என் மலர்tooltip icon

    உலகம்

    • 5 கோடி பயனர்களுக்கு வங்கி கணக்கில் 10 ஆயிரம் பஹ்ட் செலுத்தப்படும்
    • பல பில்லியன் டாலர்கள் செலவாகும் என்பதால் பொருளாதார நிபுணர்கள் எதிர்த்தனர்

    தாய்லாந்து நாட்டின் கரன்சி பஹ்ட் (baht) என்றழைக்கப்படும். அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்துள்ளதால், பஹ்ட், மதிப்பிழந்து வருகிறது.

    நாட்டின் நிதிநிலைமையை மீண்டும் சீராக்க, 61 வயதான தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் (Srettha Thavisin) பல முயற்சிகளை எடுக்க உள்ளார். அதில் ஒன்றாக அந்நாட்டு மக்கள் 5 கோடி பேருக்கு "டிஜிட்டல் வாலட் ப்ரோக்ராம்" (Digital Wallet Program) எனும் திட்டத்தின்படி ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும், 10,000 பஹ்ட் - ரூ.23,323.76 ($280) - மின்னணு முறையில் செலுத்தவிருக்கிறார்.

    இதற்கு பயனாளியாக தகுதி பெற விரும்பும் குடிமக்கள், மாதம் 70,000 பஹ்ட்டிற்கு குறைவாக வருமானம் ஈட்ட வேண்டும்; 5 லட்சம் பஹ்ட்டிற்கு குறைவாக வங்கியில் இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

    முன்னர் 16 வயதிற்கு மேற்பட்ட 5 கோடியே 60 லட்சம் பேருக்கு வழங்கப்படுவதாக இருந்த டிஜிட்டல் வாலட் திட்டத்தின் பயனர்கள் எண்ணிக்கை, சற்று குறைக்கப்பட்டு 5 கோடி பேர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த வருட மே மாதம் முதல் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.

    மொத்தம் 14 பில்லியன் அமெரிக்க டாலர் இத்திட்டத்திற்காக தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

    "இந்த திட்டத்தால் நன்மையை விட தீமையே அதிகம் விளையும்" என அந்நாட்டின் பொருளாதார நிபுணர்களும் முன்னாள் வங்கி உயரதிகாரிகளும் எச்சரித்ததை பிரதமர் ஸ்வெத்தா பொருட்படுத்தவில்லை.

    இதற்கான சிறப்பு மசோதாக்கள் அடுத்த வருடம் தாய்லாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

    தனது இந்த முயற்சி, நாட்டின் நலிவுற்ற பொருளாதாரத்தை மேலே கொண்டு வர உதவும் என பிரதமர் ஸ்ரெத்தா உறுதியாக நம்புகிறார். பிரதமர் ஸ்ரெத்தா, நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் அதிபராக விளங்கிய பெரும் கோடீசுவரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இலவசமாக மக்களில் பெரும்பகுதியினருக்கு பணம் வழங்குவது குறித்த சாதக-பாதகங்கள் இந்தியாவிலும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது. இந்த பழக்கம் அயல் நாடுகளிலும் தொடங்கி விட்டதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • 11 வயதில் ஈடுபட ஆரம்பித்த லாரா, 2009ல் சாம்பியன் பட்டம் வென்றார்
    • லாரா 2022 ஜனவரி மாதம் ஹவாய் தீவில் இந்த சாதனையை நிகழ்த்தினார்

    ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் 31 வயதான லாரா எனெவெர் (Laura Enever).

    மேற்கத்திய நாடுகளில் பிரபலமான, பலகையில் நின்று கொண்டு கடல் அலைகளின் மீது நீந்தி விளையாடும் "சர்ஃபிங்" (Surfing) விளையாட்டில் மிகவும் ஈடுபாடு கொண்டவர் லாரா.

    11 வயதான போது சர்ஃபிங் விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்த லாரா, 2009ல் உலக ஜூனியர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    இரண்டு வருடங்கள் கழித்து உலக சர்ஃபிங் சேம்பியன்ஷிப் (World Surfing Championship) சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ள தகுதி பெற்றார். வழக்கமான உயரத்தை விட மிக உயரமான அலைகளின் வழியாக சர்ஃபிங் செய்யும் நிகழ்ச்சிகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டார், லாரா.

