என் மலர்
கால்பந்து
- லிவர்பூல் அணிக்கெதிராக நாட்டிங்காம் பாரஸ்ட் 8-வது நிமிடத்தில் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தது.
- 66-வது நிமிடத்தில் டியாகோ ஜோட்டா கோல் அடித்து அணி டிரா செய்ய உதவி புரிந்தார்.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் 2024-2025 சீசனுக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டி ஒன்றில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல், நாட்டிங்காம் பாரஸ்ட் (Nottm Forest) அணியுடன் மோதின. இதில் லிவர்பூல் அணி எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நாட்டிங்காம் பாரஸ்ட் அணியின் கிறிஸ் வுட் 8-வது நிமிடத்தில் கோல் அடித்து லிவர்பூல் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் முதல்பாதி நேர ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
பின்னர் 2-வது பாதிநேர ஆட்டம் தோடங்கியது. ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் டியாகோ ஜோட்டா கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை பெற்றது. அதன்பின் இரண்டு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
போட்டி டிராவில் முடிந்தாலும் லிவர்பூல் 20 போட்டிகளில் 14-ல் வெற்றி பெற்று 47 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. நாட்டிங்காம் பாரஸ்ட் இந்த டிரா மூலம் 21 போட்டிகளில் 12 வெற்றி, 5 டிரா, 4 தோல்விகளுடன் 41 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது.
ஆர்சனல் 20 போட்டிகளில் 11-ல் வெற்றி, 7-ல் டிரா, 2-ல் தோல்வி என 40 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.
மான்செஸ்டர் சிட்டி
மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி ப்ரென்ட்போர்டு அணியை எதிர்கொண்டது. முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் மான்செஸ்டர் அணியின் பில் ஃபோடன் 66 மற்றும் 78-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்.

இதனால் மான்செஸ்டர் சிட்டி வெற்றிபெறும் நிலையில் இருந்தது. ஆனால் கடைசி 10 நிமிடத்தில் ப்ரென்ட்போர்டு அணி அபாரமாக விளையாடியது. அந்த அணியின் விஸ்டா 82-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் காயத்திற்கான நேரத்தில் (90+2) கிறிஸ்டியன் நோர்கார்டு கோல் அடிக்க போட்டி டிராவில் முடிந்தது.
இந்த டிரா மூலம் மான்செஸ்டர் சிட்டி 21 போட்டிகள் முடிவில் 10 வெற்றி, 5 டிரா மூலம் 35 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்த பிடித்துள்ளார். வெற்றி பெற்றிருந்தால் 4-வது இடத்திற்கு முன்னேறியிருக்கும்.
- முதல் பாதி நேரத்தில் பார்சிலேனாா 4 கோல்கள் அடித்து அசத்தியது.
- 10 பேருடன் விளையாடினாலும் பார்சிலோனா அதிக கோல்கள் விட்டுக்கொடுக்காமல் பார்த்துக் கொண்டது.
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் ஸ்பெயின் சூப்பர் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் பார்சிலோனா- ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இதில் பார்சிலோனா 5-2 என ரியல் மாட்ரிட் அணியை பந்தாடியது. ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் எம்பாப்பே கோல் அடித்தார்.
22-வது நிமிடத்தில் பார்சிலோனாவின் லேமின் யமல், 39-வது நிமிடத்தில் ரபின்ஹா கோல் அடிக்க பார்சிலோனா 2-1 என முன்னிலைப் பெற்றது. இதற்கிடையில் 36-வது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ராபர்ட் லெவாண்டோஸ்கி கோல் அடித்தார். இதனால் பார்சிலோனா 3-1 என முன்னிலைபெற்றது.
முதல்பாதி நேர ஆட்டம் 45-வது நிமிடத்தில் முடிவடைந்தது. முதல்பாதி நேர ஆட்டத்தின்போது காயத்தால் ஆட்டம் நிறுத்தம் போன்றவற்றால் கூடுதல் நேரம் (Injury Time) வழங்கப்பட்டது. இதன் 10-வது நிமிடத்தில் (45+10) பார்சிலோனா அணியின் அலேஜாண்ட்ரோ கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேர ஆட்ட முடிவில் பார்சிலோனா 4-2 என முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும், 48-வது நிமிடத்தில் ரபின்ஹா கோல் அடிக்க பார்சிலோனா 5-1 என முன்னிலைப் பெற்றது.
