என் மலர்tooltip icon

    கால்பந்து

    • இன்று காலை நடந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா-பொலிவியா அணிகள் மோதின.
    • பிரேசில் 5 வெற்றியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

    உலக கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடை பெற்று வருகின்றன.

    அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் இந்திய நேரப்படி இன்று காலை நடந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா-பொலிவியா அணிகள் மோதின. இதில் அர்ஜெண்டினா 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    காயத்துக்கு பிறகு அணிக்கு திரும்பிய அர்ஜெண்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 37 வயதான அவர் 3 கோல்கள் அடித்து முத்திரை பதித்தார். மெஸ்சி 19, 84 மற்றும் 86-வது நிமிடங்களில் கோல் அடித்தார். மார்ட்டினஸ் (43-வது நிமிடம்) ஜூலியன் அல்வா ரெஸ் (48), தியோகோ அல்மடா (69) ஆகியோர் தலா 1 கோலும் அடித்தனர்.

    அர்ஜெண்டினா பெற்ற 7-வது வெற்றியாகும். அந்த அணி 22 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. மற்றொரு ஆட்டத்தில் பிரேசில் 4-0 என்ற கோல் கணக்கில் பெருவை தோற்கடித்தது. பிரேசில் 5 வெற்றியுடன் 16 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.

    • தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் நிஷான் வேலுப்பிள்ளை என்ற தமிழர் அறிமுகமானார்.
    • அறிமுக போட்டியில் தனது முதல் கோலை நிஷான் வேலுப்பிள்ளை அடித்தார்.

    பிபா உலகக்கோப்பை 2026-க்கான ஆசிய தகுதிச் சுற்றில் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 10) நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் நிஷான் வேலுப்பிள்ளை என்ற தமிழர் அறிமுகமானார்.

    இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கொண்ட 23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை 2019 முதல் ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார். பிபா உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பின்னடைவை வந்த நிலையில், அணியின் மேலாளராக புதிதாக பொறுப்பேற்ற டோனி போபாவிக் வியாழக்கிழமை நடைபெற்ற சீனாவுக்கு எதிரான போட்டியில் நிஷான் வேலுப்பிள்ளையை சேர்த்தார்.

    ஆஸ்திரேலிய அணிக்காக மாற்று வீரராக போட்டியின் 83-வது நிமிடத்தில் களம் நுழைந்த நிஷான் அடுத்த 7 நிமிடத்தில் தனது அறிமுக போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார்.

    அவர் ஆஸ்திரேலிய அணிக்காக கோல் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அவர் அணிந்திருந்த 7 என்ற எண் கொண்ட ஜெர்சியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஜெர்சி எண்ணும் 7 என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, நிஷான் வேலுப்பிள்ளையின் கோல் மூலம் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய கால்பந்து அணி, ஃபிஃபா உலகக்கோப்பை தகுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

    • எதிர் அணி வீரரை கடித்ததற்காக கால்பந்து வீரர் மிலுடின் ஒஸ்மாஜிக்கு 8 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • போட்டியின் போது இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்தில் பிரெஸ்டன்-பிளாக்பர்ன் அணிகள் இடையே நடந்த கால்பந்து போட்டியின் போது எதிர் அணி வீரரை கடித்ததற்காக கால்பந்து வீரர் மிலுடின் ஒஸ்மாஜிக்கு 8 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ரூ.16 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    பிரெஸ்டன் வீரரான மிலுடின் ஒஸ்மாஜிக் கடந்த 22-ந்தேதி நடந்த ஆட்டத்தில் பிளாக்பர்ன் பின்கள வீரர் ஓவன் பெக்கை கடித்ததாக தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டு உள்ளார். அவர் கடிக்கப்பட்டதாக நடுவர் மாட்டோனோ ஹூவிடம் பெக் கூறிய போதிலும், இந்தச் சம்பவத்திற்காக மிலுடின் ஒஸ்மாஜிக் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை.

    போட்டியின் போது இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐதராபாத் அணி தான் மோதிய 2 போட்டியிலும் தோற்றது.
    • சென்னை அணி ஐதராபாத்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறுமா ஆர்வத்தில் உள்ளது.

    ஐதராபாத்:

    இந்தியன் சூப்பர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இதில் 13 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தியது. சென்னையில் நடந்த 2-வது போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 0-1 என்ற கோல் கணக்கில் முகமதன் அணியிடம் தோற்றது.

