என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இன்று பிரதோஷம்.
    • சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-27 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி காலை 10.30 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: ஆயில்யம் பின்னிரவு 3.52 மணி வரை பிறகு மகம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று பிரதோஷம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் தங்க கைலாச பர்வதம் அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் பவனி. குடந்தை ஸ்ரீ ஆதிகும்பேசுவரர் ரதோற்சவம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பால் குடக்காட்சி. காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் வள்ளி திருமணக் காட்சி. பெருவயல் ஸ்ரீ சுவாமி புஷ்பக விமானத்தில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் சிறப்பு அபிஷேகம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை கோவில்களில் காலை அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலை திருமஞ்சனம். திருவிடை மருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கோவில்களில் மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆசை

    ரிஷபம்-பாசம்

    மிதுனம்-உயர்வு

    கடகம்-ஆதரவு

    சிம்மம்-பெருமை

    கன்னி-பொறுப்பு

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-விவேகம்

    தனுசு- வாழ்வு

    மகரம்-பக்தி

    கும்பம்-புகழ்

    மீனம்-நற்செயல்

    • 8-ம் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம்திருவிழா தேரோட்டம் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 5-ம்திருவிழாவில் குடைவருவாயில் தீபாராதனையும், 7-ம்திருவிழாவான நேற்று காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மாலை 4.20 மணிக்கு சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.

    8-ம்திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி சண்முகர் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது. மதியம் 12மணிக்கு சுவாமி சண்முகர் விஷ்ணு அம்ச மாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம்திருவிழா தேரோட்டம் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடக்கிறது. அன்று காலை 7மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது .

    (13-ந்தேதி) தெப்ப திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    (14-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவுபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது.
    • உலகை காப்பதற்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம் இந்த பிரதோஷ காலமாகும்.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் இரண்டு காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும். அதிலும் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷ விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும்.

    இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பாகும். பிரதோஷ நேரம் மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ளதாகும். பிரதோஷ வேளையான இந்நேரத்தில் சிவபெருமானையும், நந்தி தேவரையும் தரிசிப்பது மிகவும் சிறப்பானது. நினைத்த காரியம் கைகூடும். வேண்டுதலும் நிறைவேறும் என்பது ஐதீகம்.



    சிவனை தேவர்கள் மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம் என்று அழைக்கப்படுகிறது. உலகை காப்பதற்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம் இந்த பிரதோஷ காலமாகும். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்கள் பிரார்த்தனைகளை ரகசியமாக சொல்வார்கள்.

    அந்த வகையில் நாளை (செவ்வாய் கிழமை) பிரதோஷ வழிபாடு உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும்.

    செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது. பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் சிவாலயங்களில் சிவ வழிபாடு செய்வதால் எல்லா தோஷமும் நீங்கிவிடும். சர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம் என்று அழைக்கப்படுகிறது. உலகை காப்பதற்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம் இந்த பிரதோஷ காலமாகும்.

    செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், மேஷ, விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரகாரர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும்.

    செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருனம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு. இதனால் செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு தோஷமும் விலகும்.

    இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இலை அல்லது பசும்பாலினை அபிஷேகத்திற்கு கொடுப்பதால் சகல நன்மைகளும் கிடைக்கும். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று புராண நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

    ருணம் என்றால் கடன். கடன் பிரச்சனையால் இன்றைக்கு பலரும் தத்தளிக்கின்றனர். ரோகம் என்றால் நோய். கடனும் நோயும்தான் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நோயினால் பலரும் கடனாளியாகின்றனர்.

    நாளைய தினம் ருண விமோசன பிரதோஷ வேளையில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதோடு செவ்வாய் பகவானையும் வணங்கி வழிபட்டால் தீராத கடன்களும் தீரும் என்பது நம்பிக்கை. ரத்ததானம், அன்னதானம், பூஜைகளுக்காக மலர் தானம் போன்றவை செய்வது நல்லது.

    அபிஷேகப்பிரியரான சிவனடியார்க்கு கறந்த பாலில் அபிசேகம் செய்வது சிறப்பு. தூய்மையான இளநீரில் அபிஷேகம் செய்வதும் நன்று. இயற்கையான வில்வ இலை, தும்பைப் பூ மாலை, கறந்த பால் ஆகியவற்றைக்கொண்டு பிரதோஷ நாளில் அபிஷேகம் செய்தால் சகலதோஷங்களும், பிரம்மஹத்தி தோஷமும், ஏழு ஜென்மங்களில் உண்டான தோஷமும் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்வித்தாலும் கடன் விரைவில் அடையும்.

    ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட்டால் தீராத கடன் தீரும். மேலும் கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெரும்பங்காற்றுகின்றனர்.

