என் மலர்tooltip icon

    கால்பந்து

    • புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
    • 2 நிமிடத்திலேயே கோல் அடித்து கணக்கை தொடங்கினார்.

    லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா மற்றும் ஒசாசுனா அணிகள் மோதிய போட்டியில் பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் பார்சிலோனா அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

    இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா அணிக்கு ஃபெரன் டொரெஸ் 2 நிமிடத்திலேயே கோல் அடித்து கணக்கை தொடங்கினார். இதைத் தொடர்ந்து அந்த அணியின் டேனி ஆல்மோ பெனால்டி முறையை கோலாக மாற்றினார். இதன் காரணமாக பார்சிலோனா அணி போட்டியின் முதல் பாதி முடிவதற்குள் 2-0 என்ற நிலையில் ஆதிக்கம் செலுத்தியது.

    பிறகு நடந்த இரண்டாம் பாதியிலும் பார்சிலோனா அணி போட்டியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தவறவில்லை. இரண்டாம் பாதி தொடங்கியதில் இருந்தே கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணிகளும் முயற்சித்தன. எனினும், பார்சிலோனா அணிக்கு போட்டியின் 77வது நிமிடத்தில் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி மூன்றாவது கோல் அடித்தார்.

    இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக பார்சிலோனா அணி 3-0 என்ற கணக்கில் போட்டியில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் லா லிகா தொடரின் புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா அணி முதலிடத்திற்கு முன்னேறியது. 

    • முதல் பாதி நேரத்தில் அர்ஜென்டினா 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.
    • 2-வது பாதி நேர ஆட்டத்தில் அர்ஜென்டினா மேலும் ஒரு கோல் அடிக்க 4-1 என வெற்றி பெற்றது.

    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா- பிரேசில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. காயம் காரணமாக அர்ஜென்டினா அணியில் மெஸ்சி இடம்பெறவில்லை.

    ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூலியன் அல்வாரஸ் முதல் கோலை பதிவு செய்தார். 17-வது நிமிடத்தில் அர்ஜென்டினா மேலும் ஒரு கோல் அடித்தது. இந்த கோலை என்ஜோ பெர்னாண்டஸ் அடித்தார். 26-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் மேத்யூஸ் குன்ஹா கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    37-வது நிமிடத்தில் அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் கோல் அடிக்க முதல் பாதி நேர ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-0 என முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேர ஆட்டத்திலும் அர்ஜென்டினா அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. 71-வது நிமிடத்தில் கியுலியானோ சிமியோன் கோல் அடிக்க அர்ஜென்டினா 4-1 என முன்னிலைப் பெற்றது. பின்னர் ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜென்டினா 4-1 என வெற்றி பெற்றது.

    தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடி வருகிறது. இதன் புள்ளிகள் பட்டியலில் அர்ஜென்டினா 14 போட்டிகளில் 10-ல் வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வியுடன் 31 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 6 வெற்றி, 3 டிரா, 5 தோல்வியுடன் 21 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    • போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற 2-வது அணி நியூசிலாந்து ஆகும்.
    • கடந்த வாரத்தில் முதல் அணியாக ஜப்பான் தகுதி கண்டிருந்தது.

    ஆக்லாந்து:

    23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் நடக்கிறது. 48 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு போட்டியை நடத்தும் நாடுகள் தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும். இதற்கான தகுதி சுற்று கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது.

    ஓசியானா கூட்டமைப்பு அணிகளுக்கான தகுதி சுற்றில் 11 அணிகள் கலந்து கொண்டன. இதன் 3-வது ரவுண்டின் இறுதி ஆட்டம் ஆக்லாந்தில் நேற்று நடந்தது. இதில் நியூசிலாந்து-நியூ கலிடோனியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூ கலிடோனியாவை தோற்கடித்து முதலிடம் பிடித்து உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது.

    போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற 2-வது அணி நியூசிலாந்து ஆகும். கடந்த வாரத்தில் முதல் அணியாக ஜப்பான் தகுதி கண்டிருந்தது. நியூசிலாந்து அணி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி காண்பது இது 3-வது முறையாகும்.

    • சிறிய காயம் காரணமாக ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் என்னால் விளையாட முடியாது.
    • மற்ற ரசிசகர்கள் போல் அணிக்கு ஆதரவு அளிப்பதுடன், அணியை உற்சாகப்படுத்துவேன்- மெஸ்சி

    உலகக் கோப்பைக்கான கால்பந்து தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அர்ஜென்டினா அடுத்த இரண்டு போட்டிகளில் உருகுவே, பிரேசில் அணிகளை சந்திக்க இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் அர்ஜென்டினா அணிக்காக மெஸ்சி விளையாட இருந்தார்.