    சென்னையின் எப்.சி. 3-வது ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.யை எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கிறது.

    சென்னை அணி ஐதராபாத்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐதராபாத் அணி தான் மோதிய 2 போட்டியிலும் தோற்றது. பெங்களூர் அணியிடம் 0-3 என்ற கணக்கிலும், பஞ்சாப்பில் 0-2 என்ற கணக்கிலும் தோற்றது. ஐதராபாத் அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    பெங்களூர், பஞ்சாப் அணிகள் தாங்கள் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தலா 9 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன. ஜாம்ஷெட்பூர் அணி 6 புள்ளியும், கோவா, கேரளா, கவுகாத்தி, முகமதன் ஸ்போர்ட்டிங் கிளப் மோகன்பகான் தலா 3 புள்ளிகளும், சென்னையின் எப்.சி. ஒடிசா தலா 4 புள்ளியும் மும்பை ஒரு புள்ளியும் பெற்றுள்ளன. ஈஸ்ட் பெங்கால், ஐதராபாத் அணிகள் புள்ளி எதுவும் பெறவில்லை.

    • ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 33-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
    • ஸ்டெபனோ பியோலி அர்-நஸர் அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

    கால்பந்து விளையாட்டின் சிறந்த வீரரான போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியில் உள்ள அல்-நஸர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    சுவுதி ப்ரோ லீக்கில் அல்-நஸர் நேற்று எத்திஃபாக் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் அல்-நஸர் அணி 3-0 என வெற்றி பெற்றது. அந்த அணிக்கு 33-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை பதிவு செய்தார்.

    அதன்பின் சலீம் அல்-நஜ்தி 56-வது நிமிடத்திலும், தலிஸ்கா 70-வது நிமிடத்திலும் கோல் அடிக்க அல்-நஸர் அணி 3-0 என வெற்றி பெற்றது.

    அல்-நஸர் அணியின் பயிற்சியாளராக இருந்த லூயிஸ் காஸ்ட்ரோ அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஸ்டெபனோ பியோலி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் அல்-நஸர் அணியின் முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டியில அல்-நஸர் வெற்றி பெற்றது. இந்த வெற்றி அணியின் முயற்சிக்கு கிடைத்தது. இன்றிரவு (நேற்று) மிகப்பெரிய வெற்றி. ரசிகர்களுக்காக இது... என ரொனால்டா தனது சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அல்-ஷார்ட்டா அணிக்கெதிரான போட்டியில் வைரஸ் காய்ச்சல் காரணமாக ரொனால்டோ விளையாடவில்லை. அதில் அல்-நஸர் 1-1 என போட்டியை டிரா செய்தது.

    • ஏழாவது நிமிடத்தில் சிரியா முதல் கோலை பதிவு செய்தது.
    • கடைசி வரை போராடிய இந்திய அணியால் ஒரு கோல் கூட போடமுடியாமல் தோல்வியை தழுவியது.

    ஐதராபாத்தில் நடந்த 2024 இன்டர்காண்டினென்டல் கோப்பையின் இரண்டாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் சிரியாவிடம் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம், கோல் வித்தியாசத்தில் மொரீஷியஸை பின்னுக்குத் தள்ளி, போட்டியில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்தது.

    ஏழாவது நிமிடத்தில் இந்தியா ஒரு கோலை விட்டுக் கொடுத்தது. இரண்டாவது பாதியில் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், ஆட்டத்திற்கு எதிராக இரண்டாவது கோல் அடித்தது சிரியா. 96-வது நிமிடத்தில் மூன்றாவது கோல் அடிக்கப்பட்டது.

    கடைசி வரை போராடிய இந்திய அணியால் ஒரு கோல் கூட போடமுடியாமல் தோல்வியை தழுவியது. இதன்மூலம் இன்டர்காண்டினென்டல் கோப்பையை சிரியா முதல் முறையாக வென்றுள்ளது.

    • நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
    • 34-வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தார்.

    போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகம் முழுவதும் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர் ஆவார். இதுவரை கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார்.

