என் மலர்
வழிபாடு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
முன்னேற்றம் கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் சில பணிகளை விட்டுவிடுவீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
கடகம்
உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். ஆன்மிகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். செல்வாக்கு மிக்கவர்கள் சிநேகமாவார்கள்.
சிம்மம்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். கூட்டாளிகளால் பிரச்சனை உண்டு. காரியங்கள் கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை உண்டு.
கன்னி
பொன்னான நாள். புதிய பாதை புலப்படும். கடிதப் போக்குவரத்து கனிந்த தகவலைத் தரும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
துலாம்
வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் வெற்றி நடைபோடும். வருமானம் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகவே இருக்கும்.
விருச்சிகம்
மலை வலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். நினைத்தது நிறைவேறும், பிரார்த்தனைகள் பலிக்கும். தொழில் வளர்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் சீராகும்.
தனுசு
இறை வழிபாட்டில் இதயத்தைச் செலுத்தும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொழில் சம்பந்தமாகப் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
மகரம்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.
கும்பம்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
மீனம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிலும் அவசரத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். பயணங்களை மாற்றி அமைப்பீர்கள்.
- மிதுனம் சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம்.
- துலாம் அனைத்து விதமான தேவைகளும் நிறைவேறிடும் இன்பமான வாரம்.
மேஷம்
அதிகமாக உழைக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் 3,6-ம் அதிபதி புதனுடன் இணைந்து ராசியை பார்க்கிறார். தீபாவளிக்கு தேவையான ஆடை ஆபரணங்கள் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம் வேலை மாற்றம் நடக்கலாம். சிறு சிறு உடல் நல, மனநல பாதிப்புகள் வரலாம். கடன் வாங்குவது, ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்.புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வந்தாலும் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். பங்குச் சந்தை ஆதாயம் குறையும். குரு பகவான் அதிசாரமாக கடக ராசிக்குள் நுழைகிறார். வீடு வாங்குவது, வீடு கட்டுவது சம்மந்தமான முயற்சிகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் தனித் தன்மையுடன் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம். சனியின் வக்ர நிவர்த்திக்குப் பிறகு திருமணம் நடைபெறக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளது. முக்கிய காரியங்கள் நிறை வேற்றுவதில் இடையூறுகள், தடைகள் இழுபறிகள் வந்தாலும் தைரியமும், தன் நம்பிக்கையும் குறையாது. குழந்தை பேறு கிடைக்கும். ராஜா அலங்கார முருகன் வழிபாடு நிம்மதியை அதிகரிக்கும்.
ரிஷபம்
நீச்ச பங்க ராஜ யோகம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சம் அடைகிறார். புதன். சுக்கிரன் பரிவர்த்த னையில் இருப்பதால் சுக்கிரனுக்கு நீச்ச பங்க ராஜயோகம் கிடைக்கிறது.திட்டமிட்டபடி சுப காரி யங்கள் பிரமாண்டமாக நடந்து முடியும். தீபாவளி போனசில் அழகு ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாகும். காதல் திருமணம் நடக்கும். உயர்கல்வி மற்றும் திருமணத்திற்குத் தேவையான கடன், பொருள் உதவி கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனை நிறைவேறும். வீடு, வாகனம், சொத்து போன்ற வற்றில் ஏற்பட்ட இழப்பு, விரயங்களை ஈடு செய்வீர்கள். வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதியான சூழல் நிலவும். தாய், தந்தையின் ஆரோக்கியம் மகிழ்சியைத் தரும். மனக்கசப்பில் பிரிந்து சென்ற உறவுகள் உங்களை புரிந்து மீண்டும் உறவை புதுப்பிப்பார்கள்.முறையான திட்டமிடுதல் நிரந்தர வெற்றியைக் குவிக்கும்.வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.
