என் மலர்
ராசிபலன்

இன்றைய ராசிபலன் 29.11.2025: இந்த ராசிக்காரர்களுக்கு ஆதரவு பெருகும்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
ஆதரவு பெருகும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
ரிஷபம்
சர்ச்சைகளில் இருந்து விடுபடும் நாள். தடைகள் தானாக விலகும். தொலைபேசி வழித்தகவல் உத்தியோக முன்னேற்றதிற்கு உறுதுணை புரியும்.
மிதுனம்
தடைகள் உடைபடும் நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். பழைய பாக்கிகளை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
கடகம்
எதிரிகளின் தொல்லை மேலோங்கும் நாள். லாபத்தைவிட விரயம் கூடும். மற்றவர்களுக்கு நன்மை செய்யப்போய் அது தீமையாய் முடியும்.
சிம்மம்
விரயங்கள் கூடும் நாள். விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும்.
கன்னி
மறதியால் விட்டுப்போன பணிகளை மீண்டும் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.
துலாம்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
விருச்சிகம்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். நண்பர்கள் எதிர்பார்த்த உதவிகள் செய்வர். வருமானம் திருப்தி தரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.
தனுசு
நூதனப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். பயணங்களால் பலன் உண்டு. உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மகரம்
பற்றாக்குறை அகலும் நாள். எதிலும் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது. முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காண இயலும்.
கும்பம்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொருளாதார வளர்ச்சி உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட களைப்பின்றி உழைப்பீர்கள்.
மீனம்
பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்து கொள்வர்.






