search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் மூளைச்சாவு அடைந்த உதவி பேராசிரியரின் உடல் உறுப்புகள் தானம்
    X

    விபத்தில் மூளைச்சாவு அடைந்த உதவி பேராசிரியரின் உடல் உறுப்புகள் தானம்

    விபத்தில் மூளைச்சாவு அடைந்த உதவி பேராசிரியரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
    கோவை:

    நாமக்கல் மாவட்டம் சின்னமுதலைப்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகன் பூவரசன் (வயது 27). உதவி பேராசிரியர். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் அருகே சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு, சாலையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இந்தநிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இது குறித்து பூவரசனின் தந்தை சுப்ரமணியன், தாய் செல்வி மற்றும் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பூவரசனின் உடலை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து கே.எம்.சி.எச். மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் பாரி விஜயராகவன், மகேஸ்வரன் பிச்சைமுத்து ஆகியோர் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் பூவரசனின் இதயம், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து பிற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு அனுப்பிவைத்தனர்.

    அதன்படி ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் என்.பழனிசாமி கூறும் போது, உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்கள் இடையே அதிக விழிப்புணர்வு தேவைப்படு கிறது. ஒருவர் இறந்தபிறகு அவருடைய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரை காப்பாற்ற உதவும். விபத்தில் மூளைச்சாவு அடைந்த பூவரசன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த அவருடைய குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர் என்றார். 
    Next Story
    ×