என் மலர்
நீங்கள் தேடியது "மானாமதுரை"
- இரும்புக் கம்பியால் காலை அடித்து உடைத்த காவல்துறை
- இளைஞர் ஆகாஷ்மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருந்ததாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம் தந்தை, மகன் கொலைவழக்கின் வடுவே இன்னும் ஆறாதநிலையில், அடுத்தடுத்த ரணங்களை தமிழ்நாடு காவல்துறை மக்களுக்கு கொடுத்துவருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தற்போதுவரை 37 லாக்-அப் மரணங்கள் நடந்துள்ளதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இத்தனை வழக்குகளில் ஒருசிலவையே மக்களுக்கு வெளிச்சமாகி பெரிதாக வெடித்தவை.
அந்தவகையில் அஜித்குமார் மரணவழக்கை தொடர்ந்து தற்போது அரங்கேறிய கொடூரம்தான் மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரணம். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் இருவரை அரிவாளால் வெட்டியதாக ஆகாஷ் டெலிசன் மற்றும் அவரது நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதின்போது தப்ப முயற்சித்து பாலத்திலிருந்து விழுந்து ஆகாஷின் கால் முறிந்ததாக காவல்துறையினர் தெரிவித்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்தாக தெரிவித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்காக மாற்றப்பட்டதாகவும் கூறினார்.
ஆனால் அங்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆகாஷ் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டால் மூச்சுத்திணறல் ஏற்படுமா என்னும் கேள்வி சிறுகுழந்தைக்குக் கூட எழும். ஆனால் காவல்துறை மரணத்திற்கு காரணமாக இதைக்கூறியது.
ஆனால் தனது மகன் காவல்துறையினராலேயே அடித்துக் கொல்லப்பட்டதாகவும், அவரது மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும் ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வர தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத்தொடர்ந்து வெளிவந்த ஆகாஷின் ரிமாண்ட் ரிப்போர்ட் வாக்குமூலங்களும் அவரது மரணத்திற்கு காவல்துறையே காரணம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது. போலீசாரே தனது காலை உடைத்ததாகவும், அதன்பின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்திருந்தார். இதனிடையே அவரது உடலை உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அவரது உடற்கூராய்வு முடிவுகள் வெளிவந்து காவல்துறையே இந்த மரணத்திற்கும் காரணம் என ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. அதன்படி ஆகாஷின் உடலில் 28 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், வலதுகாலின் நடுப்பகுதியில் எலும்புகள் முறிந்திருந்தாகவும், மூளையில் ரத்தக்கசிவு இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆகாஷ் போலீசார் தாக்குதலிலேயே உயிரிழந்தார் என்பது தெளிவாகியுள்ளது.
- ஆகாஷ் டெல்சன் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சிவங்கை எஸ்.பி. அலுவலக இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் மீது புகார் எழுந்தது.
சிவகங்கை:
மானாமதுரையை சேர்ந்த விசாரணை கைதி ஆகாஷ் டெல்சன் உயிரிழப்பு தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கைதி இறப்பதற்கு முன் மானாமதுரை நீதிபதி அப்சல் பாத்திமாவிடம் வாக்குமூலம் அளித்தார். இந்த அறிக்கை நேற்று கோர்ட்டில் தாக்கல் செய்யபட்டது.
அதில், சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆகாஷ் டெல்சன் கடந்த 6-ந்தேதி சீருடையில் இல்லாத 10 பேர் என்னை அழைத்து சென்றனர். பின்னர் 4 போலீஸ்காரர்களிடம் என்னை ஒப்படைத்தனர். அவர்கள் எனது கால்களை கற்களுக்கு இடையில் வைத்து ஈரமான சாக்கை சுற்றி இரும்புக் கம்பியால் தாக்கினர்.
