என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • 10 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.
    • சதம் அடிக்க 146 பந்துகள் எடுத்துக் கொண்டார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் லீட்சில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் (101), சுப்மன் கில் சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 127 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ரிஷப் பண்ட் தனது ஆட்டத்தை துரிதப்படுத்தினார். இதற்கிடையே முதல் ஒரு மணி நேரத்தில் இருவரும் விக்கெட் இழப்பாமல் பார்த்துக் கொண்டனர்.

    ரிஷப் பண்ட் சதத்தை நோக்கி முன்னேறிச் சென்றார். 100ஆவது ஓவரை பசீர் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி ரிஷப் பண்ட் 146 பந்தில் சதம் அடித்தார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரின் 7ஆவது சதம் இதுவாகும்.

    • இரண்டு ரன்கள் ஓட முயன்ற போது பேட்டர்கள் மோதிக் கொண்டனர்.
    • க்ரீஸ் திரும்புவதற்குள் 3 முறை ரன்அவுட் செய்ய தவறி விடுவார்கள்.

    மாநில, தேசிய அளவில் விளையாடும் வீரர்களின் செயல்பாடுகள் சில நேரங்களில் சிறுபிள்ளைத்தனம் போன்று இருக்கும். என்னடா இப்படி விளையாடுகிறார்கள் என்பதுபோல் தோன்றும். அப்படி ஒரு சம்பவம் மகாராஷ்டிரா பிரீமியர் லீக் போட்டியில் நடைபெற்றுள்ளது.

    ரெய்காட் ராயல்ஸ்- கோலாப்பூர் டஸ்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டி புனேயில் நடைபெற்றது. ரெய்காட் சேஸிங் செய்யும்போது, பேட்டர்கள் இரண்டு ரன்கள் ஓட முயன்றனர். 2-வது ரன்னுக்கு ஓட முயன்றபோது இருவரும் ஆடுகளத்தின் மையப் பகுதியில் மோதிக் கொண்டனர். மோதிய வேகத்தில் தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

    அப்போது பீல்டர் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரை நோக்கி வீசினார். விக்கெட் கீப்பரும் பந்தை பிடிப்பார். உடனே ஸ்டம்பில் அடித்திருந்தால் ரன்அவுட் ஆகும். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பந்து வீச்சாளரிடம் பந்து தூக்கி போட்டுவிடுவார். பந்து வீச்சாளர் பந்தை பிடித்து அடிக்க தவறிவிடுவார். அதற்குள் ஒரு பேட்டர் க்ரீஸ் வந்து விடுவார்.

    உடனே அருகில் நின்ற பீல்டர் பந்தை எடுத்துக் கொண்டு மறுமுனையில் ரன்அவுட் செய்ய ஓடுவார். அதற்குள் கீழே விழுந்த மற்றொரு பேட்டர் எழுந்து பேட் இல்லாமல் க்ரீஸ் நோக்கி ஓடுவார். அப்போது பீல்டர் பந்தை எறிய, அது ஸ்டம்பில் படாமல் சென்றுவிடும். இதனால் மூன்று முறை ரன்அவுட் மிஸ் ஆகிவிடும்.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது.
    • சுப்மன் கில் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் விளாசினார்.

    நேற்றைய போட்டியின்போது சுப்மன் கில் கருப்பு சாக்ஸ் (black socks) அணிந்து விளையாடியுள்ளார். ஐசிசி விதியின்படி ஒரு வீரர் வெள்ளை, க்ரீம (Cream) அல்லது வெளீர் சாம்பல் (light grey) ஆகிய கலர் கொண்ட சாக்ஸ்தான் அணிய வேண்டும். ஒருநாள் போட்டிக்கும் இந்த விதி அடங்கும்.

    ஐ.சி.சி.யின் ஆடை மற்றும் உபகரணங்கள் விதிகளின் பிரிவு 19.45 இன் படி, ஒரு வீரர் மேற்கூறிய வண்ணங்களின் சாக்ஸ் அணிய வேண்டும். இதனை சுப்மன் கில் மீறியுள்ளார். இதற்காக ஐசிசி அவருக்கு 10 முதல் 20 சதவீதம் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. அத்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடுதற்கு தடை விதிப்பதற்கான ஒரு புள்ளி பெறவும் வாய்ப்புள்ளது.

