என் மலர்
வழிபாடு
- திருவாசகப் பாடல்கள் நிகரற்றவை- புண்ணியம் தருபவை.
- அர்த்தம் புரியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் படித்தால் சிவ பெருமானே நிச்சயம் நமக்கு அதற்கான அர்த்தத்தை புரிய வைப்பார்.
மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ளது ஒத்தக்கடை. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், திருமோகூர் கோவிலை கடந்து, சுமார் 20 கி.மீ. தொலைவு பயணித்தால், திருவாதவூர் எனும் திருத்தலத்தை அடையலாம். இந்த ஊரில்தான் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்தார். அவர் 'திருவாதவூரார்' என்றும் அழைக்கப்பட்டார். சிறு வயதிலேயே கல்வி, ஞானத்தில் சிறந்திருந்ததால், அவரை அமைச்சராக்கினார் பாண்டிய மன்னர்.
சோழநாட்டுத் துறைமுகங்களில் கப்பல்களில் வந்திருந்த குதிரைகளை வாங்கி வர திருவாதவூராரை பாண்டிய மன்னர் அனுப்பினார். அவர் புறப்பட்டு சென்றபோது, வழியில் திருப்பெருந்துறை தலத்தில் குருந்த மரத்தடியில் ஞானமே வடிவாய் அமர்ந்திருந்தவரை திருவாதவூரார் வணங்கி வழிபட்டார். அப்போது அங்கு அமர்ந்திருப்பது சிவன்தான் என உணர்ந்தார் திருவாதவூரார்.
அந்த சமயத்தில் வாதவூரார் பாடிய பாடல்களைக் கேட்ட சிவன், "உன் சொற்கள் மாணிக்கத்தை விட மதிப்புமிக்கவை. இனி நீதி மாணிக்கவாசகர் என்று அழைக்கப்படுவாய்" என்று சொல்லி மறைந்தார் சிவன். இதன் பின்னர் துறவியாக மாறினார் மாணிக்கவாசகர். வந்த வேலையை மறந்து, கொண்டு வந்த பொன் பொருட்களை திருப்பெருந்துறை ஆலய திருப்பணிகளுக்குச் செலவிட்டார்.
நாட்கள் கடந்தும் திரும்பாத மாணிக்க வாசகருக்கு மன்னர் ஓலை அனுப்ப, இறைவனைச் சரணடைந்தார் மாணிக்க வாசகர். அப்போது, "ஆடி மாதம் முடிவடைதற்குள் குதிரைகள் வந்து சேரும் என்று ஓலை அடி" என்ற அசரீரி எழ, அவ்வாறே செய்தார் மாணிக்கவாசகர். ஆடி மாதமாகியும் குதிரைகள் எதுவும் மதுரைக்கு வராததால், சந்தேகம் கொண்ட மன்னரும் மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்தார்.
வனத்தில் இருந்து நரிகளைக் குதிரைகளாக்கி மதுரைக்கு அனுப்பினார் சிவன். மாணிக்கவாசகரை விடுதலை செய்தார் மன்னார். அன்றிரவே குதிரைகள் நரிகளாக மாறி ஊளையிட்டன. இதை கண்ட பாண்டிய மன்னர் தன்னை மாணிக்கவாசகர் ஏமாற்றி விட்டார் என்று கடும் கோபம் கொண்டார். மாணிக்க வாசகரை வைகை நதியின்சுடு மணலில் நிறுத்தி மரணத்தண்டனை அளிக்க உத்தரவிட்டார். அப்போது வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
தவறை உணர்ந்த மன்னர் மாணிக்க வாசகரை அமைச்சர் பதவியில் மீண்டும் நியமித்தார். ஆனால் மாணிக்க வாசகர் அதை நிராகரித்து விட்டு சிதம்பரம் தலத்துக்குச் சென்றார். அங்கு தங்கி இறைவனை எண்ணி பாடல்கள் பாடினார். அதை ஒருவர் ஓலையில் எழுதினார். பின்னர் அவர் 'திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான்' என்று எழுதி ஓலைகளைக் கீழ் வைத்து மறைந்தார்.
இதன் மூலம் அந்தப் பாடல்களை சிவபெருமானே விரும்பி எழுதி கொடுத்தது என்பது உறுதியானது. இந்த பாடல்கள்தான் திருவாசகம் என்று அழைக்கப்படுகிறது.
திருவாசகப் பாடல்கள் நிகரற்றவை- புண்ணியம் தருபவை.
எந்த ஒரு சிவன் கோவிலுக்கு சென்றாலும் நம் அனைவருக்கும் நினைவில் வரும் பாடல், "நமச்சிவாய வாழ்க...நாதன் தாழ் வாழ்க... இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க" என்ற திருவாசகப் பாடல் தான். கேட்கும் போதும் படிக்கும் போதும் பக்தர்களின் மனங்களை மட்டுமின்றி, இறைவனின் உள்ளத்தையே உருக வைக்கும் இந்த திருவாசகம் பாடலை நமக்கு அருளியவர் மாணிக்க வாசகர்.
திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பார்கள். மாணிக்கவாசகர் சொல்ல சிவ பெருமானே தன்னுடைய கைப்பட எழுதிய பாடல் என்றால் அது எப்படிப்பட்ட அற்புதமான வரிகளாக இருக்க முடியும்?
திருவாசகம், வெறும் பாடல்கள் தொகுப்பு அல்ல; அது ஒரு பக்தனின் ஆழ்ந்த பக்தி உணர்வுகளின் வெளிப்பாடு. ஒவ்வொரு வரியும் சிவபெருமான் மீதான அன்பு, ஏக்கம், சரணாகதி, மற்றும் தத்துவ ஞானத்தை வெளிப்படுத்தும்.
இந்தத் தொகுப்பு சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கருத்துக்களை எளிமையாகவும், உருக்கமாகவும் எடுத்துரைக்கிறது. இறைவனை ஒரு நண்பனாக, குருவாக, காதலனாக, ஏன் ஒரு தாயாகக் கூடப் பாவித்து மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார்.
திருவாசகத்தின் தனிச்சிறப்பே அதன் ஆழ்ந்த அனுபவ வெளிப்பாடுதான். வெறும் பக்திப் பாடல்களாக மட்டுமின்றி, ஆன்மாவின் தேடலையும், இறைவனுடன் கலக்கும் அனுபவத்தையும் இது விவரிக்கிறது. சிவபெருமானின் கருணையையும், பக்தன் படும் பாட்டையும், இறுதியில் அடையும் பேரானந்தத்தையும் திருவாசகம் அழகாகச் சித்தரிக்கிறது. இதனால்தான் மாணிக்கவாசகரை வழிபட சொல்கிறார்கள்.
மற்ற நாயன்மார்களைப் போலன்றி, மாணிக்கவாசகரின் வாழ்க்கை சிவபெருமானுடன் நேரடியாக சம்பந்தப்பட்டது. சிவபெருமான் குருவாக வந்து அவருக்கு உபதேசம் செய்தது, நரிகளைக் குதிரைகளாக்கியது, இறுதியில் திருவாசகத்தை எழுதி வாங்கிக்கொண்டு மறைந்தது என அவரது வாழ்க்கை முழுவதும் சிவபெருமானின் திருவிளையாடல்கள் நிறைந்தவை. இவை அனைத்தும் மாணிக்கவாசகரின் சிறப்பம்சங்களாகும்.
திருவாசகத்திற்கு பொருள் என்ன என்று கேட்டதற்கு மாணிக்கவாசகர் அளித்த பதில், நடராஜரா என்பது தான். மாணிக்கவாசகர், சிவபெருமானுடன் சிதம்பரத்தில் ஜோதியாக ஐக்கியமானது ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் என புராணங்களில் சொல்லப்படுகிறது. இந்த நாளையே மாணிக்கவாசகர் குருபூஜை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மாணிக்கவாசகர் குருபூஜை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் சிவன் கோவில்களில் நடக்கும் மாணிக்கவாசகர் குருபூஜையில் கலந்து கொண்டு வழிபடலாம். அல்லது சிவ தரிசனம் செய்யலாம். திருநீறு பை, ருத்ராட்சம், திருவாசகர் புத்தகம் ஆகியன வாங்கி தானம் செய்யலாம்.
மாணிக்கவாசகர் குருபூஜையின் அன்று சிவ வழிபாட்டுப் பொருட்களை தானம் செய்வது, சிவ பக்தியைப் பரப்புவதற்கும், ஆன்மீக அறிவைப் பெருகுவதற்கும் வழிவகுக்கும். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல எண்ணங்களையும், நேர்மறை அதிர்வுகளையும் கொண்டு வரும். இது இறைவனுடன் நமக்கு இருக்கும் தொடர்பை அதிகப்படுத்தும் செயலாகும்.
அதுவும் சிவ பெருமானுக்கு விருப்பமான, சிவ அம்சமாக கருதப்படும் பொருட்களை தானமாக அளிப்பது சிவ பெருமானின் மனதை மகிழ்வித்து, அவரது அருளை விரைவாக பெற்றுத் தரும்.
மாணிக்கவாசகர் குருபூஜை அன்று முடிந்தவர்கள் திருவாசகத்தை முழுவதுமாக படிக்கலாம். அன்று முடியாவிட்டாலும் வாழ்நாளில் ஒருமுறையாவது திருவாசகத்தை முழுமையாக படிக்க வேண்டும். சிவனின் மீது பக்தியுடன் படித்தால் நிச்சயம் அதற்கான அர்த்தம் புரியும்.
