search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disease Prevention"

    • வயநாடு மக்கள் அனைவரையும் எனது குடும்பத்தின் ஒரு அங்கமாக கருதுகிறேன்.
    • தொகுதியின் வளர்ச்சிக்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கேரள மாநிலத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். குறிப்பாக தனது தொகுதியான வயநாட்டில் மக்களை சந்தித்தும் வருகிறார். திருவாலியில் வலி மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி அவர் பேசியதாவது:-

    கேரளாவின் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு துறை நாட்டிலேயே மிகச்சிறந்த துறைகளில் ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் நோய் தடுப்பு சிகிச்சையில் கேரளா ஒரு முன்னோடியாக உள்ளது. தன்னால் இயன்ற உதவிகளை செய்யத்தயாராக இருப்பதாகவும், ஆனால் எம்.பி.யாக இருந்து தனக்கு கிடைத்த நிதி மட்டுப்படுத்தப்பட்டதாகவும், கவனமாக பகிர்ந்தளிக்க வேண்டியதாகவும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மறைந்த முஸ்லீம் லீக் தலைவர் சீத்தி ஹாஜி பற்றிய புத்தக வெளியீட்டு விழாவிலும் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வயநாடும், கேரளாவும் தனக்கு 2-வது வீடு போன்றது என்றார். கேரளா மற்றும் வயநாட்டுக்கு நான் எவ்வளவு அதிகமாக வருகிறேனோ, அவ்வளவு அதிகமாக இது எனது வீடு என்று உணர்கிறேன். வயநாடு மக்கள் அனைவரையும் எனது குடும்பத்தின் ஒரு அங்கமாக கருதுகிறேன். மேலும் அடுத்த திட்டமாக எனது தாய் சோனியா காந்தியை இங்கு அழைத்துவர உள்ளேன். நான் இங்கு வரும்போது புதிதாக ஒன்றை கற்றுக்கொள்கிறேன். தொகுதியின் வளர்ச்சிக்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றார்.

    • தடுப்பூசி விழிப்புணர்விற்கு டபிள்யு.ஹெச்.ஓ. பல முயற்சிகளை எடுத்து வருகிறது
    • 50 லட்சம் பேர் நோய்களினால் இறப்பதை தடுப்பூசிகள் ஆண்டுதோறும் தடுக்கிறது

    பொதுமக்களுக்கு தடுப்பூசிகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்ச்சியை உருவாக்கவும், சரியான நேரங்களில் தடுப்பூசிகளை எடுத்து கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தவும், அதன் மூலம் பல்வேறு நோய்கள் பரவுவதை தடுக்கும் முயற்சிகளை அதிகரிக்கவும் வருடாவருடம் நவம்பர் 10, "உலக தடுப்பூசி தினம்" என கொண்டாடப்படுகிறது.

    டபிள்யு. ஹெச். ஓ. (WHO) எனப்படும் "உலக சுகாதார அமைப்பு" இந்த நோக்கத்திற்காக உலகெங்கிலும் பல சர்வதேச மற்றும் உள்ளூர் குழுக்களுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்தி மக்களிடையே தடுப்பூசிகளின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.

    மனிதர்களிடம் தோன்றும் பல்வேறு நோய்களுக்கு எதிராக அவர்களது உடலில் எதிர்ப்பு சக்தியை வளர்க்க, நுண்ணுயிரிகளை கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பிறகு உருவாக்கப்படுபவை தடுப்பூசிகள். இதனை குறித்த மருத்துவ கல்வி "தடுப்பூசியியல்"; ஆங்கிலத்தில் வேக்ஸினாலாஜி (vaccinology).

    நோய்களை, வரும் முன் காப்பதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது அனுபவபூர்வமாகவே மருத்துவ உலகில் ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது.

    தொற்று நோய் பரவலை தடுப்பதிலும் தடுப்பூசிகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

    2019 டிசம்பரில் தொடங்கி 2020ல் உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று பல லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இதனை எதிர்கொள்ள இந்தியாவில் பாரத் பயோடெக் (Bharat Biotech) எனும் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகள் வரையறுக்கப்பட்ட காலகட்டத்தில் மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டது.



    இந்த தடுப்பூசியை பல உலக நாடுகளுக்கு இந்தியா இலவசமாகவே வழங்கியது. இதன் மூலம் பெருமளவு உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

    உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி ஆண்டிற்கு சுமார் 50 லட்சம் பேர் நோய்களினால் இறப்பதை தடுப்பூசிகள் தடுக்கின்றன.

    ஆபத்தை விளைவிக்கும் நோய்களை தடுப்பதிலும், உலகிலிருந்து அபாயகரமான நோய்களை ஒழிப்பதிலும், நோய் பரவுதலை எளிய முறையில் தடுப்பதிலும் மற்றும் எதிர்கால சந்ததியினரை நோய்களிலிருந்து காப்பதிலும் தடுப்பூசிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

    சுமார் 30 வருடங்களுக்கு முன்பு வரை போலியோ (poliomyelitis) எனப்படும் தொற்று நோயால், குழந்தைகள் கை அல்லது கால் செயல் இழந்து, வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வந்தது.



    ஆனால், மத்திய அரசின் தீவிர முயற்சியால் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இலவச பல்ஸ் போலியோ (pulse polio) தடுப்பூசி திட்டம், அந்த நோயை இந்தியாவிலிருந்தே முற்றிலும் ஒழித்தது குறிப்பிடத்தக்கது.


    2023 உலக தடுப்பூசி தினத்திற்கான கருப்பொருளாக (theme) உலக சுகாதார அமைப்பு "பிக் கேட்ச்-அப்" எனும் தலைப்பை எடுத்து கொண்டுள்ளது.

    தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதிலிருந்து விடுபட்ட குழந்தைகளை தேடிச்சென்று அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முக்கிய நோக்கத்தை மையமாக கொண்டு, இந்த கருப்பொருள் இந்த வருடம் பிரச்சார பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

    • மதுரையில் நோய் தடுப்பு பணியில் சுகாதார பணியாளர்கள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • மதுரை மாநகரம் முழுவதிலும் டெங்கு ஒழிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது” என்றார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக தொடர் மழை செய்து வருகிறது. இதன் காரணமாக சாலை மற்றும் பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது. மாவட்டம் முழுவதிலும் டெங்கு காய்ச்சல் படிப்படியாக பரவி வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 பேர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகினர். அதில் 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை சந்தைப்பே ட்டையை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை, டெங்கு பாதிப்பால் கடந்த 19-ந் தேதி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்றிரவு பரிதாபமாக இறந்தது.

    இந்த நிலையில் மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் மாநகராட்சி சார்பில் 530 பணியாளர்கள் வீடு வீடாக சென்று குடிநீர் தொட்டியில் மருந்து தெளித்தல், கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து மருந்து தெளித்தல், மற்றும் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து மதுரை மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத் கூறுகையில், சிறுமி டெங்கு பாதிப்பால் தான் இறந்தது என்று உறுதியாக கூற முடியாது. அந்த குழந்தைக்கு மற்ற பாதிப்பும் இருந்தது. மதுரை மாநகரம் முழுவதிலும் டெங்கு ஒழிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது" என்றார்.

    மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டு தயார் நிலையில் இருப்பதாகவும், அங்கு 2 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும், ரத்த மாதிரிகளை எடுத்து டெங்கு சோதனை செய்யும் கண்டறியும் வசதி மருத்துவமனையில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு நேற்று மட்டும் 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது குழந்தை இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவிய டாக்டர்களுக்கு தங்கப்பதக்கமும் செவிலியர்களுக்கு ஊக்கத்தொகையும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. #Nipahvirus
    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 17 பேர் பலியாகி உள்ளனர். காய்ச்சல் பாதிப்புகளின் தாக்கத்தை உணர்ந்து மாநில அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தற்போது நிபா காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.

    இந்நிலையில், தங்களது பாதுகாப்பை பொருட்படுத்தாமல் நிபா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவிய டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கேரள அரசு பரிசு மற்றும் உதவித்தொகையை அறிவித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    நான்கு உதவி பேராசிரியர்கள், 19  செவிலியர்கள், 7 செவிலியர் உதவியாளர்கள், 17 துப்புரவு ஊழியர்கள், 4 மருத்துவமனை ஊழியர்கள், 2 சுகாதார ஆய்வாளர்கள், 3 ஆய்வக நபர்கள் உள்ளிட்ட 61 பேருக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.



    டாக்டர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியில் இருந்த போது நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த செவிலியர் லினிக்கு கேரள அரசின் சிறந்த செவிலியர் விருது வழங்கப்பட உள்ளது. #Nipahvirus
    நிபா வைரஸ் நோயை தடுப்பது எப்படி என்பது தொடர்பாக தொற்று நோய் சிறப்பு மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    நிபா வைரஸ் நோயை தடுப்பது எப்படி என்பது தொடர்பாக தொற்று நோய் சிறப்பு மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமிநாதன் கூறியதாவது:-

    நிபா வைரஸ் என்பது தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் நோயை விளைவிப்பதற்கு காரணமாக இருந்து வருகிற ஒரு பாராமைக் ஸோவைரஸ் நோய்க்கிருமியாகும்.

    1998-99 ஆண்டு வாக்கில் மலேசியா, சிங்கப்பூரில் இத்தொற்று பரவியபோது இது முதன் முறையாக அடையாளம் காணப்பட்டது. மற்றும் இத்தொற்றுநோய் தொடங்கிய கிராமத்தின் பெயரே இதற்கு சூட்டப்பட்டது.

    தொற்று பாதிப்புள்ள பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும். சமைக்காத உணவுப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்கவும். பழங்கள், காய்கறிகளை நன்கு கழுவிய பிறகு மட்டும் சாப்பிடவும்.

    ஆரஞ்சு மற்றும் வாழைப் பழங்கள் போன்ற பழங்கள் அவைகளை பாதுகாப்பாக வைக்கிற உறுதியான தோல்களை கொண்டிருக்கின்றன. ஆப்பிள்கள் மற்றும் ஆரஞ்சு பழங்களை பயன்படுத்துவதற்கு முன்பு நன்கு கழுவி சுத்தப்படுத்திய பிறகு உட்கொள்ளலாம். பொதுவாக சேதமடைந்துள்ள அல்லது ஓட்டை விழுந்துள்ள, கடிக்கப்பட்டுள்ள பழங்களை ஒருபோதும் உண்ண வேண்டாம்.

    காய்ச்சல், தலைவலி, தூக்கக் கலக்கம், சூழல் உணர்விழப்பு மற்றும் பிதற்றல் ஆகிய அறிகுறிகள் தொடங்கிய பிறகு 3 முதல் 14 நாட்களுக்குள் நிகழக்கூடும். இது வளர்ச்சியடைந்து 24 முதல் 48 மணி நேரங்களில் நினைவிழப்பு நிலையான கோமாவில் கொண்டுபோய் விடக்கூடும். நுரையீரல் பிரச்சனைகளாக இந்நோய் வெளிப்படுவது பொதுவாக நிகழ்வதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #NipahVirus
    ×