    எனினும், அவருடைய சாக்ஸ் அதிக ஈரப்பதம் ஆகி அல்லது வழக்கத்திற்க மாறாக தற்செயலாக அணிந்திருந்தால் அபராத்தில் இருந்து தப்பிக்கலாம்.

    • முதல் இன்னிங்சில் 148 ரன்கள் விளாசினார்.
    • 2ஆவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 125 ரன்கள் குவித்தார்.

    இலங்கை- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (148), முஷ்பிகுர் ரஹிம் (163) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 495 ரன்கள் குவித்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை, தொடக்க வீரர் பதுன் நிசாங்கா 187 ரன்கள் விளாச 485 ரன்கள் குவித்தது.

    10 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றதுடன் வங்கதேசம் 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4ஆவது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. ஷான்டோ 56 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹிம் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ரஹிம் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் ஷான்டோ அபாரமாக விளையாடி சதம் விளாசினார். முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அவர், 2வது இன்னிங்சில் சதம் அடித்து சாதனைப் படைத்தார்.

    வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஷான்டோ 125 எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து வங்கதேசம் 295 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இலங்கை அணிக்கு 296 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் கடைசி நாளான இன்று 37 ஓவர்கள் மட்டுமே மீதமுள்ளதால் போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது.

    • இங்கிலாந்துக்கு எதிராக தான் விளையாடிய முதல் போட்டியிலேயே ஜெய்ஸ்வால் சதம் அடித்தார்.
    • இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது.

    இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிராக தான் விளையாடிய முதல் போட்டியிலேயே ஜெய்ஸ்வால் சதம் அடித்து சாதனை படைத்தார்.

    இதன்மூலம் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் சதம் விளாசிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு பார்டர் - கவாஸ்கர் கோப்பையின் முதல் போட்டியிலேயே ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் போட்டியில் 101 ரன்கள் குவித்து இந்த சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ரிஷப் பண்ட் 65 ரன்கள் அடித்து அசத்தினார்.
    • இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது.

    இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது. ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 65 ரன்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் (76) 3,000 ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.

    இதற்கு முன் 144 இன்னிங்ஸில் 3000 ரன்களை கடந்திருந்த எம்.எஸ்.தோனியின் சாதனையை பண்ட் முறியடித்தார்.

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 63 இன்னிங்ஸ்களில் 3000 ரன்களை கடந்து இப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில பண்ட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த அதிரடி ஆட்டத்தை முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி பாராட்டினர்.
    • இந்த பதிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

    இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த டெஸ்ட் போட்டியில், இந்தியா 359/3 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (101), ஷுப்மான் கில் (127) சதம் அடித்தனர். ரிஷப் பந்த் 65 ரன்கள் எடுத்தார்.

    இந்த அதிரடி ஆட்டத்தை முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி பாராட்டினர்.

    2002ல் ஹெடிங்லியில் இங்கிலாந்துக்கு எதிராக தாங்கள் விளையாடிய சிறப்பான ஆட்டத்தை இருவரும் எக்ஸ் சமூக வலைதளத்தில் நினைவு கூர்ந்தனர்.

     

    சச்சின் 193 ரன்களும், கங்குலி 128 ரன்களும் எடுத்த அந்தப் போட்டியில், ராகுல் டிராவிட் 148 ரன்கள் எடுத்திருந்தார்.

    கங்குலி, "இந்த முறை இந்திய அணியில் 4 சதம் அடிக்க வாய்ப்புள்ளது, பந்த் மற்றும் கருண் ஆகியோர் சிறப்பாக விளையாடலாம், 2002 இல் முதல் நாள் களம் இதை விட சுட்டறு வித்தியாசமாக இருந்தது" என்றும் கருத்து தெரிவித்தார். இந்த பதிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதல் நாள் முடிவில் இந்தியா 359 ரன்கள் குவித்தது.