    இவர் படைக்காத சாதனை, தொட முடியாத ஒரு கோப்பை என்றால் அது உலகக்கோப்பை தான். கிளப் போட்டிகளில் கிட்டத் தட்ட அனைத்து கோப்பையும் வென்று விட்டாலும், உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணி காலிறுதி வரை வந்தாலும் அதைத் தாண்டி அடுத்த கட்டமான அரை இறுதிப் போட்டிக்கு இது வரை தகுதி பெற்றதே இல்லை.

    இந்தநிலையில், ரொனால்டோ கால்பந்து உலகில் புதிய சாதனை படைத்துள்ளார். நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 34-வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தார்.

    இதன் மூலம் தற்போது வரை கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக மெஸ்ஸி 838 கோல் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.



    • மெஸ்சி 8 முறை பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார்.
    • ரொனால்டோ 5 முறை பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார்.

    கால்பந்தில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக அர்ஜென்டினாவின் மெஸ்சி, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர். கால்பந்து வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் உயரிய விருது பலோன் டி'ஆர் விருது. இந்த விருதை மெஸ்சி 8 முறை வென்றுள்ளார். ரொனால்டோ ஐந்து முறை வென்றுள்ளார்.

    2024-ம் ஆண்டிக்கான பலோன் டி'ஆர் விருது அக்டோபர் 28-ந்தேதி வழங்கப்பட இருக்கிறது. அதற்கான 30 வீரர்கள் கொண்ட பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மெஸ்சி மற்றும் ரொனால்டோ பெயர் இடம் பெறவில்லை.

    2003-ம் ஆண்டில் இருந்து தற்போதுதான் பரிந்துரை பட்டியலில் இருவருடைய பெயரும் இடம் பெறாதது இதுதான் முதன் முறையாகும்.

    மெஸ்சி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறி பி.எஸ்.ஜி. அணிக்கு சென்றார். பின்னர் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு சென்றார்.

    மெஸ்சி முதன்முறையாக 2006-ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் 2009-ல் முதல் விருதை வென்றார். ரொனால்டோ 2004-ம் ஆண்டு முதன்முறையாக பரிந்துரைக்கப்பட்டார். 2008-ல் இருந்து இருவரிடையே கடும் போட்டி நிலவியது. 13 முறை இவர்கள்தான் வென்றுள்னர்.

    ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து யுவென்டஸ் அணிக்கு சென்றார். தற்போது சவுதி அரேபியாவின் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    • பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடிய நிலையில் ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார்.
    • இந்த சீசனில் முதல் மூன்று போட்டிகளில் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.

    பிரான்ஸ் கால்பந்து அணி கேப்டன் எம்பாப்பே. இவர் உலகின் தலைசிறந்த வீரரான திகழ்ந்து வருகிறார். பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வந்த எம்பாப்பே, ப்ரீடிரான்ஸ்ஃபர் மூலமாக உலகின் முன்னணி கால்பந்து அணியான ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்கு சென்றார்.

    ரியல் மாட்ரிட் அணிக்காக UEFA சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் அட்லாண்டா அணிக்கெதிராக களம் இறங்கினார். இதுதான் ரியல் மாட்ரிட் அணிக்காக எம்பாப்பே களம் இறங்கிய முதல் போட்டியாகும். இந்த போட்டியில் எம்பாப்பே ஒரு கோல் அடித்து அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.

    தற்போது லா லிகா கால்பந்து லீக் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு ரியல் மாட்ரிட் ரியல் பெட்டிஸ் அணியை எதிர்கொண்டது.

    இதற்கு முன்னதாக மூன்று போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக எம்பாப்பே களம் இறங்கி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் அவருக்கு எதிராக விமர்சனம் எழும்பியது.

    இந்த நிலையில் ரியல் பெட்டிஸ் அணிக்கெதிராக எம்பாப்பே லா லீகாவில் முதல் கோலை பதிவு செய்தார். 67-வது நிமிடத்தில் எம்பாப்பே கோல் அடித்தார். அத்துடன் 75-வது நிமிடத்தில் பொனால்டி ஷூட் வாய்ப்பு கிடைத்தது. இதையும் சரியான பயன்படுததி கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் 2-0 என வெற்றி பெற்றது.

    லா லிகா புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது. ரியல் மாட்ரிட் 2 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் டிராவுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடம் வகிக்கிறது.

    • கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது யூட்யூபராக புது அவதாரம் எடுத்துள்ளார்.
    • ரொனால்டோ 'யுஆர் கிறிஸ்டியானோ' என்ற புதிய யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.

