என் மலர்
கால்பந்து
- புள்ளிகள் பட்டியலில் ஆர்சனல் 3-வது இடத்திலும், பிரென்ட்போர்டு 12-வது இடத்திலும் உள்ளன.
- ஆர்சனல் இதுவரை 18 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் முக்கிய கால்பந்து தொடர் இங்கிலீஷ் பிரீமியர் லீக். இந்த லீக்கில் இன்று நடைபெறும் போட்டியில் ஆர்சனல்- பிரெனட்போர்டு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புள்ளிகள் பட்டியலில் ஆர்சனல் 3-வது இடத்திலும், பிரென்ட்போர்டு 12-வது இடத்திலும் உள்ளன. ஆர்சனல் இதுவரை 18 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளை டிரா செய்துள்ளது. 2 போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 36 புள்ளிகள் பெற்றுள்ளது.
லிவர்பூல் 18 போட்டிகளில் 14 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி மூலம் 45 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. பிரான்ட்போர்டு 18 போட்டிகளில் 7-ல் வெற்றி, 3-ல் டிரா, 8-ல் தோல்வி மூலம் 24 புள்ளிகள் பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஆஸ்திரேலியன் ஏ லீக் போட்டியில் மெக்ஆர்தர் எஃப்சி 3-2 என வெஸ்டர்ன் சிட்னி வாண்டரர்ஸ் அணியை வீழ்த்தியது.
இங்கிலீஷ் லீன் ஒன் தொடரில் இன்று 11 போட்டிகளில் நடைபெற இருக்கிறது. இஸ்ரே் பிரீமியர் லீக்கில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
வேல்ஷ் பிரீமியர் லீக்கில் இரணடு போட்டிகள் நடைபெறுகின்றன.
- 2003-ல் இருந்து பரிந்துரை பெயரில் இருவரில் ஒருவர் பெயராவது இடம் பிடித்து வந்தது.
- முதன்முறையாக இருவருடைய பெயரும் பரிந்துரையில் இடம் பெறவில்லை.
கால்பந்தில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக அர்ஜென்டினாவின் மெஸ்சி, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர். கால்பந்து வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் உயரிய விருது பலோன் டி'ஆர் விருது. இந்த விருதை மெஸ்சி 8 முறை வென்றுள்ளார். ரொனால்டோ ஐந்து முறை வென்றுள்ளார்.
2024-ம் ஆண்டிக்கான பலோன் டி'ஆர் விருது அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. அதற்கான 30 வீரர்கள் கொண்ட பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மெஸ்சி மற்றும் ரொனால்டோ பெயர் இடம் பெறவில்லை.
2003-ம் ஆண்டில் இருந்து பரிந்துரை பட்டியலில் இருவருடைய பெயரும் இடம் பெறாதது இதுதான் முதன் முறையாகும்.
மெஸ்சி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறி பி.எஸ்.ஜி. அணிக்கு சென்றார். பின்னர் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு சென்றார். ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து யுவென்டஸ் அணிக்கு சென்றார். தற்போது சவுதி அரேபியாவின் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
மெஸ்சி முதன்முறையாக 2006-ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் 2009-ல் முதல் விருதை வென்றார். ரொனால்டோ 2004-ம் ஆண்டு முதன்முறையாக பரிந்துரைக்கப்பட்டார். 2008-ல் இருந்து இருவரிடையே கடும் போட்டி நிலவியது. 13 முறை இவர்கள்தான் வென்றுள்ளனர்.

இருவர் பெயர் இல்லாத நிலையில் ரியல் மாட்ரிட்டின் வினிசியஸ் ஜூனியர், இங்கிலிலீஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டியில் விளையாடும் ரோட்ரி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. இறுதியாக ரோட்ரி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து நான்காவது முறையாக மான்செஸ்டர் சிட்டி இங்கிலீஷ் பிரீமியர் லீக்கை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவருக்கு வழங்கப்பட்டது.