    கடன் வாங்குவதற்கு நேரம் காலம் ரொம்ப முக்கியம். திருப்பி அடைப்பதற்கும் நேரம் ரொம்ப முக்கியம். ராகு கேது போன்ற பாம்பு கிரகங்களுடன் குரு சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடன் அடைக்கவோ முயற்சி செய்ய கூடாது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது. சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. அதற்கு பதிலாக செவ்வாய்கிழமைகளில் கடன் அடைக்கலாம்.

    சிவனுக்கு மட்டுமல்ல. ஸ்ரீ மகா விஷ்னுவிற்கும் பிரதோஷ நேரம் உகந்த காலம்தான். பிரகலாதனின் பக்தியை மெய்பிக்கவும் ஹிரண்ய கசிபுவை வதம் செய்து உலகை காக்கவும் தூணிலிருந்து நர நாராயண ரூபமாய் உக்ர நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்த காலம் இந்த பிரதோஷ காலம்தான். எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.

    செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ருணம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது. செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும். பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும்.

    எந்த ராசி, நட்சத்திரத்தை உடையவராக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் பிரதோஷ நேரத்திலே குளித்து விட்டு வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும், நோய்களும் நீங்கும் என்பது சிவ வாக்கு.

    உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும், வருமானம் அதிகரிக்கும். நாளைய பிரதோஷ தினத்தில் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து பூஜித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ருண விமோசன பிரதோஷ நாளில் இருக்கும் மவுன விரதம் கூடுதல் பலன் தரும். இந்த நாளில் சிவபுராணம், நீலகண்டப் பதிகம், கோளறு பதிகம், திருக்கடவூர், திருப்பாசூர் பதிகங்கள் போன்றவற்றைப் பாராயணம் செய்வது நல்ல பலனைத் தரும்.

    • 10-ம் திருவிழா தேரோட்டம் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடக்கிறது.
    • இன்று காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதியுலா.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 5-ம்திரு விழாவில் குடைவருவாயில் தீபாராதனையும், 7-ம்திரு விழாவான நேற்று காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    மாலை 4.20 மணிக்கு சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.

    8-ம்திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி சண்முகர் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.

    மதியம் 12 மணிக்கு சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடக்கிறது. அன்று காலை 7மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது .

    11-ம்திருவிழாவான (13-ந் தேதி) தெப்ப திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கி றார்.

    12-ம்திருவிழாவான (14-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி,அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தினமும் 14 மணிநேரம் பக்தர்களின் குறை தீர்த்தருளுகிறார் கொளஞ்சியப்பர்.
    • இத்தலத்தில் பிராது கட்டுதல் என்று ஒரு வழிபாடு இருக்கிறது.

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பஸ் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது மணவாள நல்லூர் கொளஞ்சியப்பர் கோவில். இத்தலத்திற்கு செல்ல விருத்தாசலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதிகள் இருக்கின்றன.

    இங்கே இன்னொரு வசதி, மற்ற கோவில்களைப் போல மதிய வேளையில் நடை சாத்தப்படாதது தான். காலை 6 முதல் இரவு 8 மணி வரை நடை திறந்தே இருக்கும். தினமும் 14 மணிநேரம் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் குறை தீர்த்தருளுகிறார் கொளஞ்சியப்பர்.

    விநாயகருக்கும் கொளஞ்சியப்பருக்கும் தனித்தனி விமானங்கள் உள்ளன. சுமார் 3 உயரம் கொண்ட பலி பீட வடிவம் கொண்ட கொளஞ்சியப்பரின் பீடத்தில் ஷடாட்சரம் பொறிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது.


    இந்த கொளஞ்சியப்பர் இப்பகுதி மக்கள் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் வாழும் பக்தர்களுக்கெல்லாம் மகா நீதிபதியாய் இருந்து நல்ல தீர்ப்பும் நல்வாழ்வும் வழங்கி அருள்கிறார்.

    உண்மைதான், இத்தல நாதன் முருகன் ஒரு மகா நீதிபதிதான். இத்தலத்தில் பிராது கட்டுதல் என்று ஒரு வழிபாடு இருக்கிறது. கோவிலின் பிராகாரத்தில் அதற்காக முனீஸ்வரன் சந்நதி அருகே ஒரு இடமும் இருக்கிறது.

    பிராது கட்டுவது என்றால் என்ன? கோவில் அலுவலகத்தில் மனு எழுதிட தாள் கிடைக்கிறது. அதில், 'மணவாளநல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு.......' என ஆரம்பித்து, 'நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன். இன்னாருடைய மகன். என் பெயர் இது..' என்பன போன்ற விவரங்களை எழுதி தனது குறை, கோரிக்கை என்ன என்பதையும் குறிப்பிட்டு, கொளஞ்சியப்பர் சன்னதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் தர வேண்டும்.