56-வது நிமிடத்தில் பார்சிலோனா வோஜ்சியெச் ஸ்செஸ்னி ரெட்கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் பார்சிலோனா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதை பயன்படுத்தி ரியல் மாட்ரிட் 60-வது நிமிடத்தில் கோல் அடித்தார். ரோட்ரிகோ இந்த கோலை அடித்தார். அப்போது பார்சிலோனா 5-2 முன்னிலைப் பெற்றிருந்தது.
அதன்பின் ரியல் மாட்ரிட் வீரர்களை கோல் அடிக்கவிடாதபடி பார்சிலோனா வீரர்கள் பார்த்துக் கொண்டனர். இதனால் ஆட்டம் முடியும் வரை ரியல் மாட்ரிட் அணி வீரர்களால் அதற்கு மேல் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பார்சிலோனா 5-2 என வெற்றி பெற்று சூப்பர் கோப்பையை கைப்பறறியது.
- கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மும்பை சிட்டி அணிகள் மோதின.
கொல்கத்தா:
13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மும்பை சிட்டி அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் மும்பை அணி இரு கோல் அடித்து 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தது. தொடர்ந்து இந்த ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மும்பை அணி மேலும் ஒரு கோல் அடித்து 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இறுதியில் இந்த ஆட்டத்தில் ஆட்ட நேர முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி வெற்றி பெற்றது.
- முதல் பாதி நேர ஆட்டத்தில் கோவா 2-1 என முன்னிலை பெற்றது.
- 2-வது பாதி நேர ஆட்டத்தில் ஓன் கோல் மூலம் ஒரு கோல் கிடைக்க 4-2 என வெற்றி பெற்றது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்றைய முதலாவது ஆட்டத்தில் ஒடிசா- கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் கோவா அணியின் பிரிசன் பெரனாண்டஸ் கோல் அடித்தார். அதற்கு பதிலாக ஒடிசா பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 29-வது நிமிடத்தில் கோல் அடித்தது. இந்த கோலை அஹமது ஜஹோயுஹ் அடித்தார்.
பின்னர் முதல் பாதி நேரம் முடிவடையும் நேரத்தில் (கூடுதல் நேரம் 45+2) கோவா அணியின் உதான்டா சிங் குமாம் கோல் அடிக்க முதல் பாதி நேரத்தில் கோவா 2-1 என முன்னிலைப் பெற்றது.
பின்னர் 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் பிரிசன் பெர்னாண்டோஸ் மீண்டும் கோல் அடித்தார். அதன்பின் கோவா அணிக்கு ஓன் கோல் (அமேய் ரணாவாடே) மூலம் 56 நிமிடத்தில் கோல் கிடைக்க 4-1 என வலுவான முன்னிலைப் பெற்றது.
ஆட்டம் முடிவடைவதற்கு முன்னதாக 88-வது நிமிடத்தில் ஒடிசா அணியின் ஜெர்ரி மாவிஹ்மிங்தங்கா கோல் அடித்தார். அதன்பின் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் கோவா 4-2 என வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் கோவா 13 ஆட்டங்கள் முடிவில் 25 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. ஒடிசா 14 போட்டிகள் முடிவில் 20 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.
- யுவென்டஸ் ஸ்ட்ரைக்கர் டுசன் விளாகோவிச்சை ஒப்பந்தம் செய்ய ஆர்சனல் ஆர்வம்.
- ஸ்போர்ட்டிங் சி.பி. ஸ்ட்ரைக்கர் விக்டர் கியோகெர்ஸை ஒப்பந்தம் செய்ய மான்செஸ்டர் யுனைடெ் விருப்பம்.