    இந்த நிலையில் "உருகுவே, பிரேசில் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான முக்கிய போட்டியில் விளையாட முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. உண்மையிலேயே இரண்டு போட்டிகளிலும் விளையாட விரும்பினேன். சிறிய காயம் காரணமாக ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் என்னால் விளையாட முடியாது. மற்ற ரசிசகர்கள் போல் அணிக்கு ஆதரவு அளிப்பதுடன், அணியை உற்சாகப்படுத்துவேன்" என மெஸ்சி தெரிவித்துள்ளார்.

    அர்ஜென்டினா வருகிற 22-ந்தேதி உருகுவே அணியையும், 26-ந்தேதி பிரேசில் அணியையும் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டங்கள் இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு தொடங்கும்.

    • ரியல் மாட்ரிட் அணிக்காக அறிமுக சீசனில் இதுவரை 31 கோல்கள் அடித்துள்ளார்.
    • கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிமுக சீசனில் 33 கோல்கள் அடித்திருந்தார்.

    பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் இருந்து கடந்த ஆண்டு ரியல்மாட்ரிட் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார்.

    2024-25 அவருடைய அறிமுக சீசன். முதல் ஒன்றிரண்டு போட்டிகளில் சறுக்கினாலும் அதன்பின் அபாரமாக விளையாடி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர முன்கள வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அறிமுக சீசனில் இதுவரை ரியல்மாட்ரிட் அணிக்காக 31 கோல்கள் அடித்துள்ளார்.

    கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக நீண்ட காலம் விளையாடியவர். இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய அறிமுக சீசனில் 33 கோல்கள் அடித்திருந்தார். இந்த சாதனையை முறியடிக்க எம்பாப்பேவுக்கு இன்னும் 3 கோல்கள் தேவை. இதனால் ரொனால்டோ சாதனையை முறியடித்து விடுவார். ஏற்கனவே பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ நசோரியா (30 கோல்- 2002-03) சாதனையை முறியடித்துள்ளார்.

    இது தொடர்பாக எம்பாப்வே கூறுகையில் "நான் ரொனால்டோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரைவிட அதிக கோல்கள் அடித்தாலும், நான் சிறந்த வீரர் என்று அர்த்தம் கிடையாது. என்னுடைய முதல் சீசன் சிறப்பாக இருந்தது அவ்வளவுதான்.

    கோல் அடிப்பது முக்கியமானது. ஆனால் அதைவிட லா லிகா, சாம்பியன்ஸ் லீக் மற்றும் கோபா டெல் ரே ஆகியவற்றை வெல்வது சிறந்தது. ரியல் மாட்ரிட் அணிக்காக தன்னை மாற்றிக் கொள்வதற்கான காலம் முடிவடைந்துவிட்டது. தற்போது என்னுடைய திறனை வெளிக்காட்டும் நேரம் இது. இங்கே சிறப்பாக விளையாட விரும்புகிறேன். இந்த சீசனில் முத்திரை பதிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு எம்பாப்வே தெரிவித்துள்ளார்.

    எம்பாப்வே இந்த சீசனில் இன்று 12 போட்டிகளில் விளையாட உள்ளார். சிலியை சேர்ந்த ஜமோரானோவின் 37 கோல் சாதனையை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது. இவர் 1992-ல் செவியா அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார். அறிமுக சீசனில் 37 கோல்கள் அடித்திருந்தார்.

    • பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
    • இதையடுத்து, 3வது முறையாக பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்புக்கு பிபா தடை விதித்தது.

    லாகூர்:

    பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

    நிர்வாகிகள் இடையே மோதல்கள், மோசமான நிர்வாக நடைமுறை உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்படி சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு உத்தரவிட்டது. இதை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த சிறப்பு குழு பல முறை எச்சரிக்கை விடுத்தபோதும் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு நடைமுறைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இந்நிலையில், பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது என பிபா அறிவித்துள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் 8 ஆண்டுக்குள் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு 3-வது முறையாக தடை செய்யப்பட்டுள்ளது.

    பிபா கூறியபடி நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின் இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்படும் என தெரிகிறது.

    • நேற்றைய போட்டியில் தொடர்ச்சியாக 2 கோல்களை அடித்துள்ளார்.
    • ஸ்போர்டிங் சிபி அணிக்காக 13 ஆட்டங்களில் வென்றுள்ளார்.

