக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டார். உங்கள் தேவைகளை நிறைவேற்ற நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து புனவாசிப்பட்டி பகுதியில் ஆதரவு திரட்டிய டாக்டர் பாரிவேந்தருக்கு திரளான பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது 5 ஆண்டுகளில், தான் செய்த பணிகளை புத்தகமாக வழங்கி உள்ளதாக குறிப்பிட்டார். உங்களின் தேவைகள் அனைத்தையும் கேட்டறிந்து முழுமையாக நிறைவேற்றி உள்ளதாக அவர் கூறினார். புண்ணியம், கருணை, உதவி என்ற நோக்கத்திற்காக ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதாக பெருமிதம் தெரிவித்தார்.

    மோடிக்கு எதிராக பிரதமர் பதவிக்கு போட்டியிட இந்தியா கூட்டணியில் யாருமே இல்லை என குறிப்பிட்டார். இந்தியா முழுவதும் ஊழல் செய்த கட்சி என்றால் திமுகவை தான் அழைக்கிறார்கள் என விமர்சித்தார். பேருந்த வசதி, கால்நடை மருத்துவமனை, பள்ளி கட்டடம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அவர் உறுதி அளித்தார்.

    லாலாப்பேட்டை பகுதியில் பிரசாரம் செய்த டாக்டர் பாரிவேந்தர், தன்னை வெற்றிபெறச் செய்தால் ஆயிரத்து 200 மாணவர்களுக்கான இலவச உயர்கல்வி திட்டம் தொடரும் என்றும், ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக மோடி இரவு பகலாக உழைப்பதாக அவர் குறிப்பிட்டார். மோடி நமக்கு கிடைத்திருப்பதற்கு, மிகப்பெரிய புண்ணியம் செய்திருப்பதாகவும் டாக்டர் பாரிவேந்தர் புகழாரம் சூட்டினார். 

    • கோடைக் காலங்களில் அதிகமான குடிதண்ணீர் தேவை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
    • தேவையை உணர்ந்து கர்நாடக அரசு கூட்டாச்சி தத்துவத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு வழக்கம் போல் மறுப்பு தெரிவித்திருக்கிறது. இது மிகவும் கண்டிக்கதக்கது.

    கர்நாடகா மாநில அணையில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் கொடுக்க மனது தான் இல்லை. இரண்டு மாநிலத்திற்கும் தண்ணீர் தேவைதான். கோடைக் காலங்களில் அதிகமான குடிதண்ணீர் தேவை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

    அதே நேரத்தில் தமிழக மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான தண்ணீரை தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்க வேண்டும். தேவையை உணர்ந்து கர்நாடக அரசு கூட்டாச்சி தத்துவத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நவம்பர் மாதம் 23-ந்தேதி வரை தினந்தோறும் 2,600 கன அடி காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்திரவு பிறப்பித்துள்ளது.
    • தமிழகத்தில் தற்பொழுது பெய்யும் மழை இயல்பை விட 40 சதவீதம் குறைவுவாக பெய்திருக்கிறது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டெல்லியில் நேற்று கூட்டப்பட்ட காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் தமிழக விவசாயத்திற்கு வருகிற நவம்பர் மாதம் 23-ந்தேதி வரை தினந்தோறும் 2,600 கன அடி காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்திரவு பிறப்பித்துள்ளது.

    தமிழகம் பெரிதும் நம்பியிருக்கும் வடகிழக்கு பருவமழை கூட முறையாக பெய்யாமல், மழை பொழிவு குறைவாகவே இருப்பது துரதிஷ்டம். தமிழகத்தில் தற்பொழுது பெய்யும் மழை இயல்பை விட 40 சதவீதம் குறைவுவாக பெய்திருக்கிறது. இதுவரை 19 செமீ பெய்திருக்க வேண்டிய மழை தற்பொழுது 12 செ.மீ அளவுதான் பதிவாகியிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. ஆகவே தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க காவிரி மேலாண்மை ஆணையம் மனிதாபிமான அடிப்படையில் காவிரியில் தண்ணீர் திறந்துவிட உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது.
    • கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை வினாடிக்கு 244 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதால் நீர்மட்டம் குறைந்தது. இதனால் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2899 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நவம்பர் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2600 கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது.