    இவர் கடந்த 2022 ஜனவரி மாதம் ஹவாய் தீவில் 43.6 அடி உயர அலையை சர்ஃபிங் மூலம் நீந்தி கடந்தார். கின்னஸ் உலக சாதனை பதிவு (Guinness World Records) நிறுவனம் மற்றும் உலக சர்ஃபிங் லீக் (World Surfing League) ஆகியவை இதனை உறுதி செய்துள்ளன.

    இந்த தகவல் வெளியானதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த லாரா இது குறித்து தெரிவித்ததாவது:

    அந்த அலையை நீந்தி கடக்கும் போது அதுதான் நான் இதுவரை எதிர்கொண்டதிலேயே மிக பெரிய அலை என்பதை உணர்ந்திருந்தேன். ஆனால் பல மாதங்கள் கடந்து வரும் இந்த உலக சாதனை அறிவிப்பு நான் எதிர்பாராதது. இது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனக்கு முன்னர் இந்த விளையாட்டில் ஈடுபட்ட பலருக்கும் எனது நன்றி. அவர்களால்தான் எனக்கு சர்ஃபிங்கில் ஆர்வம் ஏற்பட்டது. அவர்கள் மறைமுகமாக என்னை ஊக்குவித்தவர்கள்.

    இவ்வாறு லாரா கூறினார்.

    2016 ஜனவரி மாதம் பிரேசில்-அமெரிக்கரான ஆண்ட்ரியா மோல்லர், 42 அடி உயர அலையை நீந்தி கடந்ததே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 2100 வருடத்திற்குள் 95 சதவீத டுவாலு நீருக்கடியில் சென்று விடும்
    • டுவாலு நாட்டிற்கு ஆஸ்திரேலியா ராணுவ பாதுகாப்பு அளிக்கும்

    பசிபிக் கடற்பகுதியில் உள்ளது டுவாலு (Tuvalu) எனும் பவழப்பாறைகள் நிரம்பிய சிறு தீவுகளை உள்ளடக்கிய நாடு. இங்கு சுமார் 12 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

    அதிகரிக்கும் உலக வெப்பமயமாதல், டுவாலுவுக்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது. உயரமான அலைகளாலும், கடல்நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வருவதாலும் அங்கு வாழும் மக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறி வந்தது.

    தலைநகரமான ஃபுனாஃபுயுட்டி (Funafuti) பகுதி, 50 சதவீதம் விரைவில் நீரில் மூழ்கி விடும் என்றும் 2100 வருடத்திற்குள் 95 சதவீத நாடு நீருக்கடியில் சென்று விடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

    தற்போது டுவாலு கடல் மட்டத்தை விட 15 அடி உயரத்தில் மட்டுமே இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதும் நின்று விட்டது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் (Anthony Albanese) டுவாலு மக்களுக்கு ஆஸ்திரேலியாவில் புகலிடம் அளிக்கும் ஒப்பந்தம் ஒன்றை டுவாலு பிரதமர் காசியா நாடானோ (Kausea Natano) உடன்  கையெழுத்திட்டுள்ளார். மேலும், டுவாலு நாட்டிற்கு ராணுவ பாதுகாப்பையும் ஆஸ்திரேலியா அளிக்க ஒப்பு கொண்டுள்ளது.

    ஆண்டுதோறும் டுவாலு நாட்டு குடிமக்கள் 300 பேருக்கு ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து, வேலை செய்ய அனுமதி அளிக்கும் விசா வழங்கப்பட உள்ளது.

    ஃபலேபிலி சங்கமம் (Falepili Union) என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், பசிபிக் கடற்பகுதி நாடுகளுடன் ஆஸ்திரேலியா செய்து கொள்ளும் ஒரு முக்கிய ஒப்பந்தமாகும்.

    • வேராவை 3.5 மணி நேரம் கான்யுஸ் சித்திரவதை செய்துள்ளார்
    • ரஷிய ராணுவத்திற்கு இளைஞர்கள் அதிகளவு தேவைப்படுகிறார்கள்

    ரஷியாவில் வசித்து வந்தவர் வேரா பெக்டெலேவா (Vera Pekhteleva). இவர் விளாடிஸ்லாவ் கான்யுஸ் (Vladislav Kanyus) என்பவரை காதலித்து வந்தார். இருவரின் உறவில் திடீரென கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், வேரா, கான்யுஸை விட்டு பிரிந்தார்.

