என் மலர்
நீங்கள் தேடியது "ரஜினிகாந்த்"
- அபிஷன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
- இப்படத்தின் டீசர் மற்றும் தலைப்பை ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் 'வித் லவ்'. இப்படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில், படம் பிப்.6ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரீமியர் ஷோவை சத்யம் திரையரங்கில் நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவிவருகிறது.
மேலும் ப்ரீமியர் ஷோ பார்த்த பலரும், அபிஷன் நடிப்பையும், படத்தையும் பாராட்டி வருகின்றனர்.
- பல்வேறு தரப்பினரும் பத்மாவை பாராட்டி வருகின்றனர்.
- புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை தியாகராய நகர் வண்டிக்காரன் சாலையில் பத்மா என்ற தூய்மையாளர் கடந்த 11-ந்தேதி தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது குப்பையோடு கிடந்த கவர் ஒன்றில் இருந்த 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்தார். இதை அடுத்து அந்த தங்க நகைகளை பாண்டிபஜார் காவல்நிலையில் ஒப்படைத்தார்.
ஏழ்மையான சூழலிலும் பத்மாவின் இந்த நேர்மையான செயல் பலராலும் பாராட்டப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி பத்மாவுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். மேலும் பல்வேறு தரப்பினரும் பத்மாவை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், பத்மாவை நேரில் அழைத்து பாராட்டினார். பத்மாவின் செயலை பாராட்டிய ரஜினிகாந்த் அவருக்கு பொன்னாடை போர்த்தி தங்க செயினை பரிசாக அளித்தார். மேலும் பத்மாவுடன் கலந்துரையாடினார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
- படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. பின்னர் அவரது திடீர் விலகலை தொடர்ந்து, சிபி சக்கரவர்த்தி படத்தை இயக்கப் போகிறார் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது ரஜினிகாந்தின் 173-வது படமாகும். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படம் குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட் படமான 'தி அவுட்பிட்' படத்தின் தழுவலாக இந்த படம் உருவாக இருப்பதாகவும், ரஜினிகாந்த் இதில் டெய்லராக நடிக்கப் போவதாகவும், இது 70 காலகட்டத்தில் நடக்கும் கதைக்களம் என்றும் பேசப்படுகிறது.
ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட்டணியில் தயாராகும் இந்த புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.
- ரஜினி ரசிகரான அல்போன்ஸ் வெறும் 5 ரூபாய்க்கு பரோட்டா வழங்கி வருகிறார்.
- இவரது சேவை சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.
மதுரையில் தீவிர ரஜினி ரசிகரான அல்போன்ஸ் வெறும் 5 ரூபாய்க்கு பரோட்டா வழங்கி வருகிறார். இவரது சேவை சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.
இந்நிலையில், தன்னுடைய ரசிகர் ஒருவர் 5 ரூபாய்க்கு பரோட்டா விற்று சேவை செய்து வருவதை அறிந்தரஜினிகாந்த் அவரை சந்திக்க ஆசைபட்டார். அவரை குடும்பத்துடன் வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து அல்போன்ஸ் தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை சந்தித்தனர். அப்போது அல்போன்ஸிற்கு ரஜினிகாந்த் தங்க சங்கிலி அணிவித்து கௌரவித்தார். அவருடன் ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
ரஜினிகாந்த் தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு முதல் ஹாலிவுட் வரை பல படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக 1980, 90களில் ரஜினி, சல் பஸ், ஹும் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்திருந்தார்.
அந்த வகையில் ரஜினி நடித்த "ஹம் மே ஷாஹென்ஷா கவுன்" (உங்களில் யார் ராஜா) என்ற இந்தி படம் 1989 இல் படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் வெளியாகவில்லை.
