என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சனிபிடித்தவன் சந்தைக்கு போனாலும் கந்தலும் அகப்படாது என்பார்கள்.
    • சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட மக்களிடம் பிரபலமானவர்.

    சனிபிடித்தவன் சந்தைக்கு போனாலும் கந்தலும் அகப்படாது என்பார்கள். இப்படி சனியை பலகோணங்களில் வசை பாடினாலும் அவரின் மகத்துவம் சிறப்பானது. சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட உலகத்து மக்களிடம் பிரபலமானவர்.

    குரு கிரகத்திற்கு அடுத்த கிரகம் சனி, குறுக்களவு உத்தேசமாக 73 ஆயிரம் மைல். குமரிமாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையர் கோவிலில் கல்சிலையாக தூணில் பெண்உருவில் காட்சி தருகிறார். நெல்லையை அடுத்த கருங்குளத்தில் சனி பகவான் நீலாவுடன் அமர்ந்துள்ளார்.


    மனித உடலில் தொடைகளுக்கு உடையவர், குடல் வாதநோய் இவரால் ஏற்படும்,

    மேலும் ஹிரண்யா, முதுகு வலி, விரைவீக்கம், முடக்கு வாதம் யானைக்கால், பேய்தொல்லை, மூலநோய்.

    மனதளர்ச்சி இவையும் இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்நோய் பிடித்தவர்கள் சனியை வணங்குவதால் நோயின் வேகம் வெகுவாக தணியும்.

    சனி ஜாதகத்தில் 3,6,10,11-ல் இருந்தால் நிலபுலம் வாங்குதல், வீட்டு வசதி, விவசாயத்தில் ஈடுபாடு, உத்யோகம், வருவாய் பெரியோர் ஆதரவு தலைமை தாங்கும் பொறுப்பு இவையாவும் சுலபத்தில் வந்து விடும்.

    8-ம் இடத்து சனி, தொல்லைகள் அளித்தாலும் ஆயுளை அதிகரிக்கச்செய்வார். ரேகை சாஸ்திரத்தில் நடுவிரலுக்கு நேர் கீழ்பாகம் உள்ள சனி மேட்டில் அதிக ரேகைகள் செங்குத்தாக காணப்பட்டால் ஒன்றல்ல பல வீடுகள் சுலபமாக அவர்களை நாடிவரும்.

    12-ல் சனி இருக்க பிறந்தோர் வாழ்க்கைத் துணைக்கு வேட்டு வைக்கும் சுபாவம் நிலைக்கும்.

    ஊதாரித்தனம் வந்த வருமானம் நாலாவிதமாக தீய வழியில் செல விடுதல் போன்றவை நிகழும்.


    பெருவிரலை அடுத்த சுக்கிரமேட்டில் பலவித குறுக்கு கோடுகள் அடியில் காணப்பட்டால் சனிபாடாய்படுத்தப் போவதற்கான அறிகுறி என உறுதியாக நம்பலாம்.

    4-ல் சனி அன்னைக்கு அற்ப ஆயுள், கெட்ட நண்பர்கள் சேர்க்கை, வேண்டாத வம்பில் நம்மை இணைப்பது நிகழும்.

    சனிபகவான் ஜாதகத்தில் சீராக அமைந்திந்தால் இரும்பு, மெஷினரி, இரும்பு தொழிற்சாலை, தோல், சிமென்ட் ஏஜென்ட்., தயாரிப்பு, கரும்பலகை, ரோஸ்உட், நல்லெண்ணை மொத்த வியாபாரம் மற்றும் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டால் வெற்றிதரும்.

    சனியன்று சந்திராஷ்டம தினமாக மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு அமையப்பெற்றால் அன்று கண் பார்வைக்காக அறுவை சிகிச்சை செய்தல் கூடாது.

    • நாகங்களுக்கு பால் - பழம் படைப்பதால் நாகதோஷம் விலகும்.
    • கோவில் இருக்கிற இடம் சங்கரநயினார்புரம் என அழைக்கப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ளது, பேய்குளம் கிராமம். இது முற்காலத்தில் பெரும் காடாக இருந்தது. இந்த வழியாக வரும் வழிப்போக்கர்கள் இவ்விடத்தில் தங்கவே அஞ்சி நடுங்கினர்.

    தற்போது பேய்குளம் பஜார் இருக்கும் இடம், இருண்ட காடாகவும், நுழைய முடியாத அளவுக்கு நெருக்கமான அதிக மரங்கள் கொண்ட இடங்களாகவும் இருந்தது. இதனால் மதிய வேளையில் கூட இவ்விடம் இருண்டு, பேய் குடிகொண்டிருக்கும் இடமாக தோன்றிய காரணத்தினால் 'பேய்குளம்' என பெயர் பெற்றது.

    இந்த பகுதியில் பஞ்ச தலங்களில் ஒரு தலமான கட்டாரி மங்கலம் நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலைக் கட்டிய வீரபாண்டியன் என்ற மன்னன், ஆலயத்தை கட்டி முடித்ததும் கொடிமரம் நடுவதற்காக யாகம் ஒன்றை செய்தான்.

