search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்சிபி"

    • அது எப்போதுமே தனிநபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணி.
    • விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கெயிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

    2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிகபட்சமாக மும்பை, சென்னை அணிகள் 5 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. இவர்களுக்கு அடுத்தப்படியாக கொல்கத்தா அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. அதை தவிர ராஜஸ்தான், டெக்கான் ஜார்சஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் ஆகிய அணிகள் ஒரு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.

    இந்த கோப்பையை வெல்லாதா அணியாக ஆர்சிபி, பஞ்சாப், லக்னோ ஆகிய அணிகள் உள்ளது. முக்கியமாக விராட் கோலி இடம்பெற்ற ஆர்சிபி அணி கோப்பையை வெல்லாதது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடரில் விராட் கோலி மட்டுமே ஒரே அணிக்காக விளையாடி உள்ளார்.

    இந்நிலையில் ஆர்சிபி அணி எப்போதுமே தனிநபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணி என அந்த அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் படேல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆர்சிபி அணிக்காக நான் 4 வருடங்கள் விளையாடியுள்ளேன். அது எப்போதுமே தனிநபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணி. நான் பெங்களூரு அணியில் இருந்த போது விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கெயிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

    அங்கே அவர்களுக்கு ஸ்பெஷல் முன்னுரிமை இருந்தது. எனவே அங்கே அணி கலாச்சாரம் கிடையாது என்பதை அவர்கள் விளையாடுவதை பார்க்கும் போது தெளிவாக தெரியும். அதனாலேயே அவர்கள் கோப்பையை வெல்லவில்லை

    இவ்வாறு பார்தீவ் படேல் கூறினார்.

    • ஐ.பி.எல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்களை குவித்துள்ளார்.
    • கிரிக்கெட்டிலிருந்து மனிதனை வெளியேற்றலாம். ஆனால் மனிதனிடமிருந்து கிரிக்கெட் எடுக்க முடியாது!

    தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார். ஐ.பி.எல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்களை குவித்துள்ளார்.

    மேலும், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தனது பிறந்த நாள் அன்று தினேஷ் கார்த்திக் அறிவித்து இருந்தார்.

    இந்நிலையில், ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எல்லா வகையிலும் எங்கள் கீப்பரை வரவேற்கிறோம், தினேஷ் கார்த்திக், புதிய அவதாரத்தில் ஆர்சிபி-க்கு திரும்புகிறார். அவர் ஆர்சிபியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் ஆகிறார்.

    கிரிக்கெட்டிலிருந்து மனிதனை வெளியேற்றலாம். ஆனால் மனிதனிடமிருந்து கிரிக்கெட் எடுக்க முடியாது! அவருக்கு முழு அன்பையும் பொழியுங்கள், 12வது மேன் ஆர்மி! என தெரிவித்துள்ளது.


    • மும்பை இந்தியன்ஸ் அணி 4 இடத்தில் உள்ளது.
    • ஆர்சிபி அணி 2-வது இடத்தில் உள்ளது.

    உலகளாவிய முதலீட்டு வங்கி ஹௌலிஹான் லோகி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி ஐபிஎல் (இந்தியன் பிரிமீயர் லீக்) வணிக மதிப்பு இந்த வருடம் 6.5 சதவீதம் உயர்ந்து ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. அதேவேளையில் பிராண்ட் மதிப்பு 6.3 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் பிராண்ட் மதிப்பு 28 கோடி ரூபாய் ஆகும்.

    டாடா குரூப் ஐபிஎல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற்றுள்ளது. இதற்காக 2024 முதல் 2028 வரை தோராயமாக 2500 கோடி ரூபாய் செலுத்த உள்ளது. இது கடந்த முறையைவிட சுமார் 50 சதம் அதிகமாகும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (23.1 கோடி அமெரிக்க டாலர்) பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த போதிலும் மிகவும் மதிப்புமிக்க அணியாக திகழ்கிறது. கடந்த ஆண்டை விட மதிப்பு 9 சதவீதம் அதிகரித்துள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியின் வளர்ச்சி 19.30 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    ஆர்சிபி அணி (22.7 கோடி அமெரிக்க டாலர்) 2-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (21.6 கோடி அமெரிக்க டாலர்) 3-வது இடத்தை பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது இடத்திறகு பின்தங்கியுள்ளது.