மறைந்த இயக்குனர் ஹர்மேஷ் மல்ஹோத்ரா இதனை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சத்ருஹன் சின்ஹா, ஹேமமாலினி, அனிதா ராஜ், பிரேம் சோப்ரா மற்றும் மறைந்த நடிகர்கள் அம்ரிஷ் புரி, ஜகதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் தயாரிப்பாளரான ராஜா ராய் உடைய மகன் இறந்தது, இயக்குனரின் மறைவு ஆகியவற்றால் படம் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது 37 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் படம் ஏப்ரல் 2026-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தப் படம் 4K தரத்திற்கு மாற்றப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ளது என்று கூறபடுகிறது.
- நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார்.
- ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் பாலய்யா நடிக்கிறார்.
சென்னை:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது. 'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார். 'ஜெயிலர்' முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளை முடித்த அவர், 2026, ஜூன் மாதம் 12-ம் தேதி 'ஜெயிலர் 2' வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.
ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகின்றனர்.
அதன்படி, இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, சந்தானம், ஃபஹத் பாசில், தமன்னா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது
இதற்கிடையே, 'ஜெயிலர் 2' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாகவும், கோவா படப்பிடிப்பின் போது அவர் படப்பிடிப்பு தளத்தில் இணைந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, ஜெயிலர் 2 படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, விஜய் சேதுபதி அளித்த பேட்டியில், எனக்கு ரஜினி சாரை பிடிக்கும். அதனால்தான் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறேன். அவருடன் இருக்கும்போது பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் என தெரிவித்தார்.
கார்த்திக் சுப்பராஜின் பேட்ட (2019) படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இதுவாகும்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று விழா ஒன்று நடைபெற்றது.
அதில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பாக்யராஜ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
இன்னொரு ஒரு நிகழ்வு. என் வாழ்க்கையிலே பாக்யராஜை மறக்க முடியாது. இங்க வந்ததுக்கு முக்கிய காரணம் கூட இதை சொல்லணும். 1995-ல் சிவாஜி சாருக்கு மலேசியாவில் விருது கொடுத்தார்கள்.
அதற்காக அவரை தமிழ் திரைப்படத்துறை பாராட்டணும், அது அரசும் சேர்ந்து பாராட்டணும் என்று சொல்லி சேப்பாக்கத்தில் மிகப்பெரிய விழா வைத்திருந்தார்கள். அதற்கு சிறப்பு விருந்தினர் முதலமைச்சர் தான் அவர் தலைமையில் தான் விழா.
விழாவில் நன்றி தெரிவித்து நான் பேசுகையில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்த்து கொஞ்சம் ஆவேசமாக பேசினேன். எப்பவுமே இந்த கோபத்துக்கு ஆயுள் கம்மி. ஆனால் கோபத்தில் உதிர்ந்த வார்த்தைக்கு ஆயுள் ரொம்ப அதிகம். இதனால் தான் கோபத்தில் இருக்கும்போது வார்த்தைகளை அளந்து, அளந்து பேசணும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
நான் ஆவேசமாக பேசும்போது முதலமைச்சருக்கு affect ஆகிடுச்சு. விழாவில் சிவாஜி சார் இருந்தாலும் கூட நான் ஏதோ பேசிட்டேன். அதன்பிறகு என்பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஸ்ரீதேவி ஏன் இப்படியெல்லாம் என்று கேட்டார்கள்.
ஆனால் எனக்கு ஒன்னும் புரியவில்லை. அதன் பிறகு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் என்னை நிறைய பேர் சூழ்ந்து தலையில் அடிக்கிறாங்க, திட்டுறாங்க... எனக்கு ஒன்னும் புரியவில்லை.
அந்த இடத்தில் எஸ்.ஐ. எல்லாம் இருக்காங்க. ஆனா அவங்க எதுவும் செய்யவில்லை. அப்போ பாக்யராஜ் ஓடி வந்து அவர்களை பார்த்து கத்தி என்னை வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். அதை என்னால் மறக்கவே முடியாது. அதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் கூட ஒன்றும் கிடையாது. அருமையான மனிதர், நீங்க நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று விழா ஒன்று நடைபெற்றது.
