என் மலர்
வங்காளதேசம்
- வங்கதேசம் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 587 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
- அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் 254 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டாக்கா:
வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஸ்டெர்லிங் 60 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய வங்கதேசம் 8 விக்கெட்டுக்கு 587 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஹசன் ஜாய் அதிகபட்சமாக 171 ரன்கள்எடுத்தார். ஷாண்டோ சதமடித்து அவுட்டானார்.
இதையடுத்து, 301 ரன்கள் பின்தங்கிய நிலையில் அயர்லாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து அணி விரைவில் விக்கெட்களை இழந்தது. மூன்றாம் நாள் முடிவில் அயர்லாந்து 5 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆண்டி மெக்பிரின் அரை சதம் கடந்து 52 ரன்னும், கேப்டன் ஆண்ட்ரூ பால்பெரின் 38 ரன்னும், ஜோர்டான் நெயில் 36 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் 254 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்கதேசம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- வங்கதேசம் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 587 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
- அந்த அணியின் ஹசன் ஜாய் அதிகபட்சமாக 171 ரன்கள்எடுத்தார்.
டாக்கா:
வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஸ்டெர்லிங் 60 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய வங்கதேசம் 8 விக்கெட்டுக்கு 587 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஹசன் ஜாய் அதிகபட்சமாக 171 ரன்கள்எடுத்தார். ஷாண்டோ சதமடித்து அவுட்டானார்.
இதையடுத்து, 301 ரன்கள் பின்தங்கிய நிலையில் அயர்லாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து அணி விரைவில் விக்கெட்களை இழந்தது.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் அயர்லாந்து 5 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
அயர்லாந்தைவிட 215 ரன் முன்னிலை பெற்றுள்ளதால், மீதமுள்ள 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வங்கதேசம் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
- வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
- இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.
டாக்கா:
வங்கதேசத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதைத் தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது.
புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உள்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
கடந்த ஆகஸ்டில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை மந்திரி, முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஆகியோர் மீது மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஷேக் ஹசீனாவுக்கான தண்டனையை நவம்பர் 17-ம் தேதி வெளியிட இருப்பதாக அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
- அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டது.
- இந்த திட்டத்துக்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் காட்சி மாணவர் போராட்டங்களால் கவிழ்ந்தது. இதன்பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இந்நிலையில் அண்மையில் அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்தார்.
கல்வி அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் இந்த திட்டத்துக்கு அந்நாட்டின் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த திட்டம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்றும் பள்ளிகளில் மத ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அரசு இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.
இதனை தொடர்ந்து, அரசு பள்ளிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பதவிகளை இடைக்கால அரசு ரத்து செய்தது. இதன்மூலம் ஆரம்ப பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் கைவிடப்பட்டன.
இந்நிலையில், வங்கதேச பள்ளிகளில் இசை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்தும் முடிவை ரத்து செய்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கண்டித்து அந்நாட்டில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருபுறம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் ஷேக் ஹசீனா மீதான குற்றவியல் வழக்குகளை கண்டித்து அவாமி லீக் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளதால் வங்கதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இரண்டாம் நாள் முடிவில் வங்கதேசம் ஒரு விக்கெட்டுக்கு 338 ரன்கள் குவித்துள்ளது.
சிலெட்:
அயர்லாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சிலெட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்து வருகிறது.
அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆடிய வங்கதேசம் அணி இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டகாரர் ஷட்மன் இஸ்லாம் 80 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மஹ்முதுல் ஹசன் ஜாய் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 169 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மொமினுல் ஹக் 80 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
இந்நிலையில், ஹசன் ஜாய் வரலாற்றை மாற்றி எழுதுவார் என ஷட்மன் இஸ்லாம் நம்பிக்கை தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஷட்மன் கூறுகையில், சிறப்பாக ஆடி வரும் ஹசன் ஜாய் வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை நிச்சயம் செய்து காட்டுவார் என தெரிவித்தார்.
வங்கதேச அணிக்காக ஒரு இன்னிங்சில் அதிகமாக முஷ்பிகுர் ரஹிம் 219 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்கதேசத்தில் இருந்து தப்பியோடிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
- ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.
வங்கதேசத்தில் கடந்த வருடம் போராட்டம் வெடித்தது. இதனால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவர் மீது முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச அரசு பல வழக்குகளை பதிவு செய்தது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனா முன்னணி வெளிநாடு மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மீடியாக்களுடன் உரையாடினார். இந்த நிலையில் டாக்காவில் உள்ள இந்திய துணை தூதரை அழைத்து, இந்த விசயம் தங்களுக்கு மிகக் கவலை அளிக்கிறது. ஷேக் ஹசீனா மீடியாக்களை சந்திப்பதை உடடினாக துண்டிக்க வேண்டும் என்ற வங்கதேசம் வேண்டுகோள் விடுத்ததாக, இந்திய அரசிடம் தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
- மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்தார்.