மேலும், 2024 யூரோ கோப்பையில் தனது நாடான ஸ்பெயின் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 என ஸ்பெயின் வீழ்த்தியது. தொடரின் நாயகன் விருதையும் வென்றார். இந்த காலக்கட்டத்தில் 14 கோல்கள் அடிப்பதற்கு உதவி புரிந்துள்ளார். அதேவேளையில் 10 கோல்களும் அடித்துள்ளார்.

இதற்கிடையே பாலோன் டி' ஆர் விருதை இம்முறை வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்கும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் வினிசியஸ்க்கு விருது இல்லை என தெரிய வந்தது ஆச்சரியத்தை எதிர்படுத்தியது. விருது அவருக்கு கிடைக்காததால் ரியல் மாட்ரிட் அணி நிர்வாகம் விழாவைப் புறக்கணித்தது.
- ஸ்பெயின் அரையிறுதியில் பிரான்ஸை வீழ்த்தியது.
- இங்கிலாந்து நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான மிகப்பெரிய கால்பந்து தொடரான யூரோ 2024 ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவில் உள்ள அணிகளும், அதேபிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளும், 3-வது இடம் பிடித்த முதல் நான்கு அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.
அதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும் அந்த வகையில் காலிறுதியில் சுவிட்சர்லாந்து அணியை (1-1) பெனால்டி சூட் அவுட்டில் இங்கிலாந்து வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
துருக்கியை 2-1 என வீழ்த்தி நெதர்லாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.
ஜெர்மனியை 2-1 என ஸ்பெயின் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
போர்ச்சுக்கலை (0-0) பெனால்டி சூட்அவுட்டில் 5-3 என பிரான்ஸ் வீழ்த்தி காலிறுதிக்க முன்னேறியது.
முதல் அரையிறுதியில் இங்கிலாந்து- நெதர்லாந்து- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஸ்பெயின்- பிரான்ஸ் இடையிலான போட்டியில் ஸ்பெயின் 2-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஜூலை 15-ந்தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஸ்பெயின் வீரர்கள் ஆக்ரோசமாக விளையாடினர். இதனால் ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் (ஆட்டத்தின் 47-வது நிமிடம்) ஸ்பெயின் முதல் கோலை பதிவு செய்தது. நிக்கோ வில்லியம்ஸ் இந்த கோலை பதிவு செய்தார்.
பின்னர் நீண்ட நேரம் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் இங்கிலாந்து பதில் கோல் அடித்தது. அந்த அணியின் கோலே பால்மேர் கோல் அடிக்க போட்டி 1-1 என சமன் ஆனது.
ஆனால் ஸ்பெயின் வீரர் மிகெல் ஒயர்சபால் 86-வது நிமிடத்தில் கோல் அடிக்க ஸ்பெயின் 2-1 என முன்னிலை பெற்றது. அதன்பின் இங்கிலாந்து அணியை கோல் அடிக்கவிடாமல் தடுக்க, 2-1 என இங்கிலாந்தை வீழ்த்தி யூரோம் 2024 சாம்பியன் பட்டத்தை வென்றது.
- மான்செஸ்டர் சிட்டி, பேயர்ன் முனிச் அணிகளை வீழ்த்தி ரியல் மாட்ரிட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
- பார்சிலோனா, பிஎஸ்ஜி அணிகளை வீழ்த்தி டார்ட்மண்ட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்வேறு கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் தகுதிச் சுற்றுகள் நடைபெற்று இறுதியாக 32 அணிகள் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் முதன்மை சுற்றில் விளையாட தகுதி பெறும். இந்த 32 அணிகளும், 8 பிரிவுகளாக பிரிக்கப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம் பெறும். இந்த நான்கு அணிகளும் தங்களுக்குள் இரண்டு முறை (ஒருமுறை மற்ற அணிகளின் சொந்த மைதானம், ஒருமுறை தனது சொந்த மைதானம்) மோதிக் கொள்ள வேண்டும்.
முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும். நாக்அவுட், காலிறுதி, அரையிறுதிகள் போட்டிகளில் எதிரணியுடன் இரண்டு முறை (ஒருமுறை மற்ற அணியின் சொந்த மைதானம், ஒருமுறை தனது சொந்த மைதானம்) மோதும். இந்த இரண்டு போட்டிகளிலும் அதிக கோல் அடித்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இறுதிப் போட்டி மட்டும் ஒரே போட்டியாக நடத்தப்படும்.
காலிறுதி போட்டிகள்
காலிறுதி போட்டிகளில் பொருசியா டார்ட்மண்ட் 5-4 என அட்லெடிக்கோ மாட்ரிட் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதியில் பார்சிலோனாவை பி.எஸ்.ஜி. 6-4 என வீழ்த்தியது. 3-வது காலிறுதியில் பேயர்ன் முனிச் 3-2 என அர்செனலை வீழ்த்தியது. 4-வது காலிறுதியில் மான்செஸ்டர் சிட்டியை பெனால்டி சூட்அவுட்டில் 4-3 என வீழ்த்தியது ரியல் மாட்ரிட்.
அரையிறுதி போட்டிகள்
அரையிறுதியில் டார்ட்மண்ட்- பிஎஸ்ஜி அணிகள், பேயர்ன் முனிச்- ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டார்ட்மண்ட் அணிக்கு சொந்தமான முதல் போட்டியில் டார்ட்மண்ட் 1-0 என வெற்றி பெற்றது. பின்னர் பிஎஸ்ஜி-க்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் 1-0 வெற்றி பெற்றது. இரண்டையும் சேர்த்து பிஎஸ்ஜி-யை 2-0 என டார்ட்மண்ட் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதி போட்டியில் பேயர்ன் முனிச்- ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இதில் பேயர்ன் முனிச் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்திருந்தது. பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட் 2-1 என வெற்றி பெற்றது. மொத்தமாக ரியல் மாட்ரிட் 4-3 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டி
இறுதிப் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற விம்ப்ளே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டார்ட்மண்ட் அணியை 2-0 என வீழ்த்தி ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 2-வது பாதி நேரத்தில், ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் ரியல்மாட்ரிட் அணியின் டேனி கார்வாஜல் முதல் கோல் அடித்தார். 83-வது நிமிடத்தில் வின்சியஸ் ஜூனியர் கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 2-0 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் 15-வது முறையாக ஐரோப்பிய யூனியன் சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளது. கடந்த 11 வருடத்தில் மட்டும் 6 முறை வென்றுள்ளது.
இந்தத் தொடரில் ஹாரி கேன் (பேயர்ன் முனிச்), எம்பாப்வே (பிஎஸ்ஜி) ஆகியோர் அதிகபட்சமாக தலா 8 கோல்கள் அடித்த்திருந்தனர்.
தொடரின் சிறந்த வீரராக வின்சியஸ் ஜூனியர் தேர்வு செய்யப்பட்டார். இளம் வீரராக ஜூட் பெலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். இருவரும் ரியல் மாட்ரிட் அணியை சேர்ந்தவர்கள்.
- குளிர்ந்த குளத்தில் மூழ்கும் வீடியோவையும் ரொனால்டோ வெளியிட்டார்.
- ‘சாண்டாகிளாஸ்’ உடனான சந்திப்பு உள்ளிட்ட தனது பயணத்தை அவர் யூடியூப் சேனலில் பகிர்ந்தார்.
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர் பின்லாந்து நாட்டில் உள்ள லாப்லாந்தில் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் அவர் சந்தித்தார்.
'சாண்டாகிளாஸ்' உடனான சந்திப்பு உள்ளிட்ட தனது பயணத்தை அவர் யூடியூப் சேனலில் பகிர்ந்தார். குளிர்ந்த குளத்தில் மூழ்கும் வீடியோவையும் வெளியிட்டார்.
இது மிகவும் சிறப்பான நாள், மிகவும் வித்தியாசமானது என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
- ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார்.
- இன்டர்கான்டினென்டல் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி கோப்பை வென்றது.