மிதுனம்
சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம்.ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். இது நீச்சபங்க ராஜயோகத்தை ஏற்படுத்தும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தான தர்மங்களில் ஆர்வங்கள் கூடும். பூர்வீகம் சார்ந்த இன்னல்கள் சீராகும்.விற்க முடியாமல் கிடந்த பூர்வீக சொத்துக்கள் விற்றுப் பண மாகும். தடைபட்ட சகோதர சகோதரி களின் திருமண முயற்சி வெற்றியாகும். குரு பகவான் அதிசாரமாக தன ஸ்தானத்திற்கு செல்வதால் ஜென்ம குருவால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். புதிய திட்டங்கள் மற்றும் எண்ணங்களால் தொழி லில் முன்னேற்றம், லாபம் உருவாகும். தொழிலுக்கு அரசின் ஆதரவு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு வேலை முயற்சிகள் பலன்தரும்.அடகு நகைகளை மீட்கக்கூடிய வகையில் வருமானம் உயரும்.பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் அன்பு மன சஞ்சலத்தைக் குறைக்கும்.தேவைகள் நிறைவேறும்.வீடு மற்றும் பூமி வாங்கும் எண்ணம் நிறைவேறும். வராக் கடனை வசூலிப்பதில் ஆர்வம் கூடும்.மீனாட்சி யம்மன் வழிபாட்டால் சாதகமான பலன்களை பெற முடியும்.
கடகம்
விரும்பிய புதிய மாற்றங்கள் உருவாகும் வாரம்.ஜென்ம குருவின் ஆதிக்கம் துவங்கப் போகிறது. குரு பகவான் அதிசாரமாக ராசிக்குள் நுழைந்து உச்சமடைய போகிறார். சுமார் 48 நாட்கள் புதிய மாற்றங்கள் உருவாகலாம்.புதியதாக சுய தொழில் துவங்குவதை விட உத்தியோகமே சிறப்பு. முதலீட்டாளர்கள் புதிய தொழில் ஒப்பந்தத்தில் கவனமாக செயல்பட வேண்டும். தொழில் கூட்டாளிகளிடம் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.புதிய தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள் என புதுப்புது மாற்றங்கள் நிகழும். தடைபட்ட வீடு கட்டும் பணி தொடரும். கணவன்-மனைவி ஒற்றுமை, திருமணம், சுப காரியங்கள் நடப்பது போன்ற நற்பலன்கள் நடக்கும். குடும்பத்தி னரின் ஒத்துழைப்பும் உடல் ஆரோக்கியமும் சிறக்கும். இந்த வாரம் தீபாவளிக்கு புதிய ஆடைகள் வாங்குவீர்கள். சிலருக்கு தாயார் மூலம் கணிசமான தொகை கிடைக்கும். 6.10.2025 அன்று காலை 12.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். திங்கட்கி ழமை சிவ வழிபாடு செய்வதால் உயர்வான நிலையை அடைய முடியும்.
சிம்மம்
தெளிவான திட்டமிடுதலும் முயற்சியும் அவசியம். ராசி அதிபதி சூரியன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரனுடன் சேர்ந்துள்ளார். தம்பதிகளின் அன்பு பரிமாற்றம் மன நிறைவாக இருக்கும். ஆரோக்கிய குறைபாடு அகன்று மருத்துவச் செலவு குறையும்.சிலர் நல்ல வசதியான வீட்டிற்கு இடமாற்றம் செய்யலாம். விரய ஸ்தானத்தில் குருபகவான் உச்சம் அடைவது சுபித்துச் சொல்லக்கூடிய பலன் அல்ல. கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம். வியாபாரத்தில் சிறு சறுக்கல் தோன்றுவது போல் இருந்தாலும் சமாளிக்க முடியும். திருமணத் தடை நீடிக்கும். தம்பதிகள் தொழில் நிமித்தமாக பிரிந்து வாழலாம். தம்பதிகளிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கும். தந்தை-மகன் உறவு பலப்படும். வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளின் வருகை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். 6.10.2025 அன்று காைல 12.45 முதல் 8.10.2025 அன்று காைல 1.28 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு கை,கால், மூட்டு எலும்பு,நரம்பு, சுகர், பிரஷர் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் சகல சௌபாக்கிய மும் உண்டாகும்.