    அப்போது வேதவிற்பன்னர்கள், ஐந்து தேவதைகளை அழைத்து கொடிமரத்தில் அமர வைத்தனர். ஊர்மக்கள் கூடி கொடிமரத்தை கோவிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது எங்கள் ஊருக்கு காவல் தெய்வமாக இந்த தேவதைகளும் இடம்பெற வேண்டும் என்று பக்கத்து ஊர் மக்கள் கேட்டுக்கொண்டனர். அதோடு அவர்கள் அந்த தேவதைகளை அழைத்துப் போய் தங்கள் ஊர்களில் காவல் தெய்வமாக குடிவைத்துக்கொண்டார்களாம்.

    கட்டாரிமங்கலம், அம்பலச்சேரி, புளியங்குளம், கருங்கடல், பேய்குளம் ஆகிய ஐந்து கிராமங்களில் தான் அந்த தேவதைகள் குடிபுகுந்தன. அதன்பிறகு வேதவிற்பன்னர் அந்த தேவதைகளை கொடிமரத்துக்கு வர எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் அந்த தேவதைகள் கொடிமரத்திற்கு வர மறுத்தனர்.

    தங்களை விரும்பி அழைத்த மக்களின் ஊருக்குச் சென்று, அந்த ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக அமர்ந்து கொண்டனர். எனவே தேவதை இல்லாத கொடிமரத்தை கோவிலில் நாட்டவில்லை. ஆகவே கட்டாரிமங்கலம் நடராஜர் கோவில் கொடிமரம் இன்றியே காணப்படுகிறது.

    பேய்குளம் தேவதை குடிகொண்ட இடமாக மாறிய காரணத்தினால் இவ்வூர் காடு அழிந்து நகரமாக மாறிவிட்டது. தமிழ் கடவுள் முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சென்று வழிபடும் பக்தர்கள், அக்காலங்களில் பாத யாத்திரையாக செல்வார்கள்.

    எனவே அவர்கள் தங்குவதற்காக வழி நெடுகிலும் அன்னதான சத்திரங்கள் அமைத்தனர். பொதிகைமலை அடிவாரத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாத யாத்திரீகர்கள் தங்குவதற்காக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக மார்த்தாண்டன் என்ற ஒரு சிவ பக்தர் இந்த பகுதியில் ஒரு மடம் அமைத்தார். அந்த மடத்தில் சில பசுக்களையும் பராமரித்து வந்தனர். அதனால் இந்த மடம் 'பசு மடம்' என்று அழைக்கப்பட்டது.


    பின்னாளில் இங்கு வந்து தங்கிய சிவனடியார்களில் ஒருவர் இங்கு சிவபூஜை செய்து வந்தார். ஆண்டு தோறும் ஆடி தபசு காட்சியை காண சங்கரன்கோவில் சென்று வருவார். வயதான காரணத்தினால் அவரால் சங்கரன்கோவில் செல்ல இயலவில்லை. அதனால் மிகுந்த வருத்தத்தில் சங்கரலிங்க சுவாமியையும், கோமதி அம்மாளையும் நினைத்து சிவசிந்தனையில் அமர்ந்து தியானம் செய்தார்.

    அதன் பலனாக சங்கரன்கோவிலில் நடந்த தவசுக் காட்சியானது இவ்வூரில் இருந்த அவருக்கு தெரிந்தது. இதனால் ஆனந்தம் அடைந்தார். 'தென்னகத்தில் இறைவன் தபசு காட்சி தந்த இந்த இடம் அல்லவா சின்ன சங்கரன்கோவில்' என்று எண்ணினார்.

    இறைவனிடம் 'தனக்கு காட்சி தந்தது போலவே, இங்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் காட்சி தரவேண்டும்' என்று கோரினார். இறைவனும் 'அவ்வாறே ஆகட்டும்' எனக் கூறி மறைந்தார்.

    இதையடுத்து அந்த சிவனடியார், இங்கு சுவாமி மற்றும் அம்பாளை பிரதிஷ்டை செய்தார். ஆடி மாதம் தோறும் இங்கும் ஆடி தபசு காட்சி மிகச்சிறப்பாக நடைபெற வழி ஏற்படுத்தினார்.

    சங்கரன்கோவில் சென்று காட்சி காண முடியாத பக்தர்கள், இங்கேயே ஆடிதபசு காட்சியை கண்டு மகிழ்ந்தனர். அதன்பின் இந்த ஆலயத்தை வழிபட்ட சில பக்தர்கள், காசி விஸ்வநாதரைப் போன்று சிறிய லிங்கத்தையும் சிவ ஆகம விதிப்படி இங்கே பிரதிஷ்டை செய்தனர்.

    ஆலயத்தையும் சிறப்பான முறையில் அமைத்து, கருவறையில் கிழக்கு நோக்கி சங்கரலிங்க சுவாமியையும், அர்த்த மண்டபத்தில் தெற்கு நோக்கி கோமதி அம்பாளையும் அமைத்தனர்.


    இந்த மண்டபத்தில் நடராஜப் பெருமாள், சிவகாமி அம்மாள், ஐம்பொன்னால் ஆன மாணிக்கவாசகர், அதிகார நந்தி உள்ளது.

    முதல் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், வள்ளி -தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், துர்க்கை அம்மன் மற்றும் பைரவர் போன்ற பரிகார தேவதைகளும் உள்ளனர்.