அப்படி அர்த்தம் புரியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் படித்தால் சிவ பெருமானே நிச்சயம் நமக்கு அதற்கான அர்த்தத்தை புரிய வைப்பார். அவரே எழுதிய வரிகள் என்பதால், சிவனே குருவாக இருந்து நமக்கு திருவாசகத்திற்கு பொருள் சொல்வார்கள். சிவனுக்கு அருகிலேயே இருக்கும் உணர்வையும். நமக்குள் சிவன் இருக்கும் உணர்வையும் பெற வேண்டும் என்பவர்கள் நாளை மாணிக்கவாசகர் குருபூஜை நாளில் திருவாசகம் படிப்பது மிகவும் சிறப்பானதாகும். இது அளவற்ற புண்ணியத்தைத் தேடித் தரும்.
பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகமும் திருக்கோவையும் எட்டாம் திருமுறைகளாக விளங்குகின்றன. 32 ஆண்டுகளே வாழ்ந்த மாணிக்கவாசகர், ஆனி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் சிதம்பரம் தலத்தில் இறைவனோடு கலந்தார். இந்த நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் மாணிக்கவாசகரின் குரு பூஜை நடைபெறுகிறது.
திருவாதவூர் மாணிக்க வாசகர் கோவில் 92-ம் ஆண்டு ஆனி மகவிழா நாளை (29.6.2025) காலை 9 மணிக்கு நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. திருவாதவூர் வேதநாயகி சமேத திருமறைநாதர் கோவிலில் இருந்து மாணிக்கவாசக பெருமான் புறப்பாடாகி அவர் பிறந்த வீட்டிற்கு எழுந்தருகிறார். தொடர்ந்து மாணிக்கவாசக பெருமானுக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறும்.
மதுரையில் இருந்து திருவாதவூர் செல்ல பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து எண்: 66 பி, எச், ஜே. எம் ஆகிய பேருந்துகளும், மேலூரில் இருந்து திருவாதவூர் வழியாக திருப்புவனம் செல்லும் பேருந்திலும் (7, 7 ஏ, 7 சி) பயணிக்கலாம். ஒத்தக்கடையில் இருந்து மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுகிறது.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அலங்காரம்.
- ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாளுக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-14 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை நண்பகல் 1.18 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : பூசம் காலை 10.03 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அலங்காரம். சிதம்பரம், ஆவுடையார் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராமர் சிம்ம வாகனத்தில் வீதியுலா. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாளுக்கு திருமஞ்சனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பட்டர் பரங்கி நாற்காலியில் புறப்பாடு, கண்டனூர் ஸ்ரீ மீனாட்சியம்மன் பவனி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம்.
மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமான் ஸ்திர வார திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-நிம்மதி
மிதுனம்-பாராட்டு
கடகம்-அமைதி
சிம்மம்-நன்மை
கன்னி-லாபம்
துலாம்- செலவு
விருச்சிகம்-வெற்றி
தனுசு- அமைதி
மகரம்-பரிவு
கும்பம்-பணிவு
மீனம்-ஓய்வு
- வானர படையில் உள்ள நளன் தண்ணீரில் போடும் பாறைகள் மட்டும் மிதந்தன.
- அனுமன் எத்தனை முறை முயற்சி செய்தாலும் பாறைகளை தண்ணீரில் மிதக்க வைக்க முடியவில்லை.
சுக்ரீவரின் படைத்தளபதிகளில் ஒருவராக இருந்தவர் நளன். இவர் வானரப் படையில் சிறந்த போர் வீரராகவும் திகழ்ந்தார். வனவாசத்தின்போது சீதையை ராவணன் கவர்ந்து சென்று இலங்கையில் உள்ள அசோக வனத்தில் வைத்தான். இதனை அனுமன் மூலமாக அறிந்த ராமர், உடனே ராமேஸ்வரம் கடல் முனையை அடைந்து இலங்கைக்கு எப்படி செல்வது என்று யோசித்தார். கடல் மீது ஒரு பாலம் கட்டினால் மட்டுமே சீதை இருக்கும் இடத்துக்கு செல்ல முடியும் என்பதை உணர்ந்த ராமர், பாலம் கட்ட திட்டமிட்டார். சுக்ரீவனின் வானர படையின் உதவியுடன் பாலம் கட்டும் பணியை தொடங்கினார்.
வானர படைகள், பாறைகளை எடுத்து வந்து அனுமனிடன் கொடுக்க அனுமன் அதை கடலில் போட்டார். அந்த பாறைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. ஆனால் வானர படையில் உள்ள நளன் தண்ணீரில் போடும் பாறைகள் மட்டும் மிதந்தன. இதைக் கண்டு அனைவரும் திகைத்தனர். அனுமன் எத்தனை முறை முயற்சி செய்தாலும் பாறைகளை தண்ணீரில் மிதக்க வைக்க முடியவில்லை.
இதைப் பார்த்து கொண்டிருந்த லட்சுமணன் ராமரிடம், ''அண்ணா, அனுமன் உள்பட மற்ற வானரப் படைகள் போடும் எல்லா பாறைகளும் நீரில் மூழ்குகின்றன. ஆனால் நளன் போடும் பாறைகள் மட்டும் எப்படி மிதக்கின்றன. இதற்கு என்ன காரணம்'' எனக்கேட்டார்.