    இது குறித்து கான்யுஸ் அடிக்கடி வேராவுடன் வாக்குவாதம் செய்து வந்தார். ஒரு முறை இவர்கள் இருவரின் வாக்குவாதம் மோதலாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த கான்யுஸ், வேராவை பாலியல் ரீதியாக தாக்கினார்.

    அதன் பிறகு அவரை சுமார் 111 முறை கத்தியால் குத்தினார். அதிலும் ஆத்திரம் அடங்காத கான்யுஸ், வேராவை சுமார் 3.5 மணி நேரம் சித்திரவதை செய்தார். பின் இரும்பு வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    வேராவின் பரிதாப அலறலை கேட்ட அக்கம்பத்தினர், காவல்துறைக்கு 7 முறை தகவல் அளித்தனர். ஆனால், காவல்துறையினர் உடனடியாக வரவில்லை.

    இறுதியில் கான்யுஸின் இரக்கமற்ற தாக்குதலில் வேரா உயிரிழந்தார்.

    காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி கான்யுஸிற்கு, நீதிமன்றம் 17 வருட சிறைதண்டனை வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், வேராவின் தாயார் ஒக்ஸானா (Oksana), கான்யுஸ் துப்பாக்கி ஒன்றை ஏந்தியபடி ராணுவ உடையில் நிற்கும் புகைப்படம் ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறையில் இருந்தவர், ராணுவ உடையில் காட்சியளிப்பது குறித்து ஒக்ஸானா விசாரணை நடத்தி தகவல்களை திரட்டினார்.

    ரஷியா, கடந்த 2022 பிப்ரவரி மாதம், அண்டை நாடான உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு நடத்தியது. இதனை எதிர்த்து உக்ரைன் ரஷியாவுடன் போர் புரிந்து வருகிறது.

    போர் 1.5 வருடங்களாக நீள்வதால், ரஷியாவிற்கு ராணுவத்தில் பணியாற்ற பல இளைஞர்கள் தேவைப்படுகின்றனர். எனவே சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பல இள வயதினரை ராணுவத்தில் சேர்க்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி கான்யுஸ் செய்த குற்றங்கள், அதிபரின் "சிறப்பு அதிகாரம்" மூலம், புதினால் மன்னிக்கப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து மிகுந்த ஆத்திரத்துடனும், சோகத்துடனும் ஒக்ஸானா கருத்து தெரிவித்தார்.

    "நான் மிகுந்த மன உறுதி உள்ள பெண். ஆனால், இந்த செய்தி என்னை நிலைதடுமாற செய்து விட்டது. என் மகள் கல்லறையில் இனி நிம்மதியாக உறங்க முடியுமா? எல்லாமே என்னை விட்டு போய் விட்டது. ஒரு கொடூர கொலைகாரனை எப்படி வெளியே விட்டார்கள்? கொலகாரன் எதற்கு ரஷியாவை பாதுகாக்க வேண்டும்? அவன் மனிதனே அல்ல. பழி வாங்க எங்களை எப்போது வேண்டுமானாலும் அவன் மீண்டும் கொல்லலாம்" என ஒக்சானா கூறினார்.

    "ரஷிய சிறையில் உள்ள கைதிகள் தங்கள் குற்ற நடத்தைக்காக வருந்தும் விதமாகத்தான் போர்க்களத்திற்கு அனுப்பப்படுகின்றனர்" என அரசின் செயலை நியாயப்படுத்தும் விதமாக ரஷிய பாராளுமன்ற செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) தெரிவித்தார்.