இதில் ரத்தம் வடிந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது என்று கூற வேண்டும் என போலீசார் மிரட்டினர் என குறிப்பிடப்பட்டிருந்தார். மாஜிஸ்திரேட்டின் இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆகாஷ் டெல்சன் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக சிவங்கை எஸ்.பி. அலுவலக இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், நிர்வாக நடவடிக்கையாக அவரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றியுள்ளதாக காவல் துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு பதிலாக மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக சாகுல் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஈர சாக்கை காலுக்கு மேல் போட்டு இரும்பு கம்பியால் வலது காலில் ஓங்கி அடித்தார்கள்.
- கண்ணை கட்டி என்னை மட்டும் வேறு காரில் ஏற்றி தனியாக அழைத்து சென்றார்கள்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறை விசாரணையின் போது ஆகாஷ் (26) என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் ரிமாண்ட் ரிப்போர்ட்டில் கொடுத்த வாக்குமூலங்கள் வெளியாகி இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5ஆம் தேதி அழகர் என்பவரை அரிவாளால் தாக்கிய வழக்கில் ஆகாஷ் உட்பட 5 பேரை மானாமதுரை போலீசார் மார்ச் 6 அன்று கைது செய்தனர். இதில் கைதின்போது கால்முறிந்த ஆகாஷ் என்ற இளைஞர் சிகிச்சையில் இருந்தநிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், போலீசார்தான் அவரை அடித்துக் கொன்றுள்ளனர் எனவும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் பெரிதாக வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம்செய்து தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டார். தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஆகாஷின் உடலை உடற்கூராய்வு செய்ய உத்தரவிட்டது.
இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இளைஞர் ஆகாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு ரிமாண்ட் ரிப்போர்ட்டில் கூறிய தகவல்கள் வெளியாகி உள்ளன. வாக்குமூலத்தில்,
"எனது கெண்டை காலிற்கு கீழேயும், முட்டிக்கு கீழேயும் இரண்டு கற்களை வைத்தார்கள். ஈர சாக்கை காலுக்கு மேல் போட்டு இரும்பு கம்பியால் எனது வலது காலில் ஓங்கி ஒரு முறை அடித்தார்கள். அடித்தவுடன் எலும்பு முறிந்து ரத்தம் வந்தது. வலியில் துடித்தேன். பின்னர் போலீசார் கண்ணை கட்டி என்னை மட்டும் வேறு காரில் ஏற்றி தனியாக அழைத்து சென்றார்கள். கண் கட்டை அவிழ்த்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்" என தெரிவித்துள்ளார்.
- விசாரணை கைதி உயிரிழப்புக்கு காரணமான மானாமதுரை போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாலையின் நடுவே பந்தல் அமைத்து அங்கேயே தூங்கி எழுந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் டெல்சன் என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் திடீரென உயிரிழந்தார்.
விசாரணை கைதி உயிரிழப்புக்கு காரணமான மானாமதுரை போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ரூ. 50 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8-ந் தேதி காலை 10 மணி முதல் மானாமதுரை பஸ் நிலையம் அருகே நான்கு வழிச்சாலையில் ஆகாஷ் டெலிவிசன் உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட் டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர். சாலை மறியல் காரணமாக மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர் பெரிய கருப்பன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், அதிகாரிகள் என பல தரப்பினரும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.
சாலையின் நடுவே பந்தல் அமைத்து அங்கேயே தூங்கி எழுந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இரண்டு நாட்களாக போராட்டம் நடந்த பகுதியில் பள்ளி கல்லூரி வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை மட்டும் அனுமதிக்கப்பட்டன. ஆனால் நேற்று அவையும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பொதுத்தேர்வு நடைபெறும் நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாததால் மாணவ-மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
மதுரை ஐகோர்ட்டும் இந்த வழக்கு விசாரணையின்போது மக்களை சிரமப்படுத்தும் வகையில் ஏன் மறியல் போராட்டத்தை நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பியது.