அதற்கு ராமர், ''ஒரு சமயம் வனத்தில் மாதவேந்திரர் என்ற மகரிஷி கடும் தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அவர் தண்ணீரில் மூழ்கி இறைவனை தியானித்தால் இறை அருள் அதிக பலன் தரும் என்பதால் தண்ணீரில் மூழ்கியபடி தவம் மேற்கொண்டார். அப்போது சிறுவயதில் இருந்த வானரமான நளன், அவர் மீது விளையாட்டுத்தனமாக கற்களை வீசி எறிந்தார். இதனால் கோபம் கொண்ட முனிவர், ''நீ எறியும் கற்கள் நீரில் மூழ்காமல் மிதக்கும்'' எனக் கூறி மீண்டும் தவத்தை தொடர்ந்தார். அப்போது அந்த மகரிஷி சாபமாக அளித்த வார்த்தை இன்று நமக்கு பாலம் கட்ட உதவியாக மாறி இருக்கிறது'' என்றார்.
நளனின் உதவியுடன் பாலம் சீக்கிரமாகவே கட்டப்பட்டது. பின்பு ராமர், ராவணனிடம் போர்புரிந்து சீதையை மீட்டார்.
- திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.
- கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-13 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவிதியை பிற்பகல் 2.06 மணி வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம் : புனர்பூசம் காலை 10.01 மணி வரை, பிறகு பூசம்.
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை
இன்றைய சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் தெப்பம். கண்டனூர்-ஸ்ரீமீனாட்சியம்மன் பவனி. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.
பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படை வீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம். தூத்துக்குடி ஸ்ரீபாலசுப்பிரமணியன், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-கடமை
மிதுனம்-சிறப்பு
கடகம்-புகழ்
சிம்மம்-கடமை
கன்னி-ஆதாயம்
துலாம்- கவனம்
விருச்சிகம்-மாற்றம்
தனுசு- உறுதி
மகரம்-உதவி
கும்பம்-நிறைவு
மீனம்-பண்பு
- கர்த்தர் எலியாவின் சத்தத்தை கேட்டு பிள்ளையினுடைய ஆத்துமா திரும்பி வர கட்டளையிட்டார்.
- நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தரை சந்திக்க அனுதினமும் நம்மை ஆயத்தப்படுத்துவோம்.
உயிர்த்த இயேசுவோடு வாழ்வை கொண்டாட நாம் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். கிறிஸ்துவின் நாமத்தை சொல்லியும் தீமையைவிட்டு விலகவில்லை என்றால், நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனிடத்தில் பங்கு இல்லை.
மரணத்தின் பிடியிலிருந்து விடுதலை
இஸ்ரவேல் நாட்டிலே ஆகாப் ராஜாவின் காலத்தில் நிலவிய பஞ்சத்தில் எலியாவை கர்த்தராகிய ஆண்டவர் கேரீத் ஆற்றங்கரையிலே காகங்களை கொண்டு போஷித்து வந்தார். (1 இராஜாக்கள் 17: 1-24).
காகங்கள் அவனுக்கு விடியற்காலம் மற்றும் சாயங்காலத்தில் அப்பமும், இறைச்சியும் கொண்டு வந்தன. தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரை குடித்தான். தேசத்தில் பஞ்சம் இருந்தபடியினாலும், மழை பெய்யாதபடியினாலும் சில நாட்களுக்குப் பின்பு அந்த ஆறு வற்றிப் போனது. பின்னர் கர்த்தர் எலியாவை சீதோனுக்கு அடுத்த அதாவது தீரு- சீதோன் பட்டணங்களுக்கு இடையே காணப்பட்ட சாறிபாத் என்ற கடற்கரை ஊருக்கு அழைத்து வந்தார். (1 இராஜாக்கள் 16:31).
அங்கே எலியாவை பராமரிப்பதற்கு ஒரு விதவையை ஏற்பாடு பண்ணினார். அந்தப்பெண் கர்த்தரின் வார்த்தையை நம்புகிறவர். அவளுக்கு ஒரு மகன். எலியா அவளை அணுகி எனக்கு அப்பமும், தண்ணீரும் கொண்டு வா என்று சொன்னபோது அவள், நானும் என் குமாரனும் இருக்கிற ஒரு பிடி மாவிலே அடை செய்து சாப்பிட்டு செத்துப் போக தக்கதாக விறகு பொறுக்க வந்திருக்கிறேன் என்றாள். கர்த்தருடைய வார்த்தையை நம்புகிற பெண்ணாக அவள் இருந்தபடியால் மரணத்தின் பிடியிலிருந்து அவளை விடுவிக்க எலியாவை சாறிபாத் ஊருக்கு அனுப்பினார். அங்கு அவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இவை நடந்த பின்பு வியாதியில் விழுந்து அந்த மகன் உயிரிழந்தான். அப்பொழுது அந்தப் பெண், 'தேவனுடைய மனுஷனே, என் அக்கிரமத்தை நினைக்க பண்ணவும், என் குமாரனை சாகப் பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர்' என்று கேட்டாள்.
