என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 2002-ல் முதல் முறையாக நீங்கள் பந்து வீசியதை பார்த்தேன்.
    • நீங்கள் இங்கிலாந்தின் முதன்மை பவுலராக வருவீர்கள் என்று நாசர் ஹுசைன் என்னிடம் சொன்னார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியுடன் இங்கிலாந்தின் நட்சத்திர ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    கடந்த 2002-ல் அறிமுகமாகிய அவர் சச்சின், விராட் கோலி போன்ற நிறைய பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்தவர். அவர் 188 போட்டிகளில் 704 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் சச்சினுக்கு பின் (200) அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    இந்நிலையில் மகத்தான செயல்பாடுகளை வெளிப்படுத்தி விடை பெற்றுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஹேய் ஜிம்மி. உங்களின் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். 2002-ல் முதல் முறையாக நீங்கள் பந்து வீசியதை பார்த்தேன். அப்போது நாசர் ஹுசைன் நீங்கள் இங்கிலாந்தின் முதன்மை பவுலராக வருவீர்கள் என்ற மிகப்பெரிய கருத்தை என்னிடம் சொன்னார். அதை நிரூபித்துள்ள நீங்கள் இங்கிலாந்து ரசிகர்களை ஏமாற்றவில்லை.

    உலகின் மற்ற ரசிகர்களுக்கும் நீங்கள் நிறைய மகிழ்ச்சியை கொடுத்தீர்கள். உங்களுடைய ஆட்டத்தை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனால் உங்களுக்கு எதிராக விளையாடுவது மகிழ்ச்சி கிடையாது. ஏனெனில் புதிய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் நீங்கள் வித்தியாசமானவர். அதை வைத்து நீங்கள் பேட்ஸ்மேன்களின் வாழ்க்கையை கடினமாக்கினீர்கள். பலருக்கும் ரோல் மாடலாக திகழும் நீங்கள் 188 போட்டிகளில் 704 எடுத்துள்ளது அபாரமானது.

    எளிதாக சொல்ல வேண்டும்மெனில் அற்புதமானது நண்பா. இந்த நேரத்தில் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். இனிமேல் தான் உங்களுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கும் நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கப் போகிறது. இந்த வாய்ப்பில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக வாழ்த்து தெரிவிக்கிறேன். அற்புதமான கேரியருக்காக வெல்டன்.

    இவ்வாறு சச்சின் கூறினார்.

    • வேகப்பந்து வீச்சாளர்களுக்கு 21 வருடங்கள் விளையாடுவது நம்பமுடியாத முயற்சி.
    • அதனால் நான் இவ்வளவு தூரம் முன்னேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மட்டும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி ஆண்டர்சன் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    இதையடுத்து அவருக்கு இரு அணி வீரர்களும் தங்கள் வாழ்த்தினை தெரிவித்தனர். மேற்கொண்டு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் உள்பட அனைவரும் ஆண்டர்சனுக்கு தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களி பதிவிட்டு வருகின்றன.

    இந்நிலையில் எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் காயம் இல்லாமல் இருந்தது நான் செய்த அதிர்ஷ்டம் என ஆண்டர்சன் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இன்று காலை மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. இரு அணி வீரர்களும் வரிசையாக அணிவகுத்த நிலையில் எனக்கு உற்சாக வரவேற்பினை வழங்கினர். நான் இப்போதும் என் கண்ணீரை அடக்க முயற்சிக்கிறேன். உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.

    குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு 21 வருடங்கள் விளையாடுவது நம்பமுடியாத முயற்சி. அதனால் நான் இவ்வளவு தூரம் முன்னேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் எனது வாழ்க்கை முழுவதும் காயம் இல்லாமல் இருந்தது நான் செய்த அதிர்ஷ்டமாகும்.

    இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடுவது என்பது உலகின் சிறந்த வேலை, அதனால் நீண்ட காலமாக அதைச் செய்யக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்தது. டிரஸ்ஸிங் ரூமில் நினைவுகளை உருவாக்குவது பற்றி நாங்கள் அதிகம் பேசுகிறோம், அது நமக்கு மட்டுமல்ல, நம் குடும்பங்களுக்கும் சேர்ந்து தான் என்பதை புரிந்துக்கொண்டேன். ஏனெனில் அவர்கள் உங்களுடன் பயணம் செய்கிறார்கள், என்னால் சில சமயம் வீட்டிற்கு செல்லமுடியாத நிலை இருந்தது. அப்போதும் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு நம்பமுடியாத ஆதரவை அளித்து முடிந்தவரை என்னை விளையாட அனுமதித்தனர்.