    ஆலய பிரகாரத்தில் வேம்பு உள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனடியில் புற்று மற்றும் சாஸ்தா சன்னிதி இருக்கிறது. இவ்விடத்தில் நாகங்களுக்கு பால் - பழம் படைப்பதால் நாகதோஷம் விலகும். இத்திருக்கோவிலில் தல விருட்சம், வில்வ மரம் ஆகும்.


    இந்த கோவில் இருக்கிற இடம் சங்கரநயினார்புரம் என அழைக்கப்படுகிறது. கூட்டம் பெருக பெருக ஒவ்வொரு வருடமும் ஆடித்தபசு 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மண்டகப்படியும், அருகில் உள்ள ஊர்களுக்கு வழங்கப்படும்.

    குருகல்பேரி, பெருமாள்குளம், சாலைப்புதூர், தேர்க்கன்குளம், வீராக்குளம், ஸ்ரீவெங்கடேசபுரம், பழனியப்பபுரம், கோமநேரி, சங்கரநயினார்புரம், மீரான்குளம் ஊர் பொதுமக்கள் இந்த மண்டகப்படியை நடத்தி வருகிறார்கள்.

    பேய்குளம் ஊரின் மேல் புறம் உள்ள பிள்ளையார் கோவிலில் அம்மன் தபசு இருப்பார். இதையொட்டி அம்மன் காலை 10.15-க்கு தபசுக்கு புறப்படுவார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சீர்வரிசையுடன் அம்பாளை அழைக்க புறப்படுவார்.

    அம்பாளை அழைத்துக் கொண்டு வரும் சுவாமிக்கு, பேய்குளம் பஜாரில் மக்கள் வரவேற்பளிப்பர். அப்போது அப்பகுதியில் விளையும் கடலை, உளுந்து, பருத்தி போன்ற விளை பொருட்களை சந்தோஷமாக வீசி மகிழ்வார்கள்.

    இதனால் அடுத்த ஆண்டு விளைச்சல் மிக அதிகமாகும் என விவசாயிகளுக்கு நம்பிக்கை. இரவு 8.30 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் பெண்கள் மாவிளக்கேற்றி சிறப்பாக வழிபாடு செய்கிறார்கள்.

    இத்திருக்கோவிலில் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு வைத்து திருமணம் புரியும் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ்வர் என்பது நம்பிக்கை.

    முதலில் மடமாக இருந்த கோவிலில் பின் கருவறை மட்டும் கட்டப்பட்டது. அதன் பிறகு கும்பாபிசேகத்தின் போது இரண்டாவது பிரகாரத்தில் புதிதாக மகா மண்டபமும், அதில் கொடிமரம், நந்தி, பலிபீடம், நவக்கிரகம் மற்றும் ஆஞ்சநேயர் சன்னிதி, பைரவர் சன்னிதி, சாஸ்தா, பூதத்தார் திருக்கோவில் கல்யாண மண்டபம் போன்றவையும் உள்ளன.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    நாங்குநேரியில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் பேய்குளம் உள்ளது. திருநெல்வேலி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதியில் இருந்து பஸ் வசதி உண்டு.

    • புதன் கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள பதவி உயர்வு கிடைக்கும்.
    • பிள்ளைவரம் கிடைக்க சனிக்கிழமை பள்ளியறை பூஜையில் கலந்துகொள்ள வேண்டும்.

    சிவாலயங்களில் இரவு நடை சாத்தும் முன்பாக, சுவாமி மற்றும் அம்பாளை பள்ளியறை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடி பூஜிப்பார்கள். இதனை பள்ளியறை பூஜை' என்பார்கள். தமிழ்நாட்டின்

    44 ஆயிரம் பழமையான சிவாலயங்களில், 36 ஆயிரத்திற்கும் அதிகமான ஆலயங்களில் சுமார் 200

    ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பள்ளியறை பூஜை நடைபெற்று வந்துள்ளது. இப்போது மிகக்குறைவான சிவன் கோவில்களில்தான் இந்த பள்ளியறை பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியறை பூஜையின் மகத்துவத்தை இங்கே பார்ப்போம்.


    பிரிந்த வாழ்க்கைத் துணை சேரவும், காணாமல் போன துணைவர்கள் திரும்பி வரவும் அசுபதி நட்சத்திரம் சேர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும்.

    திங்கட்கிழமை பள்ளியறை பூஜையில் பங்கேற்போர் மகத்தான திட்டங்களை செயல்படுத்துவர். ஆயில்யம், கேட்டை, மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் ஒரு வருட காலம் செவ்வாய் தோறும் இந்த பூஜையில் பங்கேற்றால் விரைவில் திருமணம் கைகூடி வரும்.

    புதன் கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள பதவி உயர்வு கிடைக்கும். அனைத்து விதமான சித்திகளும் கிடைக்க, அனுஷம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும்.

    கணவருடைய நீண்ட கால நோய் தீர விரும்பும் மனைவிகள், வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையில் பங்கேற்கலாம். பிள்ளைவரம் கிடைக்க சனிக்கிழமை நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொள்ள வேண்டும்.

    பள்ளியறை பூஜைக்கு பால், நைவேத்தியங்கள் கொடுப்பவர்களுக்கு, ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த குழந்தை பிறக்கும். பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்று முடிவில் பசுவுக்கு பழங்கள் கொடுத்து வந்தால், அவர்களுக்கு சுகப்பிரசவம் நிகழும்.

