என் மலர்
நீங்கள் தேடியது "சிறந்த வீராங்கனை விருது"
- அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் இடம்பெற்றுள்ளார்.
- அக்டோபர் மாத சிறந்த வீராங்கனைக்கான தேர்வு பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாதந்தோறும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவிக்கிறது.
அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் தென் ஆப்ரிக்கா வீரர் செனுரன் முத்துசாமி, பாகிஸ்தான் வீரர் நோமன் அலி மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல், அக்டோபர் மாத சிறந்த வீராங்கனைக்கான தேர்வு பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் மற்றும் ஆஸ்தரேலிய வீராங்கனை ஆஷ் கார்ட்னர் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் சிறந்த வீராங்கனையை தேர்வு செய்து அறிவிக்கப்படும்.
- கடலூரைச் சேர்ந்த இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றுகிறார்.
- தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கவுரவமிக்க இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும்.
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சார்பில் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்றிரவு நடந்தது. இதில் 2023-24-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை மிசோரத்தை சேர்ந்த லாலியன்ஜூலா சாங்தே பெற்றார்.
2023-24-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருது தமிழ்நாட்டை சேர்ந்த இந்துமதி கதிரேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டியில் ஒடிசா எப்.சி. வெற்றி பெறுவதில் முக்கிய பங்காற்றிய இந்துமதி 5 கோல் அடித்தார்.
கடலூரைச் சேர்ந்த இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றுகிறார். தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கவுரவமிக்க இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும்.






