என் மலர்tooltip icon

    வழிபாடு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சித்திர குப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார்.
    • அடுத்த பிறவி, முக்தி ஆகியவற்றை எமதர்மன் தீர்மானம் செய்வார்.

    சித்ரா பவுர்ணமி அன்று பெண்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர். அன்று அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி வாசலில் தெற்கு திசையில் வாயில் போன்ற அமைப்பில் படிக் கோலம் இடுகின்றனர்.

    பூஜையறையில் மாவினால் சித்ர குப்தரின் உருவத்தினை வரைந்து ஏடு மற்றும் எழுத்தாணியை (பேப்பர் மற்றும் பேனா) உருவத்தின் அருகே வைக்கின்றனர். சர்க்கரைப் பொங்கல் மற்றும் பருப்பு பாயாசம் (பால் சேர்க்காமல்) படைத்து விளக்கேற்றி தீப ஆராதனை காண்பிக்கின்றனர்.

    பின்னர் தங்கள் வாழ்வில் செய்த பாவங்களைப் போக்குமாறும் இனி வரும் நாளில் பாவங்கள் செய்யாமல் இருக்க அருள் புரியுமாறும் வேண்டுகின்றனர். நிலையான செல்வம், நீடித்த ஆயுள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு கிடைக்க பிரார்த்திக்கின்றனர்.

    வழிபாடு முடிந்த பின் முறத்தில் அரிசி, பருப்பு, காய்கறி, தட்சிணை ஆகியவற்றை வைத்து எளியவர்களுக்கு தானம் செய்கின்றனர்.

    வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கோ சென்று சித்திர குப்தரின் வரலாற்றை படிக்கின்றனர். வழிபாடு முடிந்த பின் படிக்கோலத்தை அழிந்து விடுகின்றனர்.

    விரத முறையில் மக்கள் உப்பு, பால், மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்கின்றனர். காமதேனுவிடமிருந்து சித்திரகுப்தன் தோன்றியதால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தவிர்க்கப்படுகின்றன.

    சித்திர குப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார். சித்திர குப்தர் என்பதற்கு மறைந்துள்ள படம் எனப் பொருள்படும். இவர் உலக உயிர்களின் பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு எமதர்மனிடம் தருவார். அதனைக் கொண்டே உயிர்களின் அடுத்த பிறவி, முக்தி ஆகியவற்றை எமதர்மன் தீர்மானம் செய்வார் என்பது இந்து மக்களின் நம்பிக்கை.

    இவர் இடது காலை மடித்து வலது காலை ஊன்றி சுகாசனம் என்ற நிலையில் உள்ளார். தனது வலது கையில் எழுத்தாணியும் இடது கையில் ஓலைச்சுவடியும் வைத்திருப்பார். இவரிடம் என்றும் வற்றாத கணக்குப் புத்தகம் உள்ளது. அதன் பெயர் அக்கிர சந்தாணி ஆகும்.

    சித்திர குப்தனுக்கு என்று தனிக்கோவில் காஞ்சிபுரத்தில் உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று இங்கு சித்திர குப்தனுக்கு சித்திரலேகாவுடன் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. பின்னர் சித்திர குப்தர் மற்றும் சித்ரலேகா வீதி உலா வருகின்றனர்.

    சித்ரா பவுர்ணமி அன்று மதுரை, மானா மதுரை, பரமக்குடி போன்ற இடங்களில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் கிரிவல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் நமக்கும் மேலான சக்தி ஒன்று நம்மை இடைவிடாது கண்காணிக்கிறது எனவே தீய செயல்களை தவிர்த்து நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்பதே இவ்விழாவின் சாராம்சம் ஆகும்.

    மேலும் ஒற்றுமையுடன் பகிர்ந்துண்ணல், தான தர்மம் ஆகியவற்றையும் இவ்விழா எடுத்துரைக்கிறது. எனவே நாமும் இப்பிறவியில் தீமைகளை தவிர்த்து நன்மைகள் செய்து நன்நிலையை அடைய சித்ரா பவுர்ணமி அன்று வழிபாடு மேற்கொள்வோம்.

    • பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.
    • மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்வது ஆயுளை விருத்தியாக்கும்.

    மூன்றாம்பிறை பிறந்த கதை:

    ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர்.

    தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், `மூன்றாம் பிறையாக' அமரும் பேறு அருளினார்.

    சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

    மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.

    மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்க ளைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்க ளை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையன்று (சோமவாரத்தில்) வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

    • பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம்.
    • 211 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை செய்யப்பட்டது.

    கொல்லங்கோடு:

    தமிழக-கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மீன பரணி நாளில் பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக அம்மன்கள் இருவரும் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பச்சை பந்தலில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து தூக்கக்காரர்கள் குளித்து முடித்ததும் கோவிலை சுற்றி முட்டு குத்தி நமஸ்காரத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து முதலாவதாக அலங்கரிக்கப்பட்டிருந்த தூக்க தேரில் அம்மன் தூக்கம் நடத்தப்பட்டது. பிறகு வரிசையாக ஒவ்வொரு தூக்கமும் நடத்தப்பட்டது. இதற்காக ஒன்று முதல் 50 வரை உள்ள தூக்கக் காரர்கள் கோவிலில் வரிசையாக காத்திருக்க, மீதமுள்ள தூக்கக்காரர்கள் கச்சேரிநடை பகுதியில் உள்ள தறவாடு வீட்டிற்கு சென்று உடல் மற்றும் முகத்தில் கரும்புள்ளிகள் குத்தி வாளும் பரிவட்டமும் வாங்கி ஊர்வலமாக திருவிழா கோவிலை வந்தடைந்தனர்.

    திருமணமாகி குழந்தை பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டு குழந்தைபேறு கிடைக்கப் பெற்றால் அவ்வாறு கிடைக்கப்பெற்ற குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டி இந்த கோவிலில் தூக்க நேர்ச்சையை நடத்துகின்றனர் இதற்காக வடிவமைக்கப்பட்ட 48 அடி உயர தேரில் தூக்கக்காரர்கள் தொங்கியபடி நான்கு குழந்தைகளை தூக்கியபடி ஒரு முறை கோவிலை சுற்றி வலம் வர தூக்க நேர்ச்சையானது முடித்து வைக்கப்படுகிறது.

     இந்த தூக்க நேர்ச்சை நள்ளிரவு நேரத்தையும் கடந்து சென்றது. அந்த வகையில் மொத்தம் 211 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை செய்யப்பட்டது.

    இந்த திருவிழாவின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க குழந்தைகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு தூக்க நேர்ச்சையானது நடத்தப்பட்டது.

    தூக்க திருவிழாவை காண குமரி மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் கூட்டத்தின் காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்தது. திருவிழாவிற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழா ஏற்பாடுகளை தலைவர் ராமச்சந்திரன் நாயர், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி, துணைத் தலைவர் சசிகுமாரன் நாயர், இணைச்செயலாளர் பிஜூகுமார், உறுப்பினர்கள் சஜிகுமார், புவனேந்திரன் நாயர், ஸ்ரீகண்டன் தம்பி, ஸ்ரீ குமாரன் நாயர், பிஜூ, சதிகுமாரன் நாயர் உள்பட கமிட்டி அங்கத்தினர்கள் செய்திருந்தனர்.

    • பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி மணிகண்டன் போற்றி நடத்தி வைக்கிறார்.
    • பங்குனி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது.

    நாகர்கோவில்:

    பைங்குளம் அருகே கீழமுற்றம் பகுதியில் உள்ள நெடுவிளை பத்திரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் பங்குனி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாளை நண்பகல் 12 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி மணிகண்டன் போற்றி நடத்தி வைக்கிறார். தொடர்ந்து அன்னதானம், பஜனை, மாலை லட்சுமி பூஜை ஆகியவை நடக்கிறது.

