என் மலர்
கால்பந்து
- இந்த சீசனில எத்தனை கோல் என்ற எல்லை கிடையாது.
- முக்கியமான விசயம் வெற்றி பெற்று அணியை முன்னேற்ற வெண்டும் என்பதுதான்.
பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்வே. இவர் பாரீஸ் சூப்பர் ஜெய்ன்ட் அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணியில் இருந்து ப்ரீ டிரான்ஸ்பராக ரியல் மாட்ரிட் அணிக்கு வந்துள்ளார்.
ரியல் மாட்ரிட் அணியுடன் ஐந்து வருடத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். முதல்முறையாக சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காக அட்லாண்டா அணியை எதிர்த்து விளையாடினார்.
இந்த போட்டியில் 2-0 என ரியல் மாட்ரிட் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 2-வது கோலை எம்பாப்வே அடித்தார். இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணிக்காக அடித்துள்ளார்.
ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் எம்பாப்பே "நாங்கள் ரியல் மாட்ரிட். எங்களுக்கு எல்லை கிடையாது. எனக்கும் இந்த சீசனில எத்தனை கோல் என்ற எல்லை கிடையாது. என்னால் 50 கோல்கள் அடிக்க முடியும் என்றால், அது 50 ஆக இருக்கும். ஆனால், முக்கியமான விசயம் வெற்றி பெற்று அணியை முன்னேற்ற வெண்டும் என்பதுதான். ஏனென்றால் நாங்கள் ஒரு அணியாக வெற்றிக்கு சென்று கொண்டிருக்கிறோம்.
ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய இந்த இரவு (நேற்றிரவு இறுதிப்போட்டி) சிறந்த இரவாக அமைந்தது. ரியல் மாட்ரிட்டி ஜெர்சி அணிந்து விளையாடுவதற்காக நீண்ட காலம் காத்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு சிறந்த தருணம்" என்றார்.
- பார்க்கிங் இடத்தில் வைத்து மர்ம நபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர்.
- மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒருவரை தேடிவருகின்றனர்.
17 வயதான இளம் கால்பந்து வீரர் லாமின் யமல். ஸ்பெயின் அணிக்காக யூரோ-2024 தொடரில் களம் இறங்கி அசத்தினார். பிரான்ஸ் அணிக்கெதிரான அரையிறுதியில் கோல் அடித்து வெற்றிக்கு உதவினார். அத்துடன் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 2-1 என இங்கிலாந்தை வீழ்த்தியது. இதில் ஒரு கோல் அடிக்க உதவியாக இருந்தார். தற்போது கால்பந்து பயிற்சியில் தீவிரமாக உள்ளார்.
இவரது தந்தை மௌனிர் நஸ்ராயுய். இவர் நேற்று பார்சிலோனா அருகே கத்திக்குத்துக்கு உள்ளாகியுள்ளார். மட்டாரோ நகர் அருகே இரவு நேரத்தில் பார்க்கிங் இடத்தில் சிலர் இவரை கைத்தியால் குத்தியுள்ளனர். கேன் ருட்டியில் உள்ள படாலோனாவின் புஜோல் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கத்துக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் போலீஸ் காவலில் உள்ளனர். சந்தேகத்திற்குரிய நான்காவது நபரை போலீசார் தேடு வருகின்றனர்.
- ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து தொடர் லா லிகா
- தமிழ் பாடலை ஒளிபரப்ப வேண்டும் என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.
உலக அளவில் அதிக பேர் விரும்பி பார்க்கும் விளையாட்டு என்றால் அது கால்பந்து தான். பல்வேறு நாடுகளில் கால்பந்து விளையாட்டிற்கு லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து தொடரான லா லிகாவின் இன்ஸ்டா பக்கத்தில் தமிழ் ரசிகர் ஒருவர் பின்னணி பாடலாக தமிழ் பாடலை ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்டிருந்தார்.
அவரது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக லா லிகாவின் இன்ஸ்டா பக்கத்தில், லியோ படத்தின் 'Badass' பாடலுடன் எடிட் செய்யப்பட்ட வீடியோ பதிவிடப்பட்டதால் தமிழ் கால்பந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- பெண்கள் பிரிவு ஆட்டம் இன்று தொடங்குகிறது.
- அர்ஜென்டினா-மொராக்கா அணிகள் மோதின.
பாரீஸ்:
ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நாளை நடைபெறுகிறது. ஆனால் கால்பந்து, ரக்பிசெவன்ஸ் போட்டிகள் நேற்று தொடங்கின.
கால்பந்து போட்டியில்'ஏ' பிரிவில் நடந்த ஆட்டம் ஒனறில் பிரான்ஸ்-அமெரிக்கா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் சீனியர் அணியை தோற் கடித்தது.
'டி' பிரிவில் ஜப்பான் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. இஸ்ரேல்-மாலி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
'பி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா-மொராக்கா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டி னா 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டம் ஈராக் 2-1 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தியது. பெண்கள் பிரிவு ஆட்டம் இன்று தொடங்குகிறது.
ரக்பி செவன்ஸ் போட்டி யில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிஜி, அயர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து அணிகள் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றன. வில் வித்தை, ஹேண்ட்பால் போட்டிகள் இன்று தொடங்கியது.