    • வீடியோவில் பச்சை நிற பெரிய அனகோண்டா ஒன்றை வாலிபர் தனது கழுத்தில் வைத்துள்ளார்.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    நாள்தோறும் இணையத்தில் புதுப்புது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி கொண்டே இருக்கும். அதில் விலங்குகள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் பயனர்களை பெரிதும் கவரும். அந்த வகையில் நீருக்கடியில் பெரிய அனகோண்டாவை வாலிபர் ஒருவர் கட்டிப்புரளும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் பச்சை நிற பெரிய அனகோண்டா ஒன்றை வாலிபர் தனது கழுத்தில் வைத்துள்ளார். பின்னர் அந்த அனகோண்டாவுடன் நீருக்கடியில் மூழ்குவதும், அதனுடன் கட்டிப்புரள்வது போன்ற காட்சிகள் பயனர்களை வியக்க வைக்கிறது. சுமார் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • அதிகாரி ஒருவரின் உயிரை ‘ஸ்மார்ட் வாட்ச்’ காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
    • நிலைகுலைந்தவர் தனது கையில் கட்டியிருந்த ‘ஸ்மார்ட் வாட்ச்’ மூலம் மனைவி லாராவுக்கு போன் செய்து சம்பவத்தை கூறினார்.

    இன்றைய காலத்தில் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெறுமனே நேரம் பார்ப்பதற்காக மட்டுமின்றி நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டுபிடித்து 'அலார்ட்' செய்யும் உயிர்காக்கும் கருவியாகவும் 'ஸ்மார்ட் வாட்ச்' செயல்படுகிறது.

    அந்த வகையில் அதிகாரி ஒருவரின் உயிரை 'ஸ்மார்ட் வாட்ச்' காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. பிரிட்டனில் உள்ள ஸ்வான்சியின் மோரிஸ்டன் பகுதியை சேர்ந்தவர் பால்வபாம். இவர் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். தினமும் அதிகாலை நடைபயிற்சி செல்லும் இவர் சம்பவத்தன்று நடைபயிற்சி சென்ற போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நிலைகுலைந்த அவர் தனது கையில் கட்டியிருந்த 'ஸ்மார்ட் வாட்ச்' மூலம் மனைவி லாராவுக்கு போன் செய்து சம்பவத்தை கூறினார்.

    உடனடியாக விரைந்து சென்ற அவர், கணவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது இதயத்துக்கான ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளார். தனது 'ஸ்மார்ட் வாட்ச்' மூலம் உயிர் பிழைத்ததாக பால்வபாம் கூறி உள்ளார்.

    • இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் இடையே துப்பாக்கிச் சண்டையும் நடந்து வருகிறது.
    • இருதரப்பிலும் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    பாரிஸ்:

    இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் 35-வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. காசாமீது இஸ்ரேல், வான், கடல், தரைவழி என மும்முனை தாக்குதல் நடத்திவருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    காசாமீது வான் தாக்குதல் தீவிரமாக நடந்து வரும் நிலைமையில், இஸ்ரேல் ராணுவம்-ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டையும் நடந்து வருகிறது. காசா சிட்டியில் உள்ள பள்ளி மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள அல்-புராக் பள்ளியைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

    இதில் அந்த பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

    இப்பள்ளியில், வீடுகளை இழந்த மக்கள் தஞ்சமடைந்து இருந்தனர் என்று கூறப்படுகிறது. காசாவில் பள்ளிகள், மருத்துவமனைகள், மசூதிகள் ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    கடந்த வாரம் ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐ.நா. நடத்தும் பள்ளிமீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே காசாவில் உள்ள மருத்துவமனைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சண்டை தீவிரமாக நடந்து வருவதால் நோயாளிகள், ஊழியர்கள், பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா, அல்-குத்ஸ், அல்-ரான்டிசி ஆகிய 3 மருத்துவமனைகள் அருகில் வான் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் அல்-ஷிபா மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு கடும் துப்பாக்கி சண்டை நடந்துவருகிறது. மருத்துவமனைகளை இஸ்ரேல் டாங்கிகள் சூழ்ந்துள்ளன. இதனால் மருத்துவமனைக்குள்ளேயே மக்கள் சிக்கித்தவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில், காசாவில் குழந்தைகள், பெண்களை கொல்வதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும். பொதுமக்கள் மீது குண்டு வீசுவதற்கு எந்த நியாயமும் இல்லை. குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த மரணங்கள் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன என தெரிவித்தார்.