இதனிடையே ஆகாஷ் டெல்சன் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் வரை எங்களது போராட்டம் நடைபெறும் என தெரிவித்து இன்றும் நான்காவது நாளாக மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கடந்த நான்கு நாட்களாக நடந்துவரும் மறியலால் மானாமதுரை பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பாக மதுரையில் ராமேசுவரம் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்குவதால் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. மாணவ-மாணவிகளும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆகாஷ் உட்பட 5 பேரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.
- டிஜிபி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
மானாமதுரையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில் உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 6-ம் தேதி அழகர் என்பவரை அரிவாளால் தாக்கிய வழக்கில் ஆகாஷ் டெலிசன் (26) என்ற இளைஞர் உட்பட 5 பேர் மானாமதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து ஆகாஷ் 8ஆம் தேதி உயிரிழந்தாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யும்போது தப்பிக்க முயன்று பாலத்தில் இருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டதாகவும், அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன. போலீசாரால் இளைஞர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், அதனை மறைக்க இவ்வாறு கூறுவதாகவும் பெற்றோரும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் உரிய நீதி கிடைக்கும் வரை ஆகாஷின் உடலை வாங்க மாட்டோம் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அஜித்குமார் காவல் மரணவழக்குப்போல இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இளைஞர் ஆகாஷின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த முழு செயல்முறையையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பெரிய கல்லை தன்னுடைய கால் மீது போட்டு காவலர்கள் காலை உடைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
- காவல்துறையில் இது போன்ற அத்துமீறிய அராஜகமான நடவடிக்கைகள் தொடர்கிறது.
மானாமதுரை லாக்கப் படுகொலை சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்திடவும் வலியுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சார்ந்த கண்ணன் மகன் ஆகாஷ் (26) என்கிற பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரும் அவரது நண்பர்கள் குணா, அலெக்ஸ், சரவணன் முகேஷ் கண்ணன் ஆகியோர்களுக்கும் ரயில்வே காலணியைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆதனூரைச் சேர்ந்த ஆழகர் ஆகியோர்களுக்கும் 5.3.2026 அன்று மாலையில் கிருஷ்ணராஜபுரத்தில் தகராறு நடந்துள்ளது.
அன்று இரவு மானாமதுரை சியோன்நகர் அருகில் மேற்படி ஜெய்குமார் மற்றும் ஆழகர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த மேற்படி ஐந்து பேரும் கத்தி போன்ற ஆயுதத்தை வைத்து தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த ஜெய்குமார், ஆழகர் இருவரும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் 6.3.2026 பிற்பகல் 12 மணி அளவில் ஆகாஷ் மற்றும் நான்கு பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது. இவர்களை காவல்துறையினர் எங்கு வைத்துள்ளனர் என்ற விபரம் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
திடீரென 7.3.26 அன்று இரவு ஆகாஷ் பெற்றோர்களைத் தொடர்பு கொண்ட காவல்துறையினர் ஆகாஷ் மதுரை அரசு இராஜாஜி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.
பதறியடித்து பெற்றோர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஆகாசை பார்த்து உள்ளனர். அப்போது ஆகாசினுடைய கால் முறிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ஆகாஷ் தன்னுடைய பெற்றோர்களிடம் பெரிய கல்லை தன்னுடைய கால் மீது போட்டு காவலர்கள் காலை உடைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மகனுக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு உணவு தயார் செய்து வருவதற்காக பெற்றோர்கள் வீடு திரும்பி இருக்கின்றனர். ஆனால் 8.3.26 அன்று காலையில் பெற்றோர்களுக்கு ஆகாஷ் இறந்து விட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரோடு கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் இராமநாதபுரம் சிறையில் அடைத்திருப்பதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூரமான லாக்கப் படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஆகாஷ் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னால் அவர் மிக கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார் என்பது அவர் கால் உடைந்ததிலிருந்து தெரிய வருகிறது. காவல்துறையில் இது போன்ற அத்துமீறிய அராஜகமான நடவடிக்கைகள் தொடர்கிறது.