    ஆனால் இந்த உத்தரவுப்படி நேற்று கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. அதே போல் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் திறக்கவில்லை.

    கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை வினாடிக்கு 244 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 505 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 567 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.

    • கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.48 அடியாக இருந்தது.
    • கபினி அணைக்கு வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.48 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 710 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆறு மற்றும் வாய்க்காலில் வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதலே விவசாயிகள் திரண்டனர்.
    • சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் காலை முதலே குவிக்கப்பட்டு இருந்தனர்.

    சேலம்:

    காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று சேலம் ஜங்ஷனில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதலே விவசாயிகள் திரண்டனர். பின்னர் தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று ரெயில் மறியலுக்கு முயன்றனர்.

    இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் காலை முதலே குவிக்கப்பட்டு இருந்தனர். ஊர்வலமாக சென்று ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு நுழைவு வாயில் பகுதியில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகள் அதனை மீறி உள்ளே நுழைய முயன்றனர். ஆனாலும் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில் 30 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். 

    • கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2691 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • கபிணி அணைக்கு வினாடிக்கு 438 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2691 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையில் இருந்து காவிரி ஆறு மற்றும் கால்வாயில் வினாடிக்கு 4748 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் கபிணி அணைக்கு வினாடிக்கு 438 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5 ஆயிரத்து 48 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • தஞ்சை மாவட்டத்தில் வேளாண் துறை, புள்ளியல் துறை அதிகாரிகள் அறுவடை பரிசோதனை செய்தனர்
    • ஏக்கருக்கு 45 மூட்டை கிடைத்த நிலையில் தற்போது 30 முதல் 36 மூட்டை தான் கிடைக்கிறது.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கான கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் 100 அடியை தாண்டி இருந்த தண்ணீர் நாட்கள் செல்ல செல்ல படிப்படியாக குறைந்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது . இதனால் டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகிவிட்டது. எஞ்சிய பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 78486 ஹெக்டேர் அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டன. இவற்றில் 49000 ஹெக்டேர் பரப்பளவில் அறுவடை பணிகள் முடிந்து விட்டது. ஆனால் இந்த ஆண்டு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காததாலும் போதிய மழைப்பொழிவு இல்லாததாலும் பிரபாகரன் குறுவைப் பயிர்கள் கருகி வீணாகி விட்டது. இந்த ஆண்டு 33 சதவீதம் அளவுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே தஞ்சை மாவட்டத்தில் வேளாண் துறை, புள்ளியல் துறை அதிகாரிகள் அறுவடை பரிசோதனை செய்தனர். அதில் அறுவடை செய்யும்போது ஹெக்டேருக்கு சராசரியாக 6000 கிலோ நெல் கிடைத்த இடத்தில் தற்போது சராசரியாக 4232 கிலோ நெல் தான் கிடைத்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து தஞ்சை மாவட்ட விவசாயிகள் கூறும்போது:-

    முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை குறுவையில் அதிக அளவில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களிலும் பெருமளவில் குறுவைப் பயிர்கள் வீணாகிவிட்டது. அடுத்து சம்பா சாகுபடி தொடங்கலாமா என்பதே தெரியாத நிலையில் உள்ளோம். ஏக்கருக்கு 45 மூட்டை கிடைத்த நிலையில் தற்போது 30 முதல் 36 மூட்டை தான் கிடைக்கிறது. இதற்கு முன் இந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டது கிடையாது. இலக்கிய மிஞ்சி குறுவை சாகுபடி செய்தும் தற்போது அது பயன் இல்லாமல் போய்விட்டது என்றனர்.

    • தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு, இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை.
    • 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாகுடி கடைவீதியில் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அறந்தாங்கி:

    காவிரி நீரை நம்பி புதுக்கோட்டை மாவட்டங்களில் சாகுபடி செய்த விவசாயிகள், எதிர்பார்த்த நீர்வரத்து இல்லாததால் கருகும் பயிர்களை காப்பாற்ற முடியாமல் கண்ணீர் வடிக்கின்றனர்.

    சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. கடந்த ஜூன் 12ல், டெல்டா குறுவை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    அப்போது அணை நீர்மட்டம், 103.35 அடியாக இரு ந்தது. அணையிலிருந்து, 3,000 கன அடியிலிருந்து படிப்படியாக அதிகரித்து, 13 ஆயிரம் கனஅடி வரை நீர் திறக்கப்பட்டது.

    இதையடுத்து, 5 லட்சம் ஏக்கரில் டெல்டா விவசாயிகள் பயிர் நடவு செய்யும் பணியில் இறங்கினர்.

    அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டாலும், பல இடங்களில் உள்ள கடைமடை பகுதிகளில் தண்ணீர் செல்லவில்லை. டெல்டா மாவட்டங்களில், 1.5 லட்சம் ஏக்கரில் போர்வெல் மற்றும் பிற நீர் ஆதாரங்களை நம்பியும், காவிரி நீரை நம்பி, 3.5 லட்சம் ஏக்கரிலும் விவசாயம் நடக்கிறது.

    தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு, இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை. இருப்பினும், கர்நாடகா அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ள நிலையில், குடிநீர் தேவையை காரணம் காட்டி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசு மறுத்து வருகிறது.

    காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவையும் மதிக்காத கர்நாடகா அரசு, தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என, திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து ள்ளனர்.

    இந்தாண்டு பருவத்தோடு மழை பெய்யத் தொடங்கியதாலும் காவிரியில் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் விவசாயப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.

    தற்போது தண்ணீர் வரத்தும் இல்லை. மழையும் இல்லை. இதனால், சூல் பருவத்தில் நெற்கதிர்கள் வெளிவருவதற்கு பதிலாக, பதர்கள் கருகி வெளிவரும் அபாயம் உருவாகியுள்ளது

    இதனால் மன வேதனையடைந்த விவசாயிகள் காவிரியில் தண்ணீர் திறத்துவிட மறுக்கும் கர்நாடகாவை கண்டித்தும், தண்ணீரை பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தியும் கல்லணை கால்வாய்கடைமடை பகுதி பாசன தாரர்கள் சங்க தலைவர் கொக்கு மடை ரமேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாகுடி கடைவீதியில் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், அரசியல் கட்சிகள் கலந்துகொண்டு, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர்.

    • கபிணி அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 101.06 அடியாக இருந்தது.

    கர்நாடகா:

    கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1864 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 101.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 884 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆறு மற்றும் கால்வாயில் வினாடிக்கு 3ஆயிரத்து 701 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக இருந்தது.
    • கடந்த திங்கட்கிழமை 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5ஆயிரத்து 607 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 76.11 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 64 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 682 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2ஆயிரத்து 688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கடந்த திங்கட்கிழமை 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5ஆயிரத்து 607 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று நீர்திறப்பு 5ஆயிரத்து 598 கனஅடியாக இருந்த நிலையில் இன்று 2ஆயிரத்து 688 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    • மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணை அமைந்துள்ளது.
    • கபினி அணைக்கு வினாடிக்கு 2,684 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    சேலம்:

    கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இன்று காலை நிலவரப்படி 100. 64 அடி (மொத்த கொள்ளளவு 124.80 அடி) தண்ணீர் இருந்தது.

    இந்த அணைக்கு வினாடிக்கு 5,578 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3,598 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதேபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணை அமைந்துள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 2,684 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5,598 கனஅடி தண்ணீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    ×