கால்பந்து போட்டியை பொறுத்த வரையில் ஒரு சீசன் முடிவடைந்த பின்னர் மே அல்லது ஜூன் மாதத்தில் வீரர்கள் டிரான்ஸ்பர் நடைபெறும். அதன்பின் ஜனவரி மாதமும் வீரர்கள் டிரான்ஸ்பர் நடைபெறும். இந்த இரண்டு காலக்கட்டத்தில் வீரர்கள் கிளப்புகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.
அந்த வகையில் தற்போது வீரர்கள் டிரான்ஸ்பர் நடைபெற வாய்ப்புள்ளது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான ஆர்சனல் இத்தாலி கிளப்பான யுவென்டஸில் விளையாடும் டுசன் விளாகோவிச்சை ஒப்பந்தம் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது.
24 வயதான டுசன் விளாகோவிச் செர்பியா நாட்டைச் சேர்ந்தவர். யுவென்டஸ் அணியின் ஸ்ட்ரைக்கராக உள்ளார். புகாயோ சகாவிற்குப் பதிலாக இவரை அணியில் இணைத்துக் கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவருக்கு ஆர்சனல் மானேஜர் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பொருசியா டார்ட்மண்ட் அணியின் ஜேமி கிட்டன்ஸ் அல்லது பேயர்ன் முனிச் அணியின் லெரோய் சானோ ஆகியோரில் ஒருவர் மீதும் பார்வை வைத்துள்ளது. விளாகோவிச் இந்த சீசனில் 22 போட்டிகளில் விளையாடி 12 கோல்கள் அடித்துள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெ் மானேஜர் ரூபன் அமோரிம், ஸ்போர்ட்டிங் சி.பி. ஸ்ட்ரைக்கர் விக்டர் கியோகெர்ஸை ஒப்பந்தம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். ஸ்டிக்கர் விக்டர் கியோகெர்ஸை 80 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.ஜி. ஸ்ட்ரைக்கர் ரண்டல் கோலோ முயானியை, அவருடைய வருட சம்பளம் 8 மில்லியன் யூரோ முழுமையாக ஈடுகட்டப்பட்டால் லோனில் விடுவிக்க தயாராக இருக்கிறது. 26 வயதான முயானியை ஒப்பந்தம் செய்ய பேயர்ன் முனிச், செல்சி, யுவென்டஸ், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் போன்ற அணிகள் பேச்சு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்கள வீரர் மார்கஸ் ரஷ்போர்டு, மான்செஸ்டர் யுனைடெ் அணியில் இருந்து வெளியேறி புதிய சவாலுக்கு தயார் எனத் தெரிவித்திருந்தார். இதனால் ஜனவரி டிரான்ஸ்பரில் இவரைது பெயரும் அடிபட்டுள்ளது.
- புள்ளிகள் பட்டியலில் ஆர்சனல் 3-வது இடத்திலும், பிரென்ட்போர்டு 12-வது இடத்திலும் உள்ளன.
- ஆர்சனல் இதுவரை 18 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் முக்கிய கால்பந்து தொடர் இங்கிலீஷ் பிரீமியர் லீக். இந்த லீக்கில் இன்று நடைபெறும் போட்டியில் ஆர்சனல்- பிரெனட்போர்டு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புள்ளிகள் பட்டியலில் ஆர்சனல் 3-வது இடத்திலும், பிரென்ட்போர்டு 12-வது இடத்திலும் உள்ளன. ஆர்சனல் இதுவரை 18 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளை டிரா செய்துள்ளது. 2 போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 36 புள்ளிகள் பெற்றுள்ளது.
லிவர்பூல் 18 போட்டிகளில் 14 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி மூலம் 45 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. பிரான்ட்போர்டு 18 போட்டிகளில் 7-ல் வெற்றி, 3-ல் டிரா, 8-ல் தோல்வி மூலம் 24 புள்ளிகள் பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஆஸ்திரேலியன் ஏ லீக் போட்டியில் மெக்ஆர்தர் எஃப்சி 3-2 என வெஸ்டர்ன் சிட்னி வாண்டரர்ஸ் அணியை வீழ்த்தியது.