மனித உரிமைக்கு எதிரான இந்த கொடூரச் குற்றச்செயலில் ஈடுபட்ட அப்போது நிலையத்தில் பணியில் இருந்த அனைத்து காவலர்துறையினர் மீதும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
குற்றம் இழைத்த காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. அதேபோல் உயிரிழந்திருக்கிற ஆகாஷ் குடும்பத்தினருக்கு வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய அரசு வேலை உள்ளிட்ட அனைத்து விதமான தீருதவிகளையும் அரசு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- டாஸ்மாக் கடைக்குள் இருந்த அனைத்து வகையான மது பாட்டில்களும் எரிந்து நாசமானது.
- கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றை ஒட்டி அதன் கரையோர பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கடைக்கும் மானாமதுரை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மது பிரியர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் சென்றுவிட்டனர்.
இந்தநிலையில் நள்ளிரவில் டாஸ்மாக் கடை தீப்பற்றி எரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்த்த போது கடை முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. பின்னர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விபத்து நடந்த பகுதிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரமாக தீயை அணைக்க போராடினர்.
நேற்று காலையில்தான் சிவகங்கை மாவட்ட குடோனில் இருந்து விற்பனைக்காக பல லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது. திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தில் கடைக்குள் இருந்த ரேக்குகள், அட்டை பெட்டிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. உடைந்த பாட்டில் சிதறல்கள் பல மீட்டர் தூரம் வரை சென்று விழுந்தன.
கடுமையான போராட்டத்துக்கு பிறகு தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தபோதிலும் டாஸ்மாக் கடைக்குள் இருந்த அனைத்து வகையான மது பாட்டில்களும் எரிந்து நாசமானது. அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.30 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாராவது தீ வைத்துவிட்டு சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.
ஆனால் நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றித்திரிந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
பல ஆண்டுகளாக வைகை ஆற்றையொட்டி செயல்பட்ட டாஸ்மாக் கடை தீ விபத்தில் முழுமையாக எரிந்து சேதமாகி இருப்பது மானாமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 27 நட்சத்திரங்களை தன் மனைவிகளாகக் கொண்டவன் சந்திரன்.
- மதுரையைப் போலவே இங்கும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமைந்துள்ளது, ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயம். சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று வகையிலும் பெருமை உடையதாக உள்ளது. சந்திரன் வழிபட்டு சிவன் அருள் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இக்கோவிலில் மூலவராக சோமேஸ்வரர், உற்சவராக சோமநாதர் ஆகியோர் உள்ளனர். அம்பாள் ஆனந்தவல்லி தாயார். புராண காலத்தில் இந்த ஊர் 'சந்திர பட்டணம்' என்று வழங்கப்பட்டு உள்ளது.
27 நட்சத்திரங்களை தன் மனைவிகளாகக் கொண்டவன் சந்திரன். அந்த மனைவிகளில் ரோகிணி, கார்த்திகை ஆகிய இருவர் மீது மட்டும் மிகுதியான அன்பு கொண்டவனாக இருந்தான். இதைக்கண்டு கோபமுற்ற அவனது மற்ற மனைவிகள் இதுபற்றி தம் தந்தையான தட்சனிடம் முறையிட்டனர். இதைக் கேட்டு சினமடைந்த தட்சன், சந்திரனுக்குச் சாபம் கொடுத்தான். இதன் காரணமாக வெப்பு நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், பொலிவிழந்து தேயத் தொடங்கினான். தனக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி வருந்திய சந்திரன், தன் சாபத்துக்கு விமோசனம் என்னவென்று அகத்தியரிடம் கேட்டான். அதற்கு அவர், 'வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள வில்வ வனத்தில் உள்ள லிங்கத்தை கோவில் கட்டி வணங்கினால் இந்தப்பிணி நீங்கும்' என்று கூறினார்.