கன்னி
பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம்.ராசி அதிபதி புதன் சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார்.மேலும் லாப ஸ்தானத்தில் குரு பகவான் உச்சமடைய போகிறார். இந்த அமைப்பு அபரிமிதமான சுப பலன்களை வழங்க உள்ள நல்ல நேரமாகும். தொழில், உத்தியோகத்தில் லாபம் சதம் அடிக்கும். புதிய தொழில் ஒப்பந்தம் தேடி வரும். தொழில் கூட்டாளிகளிடம் நிலவிய கருத்து வேற்றுமை மறைந்து ஒற்றுமை ஏற்படும். கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலை மாறும். தடைபட்ட வாடகை வருமானம் வசூல் ஆகும். விவசாயி களுக்கும் எதிர்பாராத லாபம் உண்டு. வீடு,மனை வாங்க முன்பணம் கொடுப்பீர்கள். வாழ்க்கை துணைக்கு விரும்பிய உத்தியோக மாற்றம் தேடி வரும். திருமணப் பேச்சு வார்த்தை மன நிறைவு தரும்.இந்த வாரம் தீபாவளி போனஸ் கிடைக்கும்.உடல்நிலை சீராகும்.8.10.2025 அன்று காலை 1.28 முதல் 10.10.2025 அன்று காலை 1.23 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானமற்ற அவரச முடிவுகளைத் தவிர்ப்பது அவசியம்.தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் கேட்பதாலும் பொருளாதார மேன்மை உண்டாகும்.
துலாம்
அனைத்து விதமான தேவைகளும் நிறைவேறிடும் இன்பமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ளார். ராசிக்கு பத்தாம் இடத்தில் குரு பகவான் உச்சம் பெற போகிறார். இது துலாம் ராசியி னருக்கு சகல ஐஸ்வர்யங்கள் சவுபாக்கியங்களையும் பெற்றுத் தரும் அமைப்பாகும். துலாம் ராசியினருக்கு தீபாவளி விற்பனை நல்ல லாபம் பெற்று தரும்.தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் உயர்வாக இருக்கும். போட்டி, பொறாமைகள் அகலும். நண்பருக்காக பொறுப்பேற்று வாங்கிக் கொடுத்த ஜாமீன் தொகை வந்து சேரும். விவாகரத்து வழக்கு தீர்ப்பு தள்ளிப்போகும். 4ம் அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் சொத்தில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதை சரிபார்த்து விட்டு புதிய சொத்து வாங்க முன்பணம் கொடுக்கவும். உடல்நிலையில் பாதிப்புகள் குறையும். 10.10.2025 அன்று 1.23 காலை சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அலைச்சல் மிகுந்த பயணங்களை தவிர்க்கவும். தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் கேட்பதால் அனைத்து விதமான தேவைகளும் நிறைவேறும்.
விருச்சிகம்
உழைப்பும் முயற்சியும் பலன் தரும் சாதகமான வாரம். 2, 5-ம் அதிபதி குரு அதிசாரமாக கடக ராசிக்கு சென்று உச்சம் பெறுகிறார்.வேலை இல்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.தொழில், உத்தியோக முன்னேற்றம் என அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும். நம்பிக்கை யான தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். சிலர் மன நிம்மதிக்காக வெளியூர், வெளிநாடு சென்று வரலாம். மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாம். நோய் பாதிப்புகள் அகலும். எதிரிகள் தொல்லை குறையும்.விருச்சிக ராசி வயோதிகர்களுக்கு பேரன், பேத்தி. யோகம் கிடைக்கும்.சகோதர சகோதரிகளின் ஆதரவு நிம்மதி தரும். குரு பாதக ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் பெரிய பாதகங்கள் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். எனினும் புதிய முயற்சிகளில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்துக்கள் பணமாக மாறலாம்.பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். பெண்கள் தங்க நகைகளை அத்தியா வசியமாக இருந்தால் மட்டும் புதுப்பிக்கவும். தினமும் லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்வதன் மூலம் ஏற்றமான பலன்களை அடைய முடியும்.