இங்கிலீஷ் லீன் ஒன் தொடரில் இன்று 11 போட்டிகளில் நடைபெற இருக்கிறது. இஸ்ரே் பிரீமியர் லீக்கில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
வேல்ஷ் பிரீமியர் லீக்கில் இரணடு போட்டிகள் நடைபெறுகின்றன.
- 2003-ல் இருந்து பரிந்துரை பெயரில் இருவரில் ஒருவர் பெயராவது இடம் பிடித்து வந்தது.
- முதன்முறையாக இருவருடைய பெயரும் பரிந்துரையில் இடம் பெறவில்லை.
கால்பந்தில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக அர்ஜென்டினாவின் மெஸ்சி, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர். கால்பந்து வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் உயரிய விருது பலோன் டி'ஆர் விருது. இந்த விருதை மெஸ்சி 8 முறை வென்றுள்ளார். ரொனால்டோ ஐந்து முறை வென்றுள்ளார்.
2024-ம் ஆண்டிக்கான பலோன் டி'ஆர் விருது அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. அதற்கான 30 வீரர்கள் கொண்ட பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மெஸ்சி மற்றும் ரொனால்டோ பெயர் இடம் பெறவில்லை.
2003-ம் ஆண்டில் இருந்து பரிந்துரை பட்டியலில் இருவருடைய பெயரும் இடம் பெறாதது இதுதான் முதன் முறையாகும்.
மெஸ்சி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறி பி.எஸ்.ஜி. அணிக்கு சென்றார். பின்னர் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு சென்றார். ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து யுவென்டஸ் அணிக்கு சென்றார். தற்போது சவுதி அரேபியாவின் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
மெஸ்சி முதன்முறையாக 2006-ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் 2009-ல் முதல் விருதை வென்றார். ரொனால்டோ 2004-ம் ஆண்டு முதன்முறையாக பரிந்துரைக்கப்பட்டார். 2008-ல் இருந்து இருவரிடையே கடும் போட்டி நிலவியது. 13 முறை இவர்கள்தான் வென்றுள்ளனர்.

இருவர் பெயர் இல்லாத நிலையில் ரியல் மாட்ரிட்டின் வினிசியஸ் ஜூனியர், இங்கிலிலீஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டியில் விளையாடும் ரோட்ரி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. இறுதியாக ரோட்ரி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து நான்காவது முறையாக மான்செஸ்டர் சிட்டி இங்கிலீஷ் பிரீமியர் லீக்கை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவருக்கு வழங்கப்பட்டது.
மேலும், 2024 யூரோ கோப்பையில் தனது நாடான ஸ்பெயின் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 என ஸ்பெயின் வீழ்த்தியது. தொடரின் நாயகன் விருதையும் வென்றார். இந்த காலக்கட்டத்தில் 14 கோல்கள் அடிப்பதற்கு உதவி புரிந்துள்ளார். அதேவேளையில் 10 கோல்களும் அடித்துள்ளார்.

இதற்கிடையே பாலோன் டி' ஆர் விருதை இம்முறை வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்கும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் வினிசியஸ்க்கு விருது இல்லை என தெரிய வந்தது ஆச்சரியத்தை எதிர்படுத்தியது. விருது அவருக்கு கிடைக்காததால் ரியல் மாட்ரிட் அணி நிர்வாகம் விழாவைப் புறக்கணித்தது.
- ஸ்பெயின் அரையிறுதியில் பிரான்ஸை வீழ்த்தியது.
- இங்கிலாந்து நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான மிகப்பெரிய கால்பந்து தொடரான யூரோ 2024 ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவில் உள்ள அணிகளும், அதேபிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளும், 3-வது இடம் பிடித்த முதல் நான்கு அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.
அதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும் அந்த வகையில் காலிறுதியில் சுவிட்சர்லாந்து அணியை (1-1) பெனால்டி சூட் அவுட்டில் இங்கிலாந்து வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
துருக்கியை 2-1 என வீழ்த்தி நெதர்லாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.
ஜெர்மனியை 2-1 என ஸ்பெயின் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
போர்ச்சுக்கலை (0-0) பெனால்டி சூட்அவுட்டில் 5-3 என பிரான்ஸ் வீழ்த்தி காலிறுதிக்க முன்னேறியது.
