என் மலர்tooltip icon

    கால்பந்து

    • மான்செஸ்டர் சிட்டி 4 முறை தொடர்ந்து பிரீமியர் லீக் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணம்.
    • யூரோ கோப்பையில் ஸ்பெயின் இங்கிலாந்தை 2-1 என வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார்.

    கால்பந்து விளையாட்டில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதுகளில் ஒன்று பலோன் டி'ஆர் விருது. மெஸ்சி பார்சிலோனாவுக்கும், கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடிய காலத்தில் இருவரும்தான் இந்த விருதை மாறிமாறி வாங்கியிருப்பார்கள்.

    அவர்கள் இருவருக்கிடையே கடும் போட்டி நிலவும். தற்போது மெஸ்சி அமெரிக்கா லீக்கில் விளையாடுகிறார். ரொனால்டோ சவுதி லீக்கில் விளையாடுகிறார். இந்த வருட விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களில் இருவருடைய பெயரும் இடம் பெறவில்லை.

    இந்த நிலையில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடும் மிட் பீல்டர் ரோட்ரி பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார். 2023-24 சீசனில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார். தொடர்ந்து நான்காவது முறையாக மான்செஸ்டர் சிட்டி இங்கிலீஷ் பிரீமியர் லீக்கை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

    2024 யூரோ கோப்பையில் தனது நாடான ஸ்பெயின் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 2-1 என ஸ்பெயின் வீழ்த்தியது. தொடரின் நாயகன் விருதையும் வென்றார். இந்த காலக்கட்டத்தில் 14 கோல்கள் அடிப்பதற்கு உதவி புரிந்துள்ளார். அதேவேளையில் 10 கோல்களும் அடித்துள்ளார்.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ 2008-ல் மான்செஸ்ட் யுனைடெட் அணிக்காக பலோன் டி'ஆர் விருதை வென்ற பிறகு இங்கிலீஷ் பிரீமியரில் விளையாடும் ஒரு வீரர் பலோன் டி'ஆர் விருதை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

    • கிட்டத்தட்ட 6 மாதங்கள் 20 நாட்களில் இந்த பயணத்தை காங் முடித்துள்ளார்.
    • ரொனால்டோவை நேரில் பார்ப்பதற்காக 13 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிளில் பயணித்துள்ளார்.

    உலகின் மிக பிரபலமான கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கால்பந்து ஆட்டத்தில் சிறந்த வீரராக வலம் வரும் இவரை நேரில் பார்க்க ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். அந்த வகையில் சீன ரசிகர் ஒருவர் ரொனால்டோவை நேரில் பார்ப்பதற்காக 13 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிளில் வந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ரொனால்டோ, கடந்த பிப்ரவரி மாதம் சீனா செல்வதாக இருந்தது. ஆனால் அந்த பயணம் எதிர்பாராதவிதமாக ரத்து செய்யப்பட்டது. அவரை பார்க்க ஆவலாக இருந்த சீன ரசிகர் காங் இதனால் மிகவும் வருத்தமடைந்தார். இதனையடுத்து அவரை நேரில் பார்க்க சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டார்.

    அதன்படி சீனாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சைக்கிளில் வந்து ரொனால்டோவை சந்தித்துள்ளார். இந்த பயணத்தை கடந்த மார்ச் 18-ந் தேதி சீனாவில் தொடங்கிய அவர் 7 நாடுகளை கடந்து அக்டோபர் 20-ந் தேதி சவுதி அரேபியாவை வந்தடைந்தார். கிட்டத்தட்ட 6 மாதங்கள் 20 நாட்களில் இந்த பயணத்தை காங் முடித்துள்ளார்.

    இறுதியாக ரொனால்டோவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் ரொனால்டோ ஆட்டோகிராப் போட்ட ஜெர்சியையும் காங் பரிசாக பெற்றுக் கொண்டார்.