சாறிபாத் விதவையைப் போலவே எலியாவும் சந்தேகப்பட்டு பஞ்சகாலத்தில் வாழ வழிகாட்டி ஆசீர்வதித்த கர்த்தர், சாவை அனுமதித்து துக்கத்தை வருவித்து விட்டார் என சந்தேகப்பட்டு விட்டான். உடனே எலியா கர்த்தரை நோக்கி, 'நான் தங்கிஇருக்க இடம் கொடுத்த இந்த பெண்ணின் மகனை சாகப் பண்ணினதினால் அவளுக்கு துக்கத்தை வருவித்தாரோ' என்று அந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வர விண்ணப்பம் பண்ணினான்.
அப்படியே கர்த்தர் எலியாவின் சத்தத்தை கேட்டு பிள்ளையினுடைய ஆத்துமா திரும்பி வர கட்டளையிட்டார். அந்தப் பையன் பிழைத்தான். இரண்டாவது முறையாக மரண சங்கிலியிலிருந்து அந்த குடும்பம் விடுவிக்கப்பட்டது. (1 இராஜாக்கள் 17: 24).
இயேசுவோடு நித்திய வாழ்வை கொண்டாட
கர்த்தருடைய வார்த்தையை பற்றிக்கொண்டு அவர் மேல் நம்பிக்கையாய் இருந்து நம்முடைய அக்கிரமங்களை அவரிடம் அறிக்கையிடும் போது, அவர் மரணத்திலிருந்து ஜெயம் பெற நம்மை ஆசீர்வதிக்கிறார். இதுதான் உயிர்த்த இயேசுவோடு வாழ்வை கொண்டாடுதலின் பங்கு.
ராஜாவாகிய யோசியா நியாயப்பிரமாண புத்தகத்தின் வார்த்தைகளை சாப்பான் வாசிக்க கேட்டு, தன்னைத்தானே கர்த்தரிடத்தில் தாழ்த்தினார். இதனால் தீர்க்கதரிசியாகிய உல்தாள் மூலம் (2 இராஜாக்கள்22:20) அவனுக்கு கிடைத்த கர்த்தருடைய வார்த்தை, "நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்வாய்". அதேபோல யோசியா ராஜா கர்த்தரின் நியாயத்தீர்ப்பு நாள் வருவதற்கு முன்னால் அதாவது, எருசலேம் நேபுகாத்நேச்சாரால் அழிக்கப்படுவதற்கு முன்னால் தன்னுடைய பிதாக்களுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டான் (2 இராஜாக்கள் 23:29,30). அதுபோல நாமும் இந்த உலகத்தின் நியாயத்தீர்ப்பு வரும் போது கர்த்தருடைய வருகையிலே கர்த்தருக்கு எதிர்கொண்டு போக (1 தெசலோனிகேயர் 4:15-18) நமக்கென்று கர்த்தர் ஆயத்தம் பண்ணி இருக்கிற ஸ்தலத்திலே (யோவான் 14:3) அவர் மறுபடியும் வந்து நம்மை சேர்த்துக்கொள்ள ஆயத்தப்படுவோம். மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம். ஆதியில் இருந்த அன்பை விட்டாய் என்று எபேசு சபைக்கு சொன்னது போல, (வெளிப்படுத்தல் 2:4) நம்மைப் பார்த்து சொல்லப்பட்டு விடாமல் விழித்துக்கொள்வோம்.
கடைசி எக்காளம் தொனிக்கும்போது நாம், கர்த்தரோடு என்றென்றைக்கும் ஜீவிக்க கூடிய சரீரமாக்கப்படுவதற்கு, அதாவது மறுரூபமாக்கப்படுவதற்கு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த ஓட்டத்திலே நீதியுள்ளவர்களாய், விசுவாசத்தை காத்துக் கொள்பவர்களாய் (2 தீமோத்தேயு 4) நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தரை சந்திக்க அனுதினமும் நம்மை ஆயத்தப்படுத்துவோம். பிறரையும் ஆயத்தம் பண்ணும் செயல்களில் ஈடுபடுவோம்.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-12 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை பிற்பகல் 3.22 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : திருவாதிரை காலை 10.44 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : மரண, அமித்யோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம்
இன்று சந்திர தரிசனம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் உற்சவம் ஆரம்பம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் தெப்பம். கண்டனூர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம்.
ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்ர ரத வல்லப பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஜெயம்
ரிஷபம்-நலம்
மிதுனம்-நன்மை
கடகம்-சாந்தம்
சிம்மம்-முயற்சி
கன்னி-ஈகை
துலாம்- பாசம்
விருச்சிகம்-நட்பு
தனுசு- விவேகம்
மகரம்-அமைதி
கும்பம்-போட்டி
மீனம்-மாற்றம்
- அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோவில், கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதற்காக நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வருகை தருகிறார்கள். அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. அதன்படி ஆனி அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே ஏராளமானோர் வாகனங்களில் ராமேசுவரம் வந்தனர். இன்று அதிகாலை அவர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். வட மாநிலத்தில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கடற்கரை மணலில் சிவலிங்கம் செய்து பின் அதற்கு பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர்.
பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோவில், கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராமேசுவரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
- கண்டனூர் மீனாட்சி அம்மன் உற்சவம்.
- சிதம்பரம் நடராஜர் தங்க ரதத்தில் பிட்சாடனராகக் காட்சி.
இந்த வார விசேஷங்கள்
25-ந் தேதி (புதன்)
* அமாவாசை.
* திருவள்ளூர் வீரராகவர் தெப்ப உற்சவம்.
* ஆவுடையார்கோவில், சிதம்பரம் தலங்களில் சிவபெருமான் திருவீதி உலா.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
26-ந் தேதி (வியாழன்)
* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் விழா தொடக்கம்.
* கண்டனூர் மீனாட்சி அம்மன் உற்சவம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
27-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் வருசாபிஷேகம்.
* ராமநாதபுரம் கோதண்ட ராமசுவாமி விழா தொடக்கம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
* சமநோக்கு நாள்.
28-ந் தேதி (சனி)
* ராமநாதபுரம் கோதண்டராமர் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.
* கண்டனூர் மீனாட்சி அம்மன் பவனி.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
29-ந் தேதி (ஞாயிறு)
* சதுர்த்தி விரதம்.
* மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு.
* திருக்கோளக்குடி ககோளபுரீசுவரர், கண்டதேவி சிவபெருமான் தலங்களில் விழா தொடக்கம்.
* சிதம்பரம், ஆவுடையார் கோவில் தலங்களில் சிவ பெருமான் திருவீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.
30-ந் தேதி (திங்கள்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ஆனி உற்சவம்.
* சிதம்பரம் நடராஜர் தங்க ரதத்தில் பிட்சாடனராகக் காட்சி.
* திருவில்லிபுத்தூர் பட்டர் அம்ச வாகனத்தில் பவனி.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தலங்களில் ஊஞ்சல் உற்சவம் ஆரம்பம்.
* கீழ்நோக்கு நாள்.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்.
- திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-11 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அமாவாசை மாலை 5 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : மிருகசீரிஷம் காலை 11.39 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று
இன்று சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். திருவள்ளூர் வீரராகவர் தெப்பம். சிதம்பரம், ஆவுடையார் கோவிலில் ஸ்ரீ சிவபெருமான் திருவீதியுலா. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு.
திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம். திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷணாழ்வாருக்கு நடையழக சேவை காண்பித்தருளல். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்காரம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-கீர்த்தி
ரிஷபம்-தாமதம்
மிதுனம்-சலனம்
கடகம்-வரவு
சிம்மம்-பரிவு
கன்னி-செலவு
துலாம்- பரிவு
விருச்சிகம்-நிம்மதி
தனுசு- வெற்றி
மகரம்-திடம்
கும்பம்-உழைப்பு
மீனம்-கடமை
- பித்ரு வழிபாட்டில் முக்கியப் பங்கு வகிப்பது கருப்பு எள்ளும் புனிதம் நிறைந்த தர்ப்பைப் புல்லும்தான்.
- அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு தவிர்ப்பது நல்லது.
சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது. நமது வேத சாஸ்திரங்கள் ஒரு வருடத்தில் மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக கூறுகின்றன. தமிழ் வருடப்பிறப்பு, சூரிய கிரகணம், அமாவாசை, மகாளய அமாவாசை உட்பட 96 தர்ப்பணங்களையும் ஒருவர் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்றும் அந்த சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன. அந்த வகையில் நாளை (புதன்கிழமை) ஆனி மாத அமாவாசை வருகிறது.
ஆனால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.56 மணிக்கு அமாவாசை தொடங்குகிறது. எனவே அமாவாசை நேர இரவு வழிபாட்டை இன்றிரவு செய்யலாம்.
நாளை அதிகாலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபம் ஏற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்துவிட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு தவிர்ப்பது நல்லது. தர்ப்பையில் படும் தர்ப்பணங்களை ஸ்வதா தேவி எடுத்துச் செல்வதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
பித்ரு வழிபாட்டில் முக்கியப் பங்கு வகிப்பது கருப்பு எள்ளும் புனிதம் நிறைந்த தர்ப்பைப் புல்லும்தான். இந்த இரண்டுமே மிக உயர்ந்த சக்தி கொண்டவை. எள் என்பது மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாகும். தர்ப்பணம், சிராத்தம் செய்யும்போது கருப்பு எள்ளை பயன்படுத்தும்போது பித்ருக்கள் முழு திருப்தி அடைகிறார்கள் என்பது ஐதீகம்.
தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் ஆனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் அல்லது எலுமிச்சை பழம் வாங்கி, அதன் மீது கற்பூரம் கொளுத்தி உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய பூசணிக்காயை உடைத்தும், எலுமிச்சம் பழத்தை நசுக்கியும் திருஷ்டி கழித்திட வேண்டும்.
நாளைய அமாவாசைக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்த நாள் ரொம்ப விசேஷமான நாள். சாபங்களையும் பாபங்களையும் துடைத்துத் தூய்மையாக்கும் நாள்.
சில குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக கொடிய வினைகள் சூழ்ந்து நிம்மதி குறைந்து போகும். எல்லா சுப காரியங்களிலும் தடைகள் ஏற்படும் குடும்பங்களில் விபத்துக்களும் அகால மரணங்களும்கூட நிகழும் இதுபோன்ற கொடிய பாவங்கள் தீர பிதுர் தேவதைகளை வணங்க வேண்டும்.
நாளை காலதேவனின் 3-வது ராசியில், (சகோதர ராசி) அமாவாசை நிகழ்வதால், அவசியம் நீத்தார் வழிபாடு நடத்த வேண்டும். அதன் மூலமாக குடும்பத்தில். சகோதர ஒற்றுமை பெருகும். அதற்கு காரணம், இன்று செவ்வாய்க்குரிய மிருகசீரிஷம் நட்சத்திரம். அதில் சந்திரன் பிரவேசிக்கும்பொழுதுதான் அமாவாசை நிகழ்கிறது. செவ்வாய்க்கிழமை சகோதரகாரகன் அல்லவா. எனவே நாளை செய்யும் முன்னோர் வழிபாடு குடும்ப ஒற்றுமையை ஓங்க செய்யும்.
வசதி வாய்ப்பு இருப்பவர்கள் ஒரு பெரியவரை அழைத்து வீட்டில் சாப்பாடு போட்டு உங்களால் இயன்ற தட்சணை தாருங்கள். முன்னோர்கள் ஆசி கட்டாயம் கிடைக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் ஆனி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் 12 ஆண்டுகள் தர்ப்பணம் கொடுத்த பலன் நமக்கு கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் திருவாதிரை நட்சத்திர நேரம் நாளை (புதன் கிழமை) பகல் 11.39 மணிக்குத்தான் தொடங்குகிறது. அதிலிருந்து மாலை 5 மணி வரை நடத்தப்படும் முன்னோர் வழிபாடு சிறந்த பலன்களைத் தரும். மேலும் பித்ரு சாபம், பித்ரு தோஷம் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் இந்த நாளில் புனித நீராடுவது, மந்திர ஜபம் செய்வது, தானம் செய்வது உள்ளிட்ட அனைத்துமே பல மடங்கு அதிக பலனை தரக் கூடியதாகும்.
சிவ பெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்துடன் இணைந்து அமாவாசை என்பதால் இந்த நேரத்தில் செய்யப்படும் வழிபாடு மற்றும் தானங்கள் இரண்டு மடங்கு பலனை தரக் கூடியதாகும்.
நம் ஜாதகத்தில் கிரக கோளாறுகள், பித்ரு சாபங்கள் ஆகியவை நீங்க, சில குறிப்பிட்ட பொருட்களை தானம் வழங்குவது மிகவும் முக்கியமானதாகும். ஆஷாட அமாவாசை என்கிற இந்த ஆனி மாத அமாவாசையில் ஏழைகளுக்கு உணவு மற்றும் பணத்தை தானமாக வழங்குவது மிகவும் சிறப்பானதாகும்.
மேலும் நாளை கோதுமை மற்றும் அரிசியை தானமாக வழங்குவது சூரியன் மற்றும் சந்திரனின் ஆசிகளை பெறுவதுடன், ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களின் பலத்தையும் அதிகரிக்கச் செய்யும். ஆயுள், ஆரோக்கியம், அழகு, உயர் பதவி, உடல் வலிமை, தலைமை பதவி, அதிகாரம், செல்வம், மனநிறைவு ஆகியவற்றை தருவது இந்த இரண்டு கிரகங்களும் தான்.
நாளை முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் சிக்கல்கள் விலகி சுபிட்சங்கள் பெருகும். திருமணம் காலதாமதமான நிலையில் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும்.
- அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து பல வரங்களை பெற்றார்.
- வைகாசி விசாகம் அன்று ஊர் மக்கள் ஒன்றுகூடி சிவனையும், பார்வதி தேவியையும் மன்றாடி வணங்கினர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் பச்சூரில் உள்ள நூலாற்றங்கரையில் அமைந்துள்ளது, சித்தி காளியம்மன் கோவில். இந்த ஆலயம் நோய் நொடிகள், பில்லி சூனியம் போக்கி, குழந்தை பாக்கியம், திருமண யோகம், அருளும் தலமாக விளங்குகிறது.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து பல வரங்களை பெற்றார். இதனால், தானே அனைவரிலும் மேலானவன் என்ற ஆணவம் கொண்டார். ஒரு சமயம் பார்வதி தேவியை சுக்ராச்சாரியார் சந்தித்தார். அப்போது ''உன்னைவிட நானே பெரியவன். அதனால் நீ என்னை வணங்க வேண்டும்'' என்று கட்டளையிட்டார்.