    • பக்கத்து மாநிலமான கேரளாவில் ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற்றது.
    • தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி புதுச்சேரி உள்பட 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தோல்வியடைந்தார்.

    தோல்விக்கு பின் அதிமுக தலைவர் எஸ்.பி வேலுமணி, "பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டிருந்தால் 30 இடங்களில் வெற்றி பெற்றிருப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு அண்ணாமலை பதில் கொடுத்திருந்தார். அப்போது அதிமுக தலைவர்கள் தோல்விக்கு வேறு காரணங்கள் கூறும்போது எஸ்.பி. வேலுமணி இந்த காரணத்தை கூறுகிறார். அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்பி வேலுமணி இடையே உள்கட்சி பிரச்சனை இருப்பதுபோல் தெரிகிறது" என்றார்.

    இந்த நிலையில் எஸ்பி வேலுமணி பேசியது அதிமுகவின் கருத்து அல்ல அதிமுக-வின் முன்னாள் அமைச்சரான டி. ஜெயக்கமார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெயக்குமார் கூறியதாவது:-

    பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்பதுதான் அதிமுக-வின் நிலைப்பாடு. எங்களது தலைவர்களை விமரச்னம் செய்தவர்களைதான் நாங்கள் விமர்சனம் செய்தோம்.

    தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். அதிமுக தமிழகத்தை 30 ஆண்டுகள் ஆண்ட கட்சி. 2026-ல் தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி செய்யப் போகிறது என்றால் அது அதிமுக கட்சிதான்.

    அண்ணாமலை புள்ளி ராஜாவாகிவிட்டார். அந்த கட்சி எவ்வளவு? இந்த கட்சி எவ்வளவு? என புள்ளி விவரங்கள் எடுக்கும் ஐபிஎஸ் அதிகாரியாகதான் செயல்பட்டார். ஒரு கட்சியின் தலைவராக அவரது பேச்சு இல்லை. 2014-ல் பாஜக கூட்டணி வாங்கிய வாக்கை விட தற்போது குறைவு. இதை ஏன் அண்ணாமலை பேச மறுக்கிறார்?.

    தமிழகத்தில் பாஜக ஆர்சிபி அணி போன்றது. தோற்றுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். நாங்கள் சிஎஸ்கே. 30 ஆண்டுகள் வெற்றிகளை குவித்தோம். வரவிருக்கும் தேர்தலில் சாதனைகள் குவிக்கப் போகிறோம்.

    கேரளாவில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றார்கள். தமிழகத்தில் ஒரு இடத்திலாவது வெற்றி பெற்றார்களா?. புள்ளி விவரத்தை வைத்துக் கொண்டு சீன் காட்டுவது தமிழகத்தில் எடுபடாது.

    இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    • ஐபிஎல் 2024 தொடரிலிருந்து சிஎஸ்கே வெளியேறிய நிலையில் டோனி தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வெடுத்து வருகிறார்.
    • பெங்களூரில் இருந்து ராஞ்சிக்கு விமானத்தின் எகானமி கிளாஸில் டோனி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் 2024 தொடரிலிருந்து சிஎஸ்கே வெளியேறிய நிலையில் டோனி தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் பெங்களூரில் இருந்து ராஞ்சிக்கு விமானத்தின் எகானமி கிளாஸில் டோனி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், தோனி தனது பெட்டியை மேல் உள்ள ரேக்கில் வைத்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்திருப்பது பதிவாகியுள்ளது. சக பயணிகள் டோனியை தங்கள் போன் கேமராக்களில் படம்பிடித்து அவரின் எளிமையை கைதட்டி வரவேற்றனர்.

    தொடர்ந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் டோனியின் எளிமையை மெச்சி தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஆர்சிபி உடனான ஆட்டத்தில் தோல்விக்கு பின்னர் ஆர்சிபி அணியினருக்கு டோனி கை கொடுக்காமல் மைத்தனத்தில் இருந்து சென்றது சர்ச்சையான நிலையில் அந்த களங்கத்தைப் போக்கும் வகையில் இந்த வீடியோவைப் பகிர்ந்து டோனியின் நற்பண்புகளை ரசிகர்கள் உச்சி முகர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் 6 ஆம் கட்ட தேர்தலான இன்று ( மே 250 பீகார் மாநிலம் ராஞ்சியில் டோனி வாக்களித்து குறிப்பிடத்தக்கது.

