search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apple"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐபோன் SE மாடல்கள் ஐபோன் 8 போன்ற சேசிஸ் கொண்டிருக்கிறது.
    • மொத்தம் ஐந்து மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE 4 மாடல் கடந்த 2022 ஆண்டு அறிமுகமான ஐபோன் SE மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்தவிலை ஐபோன் மாடல் எனும் பெருமையை பெறும் என்று தெரிகிறது. முந்தைய ஐபோன் SE மாடல்கள் ஐபோன் 8 போன்ற சேசிஸ் கொண்டிருக்கிறது.

    எனினும், புதிய நான்காம் தலைமுறை ஐபோன் SE மாடலில் முற்றிலும் புதிய டிசைன் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் ஐபோன் SE 4 மாடலின் பேட்டரி அதன் முந்தைய வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருப்பதை விட அளவில் பெரிதாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டான்டர்டு ஐபோன் மாடல்களுக்கு இணையான பேட்டரி பேக்கப்-ஐ புதிய ஐபோன் SE 4 வழங்கும் என்று தெரிகிறது.

     


    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் SE 4 மாடலில் ஐபோன் 14-இல் வழங்கப்பட்ட பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு ஐபோன் SE (2022) மாடலுடன் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் ஐந்து மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

    இதுவரை வெளியாகி இருக்கும் ப்ரோடோடைப் தகவல்களின் படி ஐபோன் SE 4 மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் A2863 பேட்டரி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஐபோன் 14 மாடலிலும் இதே பேட்டரி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது 3279 எம்.ஏ.ஹெச். திறன் கொண்டிருக்கிறது. ஆப்பிள் தனது ஐபோன்களின் பேட்டரி திறன் குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கியதில்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீடியோக்களை பார்க்கும் போது அசத்தலான ஃபுல் ஸ்கிரீன் அனுபவம் கிடைக்கும்.
    • புதிய அண்டர் பேனல் கேமரா வழங்கப்படலாம்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களில் அன்டர் டிஸ்ப்ளே கேமரா வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் வெளியாகும் ஐபோன்களில் இந்த தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமான எல்.ஜி. அன்டர் பேனல் கேமரா ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த புதிய வகை கேமரா ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவின் கீழ் மறைந்து கொண்டிருக்கும். இதன் மூலம் கேமிங் மற்றும் வீடியோக்களை பார்க்கும் போது அசத்தலான ஃபுல் ஸ்கிரீன் அனுபவம் கிடைக்கும். தற்போதைய ஐபோன் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் டைனமிக் ஐலேண்ட்-க்கு மாற்றாக புதிய அண்டர் பேனல் கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    கோப்புப்படம்

    கோப்புப்படம்

     

    எல்.ஜி. குழுமத்தின் எலெக்ட்ரிக் உபகரணங்கள் உற்பத்தி பிரிவு புதிய வகை அண்டர் பேனல் கேமரா சென்சார்களை உருவாக்கும் பணிகளில் மேம்பட்ட நிலையை அடைந்திருப்பதாக கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தற்போதைய செல்ஃபி கேமராக்களில், அண்டர் டிஸ்ப்ளே கேமராக்கள் டிஸ்ப்ளேவினுள் குறைந்தளவு வெளிச்சத்தையே அனுமதிக்கின்றன.

    இதன் காரணமாக கேமரா லென்ஸ் மற்றும் சென்சார்களுக்கு மிக குறைந்த தகவல்களே கிடைக்கும். இதனாலேயே தற்போதைய கேமராக்கள் புகைப்படங்களை குறைந்த தரத்தில் வழங்குகின்றன. இந்த அண்டர் டிஸ்ப்ளே கேமராக்கள் சந்திக்கும் சவால்களை எல்.ஜி. உருவாக்கும் அண்டர் பேனல் கேமரா சிறப்பாக எதிர்கொண்டு தரமுள்ள புகைப்படங்களை வெளிப்படுத்தும் என்று தெரிகிறது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்


    2026 வரை ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் புதிய அண்டர் பேனல் கேமரா சென்சார்களை வழங்க வாய்ப்புகள் மிகவும் குறைவுதான் என கூறப்படுகிறது. அண்டர் ஸ்கிரீன் கேமராவை வழங்கும் முன்பு ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ் ஐ.டி. அம்சத்திற்காக அண்டர் டிஸ்ப்ளே சென்சாரை வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