அதில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பாக்யராஜ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
பாக்யராஜ்க்கு மிகப்பெரிய ப்ரஸண்ட் என்றால் நம்ம பூர்ணிமா பாக்யராஜ். அவர் கூட தங்கமகன் படத்தில் நடித்தேன். அப்போ அவங்க இந்தியில தான் பேசுவாங்க. மும்பையில் பிறந்து வளர்ந்தது. எல்லோர்கிட்டயும் இங்கிலீஷ்ல தான் பேசுவாங்க. யார்கிட்டயும் ரொம்ப பேசமாட்டாங்க.
அப்படி இருக்கும்போது இவங்க பாக்யராஜை கல்யாணம் பண்ணிக்கப்போறதா சொன்னப்போ என்னால நம்ப முடியலை. ஏன் என்றால் நம்ம ஆளுக்கு இங்கிலீஷ் தெரியாது, இந்தி சுத்தம்.. இது எப்படி என்று சொல்லும்போது.
இங்க பார்த்தீங்கன்னா பாக்யராஜை படப்பிடிப்பு தளத்தில் ஒரு தடவை இயக்குனராக, நடிகராக பார்த்தாங்கண்ணு சொன்னா ஆம்பளைங்களுக்கே அவர் மேல காதல் வரும்.
நான் இப்போ சொல்றேன். மாடலேஷன் எல்லாம் பாக்யராஜ் சொல்லி கொடுத்தது தாங்க எனக்கு. சில சப்ஜெட்களில் டவுட் வந்தது என்றால் பாக்யராஜ் கிட்ட தான் கேட்பேன். படையப்பா கதை குறித்து பாக்யராஜ்யிடம் கூப்பிட்டு சொன்னேன். அதற்கு அவர் கதையை கேட்டு சொன்னார்.
சார் கதை ரொம்ப நல்லா இருக்கு. நீலாம்பரி கேரக்டரை மட்டும் சரியா எழுதணும். அதை செய்தாலும் படம் ஹிட்ஆகிடும். படம் எங்கேயோ போயிடும் என்றார். அதேப்போல் பாபா படக்கதை சொல்லும் போது, இது கொஞ்சம் ரிஸ்க்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று விழா ஒன்று நடைபெற்றது.
அதில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பாக்யராஜ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
என்னை பொறுத்தவரைக்கும் பாக்யராஜ்-க்கு கிடைக்க வேண்டிய மதிப்பு, மரியாதை, ஊதியம் கொஞ்சம் கூட கிடைக்கலை. அவர் எப்போதும் யாருக்கும் ஜால்ரா போட்டது கிடையாது. மனதில் என்ன பட்டதோ அதை உடனே சொல்லிவிடுவார். அதில் உண்மை இருக்கும் நியாயம் இருக்கும்.
மக்கள் திலகம், புரட்சி தலைவர் எம்ஜிஆர் சார் அவர்கள், என்னுடைய திரையுலக வாரிசு பாக்யராஜ் என்று சொன்னால் எந்த மாதிரி அவரை நேசித்திருப்பார்கள். அதுமட்டுமில்லை அவரே நேரில் வந்து திருமணத்தை நடத்தி வைத்தார். அவ்வளவு எளிதில் எம்ஜிஆர் இதயத்தில் போக முடியாது. எப்படி அண்ணா இதயத்தில் எம்ஜிஆர் சார் போனார்களோ அந்த மாதிரி எம்ஜிஆர் சார் இதயத்தில் பாக்யராஜ் போனார். அவர் இதயக்கனி.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று விழா ஒன்று நடைபெற்றது.
அதில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பாக்யராஜ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
அனைவருக்கும் வணக்கம். இன்றைக்கு (நேற்று) பாக்யராஜ் பிறந்தநாள். அவரை சம்மதிக்க வைத்து இந்த விழாவை நடத்தணும் என்று பூர்ணிமா எடுத்த முயற்சி கொஞ்ச நஞ்சம் இல்ல. முதலே என்னிடம் சொன்னார்கள், நீங்கள் வந்தா தான் அந்த விழா நடத்துவேன் என்று. அதற்கு நான் கண்டிப்பா வர்றேன். பாக்யராஜ்-க்கு இல்லாததா என்று இந்த விழாவிற்கு வந்து இருக்கேன். 70-களில் 3 ராஜாக்கள் தமிழ் சினிமாவிற்கு வந்தார்கள். ஒன்று இளையராஜா, இன்னொன்று பாரதிராஜா, மற்றொன்று பாக்யராஜ். இந்த மூன்று பேரும் ஒவ்வொரு துறையிலும் பறந்தார்கள். இன்னும் பறந்துக்கிட்டு இருக்கிறார்கள். அதனால் தான் இத்தனை பேர் இங்கு வந்திருக்கிறீர்கள்.