தனுசு
புதிய முதலீடுகள் தவிர்க்க வேண்டிய காலம். ராசி அதிபதி குரு பகவான் அதிசாரமாக அஷ்டம ஸ்தானத்திற்கு சென்று உச்சம் பெறப்போகிறார். கடன், வம்பு, வழக்கு,நோய் தாக்கம், உத்தியோ கத்தில் இடையூறு, போட்டித் தேர்வுகள் போன்றவற்றில் ஏமாற்றங்கள் உருவாகலாம். விரயத்தை தவிர்க்க முடியாத நிலை நீடிக்கும்.வீடு கட்டப் போட்ட பட்ஜெட் திட்டமிடுதலை விட எகிறும். சிலருக்கு காது வலி, ஞாபக மறதி போன்ற அசவுகரியங்கள் தலை தூக்கும். சிலர் முக்தியை போதிக்கும் ஆன்மீக இயக்கம், சங்கங்களில் சேர்ந்து பயனடைவார்கள். 2ம் அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் சாத்தியமற்ற விசயத்திற்கு யாருக்கும் வாக்கு கொடுத்து வம்பில் மாட்டக் கூடாது. பேச்சை மூலதனமாகக் கொண்டு தொழில் செய்பவர்கள் நிதானமாக சிந்தித்து பேச வேண்டும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் நல்ல பொருள் வரவை பெற்றுத்தரும். தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செய்ய நேரும். வாரிசுகளின் திருமண முயற்சி வெற்றியாகும். செயற்கை கருத்தரிப் பிற்கான முயற்சியை சிறிது காலம் ஒத்தி வைக்க வும். தினமும் மாலையில் ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட இன்னல்கள் விலகும்.
மகரம்
சிறிய முயற்சியில் பெரிய வெற்றி கிடைக்கும் வாரம். ராசிக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. குரு பகவான் அதிசாரமாக கடக ராசியில் சென்று உச்சமடைய போகிறார்.செவ்வாய் சாதகமான இடத்தில் சஞ்சரிப்பதால் பங்கு தாரருடன் இணைந்து தொழிலுக்கு சொந்தமான இடம் வாங்க ஏற்ற நேரம். புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். பரம்பரை சொந்தத் தொழிலில் நீங்கள் பங்குதாராக இணையலாம். நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்துக்கள் விற்கும்.அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வரும். தீபாவளிக்கு தேவையான உடைகளை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பொன் பொருள் சேரும்.சிலருக்கு தந்தையின் அரசு வேலை கிடைக்கும். பெண்கள் மாமனார், மாமியாரை அனுசரித்துச் செல்ல வேண்டும். திருமணம் நிச்சயமானவர்கள் போனில் தேவையற்ற விசயங்களை தவிர்க்கவும். வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். தினமும் காலபைரவரை வழிபடுவதால் காலத்தால் ஏற்படக்கூடிய துன்பங்கள் விலகும்.
கும்பம்
விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம்.அடுத்து வரும் 48 நாட்களுக்கு ராசியில் பதிந்த குருவின் பார்வை விலகப் போகிறது.ராசியில் தனித்த ராகு நிற்பதால் சம்பந்தம் இல்லாத அறிமுகம் இல்லாத நபர்களால் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை.வரவிற்கு மீறிய செலவு இருக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க உழைக்கவேண்டி வரும். கடன், எதிரி தொல்லை அதிகமாகும் என்பதால் புதிய முயற்சிகள் அதிக முதலீடு ஆகியவற்றில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். முக்கிய பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க கூடாது. மூத்த சகோதரம், சித்தப்பாவால் வம்பு, வழக்கு, கடன் உண்டு. சகோதர சகோதரிகள் முன்னுக்கு பின் முரணாக பேசி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். உறவுகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்த்தல் நலம். வழக்கு விசாரணை தள்ளிப்போகும். சிலர் தொழில், வேலைக்காக பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம்.சிறு உடல் உபாதைகள் அவ்வப்போது தோன்றும். ஸ்ரீ ராமரை பட்டாபிஷேக கோலத்தில் வழிபட எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
மீனம்
வெற்றி மேல் வெற்றி தேடிவரும் அற்புதமான வாரம். அடுத்த 48 நாட்களுக்கு ராசி அதிபதி குரு உச்சம் பெற்று ராசியில் உள்ள சனிபகவானை பார்க்க போகிறார். இது தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். இதனால் இழுபறியாக இருந்த காரியங்கள் கூட துரித வேகத்தில் நடந்து முடியும். கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். திட்டங்கள், எண்ணங்கள் செயலாக்கம் பெறும். எதற்கும் முடிவு காண முடியாமல் தவித்த நிலை மறையும். தடை தாமதங்கள் அகலும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றமான பலன் உண்டு. வெளிநாட்டு தொடர்பு அல்லது வேற்று மதத்தினர் ஆதரவால் நல்ல வாய்ப்புகள் கிட்டும். திருமணம் பற்றிய நல்ல முடிவுகள் உங்கள் எண்ணம் போல் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். முன்னோர்களின் நல்லாசியும், குல தெய்வ அருளும் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் சீராகும்.ஸ்ரீ வல்லப கணபதியை வழிபட வளமான வாழ்க்கை உண்டாகும்.
- சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
- ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-19 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திரயோதசி நண்பகல் 1.24 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : சதயம் காலை 6.58 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மனுக்கு பால் அபிஷேகம்
சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.
காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-அமைதி
மிதுனம்-போட்டி
கடகம்-ஆதரவு
சிம்மம்-உற்சாகம்
கன்னி-நட்பு
துலாம்- பெருமை
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- புகழ்
மகரம்-அமைதி
கும்பம்-நன்மை
மீனம்-பக்தி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
தடைகள் அகலும் நாள். தனவரவு உண்டு. நண்பர்கள் தக்க சமயத்தில் கை கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்.
ரிஷபம்
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும் நாள். எதிர்காலம் இனிமையாகத் திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசுவழிச் சலுகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.
மிதுனம்
புதிய பாதை புலப்படும் நாள். முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
கடகம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்ததை செய்ய தாமதம் ஏற்படும். வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம். உடல்நலக் கோளாறுகளால் மனக்கலக்கம் ஏற்படும்.
சிம்மம்
யோகமான நாள். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர்.
கன்னி
நினைத்தது நிறைவேறும் நாள். தக்க சமயத்தில் பிறருக்கு உதவுவதால் பலருடைய அன்பைப் பெறுவீர்கள். வருமானம் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாகக் கிடைக்கும்.
துலாம்
பிரபலமானவர்களால் பிரச்சனை தீரும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். தடைபட்ட ஒப்பந்தம் தானாக வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு வந்து சேரும்.
விருச்சிகம்
அன்பு நண்பர்களின் ஆதரவு கூடும் நாள். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை அடைவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
தனுசு
மனக்குழப்பம் அகலும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். முக்கிய முடிவெடுக்கும் பொழுது குடும்ப உறுப்பினர்களைக் கலந்து ஆலோசிப்பதே நல்லது.
மகரம்
தொட்ட காரியம் துளிர் விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
கும்பம்
காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களால் ஒருசில தொல்லைகள் வந்து சேரலாம். உறவினர் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.
மீனம்
பொறுமையை கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். பயணத்தால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.
- கிருத்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
- மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தில் நீராடி, உணவு அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
கிருத்திகை விரதம் என்பது முருகப்பெருமானை வழிபடுவதற்காக அனுசரிக்கப்படும் ஒரு விரதமாகும். இது முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படும் கிருத்திகை நட்சத்திரத்தன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த விரதத்தை மேற்கொள் வதன் மூலம் பாவங்கள் நீங்கும், திருமணத்தடைகள் நீங்கும் மற்றும் முருகனின் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
முருகப் பெருமானுக்கு உகந்த நாள்: கிருத்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
பாவங்கள் நீங்கும்: இந்த விரதத்தை கடைபிடிப்பதால், பாவங்கள் நீங்கி, புண்ணியங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.
திருமணத்தடை நீங்கும்: திருமணத்திற்காக காத்திருப்பவர்கள், கிருத்திகை விரதம் இருந்தால், திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். முருகனின் அருள் கிடைக்கும. இந்த விரதத்தை முறையாக கடைபிடிப்பதால், முருகனின் அருளும், ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும்.
