என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்சிகோ"

    • உள்ளூர் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது.
    • மைதானத்திற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுட்டது.

    மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

    மத்திய மெக்சிகோவின் மோரெலோஸ் மாநிலத்தில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் நேற்று இரவு உள்ளூர் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது.

    அப்போது மைதானத்திற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுட்டது.

    இந்தத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மெக்சிகோவில் செயல்படும் இரண்டு போதைப்பொருள் கடந்த கும்பல்களுக்கு இடையே இருந்த மோதலே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

    • மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கின.

    மெக்சிகோ சிட்டி:

    தெற்கு மெக்சிகன் மாநிலமான குரேரோவில் 6.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

    இதனால் உயரமான கட்டடங்கள் குலுங்கின. அச்சத்தால் பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு மெக்சிகோ அதிபர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். அப்போது பூகம்ப எச்சரிக்கை மணி ஒலித்ததால் செய்தியாளர் சந்திப்பு தடைபட்டது. சில மணி நேரத்துக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

    • சுமார் 241 பயணிகள் ரெயிலில் சென்றுகொண்டிருந்தனர்.
    • பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் ரெயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மெக்சிகோவில் நேற்று ரெயில் தடம் புரண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் இன்டர்-ஓசியானிக் ரெயில் சுமார் 241 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்தது.

    அப்போது ஓக்ஸாகா மற்றும் வெராக்ரூஸ் எல்லையில் உள்ள நிஜண்டா நகருக்கு அருகே தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.

    இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 98 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் ரெயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றனர்.
    • அப்போது பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தனர்.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ சிட்டியில் இருந்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஏராளமான பயணிகள் பேருந்து ஒன்றில் சிகோன்டெபெக் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

    இந்த பேருந்து வெராக்ரூஸ் மாநிலத்தில் உள்ள ஜோன்டெகோமட்லான் என்ற மலைப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

    • உயர்த்தப்பட்ட வரி ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
    • 2024 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் 11.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை மேற்கொண்டன.

    அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கும் முடிவுக்கு மெக்சிகோவின் செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்தியாவைத் தவிர, சீனா உட்பட பல ஆசிய நாடுகளும் இந்தப் பட்டியலில் உள்ளன. உயர்த்தப்பட்ட வரி ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.

    வாகனங்கள், வாகன பாகங்கள், ஆடைகள், பிளாஸ்டிக், எஃகு போன்றவற்றின் மீதான இறக்குமதி வரிகள் 50 சதவீதம் அதிகரிக்க உள்ளது. இந்த வரிகள் சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளை அதிகம் பாதிக்கும்.

    உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் அடுத்த ஆண்டு கூடுதலாக 33,910 கோடி டாலர் வருவாயை ஈட்டும் நோக்கில் இந்த வரி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    50 சதவீத வரி இந்தியா - மெக்சிகோ இடையிலான வர்த்தக உறவுகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் 11.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை மேற்கொண்டன.

    அதாவது 2024 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து மெக்சிகோவிற்கு ஏற்றுமதி 8.9 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதே நேரத்தில் இந்தியாவிற்கான இறக்குமதி 2.8 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்தியா மெக்சிகோவின் ஏற்றுமதியாளர்களில் ஒன்பதாவது பெரிய நாடாகும்.

    • முதல் 12 இடங்களில் வராத இந்திய அழகி
    • அழகி போட்டிக்கான விளம்பர நிகழ்வில் பங்கேற்காத பாத்திமா போஷ்

    தாய்லாந்தில் இன்று (நவம்பர் 21) நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் 2025 போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த பாத்திமா போஷ் பட்டத்தை வென்றார். இறுதிப் போட்டியில் சிலி, கொலம்பியா, கியூபா, குவாடலூப், மெக்ஸிகோ, புவேர்ட்டோ ரிக்கோ, வெனிசுலா, சீனா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மால்டா மற்றும் கோட் டி'ஐவோயர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இடம்பெற்றனர்.

    தாய்லாந்தின் பிரவீனர் சிங் முதல் ரன்னர்-அப் இடத்தைப் பிடித்தார். இரண்டாவது ரன்னர் அப்பாக வெனிசுலாவின் ஸ்டெபானி அபாசாலியும், மூன்றாவது ரன்னர் அப்பாக பிலிப்பைன்ஸின் மா அஹ்திசா மனலோவும், நான்காவது ரன்னர் அப்பாக கோட் டி ஐவரியை சேர்ந்த ஒலிவியா யாஸும் தேர்வானர். இந்தியாவின் மணிகா விஸ்வகர்மாவால் முதல் 12 இடங்களுக்குள் வர முடியவில்லை. 