அதுல வந்து இளையராஜா ஒன்லி இசை, பாரதிராஜா ஒன்லி திரைக்கதை, இயக்கம்... ஆனா நம்ம பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், நடிப்பு, இசையும் பண்ணியிருக்கார். எல்லோருக்கும் தெரியும் திரைக்கதையில் எவ்வளவு வல்லவர் என்று. ஒரு கதை நல்லா இருந்தா கூட திரைக்கதை சரியில்லை என்று சொன்னால் அது எடுபடாது.
கதை சுமாரா இருந்தா கூட திரைக்கதை நல்லா அமைந்தால் அந்த படம் ரொம்ப நல்லா போகும். அந்த திரைக்கதை தான் தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பு. அது முதுகெலும்பு நம்ம பாக்யராஜ் சார்.
இந்தியாவிலேயே திரைக்கதையில் மன்னர் என்று சொன்னால் சலீம் சாகீத். அதுக்கு பிறகு இணையா சொல்லணும் என்றால் நான் பாக்யராஜ் சாரை சொல்வேன்.
ஏன்னா இப்போ வந்து Action Oriented, Male oriented அதை தான் சலீம் சாகீத் பண்றார். ஆனா பாக்யராஜ் சார் எல்லா lady oriented படத்தில் வந்து ஹீரோயிசம் கொண்டு வந்தாங்க. அது சாதாரண விஷயம் இல்லை.
70-களில் ஸ்ரீதர் சார், பாலசந்தர் சார், கேஎஸ் கோபால கிருஷ்ணன் எல்லாரும் lady oriented படத்தை தான் எடுத்தாங்க. அதுல ஹீரோக்களுக்கு அவ்வளவா வேலை இருக்காது. இவர் அதில் ஒரு மாற்றம் கொண்டு வந்து லேடிஸ் வந்து மெயினா வந்தா கூட இவரோட அந்த கதாபாத்திரம் பார்க்கிறவர்களுக்கு காம்பீர் மாதிரி தெரிந்தா கூட சகல நல்ல குணங்களுடன் அந்த கதாபாத்திரம் ஜொலிக்கும்.
அந்த மாதிரி யாரும் பண்ணதே கிடையாது. ஒன்லி பாக்யராஜ். அப்போ பண்ண ஒரு சார்லி சாப்ளின். ஒவ்வொரு படத்தையும் புரட்சிக்கரமா எடுத்து இருப்பார். புரட்சிக்கரமா இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ‘தலைவர் 173’ படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- நடிகர் சிவகார்த்தியேன் நடிப்பில் உருவாகி உள்ள ‘பராசக்தி’ வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது.
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் தனது 173-வது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. முதலில் இப்படத்தை சுந்தர் சி. இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதனை தொடர்ந்து இயக்குநரை பட நிறுவனம் வலைவீசி தேடியது.
இதனிடையே, எங்களின் நாயகருக்கு பிடிக்கும் வரை கதையைக்கேட்டுக்கொண்டு இருப்போம் என கமல்ஹாசன் தெரிவித்தார். இதற்கிடையே, 'தலைவர் 173' படத்தை 'பார்க்கிங்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்குவதாக தகவல் வெளியானது.
ஆனால் கடைசியாக 'தலைவர் 173' படத்தை 'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ராம்குமார் பாலகிருஷ்ணனின் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இதனால் அவர் அடுத்து எந்த நடிகரை கொண்டு படம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது அடுத்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயனை அணுகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்தியேன் நடிப்பில் உருவாகி உள்ள 'பராசக்தி' வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வளவு வேலையை விட்டு விட்டு இங்கு வந்திருக்கிறார்.