     

    • தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து சக வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரைக் கவுரவித்து வழியனுப்பினர்.
    • மைதானத்திற்கு வெளியே, நான் அவருடன் சில நல்ல மற்றும் சுவாரஸ்யமான உரையாடல்களை நடத்தியிருக்கிறேன்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது.

    எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி தோல்வியடைந்து பிளே ஆஃப்பில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, அந்த அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்தார்.

    தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து சக வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரைக் கவுரவித்து வழியனுப்பினர்.

    இந்நிலையில், தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து ஆர்சிபி அணி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அணி வீரர் விராட் கோலி, பயிற்சியாளர் சங்கர் பாசு, தினேக் கார்த்திக் மனைவி தீபிகா பல்லிகல் ஆகியோர் தங்களது எமோஷனலை பகிர்ந்துள்ளனர்.


    வீடியோவில் விராட் கோலி கூறியதாவது:- டி.கே.வை முதன் முதலில் சந்தித்தது 2009 சாம்பியன்ஸ் டிராபி. தென்னாப்பிரிக்காவில் விளையாடினோம் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது, நான் தினேஷுன் உடை மாற்றும் அறையைப் பகிர்ந்து கொண்டது அதுவே முதல் முறை. அப்போது தான், அவர் மிகவும் வேடிக்கையாக இருப்பதைக் கண்டேன். மிகவும் சுறுசுறுப்பானவர்.

    மைதானத்திற்கு வெளியே, நான் அவருடன் சில நல்ல மற்றும் சுவாரஸ்யமான உரையாடல்களை நடத்தியிருக்கிறேன். அவர் ஒரு புத்திசாலி, கிரிக்கெட் மட்டுமின்றி பல விஷயங்களைப் பற்றி அபார அறிவு கொண்டவர். அவருடனான எனது உரையாடல்களை நான் மிகவும் ரசித்துள்ளேன். அவர் விரும்பும் விஷயங்களை பற்றி யாரிடமும் சென்று பேசும் அவரது நேர்மை மற்றும் தைரியம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.

    தினேஷ் கார்த்திக் குறித்து அவரது மனைவியும் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிகல் கூறியிருப்பதாவது:- தினேஷ் கார்த்திக்கின் மன உறுதியால் ஈர்க்கப்பட்டேன். கார்த்திக் தன்னைத்தானே மீண்டும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார். அனைவராலும் விரும்பப்படும் ஒரு கிரிக்கெட் வீரரை நீங்கள் அடிக்கடி காண முடியாது. கார்த்திக் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதால், தன்னுடனும் அவர்களது குழந்தைகளுடனும் அதிக நேரம் செலவிடுவார். என்னுடைய வற்புறுத்தலால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றார்.

    • ஆஸ்திரேலியாவுக்காக நீங்கள் அற்புதமாக செயல்படுகிறீர்கள்.
    • அவருக்கு ஐபிஎல் தொடரில் ஆர்வமில்லாதது போல் தெரிகிறது.

    ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணி எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. குறிப்பாக நடப்பு சாம்பியன் சென்னையை கடைசி போட்டியில் தோற்கடித்த பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    அதனால் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியின் இந்த தோல்விக்கு ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். அவர் இந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 52 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சமமாக ஆர்சிபி அணியில் விளையாடவில்லை எனவும் அடுத்து வருடம் ஆர்சிபி அணியில் இருந்து மேக்ஸ்வெல்லை கழற்றி விட வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னார் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாம் மேக்ஸ்வெல் பற்றி பேச வேண்டும். அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான அனுபவம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்காக நீங்கள் அற்புதமாக செயல்படுகிறீர்கள். ஆனால் ஐபிஎல் தொடர் என்று வரும் போது மட்டும் அவருக்கு என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. அவருக்கு இங்கே ஆர்வமில்லாதது போல் தெரிகிறது. குறிப்பாக அவுட்டானால் அதைப்பற்றி அவர் கவலைப்படுவதாக தெரிவதில்லை. ஏனெனில் அவருடைய வங்கிக் கணக்கில் பணம் சென்று விடுகிறது.