    உலகின் முன்னணி கால்பந்து வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 39 வயதான ரொனால்டோ கால்பந்து வாழ்க்கையில் தனது கடைசி கட்டத்தை எட்டியுள்ளார்.

    கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது யூட்யூபராக புது அவதாரம் எடுத்துள்ளார்.

    'யுஆர் கிறிஸ்டியானோ' என்ற புதிய யூடியூப் சேனலை அவர் தொடங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "நான் யுஆர் கிறிஸ்டியானோ என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஆரம்பித்துள்ளேன். அதை அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்" என்று காமெடியாக பேசியுள்ளார்.

    ரொனால்டோவின் யூட்யூப் சேனலை 1 மணிநேரத்திற்குள் 1 மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இதுவரை இந்த சேனலில் 18 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • 44-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்து அல்- நாசர் அணியை முன்னிலை பெற செய்தார்.
    • அதன் பின் அல் நாசர் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

    ரியாத்:

    சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ரொனால்டோவின் அல் - நாசர் அணி அல்- ஹிலால் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பாக நடந்த போட்டியின் 44-வது நிமிடத்தில் கோல் அடித்து ரொனால்டோ அல்- நாசர் அணியை முன்னிலை பெற செய்தார்.

    ஆனால் அதன் பின் அல் நாசர் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. மாறாக அல் - ஹிலால் அடுத்தடுத்து கோல்களை போட்டு தாக்கியது. முடிவில் அல் - ஹிலால் 4-1 என்ற கோல் கணக்கில் ரொனால்டோவின் அல் - நாசர் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது.

    அல் - ஹிலால் தரப்பில் அலெக்சாண்டர் மித்ரோவிக் 2 கோல்களும், செர்ஜி மிலின்கோவிக் மற்றும் மால்கம் தலா 1 கோல் அடித்து அணி வெற்றி பெற உதவினர்.

    • இறுதிப்போட்டியில் ரொனால்டோவின் அல் - நாசர் அணி அல்- ஹிலால் அணியுடன் பலப்பரீட்சை செய்தது.
    • தோல்வியடைந்த விரக்தியில் ரொனால்டோ செய்த கையசைவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியானது நேற்று நடைபெற்ற நிலையில் ரொனால்டோவின் அல் - நாசர் அணி அல்- ஹிலால் அணியுடன் பலப்பரீட்சை செய்தது. விறுவிறுப்பாக நடந்த போட்டியின் 44 வது நிமிடத்தில் கோல் அடித்து ரொனால்டோ அல்- நாசர் அணியின் ஆட்டதை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் சென்றார்.

    ஆனால் அதைதொடர்நது மைதானம் அல்- ஹிலால் வசம் சென்றது. ஆட்டத்தின் 55 வது நிமிடத்தில் அல்- ஹிலால் அணி வீரர் செர்ஜி மிலின்கோவிக் கோல் ஒன்றை விளாசி புள்ளிப் பட்டியலை சமன் செய்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 63 மற்றும் 69 வது நிமிடத்தில் அல் ஹிலால் வீரர் அலெக்சாண்டர் மித்ரோவிசிக் 2 அடுத்தடுத்து கோல்களை விளாசினார்.

    இறுதியாக ஆட்டத்தின் 72 வது நிமிடத்தில் அல்- ஹிலால் வீரர் மால்கம் ஒரு கோல் ஸ்கோர் செய்தார். இதன் மூலம் 4-1 என்ற கோல் கணக்கில் அல்- ஹிலால் அணி ரொனால்டோவின் அல்- நாசர் அணியை தோற்கடித்து கோப்பையைத் தட்டிச் சென்றது.

    உலகக்கோப்பை வென்ற மெஸ்ஸி ஸ்டைலில் அல்-ஹிலால் அணி கேப்டன் சலீம் அல் - தாஸ்ரி  [Salem Al-டவ்சரி] கோப்பையை பெற்றுகொள்ள கொண்டாட்டங்கள் களைகட்டியது. இதற்கிடையில் தோல்வியடைந்த விரக்தியில் எல்லாரும் தூங்கிறார்கள், எல்லாம் முடிந்தது என்ற தோரணையில் மைதானத்தில் ரொனால்டோ செய்த கையசைவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    ×