    பங்குனி திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்கி 19-ந்தேதி வரை நடக்கிறது. விழா நாட்கள் தினமும் காலை நவ கலச பூஜை, அம்மனுக்கு பால் மற்றும் கலசாபிஷேகம், உஷபூஜை, சிறப்பு பூஜை, மதியம் அன்னதானம், மாலையில் திருவிளக்கு பூஜை, தீபாராதனை, இரவில் சிறப்பு பூஜை, புஷ்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 13-ந் தேதி சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள், இரவு சமய மாநாடு, 14-ந்தேதி பால்குட ஊர்வலம் தொடர்ந்து அம்மனுக்கு நெய், தேன், தயிர், பால், இளநீர் அபிஷேகம், 15-ந் தேதி அம்மனுக்கு களபாபிஷேகம், இரவு மகளிர் சமய வகுப்பு மாநாடு, பரிசு வழங்குதல், 16, 17-ந் தேதிகளில் அம்மனுக்கு குங்குமம், சந்தனத்தால் அபிஷேகம், 18-ந் தேதி இரவு அம்மனுக்கு பூப்படைப்பு, நள்ளிரவில் சிறப்பு பூஜை, 19-ந் தேதி காலை அம்மனுக்கு பூப்படைப்பு, பகலில் இசக்கியம்மன் கோவில் நேர்ச்சைகள், இசக்கியம்மனுக்கு பூப்படைப்பு, சிறப்பு பூஜை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • பரணி நட்சத்திரமான நேற்று மீன பரணிக்கொடை விழா நடந்தது.
    • கேரளாவிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மணவாளக்குறிச்சி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டுகட்டி தரிசனம் செய்வதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது. இங்கு கடந்த மாதம் 3-ந் தேதி மாசிக்கொடை விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி மார்ச் 12-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது.

    விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கடலில் புனித நீராடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான நேற்று மீன பரணிக்கொடை விழா நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு உருள் நேர்ச்சை, 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 8 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, குத்தியோட்டம் நடந்தது.

    தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை தொடங்கியது. ஒரு ஆண்டில் 3 முறை மட்டுமே நடக்கும் இந்த பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி இந்த பூஜை மாசி திருவிழாவின் ஆறாம் நாள், மீனபரணி கொடை விழாவன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும்தான் இந்த பூஜை நடத்தப்படும்.

    வலியபடுக்கை மகா பூஜையில் அம்மனுக்கு அவல் பொரி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தினை மாவு, தேங்காய், பழ வகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டது. அப்போது அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வலியபடுக்கை பூஜை நடந்தபோது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    விழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளாவிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தக்கலை, திங்கள்சந்தை, குளச்சல், நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தன.

    • பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
    • கோவில் கருவறையில் பூஜையில் வைக்கப்படுகிறது.

    திருவட்டார்:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இதனையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கொடிமரத்தில் ஏற்றுவதற்குரிய கொடிக்கயிறு ஆற்றூர் பள்ளிகொண்ட பள்ளிக்குழிவிளை தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. தொடர்ந்து மாலை தீபாராதனைக்கு முன்னதாக கோவில் கருவறையில் பூஜையில் வைக்கப்படுகிறது.

    பின்னர் நாளை அதிகாலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு, காலை 8.45 மணி முதல் 9.30 மணிக்குள் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு தீபாராதனையும், இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் விழா நாட்களில் தினமும் சுவாமி வாகனத்தில் பவனி வருதலும், விதவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    16-ந் தேதி இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்று நிகழ்ச்சியும் நடக்கிறது. 9-ம் திருவிழாவான 20-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவின் இறுதி நாளான 21-ந்தேதி மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி ஆராட்டுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்காக கழுவன்திட்டை, தோட்டவாரம் வழியாக சுவாமி ஊர்வலமாகச் சென்று ஆராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து சுவாமி மீண்டும் கோவிலுக்கு புறப்படுகிறார். நள்ளிரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    • 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை.
    • சன்னிதானத்தில் கனி காணல் சடங்குகளும் நடைபெறும்.