    அதனால் ஜாலியாக இருந்து சிரித்து விட்டு அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்வார். ஆனால் இறுதி முடிவு என்ன? நீங்கள் வெற்றிக்காக விளையாட வேண்டும். எனவே அவரை விட்டு ஆர்சிபி நகர வேண்டும். அவர்கள் தோல்வியை சந்திக்கும் போது என்ன பிரச்சனை என்பதை நாங்கள் இங்கே அமர்ந்து விவாதிக்கிறோம். ஆனால் அவர்கள் 6 வெற்றியுடன் தகுதி பெற்றதால் மகிழ்ச்சியடைந்தனர். உண்மையான முடிவு கோப்பை வெல்வதில் தான் இருக்கிறது. அது அவர்களிடம் இல்லாததால் அங்கே பிரச்சினை இருக்கிறது.

    இவ்வாறு திவாரி கூறினார்.

    • உண்மையில் டெல்லியில் பிறந்த விராட் கோலி அந்த அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
    • எனவே இது விராட் கோலி கடினமான முடிவை எடுக்க வேண்டிய நேரமாகும்.

    அகமதாபாத்:

    இறுதி கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளிப்பட்டியலில் 3-வது, 4-வது இடம் பிடித்த அணிகளான ராஜஸ்தான் ராயல்சும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

    அதனால் 2008 முதல் தொடர்ந்து 17-வது வருடமாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் பெங்களூரு பரிதாபமாக வெளியேறியது. அதே காரணத்தால் விராட் கோலியின் முதல் ஐபிஎல் கோப்பை கனவு மீண்டும் தகர்ந்தது. ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணிக்காக மொத்தம் 8000 ரன்கள் அடித்துள்ள அவர் இந்த வருடம் 741 ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடினார். இருப்பினும் வழக்கம் போல முக்கிய போட்டியில் மற்ற வீரர்கள் சொதப்பியதால் கோப்பையை முத்தமிடும் வாய்ப்பை கோட்டை விட்ட விராட் கோலி சோகத்துடன் வெளியேறினார்.

    இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் மெஸ்சி, ரொனால்டோ போன்ற கால்பந்து ஜாம்பவான்கள்போல ஆர்சிபி அணியை விட்டு வெளியேறி விராட் கோலி வேறு அணிக்கு விளையாட வேண்டும் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஏற்கனவே சொன்னதை நான் மீண்டும் சொல்கிறேன். மற்ற விளையாட்டுகளின் மகத்தானவர்கள் சில அணிகளை விட்டு வெளியேறி மற்ற அணிகளில் சேர்ந்து வெற்றிகளை கண்டுள்ளனர். அதேபோல கடுமையாக முயற்சித்த விராட் கோலி மீண்டும் ஆரஞ்சு தொப்பியை வென்றும் அவருடைய அணி தோல்வியை சந்தித்தது.

    ஆர்சிபி அணிக்கு அவர் மதிப்பை கொண்டு வருகிறார் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் விராட் கோலி கோப்பைக்கு தகுதியானவர்.

    எனவே கோப்பையை வெல்ல பெற உதவும் அணிக்காக அவர் விளையாடத் தகுதியானவர். உண்மையில் டெல்லியில் பிறந்த விராட் கோலி அந்த அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனவே இது விராட் கோலி கடினமான முடிவை எடுக்க வேண்டிய நேரமாகும்.

    ரொனால்டோ, மெஸ்ஸி, ஹரி கேன் ஆகியோர் தங்களுடைய அணிகளை விட்டுச் சென்று வேறு அணியில் விளையாடி வெற்றி கண்டனர்.

    இவ்வாறு பீட்டர்சன் கூறினார்.

    • தொடர்ந்து 17 ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கோப்பை கனவு தகர்ந்துள்ளது.
    • நாங்கள் (சி.எஸ்.கே.) 5 முறை சாம்பியன்" என்று ராயுடு பதிவிட்டுள்ளார்.

    ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.

    அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்த தோல்வியின் மூலம் தொடர்ந்து 17 ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கோப்பை கனவு தகர்ந்துள்ளது.

    இந்நிலையில், ஆர்சிபி அணியின் கோப்பை கனவை அடையாமல் ஐபிஎல்-ல் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்திருக்கிறார்.

    பெங்களூரு அணியின் தோல்வியை சென்னை அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீம்களாக வெளியிட்டு கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், பெங்களூரு அணியின் தோல்வி குறித்து முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ராயுடு காட்டமாக விமர்சித்துள்ளார்.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் பேட்டி அளித்த ராயுடு, "கொண்டாட்டங்களாலும், ஆக்ரோஷத்தினாலும் ஐபிஎல் கோப்பைகள் வெல்லப்படுவதில்லை. சிஎஸ்கேவை மட்டும் வீழ்த்தி ஐபிஎல் கோப்பைகள் கைப்பற்றப்படுவதில்லை. கோப்பையை வெல்ல பிளே ஆஃப்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும்.