- தேர்தல் நேரம் என்று சொன்னால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிக்க முடியாது.
சினிமா தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் ரஜினி பேசியதாவது:-
ஏ.வி.எம். நிறுவனத்தில் நான் 11 படம் நடித்து இருக்கிறேன். அதில் 9 படங்கள் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படங்கள் ஆகும். ஒவ்வொரு படத்திலும் கதையை நாம் கேட்கவே வேண்டாம்.
எந்த நடிகருக்கு எந்த மாதிரி படம் பண்ணனும், அவரது ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள். அது வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் ஆய்வு செய்து திரைக்கதை செய்து வைத்து விட்டு, நடிகர்களுக்கு அந்தந்த கதாபாத்திரத்துக்கு என்னென்ன பண்ணனும் என்பதை செய்து, இசை, படத்தொகுப்பு எல்லாவற்றிலும் அவரது கை இருக்கும். ஆனால் யாருக்கும் தெரியாது.
மகாபாரத குருஷேத்திர யுத்தத்தில் கண்ணன் எந்த ஆயுதமும் ஏந்தாமல் ரதத்தில் உட்கார்ந்து எப்படி ஜெயித்தாரோ, அந்த மாதிரி அவர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே எல்லா படத்தையும் ஜெயிக்க வைத்தார். எல்லா படத்தையும் வெற்றிப்படமாக்கினார்.
சினிமா மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் ஏ.வி.எம்.சரவணன் எனக்கு நிறைய உதவி செய்துள்ளார். கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் இருக்கும் இடம் காலியாக இருந்த போது அதை ஏ.வி.எம்.சரவணன் பார்த்துள்ளார்.
என்னிடம் அந்த இடத்தை ஏன் அப்படியே விட்டு விட்டீர்கள் என்று கேட்டார். காலி இடத்தை அப்படியே விடக்கூடாது. ஏதாவது கட்டணும் என்று சொல்லி அவரே பார்த்து டிசைன் பண்ணி அவரே ஆர்க்கிடெக்ட் செய்து கட்டியதுதான் ராகவேந்திரா மண்டபம்.
எனது போயஸ்கார்டன் வீட்டுக்கு அவர் வந்தார். அதன் அருகில் காலி இடம் இருந்தது. அதை 15 மடங்கு விலை சொன்னார்கள். அதற்கு ஏ.வி.எம். சரவணன் அது என்ன விலை இருந்தாலும் சரி நீங்க வாங்கிடுங்க. அங்கு வேறு யாராவது வந்தால் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்றார். இந்த மாதிரி எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது.
சிவாஜி படம் பண்ணிய போது என்னிடம் சொன்னார். நீங்க 1990 கால கட்டத்தில் இருந்து 2 வருடத்துக்கு ஒரு படம், 3 வருடத்துக்கு ஒரு படம் பண்ணுகிறீர்கள். வயது ஆக ஆக பிசியா இருக்கணும், சுறுசுறுப்பா இருக்கணும். அது உடம்புக்கும், மனதுக்கும் நல்லது. வருடத்துக்கு ஒரு படம் பண்ணுங்க என்றார். அதை இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன்.
சினிமா உலகத்துக்கு வெளியேயும் ஏ.வி.எம். சரவணனுக்கு மரியாதை இருந்தது. ஏனென்றால் அவர் அப்படி வாழ்ந்தார். அவர் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. இருந்தாலும் எம்.ஜி.ஆர். அவரை ஷெரீப் ஆக்கி அழகு பார்த்தார். ஜெயலலிதா அவர் மீது அவ்வளவு மரியாதை வைத்திருந்தார். கலைஞரும் அவர் மீது நிறைய மரியாதை வைத்திருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வளவு வேலையை விட்டு விட்டு இங்கு வந்திருக்கிறார். தேர்தல் நேரம் என்று சொன்னால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிக்க முடியாது. அந்த மாதிரி இருந்தும் அதை விட்டுவிட்டு இங்கு வந்திருக்கிறார். இங்கு வந்திருப்பதால் அவருக்கு 100 ஓட்டுகள் அதிகமாக கிடைத்து விடாது.