    • நிலநடுக்கங்கள் எரிமலை வெடிப்புக்கு முன்னோடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
    • உலக புகழ்பெற்ற சுற்றுலா தரமான புளூ லகூன் மூடப்பட்டது.

    ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 14 மணி நேரத்தில் சுமார் 800 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய நிலநடுக்கமாக கிரைண்டா விக்குக்கு வடக்கே 5.2 ரிக்டர் அளவாக பதிவானது.

    இந்த நிலநடுக்கங்கள் எரிமலை வெடிப்புக்கு முன்னோடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கங்கள் காரணமாக உலக புகழ்பெற்ற சுற்றுலா தரமான புளூ லகூன் மூடப்பட்டது.

    நிலநடுக்கம் எரிமலை வெடிப்பு காரணமாக மக்கள் பாதுகாப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐஸ்லாந்தில் 33 எரிமலைகள் உள்ளன. இது ஐரோப்பில் உள்ள நாடுகளில் அதிக எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது.
    • கனடா போன்ற நாடுகளில் முதியோர்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

    உலக மக்கள்தொகை தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்தது. கடந்த செப்டம்பர் 26-ந் தேதியே, இந்த எண்ணிக்கையை உலக மக்கள்தொகை கடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உலக மக்கள்தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே, உலக மக்கள்தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா.சபை மதிப்பிட்டிருந்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது.

    உலக மக்கள்தொகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2000-ம் ஆண்டு 600 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை, தற்போது 800 கோடியாக அதிகரித்துள்ளது.

    மக்களின் சராசரி வயது 32-ஆக அதிகரித்துள்ளது. வரும் 2060-ம் ஆண்டு அது 39-ஆக உயரும். கனடா போன்ற நாடுகளில் முதியோர்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

    கடந்த 1960-2000 வரையிலான காலகட்டத்தில் உலக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2 மடங் காக இருந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது. பெண்கள் கருவுறும் விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருவது கடந்த 50 ஆண் டுகளாக உலக மக்கள்தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான காரணம் ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தடுப்பூசி விழிப்புணர்விற்கு டபிள்யு.ஹெச்.ஓ. பல முயற்சிகளை எடுத்து வருகிறது
    • 50 லட்சம் பேர் நோய்களினால் இறப்பதை தடுப்பூசிகள் ஆண்டுதோறும் தடுக்கிறது

    பொதுமக்களுக்கு தடுப்பூசிகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்ச்சியை உருவாக்கவும், சரியான நேரங்களில் தடுப்பூசிகளை எடுத்து கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தவும், அதன் மூலம் பல்வேறு நோய்கள் பரவுவதை தடுக்கும் முயற்சிகளை அதிகரிக்கவும் வருடாவருடம் நவம்பர் 10, "உலக தடுப்பூசி தினம்" என கொண்டாடப்படுகிறது.

    டபிள்யு. ஹெச். ஓ. (WHO) எனப்படும் "உலக சுகாதார அமைப்பு" இந்த நோக்கத்திற்காக உலகெங்கிலும் பல சர்வதேச மற்றும் உள்ளூர் குழுக்களுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்தி மக்களிடையே தடுப்பூசிகளின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.

    மனிதர்களிடம் தோன்றும் பல்வேறு நோய்களுக்கு எதிராக அவர்களது உடலில் எதிர்ப்பு சக்தியை வளர்க்க, நுண்ணுயிரிகளை கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பிறகு உருவாக்கப்படுபவை தடுப்பூசிகள். இதனை குறித்த மருத்துவ கல்வி "தடுப்பூசியியல்"; ஆங்கிலத்தில் வேக்ஸினாலாஜி (vaccinology).

    நோய்களை, வரும் முன் காப்பதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது அனுபவபூர்வமாகவே மருத்துவ உலகில் ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது.

    தொற்று நோய் பரவலை தடுப்பதிலும் தடுப்பூசிகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

    2019 டிசம்பரில் தொடங்கி 2020ல் உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று பல லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இதனை எதிர்கொள்ள இந்தியாவில் பாரத் பயோடெக் (Bharat Biotech) எனும் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகள் வரையறுக்கப்பட்ட காலகட்டத்தில் மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டது.