    திறமையான இந்திய வீரர்களை பெங்களூரு அணி கண்டுபிடிக்க வேண்டும். திறமையான இந்திய வீரர்களை கண்டுபிடித்ததால் தான் சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகள் வெற்றிகரமான அணிகளாக உள்ளது என்பதை பெங்களூரு அணி உணர வேண்டும்" என்று பேசியுள்ளார்.

    இது மட்டுமின்றி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் கடந்த முறை கோப்பை வென்ற சென்னை அணி வீரர்களின் வீடியோ ஒன்றையும் ராயுடு பகிர்ந்துள்ளார். அதில், சில சமயங்களில் சிலவற்றை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. நாங்கள் (சி.எஸ்.கே.) 5 முறை சாம்பியன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • ஆர்சிபி எணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது.
    • 2வது தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தான்- ஐதராபாத் அணிகள் நாளை மோதுகின்றன.

    ஐபிஎல்-ன் நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி எணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது.

    இதைதொடர்ந்து, 2வது தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தான்- ஐதராபாத் அணிகள் நாளை மோதுகின்றன.

    இந்நிலையில், எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி தோல்வியடைந்து பிளே ஆஃப்பில் இருந்து வெளியோறியதை தொடர்ந்து, அந்த அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

    தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளதை அடுத்து, சக வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரைக் கவுரவித்து வழியனுப்பினர்.

    ஆர்சிபி அணியின் கோப்பை கனவை அடையாமல் ஐபிஎல்-ல் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை பெங்களூரு அணி ரத்து செய்தது.
    • விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதற்கான பயிற்சி ஆட்டம் அகமதாபாத் குஜராத் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

    இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைதுசெய்தனர். அவர்களது இடங்களை சோதனை செய்தபின் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், குறுஞ்செய்திகளை போலீசார் மீட்டதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆர்சிபி அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், ராஜஸ்தான் - பெங்களூரு போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏதும் இல்லை என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

    மேலும், "குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 2-5 மணிவரை பயிற்சி செய்ய பெங்களூரு அணி திட்டமிட்டிருந்தது. ஆனால் கோடைக்காலம் என்பதால் மாலை 6.30 மணிவரை வெளிச்சம் இருக்கும் என்பதால் பயிற்சியை 3-6 மணிக்கு மேற்கொள்ளலாம் என்று அணி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் வெப்ப அலை காரணமாகவே பெங்களூரு அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது

    அதே சமயம் குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 3.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ராஜஸ்தான் அணி பயிற்சியில் ஈடுபட்டது" என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

    • ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கோப்பை தங்களுடைய என்று அவர்கள் நம்புவார்கள்.
    • யாரும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது.

    ஐபிஎல் 2024 சீசன் பிளேஆஃப் சுற்றுகள் நேற்று தொடங்கியது. குவாலிபையர்-1ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    பிளேஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி முன்னேறுமா? என்ற கேள்வி இருந்த நிலையில், தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஆர்சிபி தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், கொல்கத்தா அணி இறுதிப் போட்டியில் ஆர்சிபியை எதிர்கொள்வதை விரும்பாது என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வருண் ஆரோன் கூறியதாவது:-

    இந்தமுறை சாம்பியன் படத்தை வெல்ல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், போட்டி நடைபெறும் அன்றைய தினத்தில்தான் ரிசல்ட் முடிவு செய்யப்படும். உங்களுடைய அணி சிறந்ததா? அல்லது மோசமானதா? என்பது விசயம் அல்ல. ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு வர வேண்டும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விரும்பும் என நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்களின் உத்வேகம். ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கோப்பை தங்களுடைய என்று அவர்கள் நம்புவார்கள். யாரும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது.

    இன்னும் முக்கியமான போட்டிகள் உள்ளன. இறுதிப் போட்டிக்கான நெருக்கடி முற்றிலும் மாறுபட்டது. இறுதிப் போட்டிக்கு முன்னேறுவரை கொல்கத்தா விரும்பாது. ஏனென்றால், ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற விருபத்துடன் விளையாடி வருகின்றனர்.

    இவ்வாறு வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.

    ×