முதல் அரையிறுதியில் இங்கிலாந்து- நெதர்லாந்து- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஸ்பெயின்- பிரான்ஸ் இடையிலான போட்டியில் ஸ்பெயின் 2-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஜூலை 15-ந்தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஸ்பெயின் வீரர்கள் ஆக்ரோசமாக விளையாடினர். இதனால் ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் (ஆட்டத்தின் 47-வது நிமிடம்) ஸ்பெயின் முதல் கோலை பதிவு செய்தது. நிக்கோ வில்லியம்ஸ் இந்த கோலை பதிவு செய்தார்.
பின்னர் நீண்ட நேரம் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் இங்கிலாந்து பதில் கோல் அடித்தது. அந்த அணியின் கோலே பால்மேர் கோல் அடிக்க போட்டி 1-1 என சமன் ஆனது.
ஆனால் ஸ்பெயின் வீரர் மிகெல் ஒயர்சபால் 86-வது நிமிடத்தில் கோல் அடிக்க ஸ்பெயின் 2-1 என முன்னிலை பெற்றது. அதன்பின் இங்கிலாந்து அணியை கோல் அடிக்கவிடாமல் தடுக்க, 2-1 என இங்கிலாந்தை வீழ்த்தி யூரோம் 2024 சாம்பியன் பட்டத்தை வென்றது.
- மான்செஸ்டர் சிட்டி, பேயர்ன் முனிச் அணிகளை வீழ்த்தி ரியல் மாட்ரிட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
- பார்சிலோனா, பிஎஸ்ஜி அணிகளை வீழ்த்தி டார்ட்மண்ட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்வேறு கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் தகுதிச் சுற்றுகள் நடைபெற்று இறுதியாக 32 அணிகள் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் முதன்மை சுற்றில் விளையாட தகுதி பெறும். இந்த 32 அணிகளும், 8 பிரிவுகளாக பிரிக்கப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம் பெறும். இந்த நான்கு அணிகளும் தங்களுக்குள் இரண்டு முறை (ஒருமுறை மற்ற அணிகளின் சொந்த மைதானம், ஒருமுறை தனது சொந்த மைதானம்) மோதிக் கொள்ள வேண்டும்.
முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும். நாக்அவுட், காலிறுதி, அரையிறுதிகள் போட்டிகளில் எதிரணியுடன் இரண்டு முறை (ஒருமுறை மற்ற அணியின் சொந்த மைதானம், ஒருமுறை தனது சொந்த மைதானம்) மோதும். இந்த இரண்டு போட்டிகளிலும் அதிக கோல் அடித்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இறுதிப் போட்டி மட்டும் ஒரே போட்டியாக நடத்தப்படும்.
காலிறுதி போட்டிகள்
காலிறுதி போட்டிகளில் பொருசியா டார்ட்மண்ட் 5-4 என அட்லெடிக்கோ மாட்ரிட் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதியில் பார்சிலோனாவை பி.எஸ்.ஜி. 6-4 என வீழ்த்தியது. 3-வது காலிறுதியில் பேயர்ன் முனிச் 3-2 என அர்செனலை வீழ்த்தியது. 4-வது காலிறுதியில் மான்செஸ்டர் சிட்டியை பெனால்டி சூட்அவுட்டில் 4-3 என வீழ்த்தியது ரியல் மாட்ரிட்.