    இந்த தடுப்பூசியை பல உலக நாடுகளுக்கு இந்தியா இலவசமாகவே வழங்கியது. இதன் மூலம் பெருமளவு உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

    உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி ஆண்டிற்கு சுமார் 50 லட்சம் பேர் நோய்களினால் இறப்பதை தடுப்பூசிகள் தடுக்கின்றன.

    ஆபத்தை விளைவிக்கும் நோய்களை தடுப்பதிலும், உலகிலிருந்து அபாயகரமான நோய்களை ஒழிப்பதிலும், நோய் பரவுதலை எளிய முறையில் தடுப்பதிலும் மற்றும் எதிர்கால சந்ததியினரை நோய்களிலிருந்து காப்பதிலும் தடுப்பூசிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

    சுமார் 30 வருடங்களுக்கு முன்பு வரை போலியோ (poliomyelitis) எனப்படும் தொற்று நோயால், குழந்தைகள் கை அல்லது கால் செயல் இழந்து, வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வந்தது.



    ஆனால், மத்திய அரசின் தீவிர முயற்சியால் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இலவச பல்ஸ் போலியோ (pulse polio) தடுப்பூசி திட்டம், அந்த நோயை இந்தியாவிலிருந்தே முற்றிலும் ஒழித்தது குறிப்பிடத்தக்கது.


    2023 உலக தடுப்பூசி தினத்திற்கான கருப்பொருளாக (theme) உலக சுகாதார அமைப்பு "பிக் கேட்ச்-அப்" எனும் தலைப்பை எடுத்து கொண்டுள்ளது.

    தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதிலிருந்து விடுபட்ட குழந்தைகளை தேடிச்சென்று அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முக்கிய நோக்கத்தை மையமாக கொண்டு, இந்த கருப்பொருள் இந்த வருடம் பிரச்சார பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

    • அரிய வகை மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.
    • பரிசு தொகையை தனது குழுவினருடன் பகிர்ந்து கொள்வதாக ஹாஜி கூறினார்.

    பாகிஸ்தான் கராச்சி நகரை சேர்ந்தவர் ஹாஜி பலோச். இவர், இப்ராஹிம் ஹைதேரி மீன்பிடி கிராமத்தில் வசித்து வருகிறார். மீன்பிடி தொழில் செய்து வரும் ஹாஜி தான் பிடிக்கும் மீன்களை ஏலத்தில் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    இந்நிலையில், ஹாஜியும் அவரது குழுவும் கடந்த திங்கட்கிழமை அன்று அரபிக்கடலில் இருந்து தங்க மீன் அல்லது "சோவா" என்று அழைக்கப்படும் அரிய வகை மீனைப் பிடித்தனர்.

    கராச்சி துறைமுகத்தில் மீனவர்கள் தாங்கள் பிடித்த மீனை ஏலம் விடுத்தபோது சுமார் 7 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. இந்த அரிய வகை மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.

    சோவா மீன் விலை உயர்ந்ததாகவும், அரிதானதாகவும் கருதப்படுகிறது. ஏனெனில் அதன் வயிற்றில் உள்ள உறுப்புகள் சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. மீனில் இருந்து ஒரு நூல் போன்ற பொருள் அறுவை சிகிச்சை முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

    பெரும்பாலும் 20 முதல் 40 கிலோ வரை எடையுள்ள மற்றும் 1.5 மீட்டர் வரை வளரக்கூடிய மீன், கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விரும்பப்படுகிறது.

    பரிசு பெற்ற 7 கோடி ரூபாய் பணத்தை தனது ஏழு பேர் கொண்ட குழுவினருடன் பகிர்ந்து கொள்வதாக ஹாஜி கூறினார்.

    • இந்த தீபாவளி விருந்தில் 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
    • இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர்.

    அப்போது பேசிய கமலா ஹாரிஸ், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெறும் சூழலில், உலகம் எதிர்கொண்டிருக்கும் இருண்ட மற்றும் கடினமான நிலைக்கு ஒளி ஏற்படுத்தும் வகையில் தீபங்களின் பண்டிகையான தீபாவளியைக் கொண்டாடுவது முக்கியம்.

    இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும். அதே நேரம், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கும் என தெரிவித்தார்.

    ×