    குழந்தையும் இறை சிந்தனையுடன் பிறக்கும். பள்ளியறை பூஜையிலும், அதன் நிறைவுப் பகுதியிலும் அன்னதானம் செய்பவர்களுக்கு, தொழில் அமோக வளர்ச்சி காணும்.

    பள்ளியறை பூஜைக்கு எண்ணெய், நெய் தொடர்ந்து தருபவர்களுக்கு முதுமைக் காலத்தில் கண் சார்ந்த வியாதிகள் வராது. வெகு காலமாக திருமணம் நடக்காமல் இருக்கும் இளைஞர்களும், இளம்பெண்களும் சுமார் ஒரு வருட காலம் இந்த பள்ளியறை பூஜையில் பங்கேற்று இறைவனை வழிபட்டால், இனிமையான மண வாழ்க்கை அமையும்.

    வேலை அல்லது தொழிலில் இருக்கும் மந்தநிலை அகல, ஒரு வருட காலம் பள்ளியறை பூஜையில் பங்கேற்பது நல்லது.

    பள்ளியறை பூஜை நடைபெறாத ஆலயங்களில் பள்ளியறை கட்டுவதும், மீண்டும் பள்ளியறை பூஜையைத் தொடங்க முயற்சி மேற்கொள்வதும் கோடி புண்ணியத்தைத் தரும்.


    தன் கருவறையில் பல்லக்கில் புறப்படும் சிவபெருமானை, பக்தர்கள் பலரும் சுமந்து செல்வார்கள். அப்போது சிவபுராணம், பதிகங்கள் பாடுவர். பள்ளியறை முன்பாக வரும் சிவனை, அம்பாள் திருப்பாதங்களுக்கு பூஜை செய்து அழைத்துச் செய்வார்.

    பின்னர் சுவாமி- அம்பாளுக்கு பால், பழங்கள் நைவேத்தியமாக வைத்து, ஊஞ்சல் சேவை நடத்தி, பாசுரங்கள் பாடி திருக்கதவுகள் மூடப்படும். இந்த பள்ளியறை பூஜையானது சுமார் அரை மணி நேரம் வரை நடைபெறும்.

    இந்த பூஜையை காண்போருக்கு புண்ணியமும், வளமான வாழ்வும் அமையும். பூஜைக்கு ஈசனைச் சுமந்து வருவோர் மறுபிறவியில் கல்விக்கும், செல்வத்திற்கும் அதிபதியாவார்கள் என்பது ஐதீகம்.

    • இன்று பிரதோஷம். மாத சிவராத்திரி.
    • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-13 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திரயோதசி இரவு 9.23 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: சதயம் இரவு 11.01 மணி வரை பிறகு பூரட்டாதி

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று பிரதோஷம். மாத சிவராத்திரி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் விடையாற்று. திருவாரூர் ஸ்ரீ தியாகேசர் பவனி. தண்டியடிகள் நாயனார் குரு பூஜை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சுவாமி அம்பாள் மாலை ரிஷப வாகனத்தில் பவனி. ஆலங்குடி ஸ்ரீ குருபக வான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக் கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-பயணம்

    கடகம்-செலவு

    சிம்மம்-வரவு

    கன்னி-சுபம்

    துலாம்- உறுதி

    விருச்சிகம்-ஈகை

    தனுசு- மாற்றம்

    மகரம்-சாந்தம்

    கும்பம்-அன்பு

    மீனம்-ஆசை

    • சனிப் பிரதோஷம் மிக மிக விசேஷமானது.
    • எள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

    பிரதோஷம் என்றால் என்ன? பிரதோஷ காலம் என்பது - வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரு காலங்களிலும், "திரயோதசி திதி" வருகிறது அல்லவா! இவை சனிக் கிழமைகளில் வருமாயின் சனி பிரதோஷம் என்பர். இது, கிருஷ்ணபட்ச திரியோதசி எனின் மகாப் பிரதோஷம் என வழங்கப்படும்.


    பிரதோஷ கலம் பரமேஸ்வரனை வழிபட உகந்த காலம் ஆகும். "திருப்பாற்கடலில் பொங்கி வந்த ஆலகால விஷத்தை அமரர்களுக்கும் அடியார்களுக்கும் எவ்வித தோஷமும் ஏற்படா வண்ணம் வேண்டி, சிவபெருமான் பருகிய வேளை தான் பிரதோஷ வேளை" ஆகும். அவ்வாறு பாம்பணிந்த பரமன் நஞ்சுண்ட நாள் சனிக்கிழமை தான். எனவே சனிப் பிரதோஷம் மிக மிக விசேஷமானது ஆகும்.

    இது போல திங்கட்கிழமை வரும் திரயோதசியை "சோம பிரதோஷம்" என்றும், "செவ்வாய் பிரதோஷம்" என்றும், வியாழக்கிழமைகளில் வரும் திரயோதசியை "குரு பிரதோஷம்" என்றும் கூறுவது மரபு.

    திரயோதசி தினத்தன்று அதிகாலை எழுந்து நீராடி நித்ய பூஜையில் பக்தியோடு ஈடுபட்டு உபவாச மிருந்து சனி பகவானை ஆத்ம சுத்தியுடன் ஆராதித்து எள் முடிச்சுடன் நல்லெண்ணைய் விளக்கேற்றி எள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

    மாலையில் சிவாலயம் சென்று அங்கு நடைபெறும் பிரதோஷ கால பூஜையில் கலந்து கொண்டு சிவபெரு மானை உளமாற ஆராதிக்க வேண்டும். அன்றைய தினம் மௌன விரதமிருத்தல் மிக விசேஷமானது ஆகும்.