    முன்னதாக 2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இசட்.டி.இ. ஆக்சன் 30 5ஜி மற்றும் சியோமி மி மிக்ஸ் 4 போன்ற மாடல்கள் மற்றும் அதன் பிறகு அறிமுகமான சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ஃபோல்டு 5 போன்ற மாடல்களில் செல்ஃபி கேமரா சென்சார்கள் டிஸ்ப்ளேவின் கீழ் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாடா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்தது.
    • ஓசூரில் உள்ள உற்பத்தி ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

    விஸ்ட்ரன் ஐபோன் உற்பத்தி ஆலையை டாடா குழுமம் முழுமையாக கையகப்படுத்தி, ஐபோன்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. முன்னதாக டாடா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து கொடுத்தது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டாடா நிறுவனம் ஓசூரில் உள்ள ஆலையில் உற்பத்தியை இருமடங்கு அதிகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் உற்பத்திக்காக ஆப்பிள் நிறுவனம் டாடா குழுமத்தை அதிகளவு நம்புவதாக தெரிகிறது.

     

    இங்கு உற்பத்தி செய்யப்படும் யூனிட்கள் சர்வதேச சந்தையிலும் ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது ஓசூரில் உள்ள உற்பத்தி ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, அதில் 15 ஆயிரம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.

    முதற்கட்டமாக ஐபோன்களின் குறிப்பிட்ட சில பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பாகங்கள் ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரன் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வினியோகம் செய்யப்பட உள்ளன. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் ஓசூர் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டு, உற்பத்தி தற்போது இருப்பதை விட இருமடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

     

    இதன் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலையில் 28 ஆயிரம் பேர் வரை பணியாற்ற முடியும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்துவது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் டாடா குழுமத்திற்கு இலக்கு நிர்ணயித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமேசான் வலைதளத்தில் லேப்டாப் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
    • மேக்புக் ஏர் M1 மாடல் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த 2020 ஆண்டில் மேக்புக் ஏர் M1 மாடலை அறிமுகம் செய்தது. ரூ. 99 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மேக்புக் ஏர் M1 மாடலுக்கு தற்போது அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அமேசான் வலைதளத்தில் இந்த லேப்டாப் விலை பெருமளவில் குறைக்கப்பட்டு உள்ளது.

    அமேசான் வலைதள விவரங்களின் படி ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலுக்கு 15 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மேக்புக் ஏர் M1 விலை ரூ. 99 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 84 ஆயிரத்து 990 என்று மாறி விடும். இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    தள்ளுபடி முழு தொகை செலுத்தி வாங்குவோருக்கும், மாத தவணையில் வாங்குவோருக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகளை சேர்க்கும் போது மேக்புக் ஏர் M1 விலை ரூ. 79 ஆயிரத்து 990 என்று மாறிவிடும். மேக்புக் ஏர் M1 மாடல் ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    மேக்புக் ஏர் M1 அம்சங்கள்:

    13.3 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் டிஸ்ப்ளே, 400 நிட்ஸ் பிரைட்னஸ்

    M1 சிப்செட்

    8 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி. மெமரி

    தண்டர்போல்ட் 3

    யு.எஸ்.பி. 4, யு.எஸ்.பி. 3.1, டிஸ்ப்ளே போர்ட்

    3.5mm ஹெட்போன் ஜாக்

    பேக்லிட் மேஜிக் கீபோர்டு

    டச் ஐடி சென்சார்

    வைபை, ப்ளூடூத், ஹெச்.டி. கேமரா

    ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    15 மணி நேர பேக்கப்

    30 வாட் யு.எஸ்.பி. சி பவர் அடாப்டர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய மாடலில் பிளாக் செராமிக் பேக் பேனல் வழங்கப்படுகிறது.
    • ஆக்ஷன் பட்டன் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலின் புது வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் ரிடிசைன் செய்யப்பட்ட மாடல் ரெண்டர்கள் எஃப்.சி.சி. தளத்தில் வெளியானதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