கத்தார்:
பிபா இன்டர் கான்டினென்டல் கால்பந்து கோப்பை தொடர் கத்தாரில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட், மெக்சிகோவின் பச்சுகா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியின் 53வது நிமிடத்தில் ரோட்ரிகோ ஒரு கோலும், 84வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் (பெனால்டி) ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
பச்சுகா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இறுதியில், ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
- சர்வதேச கால்பந்து சங்கம் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
- இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கத்தார் தலைநகர் தோகாவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தோகா:
சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. பிபா வெளியிடும் இறுதிப்பட்டியலில் இருந்து சிறந்த வீரர், வீராங்கனை தேசிய அணியின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், கால்பந்து பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கத்தார் தலைநகர் தோகாவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற 11 வீரர்களில் பிரேசில் வீரரும், ரியல் மாட்ரிட் கிளப்புக்காக ஆடுபவருமான வினிசியஸ் ஜூனியர் சிறந்த கால்பந்து வீரராக அறிவிக்கப்பட்டார்.
2016-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதை பெற்ற முதல் பிரேசில் வீரர் என்ற பெருமையை 24 வயது வினிசியஸ் ஜூனியர் பெற்றார். வாக்குகள் அடிப்படையில் அவருக்கு 48 புள்ளி கிடைத்தது. ஸ்பெயின் வீரர் ரோட்ரி 43 புள்ளிகளுடன் 2-வது இடமும், இங்கிலாந்து வீரர் ஜூட் பெலிங்ஹாம் 37 புள்ளிகளுடன் 3-வது இடமும் பெற்றனர்.
சிறந்த வீராங்கனைக்கான விருதை ஸ்பெயின் வீராங்கனை போன்மதி தொடர்ந்து 2-வது முறையாக தட்டிச் சென்றார்.
- 2022 ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணி 3-வது முறையாக கால்பந்து உலகக் கோப்பையை கைப்பற்றியது.
- குணா திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.
2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.
அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி 7 கோல்களுடன், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை தட்டிச் சென்றார்.
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கால்பந்து உலக கோப்பையை வென்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, FIFA உலகக்கோப்பை இன்ஸ்டா பக்கத்தில் "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல" என்ற வரிகளோடு இளையராஜா பாடலை வெளியிட்டுள்ளனர்.
கமல் நடிப்பில் வெளியான குணா திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அண்மையில் மலையாளத்தில் வெளியான 'மஞ்சுமேல் பாய்ஸ்' திரைப்படத்தில் இந்த பாடலை பயன்படுத்தியிருந்தனர். இதனையடுத்து இந்த பாடல் உலகம் முழுவதும் கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- மொனாக்கோ அணியில் இடம் 180 மில்லியன் யூரோ கொடுத்து பிஎஸ்ஜி அணி வாங்கியது.
- பிஎஸ்ஜி அணிக்காக 178 போட்டிகளில் விளையாடி 162 கோல்கள் அடித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரராக கிலியன் எம்பாப்வே உள்ளார். தற்போது மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோருக்குப் பிறகு உலக அளவில் சிறந்த வீரரான திகழ்ந்து வருகிறார்.
25 வயதாகும் எம்பாப்வே தொடக்கத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் லீக்-1 கால்பந்து போட்டியில் மொனாக்கோ அணிக்காக விளையாடி வந்தார். தனது 15 வயதில் மொனாக்கோ சீனியர் அணியில் அறிமுகம் ஆனார். 2015 முதல் 2018 வரை மொனாக்கோ அணிக்காக 41 போட்டிகளில் விளையாடி 16 கோல்கள் அடித்தார்.
2016-17 சீசனில் மொனாக்கோ லீக்-1 டைட்டிலை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக எம்பாப்பேயின் ஆட்டமாகும். இதனால் உலகின் மிகப்பெரிய பணக்கார கிளப்பான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எம்பாப்வேவை லோன் மூலம் வாங்கியது. 2017-18-ல் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக 27 போட்டிகளில் விளையாடி 13 கோல் அடித்தார்.