வில்வித்தை போட்டியின் ரேங்கிங் சுற்றில் இந்தியா சார்பில் தீபக், தருண்தீப்ராய், பிரவீன் ஜாதவ் மற்றும் வீராங்கனை பஜன்கவுர், தீபிகா குமாரி, அங்கீதா பகத் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
- அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
- கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார்.
அண்மையில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதன்மூலம் கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார்.
நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சிகாகோ பயர் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இன்டர் மியாமி க்ளப் வெற்றி பெற்றது.
இப்போட்டி நடைபெறுவதற்கு முன்பு கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற ஜாம்பவான் மெஸ்ஸியை இன்டர் மியாமி க்ளப் கௌரவித்தது.
ஆண்டு வாரியாக வென்ற 45 கோப்பைகளின் படங்களை கைகளில் ஏந்தி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் இரண்டாவது சுற்றில் இந்திய ஆண்கள் கால்பந்து அணி தோல்வி அடைந்தது.
- இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இகோர் ஸ்டிமாக் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
புதுடெல்லி:
உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் இரண்டாவது சுற்றில் இந்திய ஆண்கள் கால்பந்து அணி தோல்வி அடைந்து 3-வது சுற்றுக்கு வரத் தவறியது. கத்தார் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இகோர் ஸ்டிமாக் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே, புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்காக 20க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்பெயினைச் சேர்ந்த மனோலோ மார்கிசை நியமனம் செய்தது அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு.
மனோலோ மார்கிஸ் தற்போது எப்.சி கோவா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடலூரைச் சேர்ந்த இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றுகிறார்.
- தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கவுரவமிக்க இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும்.
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சார்பில் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்றிரவு நடந்தது. இதில் 2023-24-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை மிசோரத்தை சேர்ந்த லாலியன்ஜூலா சாங்தே பெற்றார்.
2023-24-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருது தமிழ்நாட்டை சேர்ந்த இந்துமதி கதிரேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டியில் ஒடிசா எப்.சி. வெற்றி பெறுவதில் முக்கிய பங்காற்றிய இந்துமதி 5 கோல் அடித்தார்.
கடலூரைச் சேர்ந்த இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றுகிறார். தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கவுரவமிக்க இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும்.
- பிரான்ஸ் கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார்.
- அந்த அணியில் எம்பாப்பேவுக்கு 9-ம் நம்பர் கொண்ட ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது.
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே. கிளப் போட்டிகளில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) அணிக்காக விளையாடி வந்த எம்பாப்பே, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த லீக்-1 சீசனோடு பி.எஸ்.ஜி. அணியில் இருந்து வெளியேறியதாக அறிவித்தார்.
இதையடுத்து, அவர் ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியில் இணைய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பிரான்சின் பிரபல கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்பே ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியில் இணைந்ததாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கிளப் தலைவர் புளோரெண்டினோ பெரெஸ் முன்னிலையில் அவர் அணியில் இணைந்தார்.
ரியல் மாட்ரிட் அணியின் பிரபல வீரரான லூகா மோட்ரிக்கிற்கு 10-வது நம்பர் ஜெர்சி எண்ணாக இருப்பதால், எம்பாப்பேவுக்கு 9-ம் நம்பர் கொண்ட ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது.
- பிரான்ஸ் அணிக்காக 137 போட்டிகளில் விளையாடி 57 கோல்கள் அடித்துள்ளார்.
- பிரான்ஸ் அணிக்கான தனது கடைசி ஆட்டம் தோல்வியில் முடிந்தது.
பிரெஞ்சு தேசிய அணிக்காக அதிக கோல் அடித்த கால்பந்தாட்ட ஜாம்பவான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். யூரோ 2024 பிரான்சுடனான தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று பிரெஞ்சு ஸ்ட்ரைக்கர் ஒலிவியர் ஜிரூட் ஏற்கனவே கூறியிருந்தார்.
துரதிர்ஷ்டவசமாக, பிரான்ஸ் அணிக்கான தனது கடைசி ஆட்டம் தோல்வியில் முடிந்தது. ஒலிவியர் ஜிரூட் பிரான்ஸ் வரலாற்றில் சிறந்த ஸ்ட்ரைக்கர்களில் ஒருவர். பிரெஞ்சு தேசிய அணியைத் தவிர, ஜிரூட் தற்போது MLS என்ற அமெரிக்க லீக்கில் விளையாடி வருகிறார்.
பிரான்ஸ் அணிக்காக 137 போட்டிகளில் விளையாடி 57 கோல்கள் அடித்து பிரான்ஸின் ஆல் டைம் முன்னணி கோல் அடித்த கால்பந்தாட்ட வீரராக ஜிரோட் உள்ளார்.
பிரான்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஹ்யூகோ லோரிஸ் மற்றும் லிலியன் துராம் ஆகியோருக்குப் பிறகு, ஜிரூட் பிரான்ஸ் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரர் ஆவார்.