    ஆசிய சாம்பியன்ஸ் லீக் எலைட் கால்பந்து தொடரில் அல் நாசர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார். இந்த தொடரின் ஆட்டத்தில் 39 வயதான ரொனால்டோ தொடர்ந்து 2 கோல்களை அடித்து அசத்தினார். அல் வாசில் அணிக்கு எதிராk நடந்த இப்போட்டியில் அல் நாசர் 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

    இது கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்ற 700-வது கிளப் போட்டியாக அமைந்தது. இன்னும் இரு தினங்களில் ரொனால்டோ தனது 40-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இந்த நிலையில், அவர் நேற்றைய போட்டியில் தொடர்ச்சியாக 2 கோல்களை அடித்துள்ளார்.

     


    ஐந்து முறை பாலன் டி'ஓர் விருது வென்றுள்ள ரொனால்டோ கடந்த ஆகஸ்ட் 2002 இல் தனது தொழில்முறை வாழ்க்கையை தொடங்கி வெற்றிகளை குவித்து வருகிறார். 2003 இல் ஓல்ட் டிராஃபோர்டு அணிக்கு வரும் முன்பு ரொனால்டோ ஸ்போர்டிங் சிபி அணிக்காக விளையாடி 13 ஆட்டங்களில் வென்றுள்ளார்.

    யுனைடெட் அணிக்காக 346 போட்டிகளில் விளையாடிய ரொனால்டோ 145 கோல்களை அடித்துள்ளார். இவற்றில் ரியல் மாட்ரிட்டில் தான் ரொனால்டோ தனது பெரும்பாலான வெற்றிகளை பெற்றார். அவர் லாஸ் பிளாங்கோஸ் அணிக்காக 315 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதில் நான்கு சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள் உட்பட 15 பட்டங்களை வென்றுள்ளார்.

    ரொனால்டோ ஆகஸ்ட் 2021-இல் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்புவதற்கு முன்பு மூன்று சீசன்களில் ஜுவென்டஸ் அணியுடன் 92 ஆட்டங்களில் வென்றார். இன்டர் மியாமி ஃபார்வர்ட் லியோனல் மெஸ்ஸி 613 கிளப் கேரியர் கிளப் ஆட்டங்களில் வென்றுள்ளார். இதில் பார்சிலோனாவுடன் 542 கோல்களும் அடங்கும்.

    ஜனவரி 30 ஆம் தேதி வரை ரொனால்டோ 921 கோல்களை அடித்துள்ளார். நேற்றைய போட்டியின் மூலம் அவர் தனது கேரியரில் அடித்த கோல்களின் எண்ணிக்கை 923 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தனது 30 வயது வரை 463 கோல்களை அடித்துள்ள ரொனால்டோ 30 வயதுக்கு பிறகு 460 கோல்களை அடித்துள்ளார்.

    உலகளவில் அதிக சர்வதேச கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 135 கோல்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். 

    • லிவர்பூல் அணிக்கெதிராக நாட்டிங்காம் பாரஸ்ட் 8-வது நிமிடத்தில் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தது.
    • 66-வது நிமிடத்தில் டியாகோ ஜோட்டா கோல் அடித்து அணி டிரா செய்ய உதவி புரிந்தார்.

    இங்கிலீஷ் பிரீமியர் லீக் 2024-2025 சீசனுக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டி ஒன்றில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல், நாட்டிங்காம் பாரஸ்ட் (Nottm Forest) அணியுடன் மோதின. இதில் லிவர்பூல் அணி எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் நாட்டிங்காம் பாரஸ்ட் அணியின் கிறிஸ் வுட் 8-வது நிமிடத்தில் கோல் அடித்து லிவர்பூல் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் முதல்பாதி நேர ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    பின்னர் 2-வது பாதிநேர ஆட்டம் தோடங்கியது. ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் டியாகோ ஜோட்டா கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை பெற்றது. அதன்பின் இரண்டு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

    போட்டி டிராவில் முடிந்தாலும் லிவர்பூல் 20 போட்டிகளில் 14-ல் வெற்றி பெற்று 47 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. நாட்டிங்காம் பாரஸ்ட் இந்த டிரா மூலம் 21 போட்டிகளில் 12 வெற்றி, 5 டிரா, 4 தோல்விகளுடன் 41 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    ஆர்சனல் 20 போட்டிகளில் 11-ல் வெற்றி, 7-ல் டிரா, 2-ல் தோல்வி என 40 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    மான்செஸ்டர் சிட்டி

    மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி ப்ரென்ட்போர்டு அணியை எதிர்கொண்டது. முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் மான்செஸ்டர் அணியின் பில் ஃபோடன் 66 மற்றும் 78-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்.