    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் மண்டல மகரவிளக்கு சீசன், பங்குனி உத்திர திருவிழா, விஷு, ஓணம் பண்டிகை உள்பட விசேஷ நாட்களில் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். அதன்படி சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.

    மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். பின்னர் வழக்கம்போல் பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

    இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் வழக்கமான பூஜைகளும், 18-ந் தேதி வரை 8 நாட்கள் நெய்யபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும். முன்னதாக 14-ந் தேதி விஷு பண்டிகை நாளில் சிறப்பு பூஜை அதிகாலை 3 மணி முதல் நடைபெறும். அன்றைய தினம் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தந்திரி, மேல் சாந்தி ஆகியோர் நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார்கள்.

    சன்னிதானத்தில் கனி காணல் சடங்குகளும் நடைபெறும். தொடர்ந்து ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். உடனடி தரிசன முன்பதிவிற்கு நிலக்கல்லில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதனையொட்டி அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசின் சிறப்பு பஸ்கள் பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கன்னூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உள்பட முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படும்.

    • வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.
    • பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி நகரின் வடகிழக்குத் திசையில் எழுந்தருளி உள்ள கருப்பு கங்கையம்மன் கோவிலுக்கு பெயர், ஊர் விவரம் குறிப்பிடப்படாத பக்தர் ஒருவர் வெள்ளியாலான கிரீடம், கவசம், நாகப்படகு ஆகியவற்றை காணிக்கையாக வழங்கினார். அதை கோவில் நிர்வாகிகள் பெற்று, அந்த பக்தருக்கு தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர்.

    அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் உற்சவர் அம்மனுக்கு அலங்காரம் செய்து, மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். வழிநெடுகிலும் பக்தர்கள் கங்கையம்மனுக்கு தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் தரிசனம் செய்தனர்.

    • வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
    • சுவாமி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருமலை:

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியளவில் அனுமன் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோண்டராமர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. பஜனைக்குழுவினர் பக்தி பஜனை பாடல்களை பாடினர். பெண்கள், சிறுமிகள் கோலாட்டம் ஆடினர்.

    அதைத்தொடர்ந்து காலை 10.30 மணியளவில் உற்சவர்களான சீதா, லட்சுமணருடன், கோதண்டராமருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 7 மணியில் இருந்து 8.30 மணி வரை யானை வாகனத்தில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பலன்களை அறுவடை செய்யும் நாள்தான் நோன்புப் பெருநாள்.
    • நோன்புப் பெருநாள் தர்மத்தை முதலில் வழங்கிட வேண்டும்.

    உலக முஸ்லிம்கள் ஒரு மாத காலம் புனித ரமலானில் நோன்பு நோற்று, அதன் பலன்களை அறுவடை செய்யும் நாள்தான் நோன்புப்பெருநாள் ஆகும்.

    இறைவன் நமக்கு அளித்த பாக்கியங்களுக்கு நன்றி பாராட்டும் நன்னாள்தான் பெருநாள். அனைவரும் அன்போடும், மகிழ்ச்சியோடும் ஆனந்தமாகக் கொண்டாடும் ஆனந்தத் திருநாள் தான் ரம்ஜான் பெருநாள்.

    நோன்புப் பெருநாள் அன்று கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான நற்செயல்கள் என்னவெனில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு அதிகாலை நேரத்தொழுகையை நிறைவேற்றிட வேண்டும். பிறகு, புத்தாடை அணிந்து, நறு மணம் பூசி, ஏதேனும் உணவு, பழங்களை ஒற்றைப்படையில் சாப்பிட வேண்டும்.

    சூரியன் உதயமாகி அதன் நிழல் மூன்று மீட்டர் அளவு சாயும் நேரம் வந்தவுடன் ஊர் மக்கள் ஒன்று கூடி, ஒற்றுமையாக திடல் நோக்கி செல்ல வேண்டும். அதற்கு முன்பு ஏழை எளியோருக்கு, நலிந்த மக்களுக்கு, விளிம்பு நிலையில் வாழும் பொருள் இல்லாதோருக்கு நோன்புப் பெருநாள் தர்மத்தை முதலில் வழங்கிட வேண்டும்.