    புதிய தகவல்களின் படி புதிய ஆப்பிள் வாட்ச் மாடல் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலில் இருப்பதை போன்ற ரக்கட் தோற்றம், வழக்கமான டிஜிட்டல் கிரவுன், ஆக்ஷன் பட்டன், ஸ்பீக்கர் கிரில், மைக்ரோபோன் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் பழைய மாடல்களில் இருப்பதை போன்ற பிளாக் செராமிக் பேக் பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் இதில் உள்ள ஆக்ஷன் பட்டன் ரிடிசைன் செய்யப்பட்டு, பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. உண்மையில் இந்த வாட்ச் விற்பனைக்கு வரும் பட்சத்தில், இந்த மாடல் அல்ட்ரா பிராண்டிங் இன்றி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த ஆப்பிள் வாட்ச் விலை தற்போதைய மாடல்களை விட குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    செப்டம்பர் 2022 ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலையும், அதன்பிறகு கடந்த செப்டம்பரில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலையும் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 என இரு மாடல்களிலும் ஏரோஸ்பேஸ் ரக அலுமினிம்-தர டைட்டானியம் கேஸ், மெட்டல் ஆக்ஷன் பட்டன், சஃபயர் க்ரிஸ்டல் பிளாக் பேனல் வழங்கப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. வேரியண்டிற்கானது ஆகும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி ஐபோன் 15 மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐபோன் 15 தவிர ஐபோன் 14 மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    பிளாக் ஃபிரைடே சேல் பெயரில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளரான இன்வென்ட் ஸ்டோர் ஐபோன் 15 மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்குகிறது. இத்துடன் ரூ. 5 ஆயிரம் ரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது ஐபோன் 15 மாடலின் விலை ரூ. 8 ஆயிரம் வரை குறைந்துவிடும்.

    அந்த வகையில், ஐபோன் 15 விலை ரூ. 79 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 71 ஆயிரத்து 900 ஆக குறைந்துவிடும். ஐபோன் 14 மாடலுக்கு ரூ. 9 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5 ஆயிரம் உடனடி தள்ளுபடியாகவும், ரூ. 4 ஆயிரம் கேஷ்பேக் வடிவிலும் வழங்கப்படுகிறது. இது ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. வேரியண்டிற்கானது ஆகும்.

    அந்த வகையில், ஐபோன் 14 மாடலின் விலை ரூ. 69 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 60 ஆயிரத்து 900 என குறைந்து இருக்கிறது. ஐபோன் 14 ஸ்மார்ட்போன் 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அதன்படி ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 விலை ரூ. 39 ஆயிரத்து 400-க்கே கிடைக்கிறது. இதன் உண்மையான விலை ரூ. 41 ஆயிரத்து 900 ஆகும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடல் ஜி.பி.எஸ். மற்றும் செல்லுலார் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் அலுமினியம் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என இருவித ஃபினிஷ்களில் கிடைக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்யும் போது தள்ளுபடி.
    • ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இடம்பெற்று இருக்கும்.

    ஆப்பிள் ஐபோன் 15 வாங்க நினைக்கும் ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்கள்? அப்படியெனில் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். ஐபோன் 15 வாங்கும் ஏர்டெல் பயனர்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் வங்கி சார்ந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்யும் போது தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    புதிய ஐபோன் 15 வாங்கிய 60 நாட்களுக்குள் ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் ஆக்டிவேட் செய்தால் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை நவம்பர் 10-ம் தேதி துவங்கி டிசம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. பயனர் ஐபோனினை அமேசான் வலைதளத்தில் இருந்து வாங்கி இருந்தால், இந்த சலுகை நீட்டிக்கப்படும்.

    அதன்படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் கார்டை ஆக்டிவேட் செய்ததும், ஏதேனும் ஒரு போஸ்ட்பெயிட் திட்டத்தில் ரிசார்ஜ் செய்ய வேண்டும். பிறகு ரூ. 200 மதிப்புள்ள பத்து கூப்பன்கள் பயனர்களுக்கு வழங்கப்படும். இதற்கான தகவல் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இடம்பெற்று இருக்கும். இந்த சலுகை ஏர்டெல் கார்ப்பரேட் சிம் கார்டுகளுக்கு பொருந்தாதது.

    ஆனால், ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் 60 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு செய்யும் போது பயனர் மேற்கொள்ளும் ரிசார்ஜ் ஒன்றுக்கு ஒரு கூப்பன் வரை பயன்படுத்த முடியும். இதுதவிர பயனர்கள் விதிகளை பின்பற்றும் போது ரூ. 5 ஆயிரம் வரையிலான கேஷ்பேக்-ஐ அமேசானிடம் இருந்து பெற முடியும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
    • சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ஆப்பிள் நம்பிக்கை.

    ஆப்பிள் நிறுவனம் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான ஐபோன் 15 சீரிசில் யு.எஸ்.பி. டைப் சி வழங்கிய ஆப்பிள் நிறுவனம் தற்போது ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் (ஆர்.சி.எஸ்.) ரக மெசேஜிங் வசதியை வழங்க இருக்கிறது. இது தொடர்பான தகவலை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.