தனது ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:-
இந்த பிரெஞ்சு அணியுடன் நான் பணியாற்றிய 13 ஆண்டுகள் என் இதயத்தில் என்றும் மறையாது, இது எனது மிகப்பெரிய பெருமை மற்றும் எனது அன்பான நினைவகம்.
என்று கூறினார்.
- அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
- போட்டியின் 112-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லோ செல்சோ அசிஸ்ட் கோல் அடித்தார்.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில் இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. தொடர்ந்து விளையாடிய இரு அணிகளும் இரண்டாவது பாதியிலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
போட்டியின் 112-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லோ செல்சோ அசிஸ்ட் செய்ய லௌடரோ மார்டின்ஸ் இறுதிப் போட்டியின் முதலாவது கோலை அடித்து வெற்றி காரணமாக திகழ்ந்தர். முடிவில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
முன்னதாக இந்த போட்டியின் 2-வது பாதியில் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மைதானத்திலேயே அழுதார். பின்னர் வெளியேறியும் அவரது அழுகையை நிறுத்த முடியாமல் கண்ணீர் விட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து பரபரப்பான இறுதி நிமிடங்களை வெளியில் இருந்து பதட்டத்துடன் மெஸ்ஸி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அர்ஜெண்டினா அணி கோல் கம்பத்தை நெருங்கியது. அதனை ஒற்றை காலில் பார்த்துக் கொண்டிருந்த மெஸ்ஸி, கோல் அடித்ததும் சந்தோஷத்தை கொண்டாடினார். நொண்டி கொண்டே சக வீரரை கட்டியணைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- யூரோ கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் ஆனது.
- கோபா அமெரிக்கா தொடரில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது.
உலகின் அதிக பிரபலமான கால்பந்து தொடர் யூரோ கோப்பை. 2024 யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்பெயின் அணி நான்காவது முறையாக யூரோ கோப்பையை வென்று சாதனை படைத்தது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இதுவரை எந்த அணியும் நான்கு முறை கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபெற்று முடிந்த யூரோ கோப்பை 2024 தொடர் ஸ்பெயின் அணியின் லமின் யமால் என்ற இளம் வீரருக்கு அற்புதமான நினைவுகளை பரிசாக கொடுத்துள்ளது. இந்த தொடரில் வைத்து தான் லமின் யமால் இளம் வயதில் கோல் அடித்த அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை யமால் முந்தினார்.

16 ஆண்டுகள் 362 ஆவது நாளில் ஸ்பெயின் வீரர் லமின் யமால் தனது அணிக்காக கோல் அடித்தார். இதன் மூலம் அவர் உலகின் பார்வையை தன்பக்கம் திருப்பினார். உலகிலேயே இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த லமின் யமால், இறுதிப் போட்டியில் தனது அணி கோல் அடிக்க அசிஸ்ட் செய்து அசத்தினார்.
ஜூலை 13 ஆம் தேதி 17 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய லமின் யமால் மறுநாளே தனது அணி நான்காவது முறை யூரோ கோப்பையை வெல்ல காரணமாக செயல்பட்டார். நேற்று நள்ளிரவு நடைபெற்ற யூரோ கோப்பை 2024 இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
தனது அணி கோப்பை வென்றது குறித்து பேசிய இளம் வீரர் லமின் யமால், "நான் இதைவிட சிறப்பான பிறந்தநாள் பரிசை எதிர்பார்க்க முடியாது. இது கனவு நனவான தருணம். அவர்கள் கோல் அடித்து போட்டி சமனில் இருந்த போது, கடினமாக இருந்தது. இந்த அணி எப்படி உருவாக்கப்பட்டது என்றே தெரியவில்லை, இது மீண்டும் மீண்டும் போராடும்," என்று தெரிவித்தார்.
போட்டிக்கு பிந்தைய கொண்டாட்டங்களைத் தொடர்ந்து லமின் யமால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "இன்று கால்பந்து வெற்றி பெற்றது" என தலைப்பிட்டு கூடவே "கோட்" எமோஜி மற்றும் யூரோ கோப்பையுன் இருக்கும் தனது புகைப்படம், கோபா அமெரிக்கா கோப்பையுடன் மெஸ்ஸி இருக்கும் புகைப்படத்தை இணைத்துள்ளார்.

ஓரே இரவில் யூரோ கோப்பை மற்றும் கோபா அமெரிக்கா தொடர்களின் இறுதிப் போட்டி நடைபெற்றது. முதலில் யூரோ கோப்பை போட்டி முடிந்த நிலையில், இரண்டாவதாக நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியனம் பட்டம் வென்றது.
- இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர்.
- போட்டி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.
பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். எனினும், போட்டி முடியும் வரை இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இதனால் போட்டியில் முடிவு கிடைக்காத சூழல் நிலவியது. போட்டி சமனாவதை தவிர்க்கும் நோக்கில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் அவகாசத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிய இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தின.
போட்டியின் 112 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லோ செல்சோ அசிஸ்ட் செய்ய லௌடரோ மார்டின்ஸ் இறுதிப் போட்டியின் முதலாவது கோலை அடித்தார். இது அர்ஜென்டினா கோப்பையை வெல்ல காரணமாக மாறியது. போட்டி நிறைவில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.