    அவர்கள் எனக்காக செய்த அனைத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். சில அற்புதமான வீரர்களுடன் விளையாடும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. இந்த விளையாட்டில் விளையாடிய சில திறமையான கிரிக்கெட் வீரர்கள் அவர்கள். ஆனால், மிக முக்கியமாக, சில நல்ல மனிதர்கள் மற்றும் சில நண்பர்களை நான் இந்த பயணத்தில் சம்பாதித்துள்ளேன். இத்தனை வருடங்களாக நான் எத்தனை அற்புதமான வீரர்களுடன் விளையாடியிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒரு நம்பமுடியாத பயணம்" என்று தெரிவித்துள்ளார். 

    • காமன்வெல்த் போட்டியில் சாய்னா நேவால் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
    • டென்னிஸ், பேட்மிண்டன், கூடைப்பந்து விளையாட்டை காட்டிலும் கிரிக்கெட் உடல் ரீதியாக கடினமானது அல்ல என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பேட்மிண்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனையாக வலம் வந்த சாய்னா நேவால் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். மேலும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கம் வென்றுள்ள அவர் தரவரிசையில் 'நம்பர் 1' இடத்தையும் அலங்கரித்தார். காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கத்தினையும் வென்றுள்ளார்.

    ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓரிரு ஆண்டுகளில் அவரது ஆட்டத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது. முழு உடல்தகுதியை எட்ட முடியாமல் போராடி வருகிறார்.

    இந்நிலையில் டென்னிஸ், பேட்மிண்டன், கூடைப்பந்து விளையாட்டை காட்டிலும் கிரிக்கெட் உடல் ரீதியாக கடினமானது அல்ல என தெரிவித்தார். இதற்கு கொல்கத்தா அணியின் இளம் வீரர் ரகுவன்ஷி பதலளிக்கும் வகையில், நீங்கள் பும்ராவின் 150 கி.மீ வேகத்தை தலையில் வாங்கி பாருங்கள் அப்போது தெரியும் என கூறினார். இந்த கருத்து ரசிகர்களிடையே எதிர்ப்பை தெரிவித்து வந்தது.

    இதனையடுத்து அந்த கருத்து சானியா நேவாலிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் அரையிறுதி போட்டியில் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதி சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 7-6 (7-1) என முதல் செட்டை வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த 3 செட்களை 6-3, 6-4, 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் மெத்வதேவ் விம்பிள்டன் தொடரில் இருந்து வெளியேறினார். நாளை மறுதினம் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

    • ஸ்ரீசாந்தின் அலட்சியத்தால் டோனி கோவமடைந்தார்.
    • டோனி அப்படி இருந்து நான் பார்த்ததில்லை.

    மகேந்திர சிங் டோனி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் 50 ஓவர் உலக கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையை பெற்று தந்தவர்.

    இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இவரை குல் கேப்டன் என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். காரணம் மைதானத்தில் அழுத்தமாக இடங்களிலும் அமைதியாக இருந்து சாதித்து காட்டியவர்.

    இந்நிலையில் 2010-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் டோனி கோபப்பட்ட சம்பவத்தை தமிழக வீரர் அஸ்வின் நினைவு கூர்ந்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2010-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடி கொண்டிருந்த டோனிக்கு நான் ட்ரிங்க்ஸ் எடுத்துச் சென்றேன். அப்போது ஸ்ரீசாந்த் எங்கே என கேட்டார். அவர் ஓய்வு அறையில் இருக்கிறார் என கூறினேன். அவரை உடனடியாக வீரர்கள் அமரும் இடத்திற்கு வர சொல் என்றார். ஆனால் ஸ்ரீசாந்த அதை புறக்கணித்தார்.

    அடுத்த முறை ஹெல்மெட்டுடன் மைதானத்துக்குள் செல்கிறேன். அப்போது டோனி கோபத்துடன் இருந்தார். அவர் அப்படி இருந்து நான் பார்த்ததில்லை. ஸ்ரீ எங்கே அவர் என்ன செய்கிறான் என மீண்டும் கேட்டார்.

    அவர் ஓய்வு அறையில் மசாஜ் செய்கிறார் என்று நான் அவரிடம் சொல்கிறேன். அதற்கு டோனி எதுவும் சொல்லவில்லை. அடுத்த ஓவரில், ஹெல்மெட்டைத் திருப்பித் தரும்படி என்னை அழைத்தார். அப்போது அமைதியாக இருந்தார். ஹெல்மெட் கொடுக்கும்போது, ஒரு காரியம் செய். ரஞ்சிப் சார் கிட்ட போங்க. ஸ்ரீ-க்கு இங்கு இருக்க விருப்பமில்லை என்று சொல்லுங்கள். நாளைக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யச் சொல்லுங்கள். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள் என கூறினார்.

    நான் திகைத்துவிட்டேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் அவர் முகத்தையே பார்க்கிறேன். உடனே டோனி 'என்ன நடந்தது? உனக்கு நான் பேசும் ஆங்கிலம் புரியவில்லையா என கேட்டார்.