    முன்னதாக நவம்பர் 4 ஆம் தேதி மிஸ் யுனிவர்ஸ் போட்டியாளர்களுடனான சந்திப்பின் போது, அழகுப் போட்டிக்கான விளம்பர நிகழ்வில் போஷ் பங்கேற்கவில்லை என அவரை குற்றம் சாட்டி, நிகழ்ச்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் நவத் இட்சராகிரிசில் பாத்திமா போஷை திட்டினார். இதனால் அரங்கில் இருந்து பாத்திமா போஷ் வெளிநடப்பு செய்தார். அவருக்கு ஆதரவாக மற்ற நாட்டு அழகிகள் சிலரும் வெளிநடப்பு செய்தனர். நேரலையில் இந்த பிரச்சனை ஒளிபரப்பானதால் பெரும் சர்ச்சை கிளம்பியது. போட்டி நடத்திய இரண்டு நடுவர்களும் வெளிநடப்பு செய்தனர். 

    இதனையடுத்து சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவர மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் தலைவரான ரவுல் ரோச்சா, இப்போட்டியின் மற்ற நிகழ்வுகளில் இட்சராகிரிசில் பங்கேற்க தடைவிதித்தார். இந்த சர்ச்சைகளை மீறி பாத்திமா போஷ் மகுடம் சூடியது சுயமரியாதைக்கு கிடைத்த அங்கீகாரம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    • இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன.
    • இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

    மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஊழளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரத்திற்குள் பேரணி நடத்தினர்.

    இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

    குறிப்பாக உருபான் மேயர் கார்லோஸ் மான்சோ சில வாரங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி போராட்டத்திற்கு வழிவகுத்தது.

    இந்நிலையில், GenZ இளைஞர்களின் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. மெக்சிகோவின் நாடாளுமன்றத்தை GenZ போராட்டக்காரர்கள் சூறையாட முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் அரசு சொத்துக்களை சூறையாட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மெக்சிகோ மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 11 நாடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
    • இளைஞர்கள் குறிப்பாக 18 முதல் 24 வயதுடையவர்கள், மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளனர்.

    ஆஷ்லே மேடிசன் யூகோவ் உடன் இணைந்து நடத்திய புதிய சர்வதேச ஆய்வில், பத்து பேரில் நான்கு பேர் இந்தியர்கள் ஒரு சக ஊழியருடன் டேட்டிங் செய்திருக்கிறார்கள் அல்லது தற்போது டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

    அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மெக்சிகோ மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 11 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, 13,581 வயதானவர்களையும் உள்ளடக்கியது. மேலும் பணியிடத்தில் காதலை ஒப்புக்கொள்ளும் நபர்களை பொறுத்தவரை உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தப் பட்டியலில் மெக்சிகோ முன்னணியில் உள்ளது. ஆய்வில் 43 சதவீத பேர் சக ஊழியருடன் காதல் கொண்டிருந்ததாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் இந்தியா 40 சதவீத பேர் நெருக்கமாக உள்ளனர். தொழில்முறை எல்லைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், பணியிட உறவுகள் இந்தியாவில் நவீன அலுவலக கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகவே உள்ளன என்பதை கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.

    பெண்களை விட (36%) ஆண்கள் (51%) சக ஊழியரை டேட்டிங் செய்ததற்கான வாய்ப்புகள் அதிகம். தொழில்முறை விளைவுகளுக்கு பயந்து அலுவலக உறவுகளைத் தவிர்ப்பதாக 29% பெண்கள் கூறியுள்ளனர். ஆண்கள் 27% தனிப்பட்ட விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர். ஆண்களுடன் ஒப்பிடும்போது 26% பெண்கள் கவலைப்படுகின்றனர்.

    இளைஞர்கள் குறிப்பாக 18 முதல் 24 வயதுடையவர்கள், மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளனர். 34% பேர் அத்தகைய உறவுகள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கலாம் என்பது குறித்து கவலை தெரிவித்தனர். இது இளைஞர்களிடையே வளர்ந்து வரும் தொழில்முறை உணர்வு மற்றும் எல்லை விழிப்புணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது.

    இந்தியாவின் உயர் தரவரிசை, சமூக மதிப்புகள் மாறி வருவதாலும், பாரம்பரியமற்ற உறவுகளை நோக்கிய வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதாலும் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

    திருமணமானவர்களுக்கான டேட்டிங் செயலியான க்ளீடனின் மற்றொரு ஆய்வில், 35% இந்தியர்கள் தற்போது வெளிப்படையான உறவுகளில் இருப்பதாகவும், 41% பேர் தங்கள் துணை பரிந்துரைத்தால் பரிசீலிப்பார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தப் போக்கு பெருநகரங்களுக்கு அப்பாலும் பரவியுள்ளது. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் போன்ற நகரங்கள் திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்களில் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

    பணியிட காதல்கள் சாதாரணமாகி வரும் நிலையில், அவை ஆர்வ மோதல்கள் முதல் தொழில்முறை அபாயங்கள் வரை இன்னும் சவால்களைக் கொண்டுள்ளன.