ஆனாலும் கூட அவர் இங்கு வந்திருப்பது ஏ.வி. எம்.சரவணன் எந்த மாதிரி வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன மாதிரி ஒரு அன்பும், பண்பும் கொண்டவர், உயர்ந்த உள்ளம் கொண்டவர் என்பதற்கு எடுத்துக்காட்டு.
அசையாத சொத்துக்கு எப்போதுமே மதிப்பு அதிகம். நம் வாழ்க்கையில் நம்மை விரும்புகிறவர்கள், நமது நலனில் அக்கறை கொண்டவர்கள் ஒரு சில பேர்தான் இருப்பார்கள். அவர்கள் அசையாத சொத்துக்கள். எனக்கு அசையாத சொத்துக்களாக கே.பாலச்சந்தர், சோ, பஞ்சு அருணாசலம், ஆர்.எம்.வீரப்பன், சரவணன், கலைஞர் ஆகியோர் இருந்தனர்.
காலத்தின் சட்டமோ என்னவோ, நாம் யார் மீது பிரியமாக இருக்கிறோமோ அவர்களை காலம் சீக்கிரமே கொண்டு சென்று விடுகிறது. ஒவ்வொருவரும் பிரியும் போது நமக்கு எவ்வளவு பணம், பேர், புகழ், குடும்பம் இருந்தாலும், அனாதையாக உணர்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கமல்ஹாசன் பேசியதாவது:-
நான் சொல்ல வேண்டிய கதை 65 வருடத்து கதை. அதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. சின்ன குழந்தையாக நான் ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு போனேன். அங்கிருந்த மாந்தோப்பில் மாம்பழத்தை கடித்து விட்டு சினிமா என்றால் என்ன என்று புரிந்து கொண்டேன்.
என்னை அந்த வயதில் இருந்து பார்த்துக் கொண்டவர்கள். அவர்கள் ஒரு குழந்தையை கொஞ்சுவது போல்தான் எனது படத்தின் தலைப்பை வைத்தனர். ஏ.வி.எம்.சரவணனுக்கு பொருந்தும் விஷயங்கள் எனக்கும் பொருந்தும்.
அவரும் சகலகலா வல்லவர்தான். தனக்கு இருக்கும் புகழை எல்லாம் அவர் மற்றவர்களுக்கு கொடுப்பார். அவரிடம் நான் தைரியமாக பேசுவேன். அவர் ஒரு முதலாளி என்று புரிவதற்கே எனக்கு நிறைய நாள் ஆகி விட்டது. அதிக பிரசங்கம் செய்யக்கூடாது என்று எனக்கு சொல்லிக் கொடுத்தவர் எஸ்.பி.முத்துராமன்.
ஏ.வி.எம். குடும்பத்துடன் ஒட்டிக் கொள்வதில் எனக்கு பெரிய பெருமை. அந்த உரிமையை அவர்கள் கொடுத்ததற்காக நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.
ஏ.வி.எம். நிறுவனத்தில் படித்தேன் என்பது எனக்கு பெருமை. நான் அங்கு படித்த விஷயங்கள்தான் எனக்கு இன்று வரை கை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இங்கு பள்ளிக்கூடம் கட்டி இருந்தால் நான் படித்தும் இருப்பேன். என்னை வேறு பள்ளிகளில் சேர்க்க யோசித்தார்கள். என்னுடைய குணாதிசயம் தெரிந்து என்னை எப்படி வழி நடத்த வேண்டும் என்று தெரிந்த பள்ளி ஏ.வி.எம். பள்ளி. சிறப்பாக கற்றுக் கொடுத்தார்கள். நான் தவறு செய்யும் போது சத்தமாக சொல்லாமல், நான் நல்லது செய்யும் போது என்னை தோளில் தூக்கி கொண்டாடியவர் ஏ.வி.எம்.சரவணன்.
இவ்வாறு அவர் பேசினார்.