அதன்பின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் 180 மில்லியன் யூரோ கொடுத்து மொனாக்கோ அணியில் இருந்து எம்பாப்பவே வாங்கியது. அப்போது எம்பாப்வேவுக்கு 18 வயது.
பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனதும் எம்பாப்வேயின் ஆட்டம் மெருகேறியது. சுமார் ஆறு ஆண்டுகள் (2018-2024) பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக விளையாடினார். 178 போட்டிகளில் விளையாடி 162 கோல்கள் அடித்தார்.
பிஎஸ்ஜி அணியில் நெய்மர், மெஸ்சி இணைந்தனர். மூன்று ஜாம்பவான்கள் சேர்ந்து விளையாடிய போதிலும் பிஎஸ்ஜி அணியால் ஐரோப்பிய சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல முடியவில்லை.
பிஎஸ்ஜி அணியில் இருந்து முதலில் மெஸ்சி வெளியேறினார். அதன்பின் எம்பாப்வே வெளியேற முடிவு செய்தார். அவரை பல்வேறு அணிகள் வாங்க முன்வந்தன. ஆனால் எம்பாப்வே லா லிகா லீக்கில் விளையாடும் புகழ்பெற்ற ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்பினார்.
இதற்கிடையே பிஎஸ்ஜி- எம்பாப்வே இடையில் ஒப்பந்தம் 2024 சீசன் வரை இருந்தது. ஒப்பந்தம் முடிவடைய இருந்த நேரத்தில் எம்பாப்வே- பிஎஸ்ஜி இடையே ஒப்பந்தம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி அவரை வாங்க முயற்சி மேற்கொண்டது.
எம்பாப்வே உடனான ஒப்பந்தம் முடிவடைவதற்குள் ஒப்பந்ததத்தை நீட்டிக்க பிஎஸ்ஜி தவறியது. இதனால் ரியல் மாட்ரிட் அணிக்கு ப்ரீ டிரான்ஸ்பர் மூலம் சென்றார். 5 வருட ஒப்பந்த கால அடிப்படையில் எம்பாப்பே ரியல் மாட்ரிட் சென்றுள்ளார்.
ஒரு அணியுடன் ஒப்பந்தம் இல்லை என்றால் மற்றொரு அணி எந்தவிதமான டிரான்ஸ்பர் பீஸ் இல்லாமல் அந்த வீரரை ஒப்பந்தம் செய்ய முடியும். அதேவேளையில் சம்பளம் அதிக அளவில் கொடுக்க நேரிடும். ரியல் மாட்ரிட் எம்பாப்பேவுக்கு வருடத்திற்கு சுமார் 305 கோடி ரூபாய் சம்பளம் வழங்குகிறது.
இதனால் ரியல் மாட்ரிட் எம்பாப்வே டிரான்ஸ்பருக்கான ஒரு பைசா கூட கொடுக்காமல் ஒப்பந்தம் செய்தது. ரியல் மாட்ரிட் அணிக்காக தற்போது 15 போட்டிகளில் விளையாடி 9 கோல்கள் அடித்துள்ளார்.
2021-ல் ரியல் மாட்ரிட் 180 மில்லியன் யூரோ கொடுக்க தயாராக இருந்தது. ஆனால் பிஎஸ்ஜி மறுத்துவிட்டது. தற்போது ப்ரீ டிரான்ஸ்பராக சென்றுள்ளார்.
18 வயதில் சாதனை
பிஎஸ்ஜி அணியில் இணைந்த போது எம்பாப்வே 2017-ல் தனது 18 வயதில் பிரான்ஸ் அணியில் அறிமுகம் ஆனார். 2018 உலகக் கோப்பையில் கோல் அடித்து, இளம் வயதில் உலகக் கோப்பையில் கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் உலக அளவில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த இளம் வீரர் என்ற பட்டியலில் பீலேவுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார். பிஃபா உலகக் கோப்பை சிறந்த இளம் வீரர், பிரான்சின் சிறந்த வீரர் ஆகிய விருதுகளை வென்றார்.