     இதனால் மான்செஸ்டர் சிட்டி வெற்றிபெறும் நிலையில் இருந்தது. ஆனால் கடைசி 10 நிமிடத்தில் ப்ரென்ட்போர்டு அணி அபாரமாக விளையாடியது. அந்த அணியின் விஸ்டா 82-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் காயத்திற்கான நேரத்தில் (90+2) கிறிஸ்டியன் நோர்கார்டு கோல் அடிக்க போட்டி டிராவில் முடிந்தது.

    இந்த டிரா மூலம் மான்செஸ்டர் சிட்டி 21 போட்டிகள் முடிவில் 10 வெற்றி, 5 டிரா மூலம் 35 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்த பிடித்துள்ளார். வெற்றி பெற்றிருந்தால் 4-வது இடத்திற்கு முன்னேறியிருக்கும்.

    • முதல் பாதி நேரத்தில் பார்சிலேனாா 4 கோல்கள் அடித்து அசத்தியது.
    • 10 பேருடன் விளையாடினாலும் பார்சிலோனா அதிக கோல்கள் விட்டுக்கொடுக்காமல் பார்த்துக் கொண்டது.

    ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் ஸ்பெயின் சூப்பர் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் பார்சிலோனா- ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இதில் பார்சிலோனா 5-2 என ரியல் மாட்ரிட் அணியை பந்தாடியது. ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் எம்பாப்பே கோல் அடித்தார்.

    22-வது நிமிடத்தில் பார்சிலோனாவின் லேமின் யமல், 39-வது நிமிடத்தில் ரபின்ஹா கோல் அடிக்க பார்சிலோனா 2-1 என முன்னிலைப் பெற்றது. இதற்கிடையில் 36-வது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ராபர்ட் லெவாண்டோஸ்கி கோல் அடித்தார். இதனால் பார்சிலோனா 3-1 என முன்னிலைபெற்றது.

    முதல்பாதி நேர ஆட்டம் 45-வது நிமிடத்தில் முடிவடைந்தது. முதல்பாதி நேர ஆட்டத்தின்போது காயத்தால் ஆட்டம் நிறுத்தம் போன்றவற்றால் கூடுதல் நேரம் (Injury Time) வழங்கப்பட்டது. இதன் 10-வது நிமிடத்தில் (45+10) பார்சிலோனா அணியின் அலேஜாண்ட்ரோ கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேர ஆட்ட முடிவில் பார்சிலோனா 4-2 என முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும், 48-வது நிமிடத்தில் ரபின்ஹா கோல் அடிக்க பார்சிலோனா 5-1 என முன்னிலைப் பெற்றது.

    56-வது நிமிடத்தில் பார்சிலோனா வோஜ்சியெச் ஸ்செஸ்னி ரெட்கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் பார்சிலோனா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதை பயன்படுத்தி ரியல் மாட்ரிட் 60-வது நிமிடத்தில் கோல் அடித்தார். ரோட்ரிகோ இந்த கோலை அடித்தார். அப்போது பார்சிலோனா 5-2 முன்னிலைப் பெற்றிருந்தது.

    அதன்பின் ரியல் மாட்ரிட் வீரர்களை கோல் அடிக்கவிடாதபடி பார்சிலோனா வீரர்கள் பார்த்துக் கொண்டனர். இதனால் ஆட்டம் முடியும் வரை ரியல் மாட்ரிட் அணி வீரர்களால் அதற்கு மேல் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பார்சிலோனா 5-2 என வெற்றி பெற்று சூப்பர் கோப்பையை கைப்பறறியது.

    • கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மும்பை சிட்டி அணிகள் மோதின.

    கொல்கத்தா:

    13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மும்பை சிட்டி அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் மும்பை அணி இரு கோல் அடித்து 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தது. தொடர்ந்து இந்த ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மும்பை அணி மேலும் ஒரு கோல் அடித்து 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    இறுதியில் இந்த ஆட்டத்தில் ஆட்ட நேர முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி வெற்றி பெற்றது.

    • முதல் பாதி நேர ஆட்டத்தில் கோவா 2-1 என முன்னிலை பெற்றது.
    • 2-வது பாதி நேர ஆட்டத்தில் ஓன் கோல் மூலம் ஒரு கோல் கிடைக்க 4-2 என வெற்றி பெற்றது.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்றைய முதலாவது ஆட்டத்தில் ஒடிசா- கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் கோவா அணியின் பிரிசன் பெரனாண்டஸ் கோல் அடித்தார். அதற்கு பதிலாக ஒடிசா பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 29-வது நிமிடத்தில் கோல் அடித்தது. இந்த கோலை அஹமது ஜஹோயுஹ் அடித்தார்.

