என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசாரணை கைதி"

    • நெல்லை காவல்துறை ஆணையர் நடத்திய விசாரணையில் போலீசார் மீது எந்த தவறும் இல்லை என அறிக்கை.
    • உதவி ஆய்வாளர் விமலன், காவலர் மகாராஜனிடம் இருந்து தலா ரூ.2 லட்சம் வசூலிக்க உத்தரவு.

    நெல்லையைச் சேர்ந்த பேச்சிவேல் என்பவரை 2 நாட்கள் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கியதாக அவரது தாயார் சந்திரா மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்தார்.

    அதன்படி, 2019ம் ஆண்டில் நெல்லை டவுன் காவல் நிலைய காவலர் மகாராஜன், உதவி ஆய்வாளர் விமலன் மீது அவர் புகார் அளித்தார்.

    மேலும், அப்போது போலீசார் தனது மகனைத் தேடி வந்து மளிகை கடையில் நுழைந்து ஆத்திரத்தில் பொருட்களை உடைத்து ரூ. 10 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகார் தெரிவித்தார்.

    இந்து புகார் மனு மீதான விசாரணையின்போது, நெல்லை காவல்துறை ஆணையர் நடத்திய விசாரணையில் போலீசார் மீது எந்த தவறும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    மேலும், 20 வழக்குகள் நிலுவையில் உள்ள பேச்சிவேலை பிடிக்க முயன்றபோது விழுந்ததில் காயம் என கூறி புகாரை தள்ளுபடி செய்ய போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த புகார் மீதான இன்றைய விசாரணையில்," பேச்சிவேலுவின் காலில் சிலிண்டரை தொங்கவிட்டு கொடுமைப்படுத்தியதை போலீசார் மறைத்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    பேச்சிவேல் எப்போது கைது செய்யப்பட்டார்? முதலுதவி அளிக்கப்பட்ட விவரங்களையும் காவல்துறை மறைத்துள்ளதாக" மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், காவல்துறையினர் தாக்கியதால் காயமடைந்து பேச்சிவேல் சிகிச்சை பெற்ற தகவலை மறைத்ததாகக் கூறி போலீசாருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தாக்கியதால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும், உதவி ஆய்வாளர் விமலன், காவலர் மகாராஜனிடம் இருந்து தலா ரூ.2 லட்சம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழப்பு.
    • விசாரணையின்போது, கைதி சாந்தகுமார் உயிரிழக்கவில்லை என போலீசார் அறிவிப்பு.

    திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், விசாரணை கைதி மரணம் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    அதன்படி, செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணையின்போது, கைதி சாந்தகுமார் உயிரிழக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    நெஞ்சுவலி என்று கூறிய சாந்தகுமாரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காவல்துறை மேலும் கூறியதாவது:-

    பிபிஜி சங்கர் கொலையில் முக்கிய குற்றவாளியான சாந்தகுமார், கடந்த 13ம் தேதி புட்லூர் பகுதியில் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மற்றொரு குற்றச்செயல் புரிய அவர்கள் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.

    சாந்தகுமாரின் இறப்பின் மீது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு திருவள்ளூர் குற்றவியல் நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.

    சாந்தகுமாரின் மரணம் குறித்த விசாரணை நியாயமாக நடைபெற வேண்டி சாந்தகுமாரை விசாரித்த காவல் ஆய்வாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், சாந்தகுமாருக்கு இதயத்தில் ரத்த குழாய் அடைப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கைதி சாந்தகுமாரின் இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கையில் தான் தெரிய வரும்.

    சாந்தகுமாரின் இறுதிச்சடங்குக்காக அவரது மனைவி மற்றும் உறவினர்கள், சாந்தகுமார் உடலை ஸ்ரீபெரும்புதூர் கொண்டு சென்றனர்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    ×