    அதன்படி அடுத்த ஆண்டு முதல் ஐபோன்களில் ஆர்.சி.எஸ். வசதி வழங்கப்படும் என்று ஆப்பிள் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் ஆர்.சி.எஸ். வழிமுறை வழக்கமான எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.-களுடன் ஒப்பிடும் போது சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்று ஆப்பிள் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    ஐபோன்களில் ஆர்.சி.எஸ். ஐமெசேஜ் உடன் வழங்கப்பட இருக்கிறது. இது ஆப்பிள் பயனர்களுக்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பான மெசேஜிங் அனுபவத்தை வழங்கும் என்று ஆப்பிள் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக ஆப்பிள் நிறுவனம் ஆர்.சி.எஸ். மெசேஜிங்கை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் ஏற்கனவே உள்ள ஐமெசேஜ் சேவையை நீக்காமல், கூடுதலாக ஆர்.சி.எஸ். சேவையை வழங்க இருக்கிறது. ஐபோன் பயனர்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு ஐமெசேஜ் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆர்.சி.எஸ். அறிமுகம் செய்யப்பட்டாலும் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வழிமுறையை மாற்றுவது குறித்து ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
    • பன்ச் ஹோல் ரக டிசைனை ஆப்பிள் பரிசோதனை செய்து வருகிறது.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 15 சீரிஸ் வரை தனது டிஸ்ப்ளேக்களில் நாட்ச் ரக டிசைனை வழங்குவதில் மிகவும் கவனமாக இருந்துள்ளது. எனினும், ஏற்கனவே உள்ள டிசைனில் மென்பொருள் மாற்றங்களை செய்து 'டைனமிக் ஐலேண்ட்' எனும் அம்சத்தினை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் ஸ்கிரீனில் அதிக இடவசதியை வழங்கியதோடு, சிறப்பான அனுபவத்தை வழங்கியது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 16 ப்ரோ மாடலில் தற்போதைய வழிமுறையை மாற்றுவது குறித்து ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஐபோன் 16 ப்ரோ மாடலில் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே வழங்க ஆப்பிள் திட்டமிடுவதாக தெரிகிறது.

    டிப்ஸ்டரான மஜின் பு வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 ப்ரோ மாடலின் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட வெர்ஷனை உருவாக்கி வருவதாக தெரிவித்து இருக்கிறார். பன்ச் ஹோல் ரக டிசைனை ஆப்பிள் பரிசோதனை செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    அந்த வகையில், இந்த டிசைன் கொண்ட மாடல் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது பற்றிய தகவல்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஐபோன் 16 ப்ரோ மற்றும் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் தற்போதைய ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் இருப்பதை விட அளவில் பெரிய டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    அடுத்த தலைமுறை ஐபோன் மாடல்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், இவற்றில் பெரும்பாலானவை உறுதிப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளது. அடுத்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம்- ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்யலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த மாடலில் மேம்பட்ட லுக், பெரிய ஸ்கிரீன் வழங்கப்படலாம்.
    • ஐபோன் SE 4 எடை 6 கிராம்கள் வரை குறைவாக இருக்கும்.

    ஆப்பிள் நிறுவனம் 2020 ஆண்டில் தனது ஐபோன் SE சீரிசை அறிமுகம் செய்தது. பிறகு இதன் மேம்பட்ட வெர்ஷனாக ஐபோன் SE 3 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ஐபோன் SE மாடல் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், புதிய ஐபோன் SE மாடல் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் SE 4 டிசைன் ஐபோன் 14-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், புதிய ஐபோன் SE 4 அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த மாடலாக அமையும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஐபோன் 14 சார்ந்த டிசைன் கொண்டிருக்கும் பட்சத்தில் இந்த மாடலில் மேம்பட்ட லுக், பெரிய ஸ்கிரீன் வழங்கப்படலாம்.

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

    அதன்படி ஐபோன் SE 4 மாடலில் ஃபிளாட் எட்ஜ் இன்றி, ஐபோன் 14-ஐ விட அளவில் சற்றே குறைந்திருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் டச் ஐ.டி. பட்டன் ஒன்றும் ஐபோன் SE 4 மாடலில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதவிர யு.எஸ்.பி. சி போர்ட் மற்றும் ஆக்ஷன் பட்டன் வழங்கப்படுகிறது. இவை இரண்டும் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும்.

    ஐபோன் 14-ஐ விட ஐபோன் SE 4 எடை 6 கிராம்கள் வரை குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. ஐபோன் SE 4 எடை 172 கிராம்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் SE 4 மாடலில் ஒற்றை கேமரா செட்டப் வழங்கப்படுவதே இதற்கு காரணம் என்று தெரிகிறது. ஐபோன் 14 மாடலில் டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.