அதன்படியே சந்திரனும் செய்து தன் பிணியை நீக்கிக்கொண்டான். மேலும் சந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவபெருமான் தன் திருமுடியில் சந்திரனுக்கு இடம் தந்ததாக கோவில் தல வரலாறு தெரிவிக்கிறது. சந்திரன் தன்னுடைய கலைகளால் அபிஷேகம் செய்ததால் இங்குள்ள சுயம்பு லிங்கம் வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறது. இத்தலத்தில் சந்திர பகவான், தம் இரு மனைவியரான ரோகிணி, கார்த்திகை ஆகிய இருவருடன் ஒரே கல்லில் சிற்பமாக தனிச் சன்னிதியில் காட்சியளிப்பது இக்கோவிலின் தனிச் சிறப்பு.
மதுரையில் ஆட்சி செய்த நாயக்க வம்சத்திற்குப் பிறகு, வேற்று மதத்தினர் மதுரையம்பதியைக் கைப்பற்ற முனைந்தனர். அப்போது, சிவகங்கை மன்னர் சசிவர்ணரும், சேது காவலரும் இதை எப்படியாவது முறியடிக்க வேண்டுமென முடிவெடுத்தனர். வீரத்திற்கு இலக்கணம் வகுத்த தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரன் தலைமையில் சேது சேனையும், விவேகத்தில் சிறந்த தாண்டவராயப் பிள்ளை தலைமையில் சிவகங்கை மறவர் படையும் வீறு கொண்டு எழுந்தன. அவர்கள் ஆலவாய் அண்ணலையும், அங்கயற்கண்ணியையும் தக்க பாதுகாப்புடன் மானாமதுரைக்குக் கொண்டு வந்து சோமநாதர் கோவிலில் பாதுகாப்பாக வைத்ததாக சொல்லப்படுகிறது. மீனாட்சியும், சொக்கநாதரும் இரண்டு ஆண்டுகள் இவ்வாலயத்தில் வீற்றிருந்து பின்னர் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சரித்திரச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

இத்தலத்தில் பல சிறப்பு வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிவபெருமான் தனது திருவிளையாடலின் போது தமது அடியார் மாணிக்கவாசகருக்காக இத்தலத்தில்தான் நரிகளைப் பரிகளாக மாற்றிட, கயிறு மாற்றிக்கொடுத்தார். ராமர், அகத்தியரின் ஆலோசனைப்படி இங்கு வந்து இறைவனைப் பூஜித்து, அதன் பின்பு சேது பாலம் அமைத்து இலங்கைக்குச் சென்றார். ராமன், ராவணனுடன் போர் புரிந்த போது வானரச் சேனைகளின் பசியை போக்கிய தலம். பலராமர் தனது தீர்த்த யாத்திரையின் போது சூரனைக் கொன்றதால் பாவம் ஏற்பட்டது. அதன்பின் இத்தலத்திற்கு வந்து வில்வ வனத்தில் இருந்த லிங்கத்தினைப் பூஜித்து பாவவிமோசனம் பெற்று பின் துவாரகையை மீட்டார்.
ஐந்து நிலை கோபுரத்துடன் இக்கோவில் அமைந்துள்ளது. இந்த ராஜகோபுரத்தில் இத்தலத்தில் நிகழ்ந்த அற்புதங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது என்பது இக்கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும். இக்கோவிலில் சோமநாத சுவாமி, ஆனந்தவல்லி அம்மன் சன்னிதிகளுடன், விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சதாசிவ பிரம்மேந்திரர் உபசன்னிதிகளும் உள்ளன. இங்குக் கோவில் தேர், கோவில் கல்வெட்டு போன்றவை உள்ளன. கோவிலின் தல விருட்சமாக வில்வ மரமும், தல தீர்த்தமாக சந்திர புஷ்கரணியும் உள்ளன. காரண ஆகமப்படி கோவிலில் வழிபாடுகள் நடைபெறுகின்றன.