    பின்னர் முதல் பாதி நேரம் முடிவடையும் நேரத்தில் (கூடுதல் நேரம் 45+2) கோவா அணியின் உதான்டா சிங் குமாம் கோல் அடிக்க முதல் பாதி நேரத்தில் கோவா 2-1 என முன்னிலைப் பெற்றது.

    பின்னர் 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் பிரிசன் பெர்னாண்டோஸ் மீண்டும் கோல் அடித்தார். அதன்பின் கோவா அணிக்கு ஓன் கோல் (அமேய் ரணாவாடே) மூலம் 56 நிமிடத்தில் கோல் கிடைக்க 4-1 என வலுவான முன்னிலைப் பெற்றது.

    ஆட்டம் முடிவடைவதற்கு முன்னதாக 88-வது நிமிடத்தில் ஒடிசா அணியின் ஜெர்ரி மாவிஹ்மிங்தங்கா கோல் அடித்தார். அதன்பின் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் கோவா 4-2 என வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் கோவா 13 ஆட்டங்கள் முடிவில் 25 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. ஒடிசா 14 போட்டிகள் முடிவில் 20 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

    • யுவென்டஸ் ஸ்ட்ரைக்கர் டுசன் விளாகோவிச்சை ஒப்பந்தம் செய்ய ஆர்சனல் ஆர்வம்.
    • ஸ்போர்ட்டிங் சி.பி. ஸ்ட்ரைக்கர் விக்டர் கியோகெர்ஸை ஒப்பந்தம் செய்ய மான்செஸ்டர் யுனைடெ் விருப்பம்.

    கால்பந்து போட்டியை பொறுத்த வரையில் ஒரு சீசன் முடிவடைந்த பின்னர் மே அல்லது ஜூன் மாதத்தில் வீரர்கள் டிரான்ஸ்பர் நடைபெறும். அதன்பின் ஜனவரி மாதமும் வீரர்கள் டிரான்ஸ்பர் நடைபெறும். இந்த இரண்டு காலக்கட்டத்தில் வீரர்கள் கிளப்புகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.

    அந்த வகையில் தற்போது வீரர்கள் டிரான்ஸ்பர் நடைபெற வாய்ப்புள்ளது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான ஆர்சனல் இத்தாலி கிளப்பான யுவென்டஸில் விளையாடும் டுசன் விளாகோவிச்சை ஒப்பந்தம் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    24 வயதான டுசன் விளாகோவிச் செர்பியா நாட்டைச் சேர்ந்தவர். யுவென்டஸ் அணியின் ஸ்ட்ரைக்கராக உள்ளார். புகாயோ சகாவிற்குப் பதிலாக இவரை அணியில் இணைத்துக் கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவருக்கு ஆர்சனல் மானேஜர் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், பொருசியா டார்ட்மண்ட் அணியின் ஜேமி கிட்டன்ஸ் அல்லது பேயர்ன் முனிச் அணியின் லெரோய் சானோ ஆகியோரில் ஒருவர் மீதும் பார்வை வைத்துள்ளது. விளாகோவிச் இந்த சீசனில் 22 போட்டிகளில் விளையாடி 12 கோல்கள் அடித்துள்ளார்.

    மான்செஸ்டர் யுனைடெ் மானேஜர் ரூபன் அமோரிம், ஸ்போர்ட்டிங் சி.பி. ஸ்ட்ரைக்கர் விக்டர் கியோகெர்ஸை ஒப்பந்தம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். ஸ்டிக்கர் விக்டர் கியோகெர்ஸை 80 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    பி.எஸ்.ஜி. ஸ்ட்ரைக்கர் ரண்டல் கோலோ முயானியை, அவருடைய வருட சம்பளம் 8 மில்லியன் யூரோ முழுமையாக ஈடுகட்டப்பட்டால் லோனில் விடுவிக்க தயாராக இருக்கிறது. 26 வயதான முயானியை ஒப்பந்தம் செய்ய பேயர்ன் முனிச், செல்சி, யுவென்டஸ், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் போன்ற அணிகள் பேச்சு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்கள வீரர் மார்கஸ் ரஷ்போர்டு, மான்செஸ்டர் யுனைடெ் அணியில் இருந்து வெளியேறி புதிய சவாலுக்கு தயார் எனத் தெரிவித்திருந்தார். இதனால் ஜனவரி டிரான்ஸ்பரில் இவரைது பெயரும் அடிபட்டுள்ளது.

    ×