கிருத்திகை விரதம் கடை பிடிக்கும் முறை: அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, முருகனின் படம் அல்லது சிலையை வைத்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முருகனுக்கு பிடித்தமான மலர்கள் மற்றும் நைவேத்தியங்களை படைத்து வழிபடலாம். விரதம் இருப்பவர்கள், பால், பழம் அல்லது எளிமையான உணவுகளை உட்கொள்ளலாம். முருகனுக்குரிய மந்திரங்கள், பாடல்களை பாராயணம் செய்யலாம். யாருக்காவது அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தில் நீராடி, உணவு அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
சிலர் கிருத்திகை விரதத்தை பரணி நட்சத்திரத்திலிருந்தே தொடங்குகிறார்கள். அன்று பகல் உணவை நிறுத்தி விட்டு, கிருத்திகை அன்று முருகனை வழிபடுகிறார்கள்.
ஆடி கிருத்திகை, தை கிருத்திகை போன்ற நாட்களும் முருகனுக்கு மிகவும் முக்கியமான நாட்களாகும். இந்த விரதத்தை கடைபிடிப்பதால், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும் என்பது நம்பிக்கை.
- ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள்.
- உலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம்.
இன்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை. அனைவரும் பெருமாளுக்கு "தளியல்" போடுவது வழக்கம். முடியாதவர்கள் 1-வது, 5-வது சனிக்கிழமையில் போடுவாங்க. பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.
புரட்டாசி சனியன்று 'ஓம் நாராயணாய நம' என்ற எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கிறோமோ அந்த அளவுக்கு மனம் பக்குவப்படும். இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம்.
ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவது உலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம்.
கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.
- புரட்டாசி மாதம் வரும், 3-வது சனிக்கிழமை அன்று அன்னை மகாலட்சுமி மாவிளக்கேற்றும் சடங்கு நடைபெறுகிறது.
- பகல் 10 மணிக்கு மேல் இங்கு உற்சவ மூர்த்தியாக உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் முன்பு அன்னக்கூட உற்சவம் நடைபெறும்.
குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டி ஒவ்வொரு இல்லத்திலும் உள்ள பெண்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி மாதவனையும் மகாலட்சுமியையும் வழிபடுவர். ஆனால் ஸ்ரீ மகாலட்சுமியே நாம் நன்றாக இருக்க வேண்டுமென்று மாவிளக்கு ஏற்றி மகா விஷ்ணுவை வழிபடுவதை நீங்கள் எங்காவது பார்த்ததுண்டா?
சென்னை பெசன்ட் நகர் ஸ்ரீ அஷ்டலட்சுமி கோவிலில் தான் ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் வரும், 3-வது சனிக்கிழமை அன்று அன்னை மகாலட்சுமி மாவிளக்கேற்றும் சடங்கு நடைபெறுகிறது. இவ்வாலயத்தில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான இன்று காலை வழக்கம் போல் தினசரி பூஜைகள் நடந்து முடிந்த பிறகு சுமார் 9 மணிக்கு மேல் இந்த வழிபாடுகள் துவங்கும். பகல் 10 மணிக்கு மேல் இங்கு உற்சவ மூர்த்தியாக உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் முன்பு அன்னக்கூட உற்சவம் நடைபெறும்.
அதன் பிறகு இங்குள்ள அஷ்ட லட்சுமிகளின் சன்னதிகளில் ஒரு சன்னதிக்கு ஒரு மாவிளக்கு என்ற விகிதத்தில் எட்டு சன்னதிகளிலும் எட்டு மாவிளக்குகள் ஏற்றப்படும். (இவற்றை ஸ்ரீ மகா லட்சுமியே ஏற்றுவதாக ஐதீகம்) பிறகு அவை அனைத்தும் ஒவ்வொன்றாக உற்சவர் ஸ்ரீ நிவாசப் பெருமாள் முன்பு கொண்டு செல்லப்பட்டு அந்த எட்டு மாவிளக்கின் தீபச் சுடர்களாலும் பெருமாளின் முன்பு ஒரு பெரிய அகண்ட தீபம் ஏற்றப்படும்.
