என் மலர்
நீங்கள் தேடியது "assistant professor"
- 4 ஆயிரம் பேரை புதிதாக நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது.
- 2,331 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்யும் பழைய அறிவிப்பு ரத்து.
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முன்னதாக கடந்த 2019ம் ஆண்டில் 2,331 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப 2019ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் 4,000 கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். அதன்படி தற்போது புதிதாக 4 ஆயிரம் பேரை நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான பழைய அறிவிப்பாணையை தமிழக அரசு ரத்துச் செய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் தனக்கு, உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மேலும் பாலியல் தொல்லைக்கு ஆதரவாக விடுதி காப்பாளர்களாக உள்ள கல்லூரி பேராசிரியைகள் ஆகியோர் செயல்பட்டதாகவும் புகார் கூறினார்.
இதற்கிடையில் புகார் கூறப்பட்ட உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் விடுதி காப்பாளர்களான பேராசிரியைகள் மாணவிக்கு எதிராக வாணாபுரம் போலீசில் புகார் அளித்தனர். புகாரில் மாணவியின் பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை. எங்கள் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுத்தவே, இதுபோன்ற புகார்களை கூறி உள்ளார். கல்லூரியில் சக மாணவ, மாணவிகளுடைய ஐ.டி. கார்டுகள், பென்சில், பேனா மற்றும் ரப்பர் போன்ற பொருட்களை மாணவி திருடியுள்ளார். இதுபோன்று பல திருட்டு சம்பவங்களில் மாணவி ஈடுபட்டுள்ளார். கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக பொய் புகார் தெரிவித்த மாணவி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.
இந்த புகார் குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் இருந்து வந்த வேளாண்மை பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழு கல்லூரி முதல்வர், பேராசிரியைகள், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, பாலியல் புகாருக்குள்ளான உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் மாணவி விடுதியை விட்டு வெளியேறி விட்டார். இந்த வேளாண்மை கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருவதினால், பாதிக்கப்பட்ட மாணவி நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் வந்து தேர்வு எழுதினார்.
நேற்று 2-வது நாளாக வேளாண்மை பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்த கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.
இதையடுத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன், அவருக்கு உதவியதாக கூறிய பேராசிரியைகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவியின் தோழிகள், மாணவிகள் ஆகியோரிடம் அவர்கள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். #ChennaiStudentharassment #AgriCollege
கோவை:
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரத்தை அடுத்துள்ள வாழவச்சனூரில் தமிழ்நாடு அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் வேளாண் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த 19 வயது மாணவி விடுதியில் தங்கி படித்து வந்தார். அதே கல்லூரியில் பணிபுரிந்து வந்த உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதற்கு விடுதி வார்டன்கள் மைதிலி, புனிதா ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் மாணவி வாணாபுரம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதன் காரணமாக மாணவி விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி மாவட்ட கூடுதல் நீதிபதி சுமதி சாய்பிரியா ஆகியோரிடம் பாலியல் பிரச்சினை குறித்து மாணவி வாக்குமூலம் அளித்தார்.
அதன் அடிப்படையில் மாணவியை வேறு கல்லூரிக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணை வேந்தர் ராமசாமி, வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் தங்க பாண்டியனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக துணை வேந்தர் ராமசாமி கூறும் போது, மாணவியின் புகார் மற்றும் விசாரணை, கோர்ட்டு உத்தரவு ஆகியவற்றின் அடிப்படையில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.
அவர் மீது 3 கட்டமாக விசாரணை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நாமக்கல் மாவட்டம் சின்னமுதலைப்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகன் பூவரசன் (வயது 27). உதவி பேராசிரியர். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் அருகே சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு, சாலையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்தநிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இது குறித்து பூவரசனின் தந்தை சுப்ரமணியன், தாய் செல்வி மற்றும் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பூவரசனின் உடலை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து கே.எம்.சி.எச். மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் பாரி விஜயராகவன், மகேஸ்வரன் பிச்சைமுத்து ஆகியோர் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் பூவரசனின் இதயம், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து பிற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு அனுப்பிவைத்தனர்.
அதன்படி ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் என்.பழனிசாமி கூறும் போது, உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்கள் இடையே அதிக விழிப்புணர்வு தேவைப்படு கிறது. ஒருவர் இறந்தபிறகு அவருடைய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரை காப்பாற்ற உதவும். விபத்தில் மூளைச்சாவு அடைந்த பூவரசன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த அவருடைய குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர் என்றார்.