    பெருநாள் தொழுகையை நிறைவேற்றச் செல்லும் போது வழியில் தென்படும் ஏழைகளுக்கு ஈகையை அள்ளி வழங்கிட வேண்டும்.

    தொழுகை முடிந்ததும் அமைதியாக கலைந்து சென்று, இல்லம் திரும்பும்போது மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் வழியில் தென்படும் ஏழை களுக்கும் ஈகைகளை வாரி வழங்கிட வேண்டும்.

    `சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் தொழுகைக்கு நபி (ஸல்) அவர்கள் புறப்படமாட்டார்கள்.' (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

    நோன்புப் பெருநாள் தொழுகை ஹிஜ்ரி 2-ம் ஆண்டு நோன்பு கடமையான அதே ஆண்டில் கடமையாக்கப்பட்டது. முப்பது நாட்கள் நாம் நோன்பு வைப்பதற்கு உதவிய இறைவனுக்கு நன்றி பாராட்ட இறைவன் வகுத்துக் கொடுத்த தினம் தான் பெருநாள் தினம். வகுத்துக் கொடுத்த தொழுகைதான் நோன்புப் பெருநாள் தொழுகை. நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை முடிந்ததும் சிறப்பு சொற்பொழிவு நடைபெறும்.

    `நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகையைத் தொழுதுவிட்டுப் பிறகு உரை நிகழ்த்துவார்கள்.' (அறிவிப் பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    `நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரகஅத்கள் தொழுதார்கள். அதற்கு முன்னும்-பின்னும் எதையேனும் தொழவில்லை.

    பிறகு, பெண்கள் பகுதிக்கு வந்தார்கள். அவர்களுடன் பிலால் (ரலி) இருந்தார். தர்மம் செய்வதின் அவசியம் குறித்து நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு விளக்கினார்கள். பெண்கள் தங்கள் பொருட்களைப் போட்டனர். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும், வளையல்களையும் போடலானார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    பெருநாள் தினத்தின் தொழுகையிலும் கூட இறைவனுக்கு அடுத்து ஏழைகளின் நலனை நினைத்து, அவர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களுக்கான தர்மங்களை வசூல் செய்து அரசு கருவூலத்தில் சேர்த்து வைத்தார்கள்.

    நோன்புப் பெருநாள் தொழுகை முடிந்ததும் அனைவரும் ஒன்று கூடி, அறுசுவை விருந்து படைத்து, அனைவரும் உண்டு மகிழ்ந்து பிறரையும் உண்டு மகிழச் செய்து, எல்லோரிடமும் இணங்கி பெருநாளைக் கொண்டாட வேண்டும்.

    இரண்டு பெருநாட்களிலும் விதவிதமான உணவு பண்டங்களை சமைத்து, வயிறார உண்டு பிறரின் பசியையும் போக்க வேண்டும். இரண்டு பெருநாட்களிலும் பட்டினியாக இருந்து நோன்பு நோற்பதை இஸ்லாம் தடை செய்கிறது.

    `நபி (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாள், மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.' (ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்)

    1) பெருநாளில் இறைவனை வணங்கி வாழவேண்டும்,

    2) இல்லாதவருக்கு வழங்கி வாழ வேண்டும்,

    3) எல்லோரிடமும் இணங்கி வாழ வேண்டும்.

    இதுதான் இஸ்லாமிய இரு பெருநாட்களின் தத்துவமாக அமைந்துள்ளது. பெருநாள் அன்று இனிய மாலைப் பொழுதினிலே கேளிக்கை, நையாண்டி, ஆடல்-பாடல் வீண் விளையாட்டுகளில் ஈடுபடாமல் வீர விளையாட்டுகளில் ஈடுபட்டு உடல் உறுதியுடனும், மன வலிமையுடனும் மனநிறைவாக மகிழ்ந்து கொண்டாடுவோம்.

    பெருநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் யாருக்கும் தொந்தரவு தரக்கூடாது. மார்க்கத்திற்கு முரணாக உள்ள அனாச்சாரங்களில் ஈடுபடக்கூடாது.