மதுரையைப் போலவே இங்கும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் என்றால், இங்கு ஆனந்தவல்லி சோமநாதராகக் காட்சியளிக்கிறார். மதுரையில் கள்ளழகர் என்றால், மானாமதுரையில் காட்சி தருபவர் வீர அழகர். மதுரையம்பதியில் மீனாட்சி சொக்கநாதருக்கு நடக்கும் திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், திரி எடுத்து சாமியாடுவது, பீச்சாங்குழல் சேவை என அனைத்தும் இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
இக்கோவிலில் காரண ஆகம முறைப்படி நான்கு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு சித்திரை திருவிழா, ஆடி திருவிழா, சித்திரை தேரோட்டம், மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா விமரிசையாக நடைபெறும்.
இங்கிருக்கும் சந்திர புஷ்கரணியில் நீராடி இறைவனை மனமுருகி வழிபட்டால் தீராத சரும நோய்கள் குணமாகும் என்று சொல்லப்படுகிறது. இங்கு, ஆடித் தபசு திருநாளில் சுவாமிக்கு அணிவித்த மாலைகளை அணிந்து கொண்டால் திருமணத் தடை நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்வித்தால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
கோவில் தினமும் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் பக்தர் வழிபடுவதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் பிரதான சாலையில் 50 கிலோ மீட்டர் தொலைவில் மானாமதுரை சோமநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
- மானாமதுரை அருகே பெருங்கற்கால இரும்பு ஆலை எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
- உருக்கு கழிவுகள் அதிகம் காணப்படுகின்றன.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் வலசை கிராமம் காட்டுப்பகுதியில் தென்னக வரலாற்று மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தருனேஷ்வரன் வரலாற்றுத் துறை பேராசிரியர் தங்கமுத்து ஆகியோர் அங்கு சென்று கள மேற்பரப்பாய்வு செய்தனர். அப்போது இந்தப்பகுதியில் பழங்கால இரும்பு உருக்காலை எச்சங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
இந்தப்பகுதியில் ஏராள மான பெருங்கற்கால இரும்பு உருக்கு கழிவுகளும், சுமார் 4 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட துண்டு குழாய்களும் உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டன. இவை இரும்பு உலைகளை எரியூட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட வையாகும்.
ஏராளமான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்பு, உருக்கு கழிவுகள் ஆகியவையும் அதிகம் காணப்படுகின்றன. பழங்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் இரும்பு பொருள்களை தயாரிக்கும் தொழிற்கூடத்தை அமைத்திருக்க வேண்டும்.
சுமார் 2,500 ஆண்டுக ளுக்கு முன்பு இங்கு இரும்பு காலத்தில் வாழ்ந்த ஆதிமனி தர்கள் வசித்திருக்கலாம். அவர்கள் இரும்பை உலையில் வைத்து தனியாக பிரித்து, அதன் மூலம் கத்தி, ஈட்டி, கோடாரி, வேல், போன்ற பல பொருள்களை தயாரித்துள்ளதை அறிய முடிகிறது. இந்தப்பகுதியில் இரும்பு உருக்கு கழிவுகள் குவியலாக காணப்படுகிறது, பல துண்டு குழாய்களும் மேற்பரப்பில் கண்டறி யப்பட்டது.
இந்தப்பகுதிகளில் பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு உருக்காலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள் ளதை பார்க்கும்போது இங்கு காணப்படும் அதிகப் படியான செம்பூரான் கற்களே இதற்கு காரணம் எனலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தி.மு.க. முன்னாள் எம்.பி. தா.கிருஷ்ணனின் 20-ம் ஆண்டு நினைவு நாள் நாளை நடக்கிறது.
- தி.மு.க.வினர் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கொம்புக்காரனேந்தலை சேர்ந்தவர் மறைந்த தா.கிருஷ் ணன். முன்னாள் எம்.பி.யான இவர் ஒருங்கிணைந்த ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாள ராகவும், சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி னார். இவர் கடந்த 2003-ம் ஆண்டு மே மாதம் 20-ந்தேதி மரணமடைந்தார்.