    பிரதோஷ விரதமிருந்து சனீஸ்வர பகவானையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் நமது ஈடுஇணையற்ற பக்திக்கு திருவுள்ளம் கசிந்து சிவபெருமான் சனீஸ்வர பகவான், நந்திதேவர், முருகன், விநாயகர் போன்றோர் சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வும் தகமை சால் சிவஞான பக்தியும், புத்தியும் அளித்து சர்வ மங்களமுடன் வாழ அருள்பாலிப்பர்.

    • ஒன்பது கிரகங்களில் அனைவரும் பயப்படக்கூடிய கிரகம் சனி.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள்.

    ஒன்பது கிரகங்களில் அனைவரும் பயப்படக்கூடிய கிரகம் சனி. ஜாதகரீதியாக இருந்தாலும் சரி, தசாபுக்தி கிரக பெயர்ச்சிகள் இப்படி எதனால் சனிதோஷம் ஏற்பட்டிருந்தாலும் சரி, பாதிப்புகள் நிச்சயம் கடுமையாகத்தான் இருக்கும்.

    கெடுக்கும் சனியே கொடுக்கவும் செய்வார் என்றாலும் ஏனோ இவர் பெயரைச் சொல்வதில் பலருக்கும் தயக்கம் உண்டு ஏன்றாலும் இவர்தான் ஆயுள்காரன். உங்களுக்கு சனி தோஷ பாதிப்பு இருந்தால் என்னனென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

    முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் தேக்கம், பணியிடத்தில் அதீத அலைச்சல், பணிச்சுமை அதிகரிப்பு, அரசு வழியில் எதிர்ப்புகள், செய்யும் தொழிலில் முடக்கம், விளைச்சல் பாதிப்பு, சோம்பல் அதிகரிப்பு, விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு உடல் உறுப்புகளுக்கு ஊறு ஏற்படுதல் இப்படிப்பட்ட பொதுவான பிரச்சினைகள் ஏற்படலாம்.

    உடல் நலத்தில் அடிக்கடி காயம்படுதல், வெட்டுக்காயம், தீக்காயம் ஏற்படுவது, தோல் நிறமாற்றம் ஏற்படுதல், நரம்புப்பிரச்சினைகள், வாதநோய், வயிற்று உபாதை, எலும்பு தேய் மானம், சர்க்கரை நோய் போன்ற உபாதைகள் ஏதாவது வரக்கூடும்.


    சங்கடம் தரும் சனிதோஷத்திற்கு என்ன பரிகாரம் செய்தால் பிரச்சனைகள் பெரிதாக வாட்டாமல் இருக்கும்?

    தினமும் ஒரு கைப்பிடி அன்னம் சிறிதளவு எள் சேர்த்து காகத்திற்கு வைப்பது மிக மிக நன்மை தரும்.

    சனிக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் 5 அகல் தீபம் நல்லெண்ணை விட்டு ஏற்துவதும்,

    சிவதுதி, அனுமன் துதிகளைச் சொல்வதும் நல்லது.

    தினமும் சிவன், லட்சுமி நரசிம்மர், அனுமன் காயத்ரிகளைச் சொல்வதோடு, சனிபகவான் காயத்ரியையும் சொல்லுங்கள்.

    சனிப்பிரதோஷ தினங்களில் நந்தி தரிசனம் செய்வதும், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதும் சிறப்பானது.

    திருநள்ளாறு போய் நளதீர்த்தத்தில் நீராடி அங் குள்ள வழக்கப்படி சனிபகவானை வழிபடுவதும், திருக் கொள்ளிக்காடு திருத்தலத்தில் உள்ள பொங்கு சனி பகவானை அர்ச்சனை செய்து ஆராதிப்பதும் நற்பலன் தரும். (திருவாரூர் திருத்துறைப்பூண்டி இடையே உள்ளது திருக்கொள்ளிக்கோடு. இங்கிருப்பவர் பொங்கு சனி பகவான் என்பதால், இவரது பிரசாதத்தை எடுத்து வரலாம்).

    இரும்பு சட்டியில் 8 ஒரு ரூபாய் நாணயங்கள் போட்டு, நல்லெண்ணை நிரப்பி அதில் உங்கள் முகம் பார்த்த பின் தானம் அளிப்பது சனிதோஷம் நீங்கும். இருப்பு அல்லது ஸ்டீல் டாலர், காப்பு அணிவதும், அதை கருப்பு கயிறில் கட்டிக் கொள்வதும் நல்லது.

    வசதி உள்ளவர்கள் நீலக்கல் எனும் ப்ளூடோபாஸ் கல்லை டாலரில் பதித்து அணியலாம். அல்லது அந்தக்கல்லால் செய்த கணபதி சிலையை வாங்கி பூஜிக்கலாம்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள். கோவில்களில் பக்தர்களுக்கு புளியோதரை பிரசாதம் கொடுங்கள்.

