என் மலர்tooltip icon

    ராசிபலன்

    Today Rasipalan: இன்றைய ராசிபலன் 30.11.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு தனவரவில் இருந்த தடைகள் அகலும்
    X

    Today Rasipalan: இன்றைய ராசிபலன் 30.11.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு தனவரவில் இருந்த தடைகள் அகலும்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    மாற்றங்களைப் பற்றி சிந்திக்கும் நாள். உடல் நலனில் கவனம் தேவை. பழைய நண்பர்ளை சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும்.

    ரிஷபம்

    நினைத்தது நிறைவேறும் நாள். அலைபேசி மூலம் நல்ல தகவல் உண்டு. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மிதுனம்

    வரவு வாயிலைத் தேடி வரும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    கடகம்

    சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் அகல செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும்.

    சிம்மம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். யோசித்து செயல்படுவது நல்லது. வி.ஐ.பி.க்கள் விரோதமாகலாம். பயணங்களை யோசித்து ஏற்றுக் கொள்ளவும்.

    கன்னி

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். நிர்வாகத்திறமை பளிச்சிடும். ஆசையாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    துலாம்

    பாக்கிகள் வசூலாகும் நாள். குடும்ப பிரச்சனை குறையும். பயணங்களால் பலன் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.

    விருச்சிகம்

    நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும்.

    தனுசு

    ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். தாயின் உடல்நலம் சீராகும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

    மகரம்

    நல்லவர்கள் தொடர்பால் நலம் காணும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் சிந்தனை மேலோங்கும்.

    கும்பம்

    மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் நாள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். கடன்சுமை குறையும். பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும்.

    மீனம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    Next Story
    ×