    • மாட்ரிட் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்ரிட் வீரர் வினிசியஸ் கூறினார்.
    • இச்சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாகவும் வினிசியஸ் கூறினார்.

    பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பார்சிலோனா அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்த போட்டியில் 77-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் இளம் வீரர் லமின் யமால் ஒரு கோல் அடித்தார். கோல் அடித்த உற்சாகத்தில் அதனை கொண்டாடும் விதமாக ஜெர்சியில் இருக்கும் அவரது பெயரை சுட்டிக் காட்டி கொண்டாடினார். உடனே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அவர் மீது இனவெறி முழக்கங்களை எழுப்பினர். 17-வது வயதான வீரருக்கு எதிராக ரசிகர்கள் இனவெறி முழுக்கம் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் பார்சிலோனா அணி வீரர் லமின் யமால் மீது இனவெறி முழக்கங்கள் எழுப்பிய மாட்ரிட் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார். 



    • ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் இந்தியாவின் சங்கீதா ஒரு கோல் அடித்தார்.
    • ஆட்டத்தின் 141-வது நிமிடத்தில் நேபாளத்தின் சபித்ரா ஒரு கோல் அடித்தார்.

    காத்மண்டு:

    நேபாளத்தில் பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் நடைபெறுகிறது.

    காத்மண்டுவில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் இந்தியாவின் சங்கீதா ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 141-வது நிமிடத்தில் நேபாளத்தின் சபித்ரா ஒரு கோல் அடித்தார். இறுதியில், போட்டி 1-1 என சமனில் இருந்தது.

    இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் நேபாளம் 4-2 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்திய அணி தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறியது.

    • இந்தியாவுக்காக 50 கோல்களை அடித்ததில் பெருமைப்படுகிறேன்.
    • இந்த சாதனையை என அப்பாவிற்கு அர்ப்பணிக்கிறேன்.

    சர்வதேச கால்பந்தில் 50 கோல்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மணிப்பூரைச் சேர்ந்த இங்கோகம் பாலா தேவி பெற்றுள்ளார்.

    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோல் அடித்ததன் மூலம் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.

    இந்த மைல்கல்லை எட்டியது குறித்து பேசிய பால தேவி, "இந்தியாவுக்காக 50 கோல்களை அடித்ததில் பெருமைப்படுகிறேன். இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். இந்த சாதனையை என் அப்பாவிற்கு அர்ப்பணிக்கிறேன். எனக்கு கால்பந்து விளையாட்டை சொல்லி கொடுத்தது என் அப்பா தான். நான் இன்று இங்கு இருப்பதற்கு காரணமும் என் அப்பா தான்" என்று தெரிவித்தார்.


    • இன்று காலை நடந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா-பொலிவியா அணிகள் மோதின.
    • பிரேசில் 5 வெற்றியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

    உலக கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடை பெற்று வருகின்றன.

    அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் இந்திய நேரப்படி இன்று காலை நடந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா-பொலிவியா அணிகள் மோதின. இதில் அர்ஜெண்டினா 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    காயத்துக்கு பிறகு அணிக்கு திரும்பிய அர்ஜெண்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 37 வயதான அவர் 3 கோல்கள் அடித்து முத்திரை பதித்தார். மெஸ்சி 19, 84 மற்றும் 86-வது நிமிடங்களில் கோல் அடித்தார். மார்ட்டினஸ் (43-வது நிமிடம்) ஜூலியன் அல்வா ரெஸ் (48), தியோகோ அல்மடா (69) ஆகியோர் தலா 1 கோலும் அடித்தனர்.

    அர்ஜெண்டினா பெற்ற 7-வது வெற்றியாகும். அந்த அணி 22 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. மற்றொரு ஆட்டத்தில் பிரேசில் 4-0 என்ற கோல் கணக்கில் பெருவை தோற்கடித்தது. பிரேசில் 5 வெற்றியுடன் 16 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.

    • தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் நிஷான் வேலுப்பிள்ளை என்ற தமிழர் அறிமுகமானார்.
    • அறிமுக போட்டியில் தனது முதல் கோலை நிஷான் வேலுப்பிள்ளை அடித்தார்.

    பிபா உலகக்கோப்பை 2026-க்கான ஆசிய தகுதிச் சுற்றில் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 10) நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் நிஷான் வேலுப்பிள்ளை என்ற தமிழர் அறிமுகமானார்.

    இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கொண்ட 23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை 2019 முதல் ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார். பிபா உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பின்னடைவை வந்த நிலையில், அணியின் மேலாளராக புதிதாக பொறுப்பேற்ற டோனி போபாவிக் வியாழக்கிழமை நடைபெற்ற சீனாவுக்கு எதிரான போட்டியில் நிஷான் வேலுப்பிள்ளையை சேர்த்தார்.

    ஆஸ்திரேலிய அணிக்காக மாற்று வீரராக போட்டியின் 83-வது நிமிடத்தில் களம் நுழைந்த நிஷான் அடுத்த 7 நிமிடத்தில் தனது அறிமுக போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார்.

    அவர் ஆஸ்திரேலிய அணிக்காக கோல் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அவர் அணிந்திருந்த 7 என்ற எண் கொண்ட ஜெர்சியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஜெர்சி எண்ணும் 7 என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, நிஷான் வேலுப்பிள்ளையின் கோல் மூலம் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய கால்பந்து அணி, ஃபிஃபா உலகக்கோப்பை தகுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

    • எதிர் அணி வீரரை கடித்ததற்காக கால்பந்து வீரர் மிலுடின் ஒஸ்மாஜிக்கு 8 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • போட்டியின் போது இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்தில் பிரெஸ்டன்-பிளாக்பர்ன் அணிகள் இடையே நடந்த கால்பந்து போட்டியின் போது எதிர் அணி வீரரை கடித்ததற்காக கால்பந்து வீரர் மிலுடின் ஒஸ்மாஜிக்கு 8 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ரூ.16 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    பிரெஸ்டன் வீரரான மிலுடின் ஒஸ்மாஜிக் கடந்த 22-ந்தேதி நடந்த ஆட்டத்தில் பிளாக்பர்ன் பின்கள வீரர் ஓவன் பெக்கை கடித்ததாக தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டு உள்ளார். அவர் கடிக்கப்பட்டதாக நடுவர் மாட்டோனோ ஹூவிடம் பெக் கூறிய போதிலும், இந்தச் சம்பவத்திற்காக மிலுடின் ஒஸ்மாஜிக் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை.

    போட்டியின் போது இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐதராபாத் அணி தான் மோதிய 2 போட்டியிலும் தோற்றது.
    • சென்னை அணி ஐதராபாத்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறுமா ஆர்வத்தில் உள்ளது.

    ஐதராபாத்:

    இந்தியன் சூப்பர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இதில் 13 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தியது. சென்னையில் நடந்த 2-வது போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 0-1 என்ற கோல் கணக்கில் முகமதன் அணியிடம் தோற்றது.

    சென்னையின் எப்.சி. 3-வது ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.யை எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கிறது.

    சென்னை அணி ஐதராபாத்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐதராபாத் அணி தான் மோதிய 2 போட்டியிலும் தோற்றது. பெங்களூர் அணியிடம் 0-3 என்ற கணக்கிலும், பஞ்சாப்பில் 0-2 என்ற கணக்கிலும் தோற்றது. ஐதராபாத் அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    பெங்களூர், பஞ்சாப் அணிகள் தாங்கள் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தலா 9 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன. ஜாம்ஷெட்பூர் அணி 6 புள்ளியும், கோவா, கேரளா, கவுகாத்தி, முகமதன் ஸ்போர்ட்டிங் கிளப் மோகன்பகான் தலா 3 புள்ளிகளும், சென்னையின் எப்.சி. ஒடிசா தலா 4 புள்ளியும் மும்பை ஒரு புள்ளியும் பெற்றுள்ளன. ஈஸ்ட் பெங்கால், ஐதராபாத் அணிகள் புள்ளி எதுவும் பெறவில்லை.

    • ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 33-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
    • ஸ்டெபனோ பியோலி அர்-நஸர் அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

    கால்பந்து விளையாட்டின் சிறந்த வீரரான போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியில் உள்ள அல்-நஸர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    சுவுதி ப்ரோ லீக்கில் அல்-நஸர் நேற்று எத்திஃபாக் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் அல்-நஸர் அணி 3-0 என வெற்றி பெற்றது. அந்த அணிக்கு 33-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை பதிவு செய்தார்.

    அதன்பின் சலீம் அல்-நஜ்தி 56-வது நிமிடத்திலும், தலிஸ்கா 70-வது நிமிடத்திலும் கோல் அடிக்க அல்-நஸர் அணி 3-0 என வெற்றி பெற்றது.

    அல்-நஸர் அணியின் பயிற்சியாளராக இருந்த லூயிஸ் காஸ்ட்ரோ அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஸ்டெபனோ பியோலி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் அல்-நஸர் அணியின் முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டியில அல்-நஸர் வெற்றி பெற்றது. இந்த வெற்றி அணியின் முயற்சிக்கு கிடைத்தது. இன்றிரவு (நேற்று) மிகப்பெரிய வெற்றி. ரசிகர்களுக்காக இது... என ரொனால்டா தனது சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அல்-ஷார்ட்டா அணிக்கெதிரான போட்டியில் வைரஸ் காய்ச்சல் காரணமாக ரொனால்டோ விளையாடவில்லை. அதில் அல்-நஸர் 1-1 என போட்டியை டிரா செய்தது.

    • ஏழாவது நிமிடத்தில் சிரியா முதல் கோலை பதிவு செய்தது.
    • கடைசி வரை போராடிய இந்திய அணியால் ஒரு கோல் கூட போடமுடியாமல் தோல்வியை தழுவியது.

    ஐதராபாத்தில் நடந்த 2024 இன்டர்காண்டினென்டல் கோப்பையின் இரண்டாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் சிரியாவிடம் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம், கோல் வித்தியாசத்தில் மொரீஷியஸை பின்னுக்குத் தள்ளி, போட்டியில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்தது.

    ஏழாவது நிமிடத்தில் இந்தியா ஒரு கோலை விட்டுக் கொடுத்தது. இரண்டாவது பாதியில் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், ஆட்டத்திற்கு எதிராக இரண்டாவது கோல் அடித்தது சிரியா. 96-வது நிமிடத்தில் மூன்றாவது கோல் அடிக்கப்பட்டது.

    கடைசி வரை போராடிய இந்திய அணியால் ஒரு கோல் கூட போடமுடியாமல் தோல்வியை தழுவியது. இதன்மூலம் இன்டர்காண்டினென்டல் கோப்பையை சிரியா முதல் முறையாக வென்றுள்ளது.

    • நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
    • 34-வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தார்.

    போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகம் முழுவதும் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர் ஆவார். இதுவரை கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார்.

    இவர் படைக்காத சாதனை, தொட முடியாத ஒரு கோப்பை என்றால் அது உலகக்கோப்பை தான். கிளப் போட்டிகளில் கிட்டத் தட்ட அனைத்து கோப்பையும் வென்று விட்டாலும், உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணி காலிறுதி வரை வந்தாலும் அதைத் தாண்டி அடுத்த கட்டமான அரை இறுதிப் போட்டிக்கு இது வரை தகுதி பெற்றதே இல்லை.

    இந்தநிலையில், ரொனால்டோ கால்பந்து உலகில் புதிய சாதனை படைத்துள்ளார். நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 34-வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தார்.

    இதன் மூலம் தற்போது வரை கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக மெஸ்ஸி 838 கோல் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.



    ×