    அடிக்கடி சிவாலயம் செல்வதும் அங்குள்ள பார்வதியை வழிபட்ட பின், நிறைவாக நவகிரக சனிபகவானை வணங்கி விட்டு அனுமனை தரிசித்துவிட்டு வருவதும் நல்லது. அனுமன் இல்லாவிடில் வழியில் உள்ள ஏதாவது ஒரு பிள்ளையாரை தரிசிப்பது சிறந்தது. இவற்றுள் உங்களால் இயன்ற பரிகாரத்தினைச் செய்யுங்கள். சனிபகவானால் சங்கடம் ஏதும் வராது.

    • நீர்த்தேக்கத்தில் பலமுறை படகில் சென்று சோதனை நடத்தினர்.
    • புனித யாத்திரை தளமாக இல்லாமல் போய்விடும் என பக்தர்கள் கடும் எதிர்ப்பு.

    திருப்பதி:

    திருப்பதி மலையில் 5 முக்கிய நீர்த்தேக்கங்கள் உள்ளன. இதில் பாபவிநாசம் நீர்த்தேக்கம் முக்கியமானது.

    இதில் படகு சவாரி விட வனத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. நீர்த்தேக்கத்தில் பலமுறை படகில் சென்று சோதனை நடத்தினர். விரைவில் படகு சவாரி விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நீர்த்தேக்கம் புனிதமானது என பக்தர்கள் கருதுகின்றனர். ஏழுமலையானை தரிசிப்பதற்கு முன்பாக மலையில் உள்ள பாபவிநாசம் நீர்த்தேக்கத்திற்கு சென்று புனித நீராடி பின்னர் தரிசனத்திற்கு செல்கின்றனர்.

    அதேபோல் சில பக்தர்கள் தண்ணீரை எடுத்து தங்களது தலையில் தெளித்துக் கொள்கின்றனர்.

    இதில் நீராடினால் தங்களது பாவங்கள் அனைத்தும் விலகிவிடும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

    இந்த புனிதமான நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்ய அனுமதித்தால் அதன் புனிதம் கெட்டு ரிசார்ட்டாக மாறிவிடும். புனித யாத்திரை தளமாக இல்லாமல் போய்விடும் என பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,தினமும் திருப்பதி மலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பட கு சவாரி விடுவதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டலாம். பக்தர்கள் படகு சவாரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என கூறினார்.

    சனாதான தர்மத்தை கடைபிடிக்கும் பவன் கல்யாண் வனத்துறை அமைச்சராக இருப்பதால் படகு சவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சித்தர் கூறிய சிறந்த பரிகாரம்.
    • அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

    கணிதப் பஞ்சாங்கப்படி வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 9.44 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுதலாகிறார்.

    மீன ராசிக்கு பெயர்ச்சியாகும் சனிபகவான் 3-6-2027-ல் அதிசாரமாக மேஷ ராசிக்குச் செல்வார். அதன் பிறகு 20-10-2027-ல் மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதைத்தொடர்ந்து 23-2-2028 இரவு 7.24 வரை மீன ராசியிலேயே சஞ்சாரம் செய்ய உள்ளார்.


    சனி மீனத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டு கோளான குரு பகவான் திருக்கணிதப்படி

    குருபகவான் ரிஷப ராசியில் 1-5-2024 முதல் 14-5-2025 வரை

    குருபகவான் மிதுன ராசியில் 14-5-2025 முதல் 2-6-2026 வரை

    குருபகவான் கடக ராசியில் 2-6-2026 முதல் 26-6-2027 வரை

    குருபகவான் சிம்ம ராசியில் 26-6-2027 முதல் 24-7-2028 வரை சஞ்சாரம் செய்ய உள்ளார்.

    சனி மீனத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு - கேது (திருக்கணிதப்படி)

    ராகு- மீன ராசியில் கேது- கன்னி ராசியில் 30-10-2023 முதல் 18-5-2025 வரை

    ராகு- கும்ப ராசியில் கேது- சிம்ம ராசியில் 18-5-2025 முதல் 5-12-2026 வரை

    ராகு- மகர ராசியில் கேது- கடக ராசியில் 5-12-2026 முதல் 24-6-2028 வரை சஞ்சாரம் செய்ய உள்ளார்.

    சனி மீனத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் மேஷ ராசிக்கு ஏழரைச் சனியில். விரய சனியும், மிதுன ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், சிம்ம ராசிக்கு அஷ்டமச் சனியும், கன்னி ராசிக்கு கண்ட சனியும், தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும், கும்ப ராசிக்கு ஏழரைச் சனியில் பாதசனியும், மீன ராசிக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனியும் நடைபெற உள்ளது.


    இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் ரிஷபம், துலாம், மகர ராசி நேயர்கள் அற்புதமான அனுகூலப்பலன்கள் உண்டாகும். கடகம், விருச்சிக ராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்கள் ஏற்படும்.

    சனி மீனத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ராசி நேயர்களுக்கு கண்டிப்பாக சனி பகவானுக்கு பரிகாரம் செய்வது மிகவும் நல்லது.

    சனி பகவான் அருள் பெற எத்தனையோ எளிய பரிகாரங்கள், வழிபாடுகள் உள்ளன.

    சனிக்கிழமை தோறும் சனிபகவானின் ஆலயத்திற்கு சென்று நீலச்சங்கு, நீலச் செம்பருத்தி, நீலத்தாமரை ஆகிய புஷ்பங்களால் சனியை அலங்கரித்து வழிபடலாம்.

    கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வது நல்லது. கருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை வைத்திருத்தல் நல்லது.

    எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், குடை, அடுப்பு போன்றவற்றை ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.

    சனிக்கிழமைதோறும் அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு செல்வது முடிந்தால் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை தரிசனம் செய்வது நல்லது.

    சனிக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது. கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது மற்றும் ஜென்ம நட்சத்திர நாளில் கோவிலுக்கு சென்று ஒரு தேங்காயை சமமாக உடைத்து, உடைப்பட்ட தேங்காயில் எள், எண்ணெயை நிரப்பி தீபமேற்றி சனி பகவானை வணங்குவது நல்லது.


    சிறந்த பரிகாரம்:

    சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஒரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்லியுள்ளார். அந்த பரிகாரம் வருமாறு:-

    பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு வியாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும். அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கிச் செல்லும்.


    அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.

    பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்துக் கொள்ளூம். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள்.

    இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும். அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம்.

    இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

    • ஜென்மராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் காலம் விரையச் சனி
    • 12, 1, 2-ல் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று கூறுவார்கள்.

    ஜோதிட விதிப்படி ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரன் எங்கு சஞ்சரிக்கின்றாரோ அதையே அவரின் ஜென்ம ராசியாக கணக்கில் கொள்கிறோம். ஜென்ம ராசியை வைத்து பலன் கூறுவதே கோட்சாரப் பலன் ஆகும்.

    கோட்சார ரீதியாக ஒவ்வொரு கிரகங்களின் நிலையையும் ஆராயும் போது ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமாக சனிபகவானே இருக்கிறார். சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்றே கூறலாம்.


    சனி பகவான் 12 ராசியை சுற்றிவர 30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதனால் தான் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை. 30 வருடங்கள் தாழ்ந்தவரும் இல்லை என்ற பழமொழி உள்ளது.

    பொதுவாக ஒருவருக்கு சனியின் முதல் சுற்று மங்கு சனி என்றும் இரண்டாவது சுற்று பொங்கு சனி என்றும் கூறுவர். குறிப்பாக சனிபகவான் 3, 6, 11-ல் சஞ்சரிக்கும் காலங்களில் எல்லா வகையிலும் முன்னேற்றமான பலன்களை ஏற்படுத்துவார்.

    எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் தொழில் வியாபார உத்தியோக ரீதியாக உயர்வுகள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய வலிமை வல்லமை. உடல்நிலையில் ஆரோக்கியம் போன்ற அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும்.

    ஆனால், சனி பகவான் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்போது அதிகப்படியான சோதனைகளை உண்டாக்குவார். குறிப்பாக 12, 1, 2-ல் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று கூறுவார்கள்.

    ஜென்மராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் காலத்தை விரையச் சனி என்றும் 1-ல் சஞ்சரிக்கும் காலத்தை ஜென்ம சனி என்றும் 2ல் சஞ்சரிக்கும் காலத்தை குடும்ப சனி, பாத சனி என்றும் கூறுவார்கள்.

    இக்காலங்களில் உடல்நிலையில் பாதிப்புகள் குடும்பத்தில் பிரச்சனைகள், நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடுகள், தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள், உத்தியோகத்தில் தேவையற்ற அவப்பெயர் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகளைக் கொடுக்கும். தேவையற்ற விரயங்கள் உண்டாகும்.

    சனி 4-ல் சஞ்சரிக்கும் காலங்களை அர்த்தாஷ்டம சனி என்கிறோம். இக்காலங்களில் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும்.

    சனி 7-ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்கிறோம். இக்காலங்களில் உடல்நிலையில் பாதிப்பு, கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு, நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடு, கூட்டுத் தொழிலில் வீண் பிரச்சனைகள், விரயங்கள் உண்டாகும்.

    சனி 8-ல் சஞ்சரிக்கும்போது, அஷ்டமச் சனி உண்டாகிறது. இக்காலங்களில் அதிகப்படியான சோதனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். உடல்நிலையில் பாதிப்பு, நெருங்கியவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.

    குறிப்பாக சனிபகவான் சாதகமற்று சஞ்சரிக்கும்போது சிலருக்கு அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும். சனி ஜனன காலத்தில் நீசம் பெற்றிருந்தாலும் அஷ்டமச் சனி, ஏழரை சனி காலங்களில் பிறந்திருந்தாலும் பாதிப்புகள் அதிகரிக்கும். தொழில் ஸ்தானமான 10-ல் சனி சஞ்சரிப்பதும் நல்லதல்ல.

    சனி சாதகமற்ற பலன்களை ஏற்படுத்தும் என்றாலும் ஜனன காலத்தில் ஆட்சி உச்ச வீடுகளாகிய துலாம், மகரம், கும்பத்தில், அமைந்திருந்தாலும் சனியின் நட்சத்திரங்களாகிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் சனியால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படாது.

    • பங்குனி உத்திரம் ஆராட்டு 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • விஷு பண்டிகை 14-ந் தேதி கொண்டாப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி வருகிற 1-ந் தேதி (ஏப்ரல்) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    2-ந் தேதி காலை 9.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார். இந்த திருவிழா 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும். ஏப்ரல் 10-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 11-ந் தேதி பகல் 11 மணிக்கு பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும்.

    சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு 18-ந் தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். விஷு பண்டிகை 14-ந் தேதி கொண்டாப்படுகிறது.

    சபரிமலையில் கடந்த மாத பூஜையின் போது பக்தர்கள் 18-ம் படி ஏறி வந்தவுடன் நேரடியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இனி வரும் பூஜை நாட்களிலும் பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருவதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்தார்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • சிவபெருமான் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-12 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவாதசி இரவு 11.05 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: அவிட்டம் நள்ளிரவு 12.02 மணி வரை பிறகு சதயம்

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவாரூர் ஸ்ரீ தியாகேசர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராஜாங்க அலங்காரம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்ட பதி தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்-ஆதரவு

    சிம்மம்-உற்சாகம்

    கன்னி-இன்பம்

    துலாம்- தனம்

    விருச்சிகம்-பாராட்டு

    தனுசு- நற்செயல்

    மகரம்-பக்தி

    கும்பம்-மேன்மை

    மீனம்-பண்பு

    • திருமணத்திற்கு முதல் நாள் நந்தியம்பெருமான் பிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • விழாவின்போது பலவகை அபிஷேகங்கள் நந்தியம் பெருமானுக்கு செய்விக்கப்படுகிறது.

    நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்பது சான்றோர் வாக்கு. நந்திக் கல்யாணம் பார்த்தவருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள்.*

    அதன்படி நந்திக் கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்த வருடம் நந்திக் கல்யாணம் நடைபெறுவதற்கு முன் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர்.

    ஆம், இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நந்திகேஸ்வரரின் தெய்வீக திருமணம் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் வரக்கூடிய புனர்பூச நட்சத்திரத்தன்று இந்த சிறப்பு வாய்ந்த திருமணம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற பங்குனி மாதம் 23-ந்தேதி புனர்பூசம் நட்சத்திரம் 06-04-2025 ஞாயிறு அன்று நந்தி கல்யாணம் நடக்கிறது. அரியலூர் மாவட்டம் திருமழபாடி திருசுந்தராம்பிகை சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் இந்த தெய்வீக திருமணம் வருடாவருடம் நடைபெறுகிறது.

    மணமகன்: பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமான்

    மணமகள்: வசிஷ்ட முனிவரின் பேத்தியும் வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகை.

    இந்த ஸ்தலமானது திருமால் இந்திரன் ஆகியோரால் வழிபாடு செய்யப்பட்டது. மேலும் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் ஆகியோரால் திருப்பதிகங்கள் பாடியும் வழிபாடு செய்யப்பட்ட ஸ்தலமாகும்.

    தஞ்சாவூர் மற்றும் லால்குடியில் இருந்து 28 கி.மீ. தூரத்திலும் மற்றும் திருவையாறில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் புள்ளம்பாடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

    கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இக்கோவிலில் மூன்று திருச்சுற்றுகள் உள்ளன. தலவிருட்சமாக பனை மரம் உள்ளது. நடராஜர் மண்டபம் அருகில் *திரு நந்திகேஸ்வரர் தனது மனைவி சுயசாம்பிகையுடன் காட்சி தருகிறார்.

    திருமணத்திற்கு முதல் நாள் நந்தியம்பெருமான் பிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவின்போது பலவகை அபிஷேகங்கள் நந்தியம் பெருமானுக்கு செய்விக்கப்படுகிறது. அன்று மாலை திருவையாறு கோவிலில் அவருக்கு பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.

    திருமணம் நடைபெறும் நாளன்று காலை ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும் நந்தியம்பெருமான் பட்டுச் சட்டை அணிந்து கையில் செங்கோல் ஏந்தி வெள்ளியில் ஆன தலைப்பாகை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்திலும் அமர்ந்து வானவேடிக்கை இன்னிசை கச்சேரி உடன் புறப்படுகின்றனர்.

    அன்று மாலை கொள்ளிடம் ஆற்றில் இறங்கி திருமழபாடி வந்தடைகின்றனர். அங்கு கண்ணாடி பல்லக்கில் வீற்றிருக்கும் சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி மங்கள வாத்தியங்கள் முழங்க மாப்பிள்ளை வீட்டாரை எதிர்கொண்டு அழைத்து அவர்களை வரவேற்று கோவில் முன் உள்ள திருமண மேடைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

    திருமண மேடையில் சுயசாம்பிகை தேவிக்கும் நந்தியம் பெருமானுக்கும் அனைத்து விதமான அபிஷேகங்கள் நடைபெறுகின்றது.

    தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க நாதஸ்வர இன்னிசையுடன் சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி மற்றும் திருவையாறு அறம் வளர்த்தநாயகி உடனுறை ஐயாரப்பர் முன்னிலையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு முன்னிலையிலும் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டுகிறார்.

    திருமணம் முடிந்ததும் மணமக்களுக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. தொடர்ந்து இருவரும் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். இறைவனே முன்நின்று திருமணத்தை நடத்தி வைப்பதால் நந்தியம்பெருமான் திருமணத்தை காணும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் திருமண தடைகள் நீங்கி காலத்தே திருமணம் கைகூடிவரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    இத்திருமணத்தில் கலந்து கொள்ளமுயற்சி செய்யுங்கள்.

    ×