அரையிறுதி போட்டிகள்
அரையிறுதியில் டார்ட்மண்ட்- பிஎஸ்ஜி அணிகள், பேயர்ன் முனிச்- ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டார்ட்மண்ட் அணிக்கு சொந்தமான முதல் போட்டியில் டார்ட்மண்ட் 1-0 என வெற்றி பெற்றது. பின்னர் பிஎஸ்ஜி-க்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் 1-0 வெற்றி பெற்றது. இரண்டையும் சேர்த்து பிஎஸ்ஜி-யை 2-0 என டார்ட்மண்ட் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதி போட்டியில் பேயர்ன் முனிச்- ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இதில் பேயர்ன் முனிச் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்திருந்தது. பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட் 2-1 என வெற்றி பெற்றது. மொத்தமாக ரியல் மாட்ரிட் 4-3 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டி
இறுதிப் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற விம்ப்ளே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டார்ட்மண்ட் அணியை 2-0 என வீழ்த்தி ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 2-வது பாதி நேரத்தில், ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் ரியல்மாட்ரிட் அணியின் டேனி கார்வாஜல் முதல் கோல் அடித்தார். 83-வது நிமிடத்தில் வின்சியஸ் ஜூனியர் கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 2-0 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் 15-வது முறையாக ஐரோப்பிய யூனியன் சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளது. கடந்த 11 வருடத்தில் மட்டும் 6 முறை வென்றுள்ளது.
இந்தத் தொடரில் ஹாரி கேன் (பேயர்ன் முனிச்), எம்பாப்வே (பிஎஸ்ஜி) ஆகியோர் அதிகபட்சமாக தலா 8 கோல்கள் அடித்த்திருந்தனர்.
தொடரின் சிறந்த வீரராக வின்சியஸ் ஜூனியர் தேர்வு செய்யப்பட்டார். இளம் வீரராக ஜூட் பெலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். இருவரும் ரியல் மாட்ரிட் அணியை சேர்ந்தவர்கள்.
- குளிர்ந்த குளத்தில் மூழ்கும் வீடியோவையும் ரொனால்டோ வெளியிட்டார்.
- ‘சாண்டாகிளாஸ்’ உடனான சந்திப்பு உள்ளிட்ட தனது பயணத்தை அவர் யூடியூப் சேனலில் பகிர்ந்தார்.
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர் பின்லாந்து நாட்டில் உள்ள லாப்லாந்தில் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் அவர் சந்தித்தார்.
'சாண்டாகிளாஸ்' உடனான சந்திப்பு உள்ளிட்ட தனது பயணத்தை அவர் யூடியூப் சேனலில் பகிர்ந்தார். குளிர்ந்த குளத்தில் மூழ்கும் வீடியோவையும் வெளியிட்டார்.
இது மிகவும் சிறப்பான நாள், மிகவும் வித்தியாசமானது என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
- ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார்.
- இன்டர்கான்டினென்டல் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி கோப்பை வென்றது.
கத்தார்:
பிபா இன்டர் கான்டினென்டல் கால்பந்து கோப்பை தொடர் கத்தாரில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட், மெக்சிகோவின் பச்சுகா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியின் 53வது நிமிடத்தில் ரோட்ரிகோ ஒரு கோலும், 84வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் (பெனால்டி) ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
பச்சுகா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இறுதியில், ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
- சர்வதேச கால்பந்து சங்கம் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
- இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கத்தார் தலைநகர் தோகாவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தோகா:
சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. பிபா வெளியிடும் இறுதிப்பட்டியலில் இருந்து சிறந்த வீரர், வீராங்கனை தேசிய அணியின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், கால்பந்து பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கத்தார் தலைநகர் தோகாவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற 11 வீரர்களில் பிரேசில் வீரரும், ரியல் மாட்ரிட் கிளப்புக்காக ஆடுபவருமான வினிசியஸ் ஜூனியர் சிறந்த கால்பந்து வீரராக அறிவிக்கப்பட்டார்.
2016-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதை பெற்ற முதல் பிரேசில் வீரர் என்ற பெருமையை 24 வயது வினிசியஸ் ஜூனியர் பெற்றார். வாக்குகள் அடிப்படையில் அவருக்கு 48 புள்ளி கிடைத்தது. ஸ்பெயின் வீரர் ரோட்ரி 43 புள்ளிகளுடன் 2-வது இடமும், இங்கிலாந்து வீரர் ஜூட் பெலிங்ஹாம் 37 புள்ளிகளுடன் 3-வது இடமும் பெற்றனர்.
சிறந்த வீராங்கனைக்கான விருதை ஸ்பெயின் வீராங்கனை போன்மதி தொடர்ந்து 2-வது முறையாக தட்டிச் சென்றார்.