மாலை சுமார் 5 மணியளவில் சஹஸ்ரநாம அகண்ட பாராயணம் பூஜைகளும், நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பாடி பகவானை சேவித்தலும் வரிசையாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ மகாலட்சுமியே மாவிளக்கேற்றி மாதவனை வழிபடும் இந்த ஆராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பெருமாளின் திவ்ய கருணையை பெறலாம்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
வருமானம் திருப்தி தரும் நாள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மிதுனம்
நந்தி வழிபாட்டால் நன்மை கிட்டும் நாள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணத் தடை அகலும்.
கடகம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. நண்பர்கள் தொடர்பான சில காரியங்களுக்காக அலைய நேரிடலாம். வரவை காட்டிலும் செலவு கூடும்.
சிம்மம்
தடைகள் அகல தைரியமாக முடிவெடுக்கும் நாள். கனிவாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை அகலும்.
கன்னி
சிவாலய வழிபாட்டில் கவனம் செலுத்தும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்மறை சிந்தனையை தவிர்ப்பது நல்லது.
துலாம்
வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும். தொழிலில் பதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
விருச்சிகம்
பிரதோஷ வழிபாட்டால் பெருமை சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.
தனுசு
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மகரம்
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன் பின் தெரியாதவர்கள் ஒத்துழைப்பு செய்வர். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
கும்பம்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். மறதியால் சில காரியங்களைச் செய்ய இயலாமல் போகலாம். வாழ்க்கை தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும்.
மீனம்
சுபவிரயம் ஏற்படும் நாள். தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். வரும் தொலைபேசி வழித்தகவல் வருமானம் தரக் கூடியதாக இருக்கும்.
- புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும்.
- செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.
நாளை (அக்டோபர் 4-ந்தேதி) புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது மிகவும் நல்லது.
"உப" என்றால் "சமீபம்" என்று பொருள். "வாசம்" என்றால் "வசிப்பது" என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப்பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வடை எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.
புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்டவேண்டும்.
பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற் கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.
- மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
- புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவில் பின்புறம் உள்ள 'அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பவுர்ணமி வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11.49 மணிக்கு தொடங்கி மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9.53 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் தேர் பவனி.
- ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசர் புஷ்ப யாகம் சாற்றுமுறை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-17 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி மாலை 3.26 மணி வரை பிறகு துவாதசி மறுநாள் மதியம் 2.38 மணி வரை
நட்சத்திரம் : திருவோணம் காலை 7.22 மணி வரை பிறகு அவிட்டம் மறுநாள் காலை 7.22 மணி வரை
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி
இன்று சர்வ ஏகாதசி. துளசி கவுரி விரதம். சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் தேர் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பவனி. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு. ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசர் புஷ்ப யாகம் சாற்றுமுறை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-புகழ்
ரிஷபம்-உயர்வு
மிதுனம்-ஆராய்ச்சி
கடகம்-ஆசை
சிம்மம்-செலவு
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- போட்டி
விருச்சிகம்-ஜெயம்
தனுசு- இன்பம்
மகரம்-மாற்றம்
கும்பம்-துணிவு
மீனம்-பொறுப்பு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
ரிஷபம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
மிதுனம்
எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. மறைமுக எதிர்ப்பால் மனக்கவலை அதிகரிக்கும். உறவினர்கள் உதவி செய்வதாகச் சொல்லி கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.
கடகம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பாகப் பிரிவினை முடிவிற்கு வரும். உறவினர்கள் வழியில் விரயமுண்டு. தொழில் ரீதியாக வரும் தொலைபேசித் தகவல் மகிழ்ச்சி தரும்.
சிம்மம்
பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். பூர்வீக சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.
கன்னி
இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். தொழிலில் கூட்டாளிகள் அனுசரிப்புக் குறையும். குடும்பத்தினர்கள் உங்களைப் பற்றிக் குறை கூறுவர். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை உண்டு.
துலாம்
மகிழ்ச்சி கூடும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
தனுசு
கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். கல்யாணப் பேச்சுக்கள் முடிவாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். வருமானம் உயரும்.
மகரம்
உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். சேமிப்பு உயரும். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
கும்பம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதி காரிகள் வழங்குவர்.
மீனம்
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு கூடும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். இடம், பூமி வாங்கும் முயற்சி பலன்தரும்.