- இந்த திட்டம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என அடிப்படைவாத அமைப்புகள் எதிர்த்தன.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் காட்சி மாணவர் போராட்டங்களால் கவிழ்ந்தது. இதன்பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இந்நிலையில் அண்மையில் அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்தார்.
கல்வி அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் இந்த திட்டத்துக்கு அந்நாட்டின் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த திட்டம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்றும் பள்ளிகளில் மத ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அரசு இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பதவிகளை ரத்து செய்வதாக வங்கதேச கல்வித் துறை அதிகாரி மசூத் அக்தர் கான் நேற்று அறிக்கை வெளியிட்டார். இதன்மூலம் ஆரம்ப பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் கைவிடப்பட்டன.
- வங்கதேச அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
- இது தொடர்பான வரைவில் கையெழுத்திட அரசியல் கட்சிகள் மறுப்பு தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இளைஞர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் மாதம் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்துகளுடன் வங்கதேசத்தின் அரசியலமைப்பு, வாக்குமறை, நிர்வாகம் ஆகியவற்றில் பல திருத்தங்கள் கொண்டுவர முடிவு செய்தது.
இது தொடர்பாக இடைக்கால அரசு ஒரு வரைவு திட்டத்தை உருவாக்கியது. அதில் கையெழுத்திட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது. ஆவணங்களில் கையெழுத்திட கடந்த மாதம் 17ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சீரமைப்பு செயல்படுத்தும் செயல்பாட்டில் வேறுபாடுகள் வெளிபட்டன. முக்கிய கட்சிகள் வாக்கெடுப்பை தேர்தல் நாளில் அல்லது அதற்கு முன்னதாக நடத்த வேண்டும் கோரிக்கை விடுத்தது. சில கட்சிகள் நவம்பர் மாதம் (இந்தமாதம்) நடத்த வேண்டும் எனத் தெரிவித்தது.
இதனால் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்த நிலையில் ஒரு வாரத்திற்குள் ஒருமித்த கருத்துக்கு வாருங்கள் என அனைத்து கட்சிகளையும் இடைக்கால அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இல்லையென்றால், அரசு தனது சொந்த முடிவை எடுக்கும் என அறிவித்துள்ளது.
- தலைநகர் டாக்காவில் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸை சந்தித்தார்.
- து யூனுஸ் பேசிய கருத்துக்களுக்குப் பதிலடியாக, வங்கதேசத்துக்கான போக்குவரத்து ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்திருந்தது
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா சமீபத்தில் வங்கதேசம் சென்றிருந்தார்.
அங்கு தலைநகர் டாக்காவில் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸை சந்தித்தார்.
இந்நிலையில் முகமது யூனுஸ், சாஹிர் மிர்சாவுக்குப் பரிசாக அளித்த புத்தகத்தின் அட்டைப்படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தில், இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய 'கிரேட்டர் பங்களாதேஷ்' பகுதியாக வங்கதேசம் காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, வடகிழக்கு மாநிலங்கள் குறித்து யூனுஸ் பேசிய கருத்துக்களுக்குப் பதிலடியாக, வங்கதேசத்துக்கான போக்குவரத்து ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- முதலில் பேட் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 296 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 117 ரன்களில் ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
டாக்கா:
வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி முதலில் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசமும், 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்று ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சவுமியா சர்க்கார் 91 ரன்னும், சையிப் ஹசன் 80 ரன்னும், ஷாண்டோ 44 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அகேல் ஹோசைன் 4 விக்கெட்டும், அலிக் அதனேஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. வங்கதேச அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 30.1 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 179 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.
- ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது இந்தியாவுடன் வங்கதேசம் பல ஒப்பந்தம் போட்டுள்ளது.
- இடைக்கால அரசு 10 ஒப்பந்தங்களை ரத்து செய்ததாக தகவல் செய்திகள் வெளியானது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
அதன்பிறகு இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது. இந்தியாவுடன் போடப்பட்ட 10 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுளளதாக செய்திகள் வெளியானது.
தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பட்டியல் சரியானது அல்லது என வங்கதேசம் வெளியுறவத்துறை அமைச்சகம் தெரிவித்தள்ளார். வெளியுறவு விவகாரம் ஆலோசகர் எம். தவுஹித் ஹொசைன் "ஒரேயொரு ஒப்பந்தம் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான ஹொசைன் "இந்தியாவிடம் இருந்து இழுவைப்படகு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதிப்பீடு செய்த பிறகு, வங்கதேசத்திற்கு இதனால் எந்த ஆதாயமும் இல்லை என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம் என்றார்.
- தீ விபத்தைத் தொடர்ந்து அனைத்து விமான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.
- தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்ற்னர்.
வங்கதேச தலைநகர் டாக்காவின் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தைத் தொடர்ந்து அனைத்து விமான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.
விமான நிலையத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் இடத்தில தீ விபத்து ஏற்பட்டது.
விமான நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்ற்னர்.