    லீட்ஸ்:

    இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்- கே.எல்.ராகுல் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 42 ரன்னில் அவுட்டானார். அடுத்து அறிமுகப் போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன் டக் அவுட்டாகி வெளியேறினர்.

    3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன், சுப்மன் கில் இணைந்து பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். இது அவரது 5-வது டெஸ்ட் சதம் ஆகும்.

    3வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வால் 101 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பண்ட் இறங்கினார்.

    இந்த ஜோடி மேலும் விக்கெட் விழாமல் நிதானமாக ஆடியது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் சுப்மன் கில் அபாரமாக ஆடி சதமடித்தார். ரிஷப் பண்ட் அரை சதம் கடந்தார்.

    முதல் நாள் முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 127 ரன்னும், ரிஷப் பண்ட் 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியில் சுப்மன் கில் சதமடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
    • 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

    தென் ஆப்பிரிக்கா அணி சமீபத்தியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி இம்மாத இறுதியில் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஜூன் 28-ம் தேதி நடைபெறவுள்ளது.

    இத்தொடருக்கான டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், லெசெகோ செனோக்வானே, கோடி யூசுஃப், டெவால்ட் பிரீவிஸ் மற்றும் ப்ரீனெலன் சுப்ரயன் உள்ளிட்ட அறிமுக வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில், ஐடன் மார்க்ரம், காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்தனர்.

    இந்நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளார்.

    அவர் விலகியுள்ள நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • ராகுல் 42 ரன்னிலும் சாய் சுதர்சன் 0 ரன்னிலும் வெளியேறினர்.

    இங்கிலாந்து- இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்- கேஎல் ராகுல் களமிறங்கினர். ராகுல் 42 ரன்னிலும் சாய் சுதர்சன் 0 ரன்னிலும் வெளியேறினர். இதனையடுத்து கில், ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இது அவரது 5-வது டெஸ்ட் சதம் ஆகும்.

    • கடந்த 2022-ம் ஆண்டு இலங்கை அணிக்காக கமிந்து மெண்டிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
    • 12 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களுடன் 1271 ரன்களைச் சேர்த்துள்ளார்.

    இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதல் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் விளையாடிய 495 ரன்களைக் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சைத் விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 187 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 87 ரன்களையும், தினேஷ் சண்டிமால் 54 ரன்களை எடுத்தனர்.

    இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 485 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து 10 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேச அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. 4-ம் நாள் முடிவில் வங்கதேச அணி 177 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணியின் இளம் ஆல் ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் இலங்கை அணிக்காக அரிதான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிவேகமாக பத்து 50+ ரன்களை அடித்த வீரர் எனும் ராய் தியாஸின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக ராய் தியாஸ் 23 இன்னிங்ஸில் 10 முறை 50+ ஸ்கோரை அடித்திருந்தார்.

    கமிந்து மெண்டிஸ் 22 இன்னிங்ஸ்களில் 10 முறை 5+ ஸ்கோரை அடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். இந்த பட்டியலில் திலிப் மெண்டிஸ் மற்றும் குமார் சங்கக்காரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு இலங்கை அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கமிந்து மெண்டிஸ் 12 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களுடன் 1271 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை அணி முதல் இன்னிங்சில் 485 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
    • வங்கதேசம் 4-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் அடித்துள்ளது.

    காலே:

    இலங்கை-வங்காளதேசம் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டி காலேயில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 153.4 ஓவர்களில் 484 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்களும், கேப்டன் சாண்டோ 148 ரன்கள் குவித்தனர். இலங்கை தரப்பில் அசிதா பெர்னாண்டோ, மிலன் ரத்னாயகே, தாரிந்து ரத்னாயகே தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை 3-ம் நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 368 ரன்கள் எடுத்திருந்தது. கமிந்து மெண்டிஸ் 37 ரன்களுடனும், தனஞ்சய டி சில்வா 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பதும் நிசங்கா 187 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 485 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. வங்காளதேசம் தரப்பில் நயீம் ஹசன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் 10 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 4-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 56 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹீம் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் ஆன ஷாத்மான் இஸ்லாம் 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    வங்காளதேச அணி இதுவரை 187 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடை

    ×