அதற்கு பார்வதி தேவி, ''உன்னை நான் வணங்க முடியாது'' என மறுத்தார். இதனால் கோபம் கொண்ட சுக்ராச்சாரியார், ''உன்னை வணங்கும் பூலோக மக்களை நான் கொன்று குவிப்பேன். அப்போது நீ என்னை வணங்குவாய்'' என சபதமிட்டார். தனது சீடரான அசுரனை பூலோகம் அனுப்பி, காலரா, அம்மை போன்ற தீவிரமான நோய்களை மக்களுக்கு ஏற்படுத்தினான். இதனால் கடும் அவதியுற்று பலபேர் மாண்டனர்.
இதையடுத்து வைகாசி விசாகம் அன்று ஊர் மக்கள் ஒன்றுகூடி சிவனையும், பார்வதி தேவியையும் மன்றாடி வணங்கினர். அன்று இரவு காத்தான் என்பவரது கனவில் தோன்றிய பார்வதி தேவி, ''என்னை நூலாற்றங்கரையில் காளியாக பிரதிஷ்டை செய்யுங்கள். நான் மக்களை காப்பேன்'' என்றார். இதையடுத்து காளியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்பு காளியம்மன் அசுரனை வதம் செய்தார். மக்களும் நோய் நொடியில் இருந்து விடுபட்டு நிம்மதி அடைந்தனர். அதன்பின் மக்களின் வேண்டுகோளின்படி இத்தலத்திலேயே காளியம்மன் அருள்பாலித்து வருகிறார்.
கோவில் அமைப்பு
கோவில் ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைந்துள்ளது. கோவில் உள்பிரகாரத்தில் மூல விக்ரமாக சித்தி காளியம்மன் அருள்பாலிக்கிறார். பரிவார மூர்த்திகளாக விநாயகர், சிவன், பெரியாட்சி, காத்தவராயன், பொம்மி, ஆரியமாலா ஆகியோர் காட்சி தருகின்றனர். வெளிபிரகாரத்தில் பிள்ளையார், ராகு, கேது, ஐந்து தலை நாகம் அமைந்துள்ளன. இத்தலத்தின் தல விருட்சமாக அரசமரம், வேம்பு, வன்னி ஆகியன உள்ளன.
வழிபாடு
மாதந்தோறும் பவுர்ணமி பூஜையும், அன்னதானமும் நடைபெறும். ஆடி, தை மாதத்தில் பெண்கள் விளக்கு பூஜையும் நடைபெறுகின்றது. ஆடிப்பூரம், கார்த்திகை தீப திருவிழா, கன்னி பொங்கல் திருவிழா, மார்கழி மாதம் அதிகாலை பூஜை, ஆடி மாதம் கஞ்சி ஊற்றுதல், வைகாசி மாதம் 5 நாட்கள் அசுர சம்ஹார பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பூச்சொரிதல், சந்தன காப்பு அலங்காரம், மாவிளக்கு பூஜை, பாலாபிஷேகம், அம்மன் திருவீதி உலா, ஊஞ்சல் உற்சவம், காளி படையல், காத்தவராயனுக்கு படையல் போன்ற நிகழ்ச்சிகளும் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.
அரச மரம், வேப்ப மரத்துடன் கூடிய ராகு, கேது பகவான் அமைந்துள்ளதால், திருமணம் யோகம், குழந்தை பாக்கியம் வேண்டி வருபவர்கள் இங்குள்ள மரத்தை சுற்றி வருகிறார்கள். நோய், நொடியில் இருந்து விடுபட வேண்டி வருபவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும், திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வணங்கிவிட்டு அன்னதானம் அருந்திவிட்டு செல்கிறார்கள்.
அமைவிடம்
காரைக்கால்-திருநள்ளார் மெயின்ரோட்டில் உள்ளது பச்சூர் கிராமம். இங்கு நூலாற்றங்கரையில் அமைந்துள்ளது சித்தி காளியம்மன் கோவில்.
- சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-10 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தசி இரவு 6.56 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம் : ரோகிணி நண்பகல் 12.52 மணி வரை பிறகு மிருகசீரிஷம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு. சிதம்பரம், ஆவுடையார் கோவில் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீஆண்டாளுக்குத் திருமஞ்சனம்.
திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித்தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்த நாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இரக்கம்
ரிஷபம்-இன்பம்
மிதுனம்-புகழ்
கடகம்-பக்தி
சிம்மம்-மேன்மை
கன்னி-பெருமை
துலாம்- நிம்மதி
விருச்சிகம்-நிறைவு
தனுசு- கண்ணியம்
மகரம்-ஆர்வம்
கும்பம்-ஆதரவு
மீனம்-உழைப்பு