    இந்தியாவின் வளர்ந்து வரும் உறவு கலாச்சாரம், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்கும் இடையிலான கோட்டை எவ்வாறு தொடர்ந்து மங்கலாக்குகிறது, வேலையில் காதலை பொதுவானதாகவும் சிக்கலானதாகவும் ஆக்குகிறது என்பதை இந்த ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

    • மெக்சிகோ சிட்டியில் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளை அதிபர் கிளாடியா சந்தித்துக் கொண்டிருந்தார்.
    • கிளாடியா அந்த நபரிடமிருந்து விலகிச் செல்ல முயன்றார்.

    மெக்சிகோவில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாமை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மெக்சிகோவின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளை அதிபர் கிளாடியா சந்தித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவரைப் பின்னால் இருந்து அணுகி, அவரது தோளில் கையை வைத்து, அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார்.

    கிளாடியா அந்த நபரிடமிருந்து விலகிச் செல்ல முயன்றார். பின்னர் அவரது பாதுகாப்புக் குழு அந்த நபரை அங்கிருந்து அகற்றினர். இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    • பெரு நாட்டின் முன்னாள் பிரதமர் பெட்சி சாவேசுக்கு மெக்சிகோ அடைக்கலம் அளித்தது.
    • இதனால் மெக்சிகோ உடனான தூதரக உறவை துண்டிப்பதாக பெரு அறிவித்தது.

    லிமா:

    பெரு நாட்டின் முன்னாள் பிரதமர் பெட்சி சாவேஸ். இவர்மீது ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளன.

    இதற்கிடையே அவருக்கு மெக்சிகோ அடைக்கலம் அளித்தது. இதனால் மெக்சிகோ உடனான தூதரக உறவை துண்டிப்பதாக பெரு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பெருவின் வெளியுறவு மந்திரி ஹ்யூகோ டி ஜெலா கூறுகையில், முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் ஒரு பகுதியாக செயல்பட்ட முன்னாள் பிரதமர் பெட்சி சாவேசுக்கு பெருவில் உள்ள மெக்சிகோ தூதரகத்தின் இல்லத்தில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதை நாங்கள் ஆச்சரியத்துடனும், ஆழ்ந்த வருத்தத்துடனும் அறிந்தோம் என தெரிவித்தார்.

    • தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்துக்குச் சென்று பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
    • தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் இரங்கல் தெரிவித்தார்.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் வடமேற்கே அமைந்துள்ள சொனோரா மாகாணத்தில் ஹெர்மோசில்லோ நகரில் உள்ள கடை ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தீ மளமளவென பரவியதில் பலர் சிக்கி கொண்டனர். கரும் புகை சூழ்ந்து அவர்களால் தப்பி வெளியே வர முடியவில்லை. இந்த விபத்தில் சிக்கி 23 பேர் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர்.

    தீ விபத்து சம்பவம் பற்றி அறிந்த ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

    தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்காக, குழுக்களை அனுப்பும்படி உள்துறை மந்திரிக்கு கிளாடியா உத்தரவிட்டுள்ளார். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ பகுதிக்குச் சென்று, பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மெக்சிகோவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஒரே நாளில் 64 பேர் இறந்தனர்.
    • தொடர் மழையில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது.

    மெக்சிகோ சிட்டி:

    வட அமெரிக்க நாடான மெக்சிகோவை பசிபிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளது. கடந்த 12-ம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை அங்கு உருவானது. இது புயலாக வலுப்பெற்றது.

    மெக்சிகோவின் கடலோர மாகாணங்களான ஹிடால்கோ, புபேல்லா மற்றும் வெராக்ரூஸ் நகரை மையமாகக் கொண்டு இந்தப் புயல் தாக்கும் என கணிக்கப்பட்டது. அப்பகுதியில் கடந்த 4 நாளாக தொடர் மழை கொட்டி தீர்த்தது. இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் அங்குள்ள மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன. இதனால் மின்வினியோகம் தடைபட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. ஏற்கனவே ஹிடால்கோ மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழைக்கு 66 பேர் வரை உயிரிழந்திருந்தனர்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெராக்ரூசின் போசா ரிகா பகுதியை கருமேகம் சூழ்ந்து கொண்டு கனமழை வெளுத்து வாங்கியது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள், பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் சேதமடைந்தன. கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே நாளில் 64 பேர் பலியாகினர். இதனால் மெக்சிகோவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது. வெள்ளத்தில் சிக்கி மாயமான 60-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடக்கிறது.

    ×