    அதை, அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சன்னதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலில் கட்ட வேண்டும். பிராது கட்டியவர்களின் கோரிக்கை பிராது கொடுத்த 90 நாட்களுக்குள் ஈடேறும் என்பது பக்தர்களின் அனுபவம்.

    குழந்தைப் பேறு, கடன் தொல்லை தீர, திருடு போன பொருள் கிடைக்க, ஏமாற்றப்பட்ட பணம் திரும்ப கிடைக்க, பிரிந்து இருக்கும் கணவன், மனைவி ஒன்று சேர, தீராத நோய் தீர, தொலைந்த கால்நடைகள் திரும்ப கிடைக்க, பங்காளி சண்டை, துரோகம் தொலைய, வேலை வேண்டி, வேலை மாற்றம் என பல கோரிக்கை களை பிராது சீட்டில் எழுதி, குமரன் குறைகளைத் தீர்த்தருள்வான் என்ற நம்பிக்கையோடு கட்டுகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புனித நீராடி, தங்களின் பாவங்களை போக்கிக் கொள்கிறார்கள்.
    • தங்களை புதுப்பித்துக் கொள்ளும் புண்ணிய நாள் மாசி மகம்.

    கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவேரி, சரயு, குமரி ஆகியன நவ நதிகள் என போற்றப்படுகின்றன. புண்ணிய நதிகளாக போற்றப்படும் இந்த நதிகளில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பதால் ஆண்டு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த நதிகளில் புனித நீராடி, தங்களின் பாவங்களை போக்கிக் கொள்கிறார்கள். இதனால் புனித நதிகளான இவைகளில் அதிக பாவங்கள் சேர்ந்தன.

    இதனால் கவலை அடைந்த இந்த நவ நதிகளும் சிவ பெருமானிடம் சென்று, தங்களிடம் சேர்ந்த பாவங்களை போக்கிக் கொள்ள என்ன வழி என கேட்டன. அதற்கு அவர், மக நட்சத்திரமும் பவுர்ணமியும் இணையும் மாசி மாதத்தில் கும்பகோணம் மகாமகம் குளத்தில் சென்று நீராடி உங்களின் பாவங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

    அதன்படி நவ நதிகளும் கும்பகோணம் மகாமகம் குளத்தில் எழுந்தருளி, தங்களின் பாவத்தை போக்கிக் கொண்டு, தங்களை புதுப்பித்துக் கொள்ளும் புண்ணிய நாள் இந்த மாசி மகம்.

    இதே போன்று வருண பகவானின் தோஷத்தை போக்கிய சிவ பெருமான், இந்த நாளில் யார் ஒருவர் நீர் நிலைகளில் நீராடுகிறார்களோ அவர்களின் பாவங்கள், தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என வரமளித்த நாளும் மாசி மகம் தான்.


    என்ன செய்ய வேண்டும்?

    மாசி மகம் அன்று வாய்ப்பு இருப்பவர்கள் கும்பகோணம் மகாமகம் குளத்திற்கு சென்று, அதிகாலையில் நீராடி, கோவிலுக்கு சென்று வழிபடலாம். கும்பகோணம் செல்ல முடியாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஆறு, கோவில் குளங்கள், நீர் நிலைகளில் நீராடலாம்.

    மாசி மகத்தன்று அனைத்து நீர் நிலைகளிலும் இந்த புண்ணிய நதிகள் எழுந்தருள்வதாக ஐதீகம். அதனால் இந்த நீர்நிலைகளில் நீராடி, கும்பகோணம் குளத்தில் நீராடி பலனை பெறலாம்.

    அதிகாலையில் நீராடிய பிறகு, அதே நீர் துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டும்.

    திதி, அமாவாசை தர்ப்பணம் வழக்கமாக கொடுப்பவர்களாக இருந்தாலும், மாசி மகத்தன்று தவறாமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதன் மூலம் இதுவரை அமாவாசை நாளில் விரதம் இருந்து திதி கொடுக்க தவறிய பாவம், தர்ப்பணம் கொடுக்கும் போது தெரிந்தும், தெரியாமல் செய்த பாவங்கள் என ஏழு தலைமுறைகளிலும் தெரியாமல் செய்த பாவங்கள் கூட தீரும்.

    • இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்தம்.
    • ஸ்ரீ இம்மையில் நன்மை தருவார் திருக்கல்யாணம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-26 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: ஏகாதசி காலை 10.43 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: பூசம் பின்னிரவு 3.07 மணி வரை பிறகு ஆயில்யம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்தம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீ இம்மையில் நன்மை தருவார் திருக்கல்யாணம். பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு விஷணுவாம்சம் காட்சி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கல்யாணம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் திருவீதிஉலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி. திருவிடை மருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் அருகில் 2-ம் நவ திருப்பதி திருவரகுணமங்கை என்கிற நத்தத்தல் மூலவர் விஜயாசன பெருமாள் மற்றும் தாயார்கள் வரகுண வல்லித்தாயார், ஸ்ரீ வரகுணமங்கைக்கு காலையில் சிறப்பு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுமை

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-வரவு

    கடகம்-வெற்றி

    சிம்மம்-நட்பு

    கன்னி-களிப்பு

    துலாம்- செலவு

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- பாராட்டு

    மகரம்-பொறுப்பு

    கும்பம்-நிறைவு

    மீனம்-முயற்சி

    • கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இன்று மாலை சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.

    7-ம்திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்ந்தார்.

    அங்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைக்கு பிறகு மாலை 4.20 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    8-ம்திருவிழாவான நாளை(திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம்திருவிழா தேரோட்டம் 12-ந் தேதி (புதன்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடக்கிறது. 11-ம் திருவிழாவான 13-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    12-ம்திருவிழாவான 14-ந்தேதி மாலையில் சுவாமி,அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
    • தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்ப திருவிழா இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

    இதற்காக பல்வேறு வகையான மலர்கள் மற்றும் மின்விளக்கு அலங்காரம் செய்து தெப்பல் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இன்று மாலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் அங்குள்ள கோவில் புஷ்கரணியில் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. தெப்ப உற்சவத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் கோவிலில் நடைபெறும் சகஸ்ர தீப அலங்கார சேவைகளும், 11, 12, 13 ஆகிய தேதிகளில் ஆர்ஜீத சேவைகள் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    திருப்பதியில் நேற்று 74,646 பேர் தரிசனம் செய்தனர். 30 769 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ 3.52 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • வாகன ஓட்டிகள் யானைகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வனத்துறை அறிவிப்பு.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது மலைப்பாதையில் 7-வது மைல் அருகே திடீரென வனப்பகுதியில் இருந்து யானை கூட்டம் சாலையையொட்டி வந்தது.

    இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். உடனே இதுகுறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த விஜிலென்ஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் வாகன ஓட்டிகள் யானைகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது. செல்போன்களில் படம் பிடிப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் யானைகள் நடைபாதை வழியாகவோ அல்லது வாகனங்கள் செல்லும் மலைப்பாதை வழியாகவோ வராத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு திருமஞ்சனம்.
    • திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-25 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: தசமி காலை 11.24 மணி வரை. பிறகு ஏகாதசி.

    நட்சத்திரம்: புனர்பூசம் பின்னிரவு 2.50 மணி வரை. பிறகு பூசம்.

    யோகம்: சித்தயோகம்.

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு திருமஞ்சனம். காரமடை ஸ்ரீஅரங்கநாதர் கருட வாகனத்தில் உலா. காங்கேயம் ஸ்ரீமுருகப்பெருமான் ரதோற்சவம். குடந்தை ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கைலாச வாகனத்திலும் அம்பாள் ஏக சிம்மாசனத்திலும் பவனி. குலசேகர ஆழ்வார் திருநட்சத்திர வைபவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் வெங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீகாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீஅங்காரகருக்கும் ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செயல்

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-தேர்ச்சி

    கடகம்-அமைதி

    சிம்மம்-பாசம்

    கன்னி-பண்பு

    துலாம்- சாந்தம்

    விருச்சிகம்-புகழ்

    தனுசு- உயர்வு

    மகரம்-சுகம்

    கும்பம்-கவனம்

    மீனம்-சுபம்

    • குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சனம்.
    • காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சிறிய திருவடி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-24 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி நண்பகல் 12.32 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: திருவாதிரை பின்னிரவு 3.01 மணி வரை

    பிறகு புனர்பூசம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சனம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சிறிய திருவடி புறப்பாடு. மதுரை இம்மையில் நன்மை தருவார் ரிஷப வாகனத்தில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. திருவெண்காடு, திருவொற்றியூர், திருத்தணி கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடு. குடந்தை ஸ்ரீ சக்கரபாணிப் பெருமாள் ஸ்ரீ அனுமன் வாகனத்தில் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு திருமஞ்சனம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவர், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-களிப்பு

    ரிஷபம்-கடமை

    மிதுனம்-கண்ணியம்

    கடகம்-நலம்

    சிம்மம்-ஓய்வு

    கன்னி-புகழ்

    துலாம்- மாற்றம்

    விருச்சிகம்-திடம்

    தனுசு- ஈகை

    மகரம்-நன்மை

    கும்பம்-உதவி

    மீனம்-வெற்றி

    ×