2021-ல் பிரான்ஸ் யுஇஎஃப்ஏ (UEFA) தேசிய லீக்கை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இறுதிப் போட்டியில் அதிக கோல்கள் அடித்த வீரருக்கான விருதை வென்றார்.

2022 உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்தார். தங்க ஷூ (Golden Boot), வெள்ளி பந்து (Silver Ball) ஆகியவற்றை வென்றார்.
அடுத்தடுத்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆனால் இதுவரை பலோன் டி'ஆர் விருதை மற்றும் பெறவில்லை. 2023-ல் 3-வது இடம் பிடித்தார்.
- 2034-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான உரிமத்துக்கு வளைகுடா நாடான சவுதிஅரேபியா மட்டுமே விண்ணப்பித்து இருந்தது.
- சவுதிஅரேபியா உலகக் கோப்பை போட்டியை நடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும்.
சூரிச்:
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை 2026-ம் ஆண்டில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த நிலையில் 2030 மற்றும் 2034-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை எந்த நாட்டுக்கு வழங்குவது என்பது குறித்து சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைமையகத்தில் நேற்று 'பிபா' நிர்வாக கமிட்டியினர் கியானி இன்பான்டினோ தலைமையில் ஆலோசித்தனர். இதில் 'பிபா'வின் 211 நாட்டு உறுப்பினர்கள் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டனர்.
இதன் முடிவில் 2030-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு ஸ்பெயின், போர்ச்சுக்கல், மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டது. உலகக் கோப்பை தொடங்கி 100 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில், 2030-ம் ஆண்டு உலகக்கோப்பையில் 3 ஆட்டங்கள் மட்டும் அர்ஜென்டினா, பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தென்அமெரிக்க நாடான உருகுவேயில் தான் முதலாவது உலகக்கோப்பை போட்டி 1930-ம் ஆண்டு நடந்தது நினைவு கூரத்தக்கது.
2034-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான உரிமத்துக்கு வளைகுடா நாடான சவுதிஅரேபியா மட்டுமே விண்ணப்பித்து இருந்தது. பிபா உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அந்த நாட்டுக்கு 2034-ம் ஆண்டு போட்டியை நடத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. சவுதிஅரேபியா உலகக் கோப்பை போட்டியை நடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதனை சர்வதேச கால்பந்து சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 4-2 என பெங்களூரு எப்.சி அணி வென்றது.
- பெங்களூரு எப்.சி. அணியின் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார்.
பெங்களூரு:
13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் பெங்களூருவில் நேற்று நடந்த லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, பெங்களூரு எப்.சி அணியுடன் மோதியது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், பெங்களூரு எப்.சி. அணியின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி ஐ.எஸ்.எல். தொடரில் ஹாட்ரிக் கோல் அடித்த வயதான வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.
இதன்மூலம் ஐதராபாத் எப்.சி. அணிக்காக 38 வயதில் ஹாட்ரிக் கோல் அடித்த நைஜீரிய வீரர் பார்தோலோமிவ் ஓக்பெச்சேவின் சாதனையை சுனில் சேத்ரி முறியடித்துள்ளார்.
சுனில் சேத்ரியின் சமீபத்திய ஹாட்ரிக் ஐஎஸ்எல்லில் அவரது மூன்றாவது ஹாட்ரிக் ஆகும். இதற்கு முன் 2015ல் மும்பை சிட்டி எப்.சி.க்காகவும், 2018ல் பெங்களூரு எப்.சி.க்காகவும் ஹாட்ரிக் அடித்துள்ளார்.
- முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் முடிந்தது.
- சென்னை அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை.
சென்னை:
13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் சென்னையின் எப்.சி., ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் முடிந்தது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஈஸ்ட் பெங்கால் அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அசத்தியது.
சென்னை அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணி அசத்தல் வெற்றி பெற்றது.






