என் மலர்
உள்ளூர் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்
- தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்க மாக உள்ளது.
- இந்த ஆண்டும் குறிப்பிட்ட தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
சேலம்:
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி முதல்-அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோ றும் ஜூன் 12-ந் தேதி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்க மாக உள்ளது. இந்த ஆண் டும் குறிப்பிட்ட தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீரை நம்பி டெல்டா விவசாயிகள் தற்போது, சுமார் 5 லட்சம் ஏக்கர்களில் நடவுப்பணி மற்றும் நேரடி நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஜூன் மாதத்தில் பருவமழை பொழியாததாலும், அணை யில் இருந்து பாசனத்திற்கு 12 ஆயிரம் கன அடி தன்ணீர் திறந்துள்ளாலும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடிக்கு கீழ் குறைந்து உள்ளது.
குறுவை சாகுபடிக்கு இன்னும் 100 நாட்களுக்கு மேல் தண்ணீர் தேவைப்படு கிறது. கடந்த சில ஆண்டு களாக ஜூன் மாதம் கர்நா டகாவிலும், தமிழகத்திலும் பருவமழை இயல்பாக பெய்ததால், குறுவை சாகுபடிக்கு தட்டுப்பாடு இன்றி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு அணையில் இருத்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் முழுமையாக கடைமடை வரை சென்று சேரவில்லை. இந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவ தால் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்று டெல்டா விவசாயிகள் அச்சத்தில் உள்ளார்கள்.
காவிரி நதி நீர் ஆணை யத்தின் உத்தரவின்படி, கர்நாடக அரசு ஜூன் மாதம் 9.1 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். இதை வழங்காமல், தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக நீர் பாசனத்துறை மந்திரி சிவகுமார் பிடிவா தமாக பேசி வருகிறார்.
காவிரி நதி நீர் ஆணை உத்தரவுப்படி இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கு வழங்க வேண் டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கி னால்தான், தமிழக டெல்டா பகுதியில் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.
எனவே காவிரி டெல்டா விவசாயிகளன் நலன் கருதி, தமிழக முதல்-அமைச்சரும், நீர்ப்பாசன அமைச்சரும், கூட்டணி கட்சியான காங்கி ரஸ் ஆட்சி செய்யும், கர்நா டகா அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, காவிரியில் ஜூன் மற்றும் ஜூலை மாதம் தரவேண்டிய தண்ணீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.