    • தாரா தேவியை வணங்கினால் குருபகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கிவிடும்.
    • உபாசனை, ஏவல் சக்திகளை ஒடுக்கி ஞானம் அளிக்கும்.

    காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, பைரவி, ஸ்ரீ சின்னமஸ்தா, ஸ்ரீ தூமாவதி, ஸ்ரீ பகளாமுகி, ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீகமலாத்மிகா என்ற பத்து தேவியர்கள் தசமகா வித்யா தேவியர் என்று அழைக்கப்படுகின்றனர். அதில் இரண்டாவது தேவி தாரா தேவி.

    பாற்கடலை தேவர்கள் கடைந்த பொழுது, வந்த ஆலகால விஷத்தை பரமசிவன் விழுங்க வேண்டிய நேரத்தில், அதை தொண்டையிலேயே தடுத்து நிறுத்திய தேவி தாரா தேவி. இந்த தாரா தேவியை வணங்கினால், ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படுகின்ற தோஷங்கள் நீங்கிவிடும்.

    வாக்கு வல்லமை, அளவற்ற செல்வம் தந்து, ஞானமும், முக்தியும் கிட்டச் செய்யும். உலக இச்சையை கத்தரிக்கும். உபாசனை, ஏவல் சக்திகளை ஒடுக்கி ஞானம் அளிக்கும்.

    தாரா தேவியின் வரலாறு

    தாரா தேவி மேரு மலையின் மேற்கு பகுதியில் சோல்னா ஆற்றின் கரையில் பிறந்தார். சுதந்திர தந்திரத்தின் படி, தாரா தேவி கடற்கரையில் தோன்றினார். ஹயக்ரீவன் என்ற அசுரனை வதம் செய்வதற்காக மகா காளி தேவி நீல் வர்ணத்தை அணிந்தாள்.

    மஹாகால சம்ஹிதாவின் படி, 'தாரா தேவி' சைத்ர சுக்ல அஷ்டமி திதியில் தோன்றினார், இதன் காரணமாக இந்த தேதி தாரா-அஷ்டனி என்றும், சைத்ர சுக்ல நவமியின் இரவு தாரா-ராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.

    தாரா ஜெயந்தியின் முக்கியத்துவம்

    சைத்ரா மாத நவமி திதியிலும் சுக்ல பக்ஷத்திலும் தாரா தேவியை வழிபட வேண்டும் என்ற விதி உள்ளது. தாரா தேவி மனிதனின் வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்கள், இடர்பாடுகள் மற்றும் பிரச்சனைகளை நீக்குகிறாள். அன்னை தாராவின் ஆன்மீக பயிற்சி முழுமையான அகோரி சாதனாவாக கருதப்படுகிறது.

    தாரா ஜெயந்தி நாளில் ஒருவர் அன்னை தாராவை அனுஷ்டித்து வந்தால், அவருக்கு பிரபஞ்ச மகிழ்ச்சியும், அமைதியும், செழிப்பும் கிடைக்கும். அன்னை தாரா ஜெயந்தி நாளில் வழிபவடுபவர்களுக்கு அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுகிறார்.

    இது தவிர தாரா ஜெயந்தி அன்று அன்னை தாராவை வழிபட்டு வந்தால் பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். அன்னை தாரா தேவி முக்தியை வழங்கும் தெய்வமாகவும் கருதப்படுகிறார்.

    • இன்று கார்த்திகை விரதம்.
    • ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 29 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை இரவு 7 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: பரணி காலை 6.16 மணி வரை பிறகு கிருத்திகை நாளை விடியற்காலை 5.16 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று கார்த்திகை விரதம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி காலை நவநீத கிருஷ்ண சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நட்பு

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-உயர்வு

    கடகம்-போட்டி

    சிம்மம்-வெற்றி

    கன்னி-பெருமை

    துலாம்- செலவு

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- புகழ்

    மகரம்-நன்மை

    கும்பம்-பொறுப்பு

    மீனம்-உண்மை

    ×