சிவகங்கை மாவட்டம் கொம்புக்காரனேந்தலில் தா.கிருஷ்ணனின் நினைவிடம் உள்ளது. ஆண்டுதோறும் மாவட்ட தி.மு.க. சார்பில் அவரது நினைவை போற்றும் வகையில் கொம்புக்கார னேந்தலில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
நாளை (20-ந்தேதி) சனிக்கிழமை காலை 10 மணி அளவில் கொம்புக்கார னேந்தலில் உள்ள தா.கிருஷ்ணன் நினைவிடத்தில் சிவகங்கை மாவட்ட செயலா ளரும், அமைச்சருமான கே ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் மலர் அஞ்சலி செலுத்து கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை தா.கிருஷ்ணன் குடும்பத்தினர், சிவகங்கை மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள். நினைவுநாள் நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் உள்ள தி.மு.க. நிர்வாகி கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேருர் செயலா ளர்கள், சார்பு அணி நிர்வாகி கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்-அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா தொடங்கியது. 30-ந் தேதி தபசு உற்சவம் நடக்கிறது.
- 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆடித் திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடி யேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு கலச நீர், 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தர்ப்பைப்புல், மலர் மாலைகள் சாற்றி, சிறப்பு பூஜைகள், தீபாராத னை நடந்தது. பூஜைகளை கோவில் பரம்பரை ஸ்தானிகம் தெய்வசிகாமணி, பட்டர்கள் ராஜேஷ், சரவணன், குமார் நடத்தி வைத்தனர்.
இதில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமி ழரசி, நகர் மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.
தினமும் அம்மன் சர்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தபசு உற்சவம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. தபசு கோலத்தில் எழுந்தருளும் அம்மனுக்கு சோமநாத சுவாமி விருஷா பரூடராக காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். 31-ந் தேதி சந்தனக்காப்பு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- மதுரை அருகே பிராகுடியில் ஆயிரம் ஆண்டு பழமையான பாண்டியர் கால அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது.
- முற்கால பாண்டியர்களின் கலைநயத்தில் உருவானதாக இருக்கலாம்.
மானாமதுரை
மதுரை மாவட்டம் விரகனூர் சுற்றுச்சாலையில் இருந்து கல்லம்பல் செல்லும் வழியில் உள்ள பிராகுடி என்ற ஊரின் வயல் பகுதியில் பழமையான சிலை இருப்பதாக மதுரை தெப்பக்குளம் ஸ்ரீமந் நாயகியார் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவன் சேசனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அந்த மாணவர் தொல்லியல் கள ஆய்வாளர் மீனாட்சி சுந்தரத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று அவர் அந்த சிலையை ஆய்வு செய்ததில் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் என்பது தெரியவந்தது.
இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது:-
இந்த சிற்பம் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி மகுடத்துடன் கூடிய விரிந்த ஜடா பாரத்துடன் உள்ளது, இரு காதுகளிலும் பத்ர குண்டலம் அணிந்துள்ளார், கழுத்தில் ஆபரணமும், மார்பில் முப்புரிநூலும், கைகளில் தோள்வளையும், கை வளையல்களுடனும் அய்யனார் சிற்பம் அமைந்துள்ளது. வலது கரத்தில் பூச்சென்டினை பிடித்தபடியும்
இடது கரம் கஜ ஹஸ்தத்தை முன்னோக்கி நீட்டியவாறு மடக்கி நிறுத்திய முழங்கால் மீது இடது கை மணிக்கட்டை வைத்த நிலையில் தண்ட ஹஸ்தமாகவும் சிற்பம் நேர்த்தியாக வடிக்கப் பட்டுள்ளது. இடது காலை பீடத்தின் மீது குத்தவைத்தும் வலது காலை கீழே தொங்க விட்டும் உத்குடிகாசன கோலத்தில் அமர்ந்தபடி அய்யனார் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த
சிற்பத்தின் வடிவ மைப்பை வைத்துப் பார்க்கும்போது இவை முற்கால பாண்டியர்களின் கலைநயத்தில் உருவானதாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