    இதனை கேட்ட ஸ்ரீ உடனே எழுந்து உடைகளை அணிந்துகொள்கிறார். அதனை தொடர்ந்து ட்ரிங்க்ஸ் கொடுக்கும் கடமைகளை அவரே ஏற்றுக்கொள்கிறார். அடுத்த முறை டோனிக்கு ட்ரிங்க்ஸ் தேவைப்படும்போது, ஸ்ரீசாந்த் அங்கு இருப்பார் என்று எனக்கு தெரியும்.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது
    • முதல் அரையிறுதிப் போட்டியை இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கண்டு ரசித்தார்.

    லண்டன்:

    டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. தற்போது விம்பிள்டன் தொடரில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டேனில் மெத்வதேவ் மற்றும் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் மோதி வருகின்றனர்.

    இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் அரையிறுதி போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கண்டு ரசித்தார். இதுதொடர்பான புகைப்படம் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

    டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா பங்கேற்ற முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.
    • பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கான், எல் பாலாஜி ஆகியோரை பிசிசிஐ பரீசிலனை செய்து வந்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவரது உதவியாளர்களாக பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர் யார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிடவில்லை.

    ஆனால் பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயரும் பீல்டிங் பயிற்சியாளராக ரியான் டென் டோஸ்கேட் ஆகியோரை நியமிக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு கம்பீர் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியது.

    மேலும் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கான், எல் பாலாஜி ஆகியோரை பிசிசிஐ பரீசிலனை செய்து வந்தனர். ஆனால் கம்பீர் வினய் குமாரை நியமிக்க கோரிக்கை வைத்ததாக தெரிய வந்தது.

    இப்படி பிசிசிஐ ஒரு முடிவு செய்ய புதிய பயிற்சியாளர் கம்பீர் ஒரு முடிவு செய்து வருவதாக தகவல் வெளியாகி வருவது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 

    இந்த குழப்பத்திற்கு மத்தியில் மீண்டும் ஒரு குழப்பம் அரங்கேறி உள்ளது. பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரரான மோர்னே மோர்கல் நியமிக்க கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பிசிசிஐ-யிடம் இருந்து எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. இவர் பாகிஸ்தான் அணியில் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து அதன்பின் அதிலிருந்து விலகினார்.

    மேலும் ஐபிஎல் தொடரில் கவுதம் கம்பீர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த போது அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் மோர்னே மோர்கல் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • "ஈஷாவின் சூழல் தரும் அனுபவம் வெறும் வார்த்தைகளில் கூற முடியாது, அதனை உணரத் தான் முடியும்" எனக் கூறினார்.
    • ஈஷாவில் சூர்யகுண்டம், லிங்கபைரவி, தியானலிங்கம் மற்றும் ஆதியோகி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தனர்.

    தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) எனும் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான போட்டிகள் இம்மாதம் துவங்கி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.


    இந்நிலையில் TNPL தொடரில் ஆடும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் சக வீரர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழு ஈஷாவிற்கு வருகை புரிந்தனர். அவர்கள் ஈஷாவில் சூர்யகுண்டம், லிங்கபைரவி, தியானலிங்கம் மற்றும் ஆதியோகி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தனர்.

    திண்டுக்கல் அணியின் பயிற்சியாளர் இவ்வருகை குறித்து கூறுகையில், "தற்போது TNPL தொடரில் ஆடி வருகிறோம். லீக் விளையாட்டுகளில் ஆடுவதற்காக கோவை வந்துள்ளோம். ஈஷாவிற்கு எப்போது வந்தாலும் இந்த மொத்த சூழலுமே மிக அருமையாக இருக்கிறது. அதனால் அமைதியாகவும், மன குவிப்புத்திறன் அளிக்க கூடியதாகவும் மற்றும் மிகவும் ரிலாக்ஸாகவும் இருக்கிறது. இது எங்களுக்கு எப்போதும் உதவியாக இருக்கும். இந்த அனுபவத்தை வெறும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதனை உணரத்தான் முடியும்" எனக் கூறினார்.


    கோவை ஈஷா யோகா மையம், தமிழகத்தில் மிக முக்கிய ஆன்மீகத் தலமாக இருந்து வருகிறது. ஈஷாவிற்கு ஆண்டுதோறும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து ஆதியோகியை தரிசிக்கவும், யோகப் பயிற்சிகள் மேற்கொள்ளவும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

    • 22 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடி உள்ளார்.
    • 32 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் 10-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 7 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 371 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 5 விக்கெட்டும் ஆண்டர்சன் 3 விக்கெட்டும் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இவருக்கு இரு அணி வீரர்களும் பிரியா விடை கொடுத்தனர். 22 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடிய அவர் மொத்தமாக 991 விக்கெட்டும், டெஸ்ட் போட்டியில் மட்டும் 188 போட்டிகள் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 32 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். முதல் மற்றும் 2-வது இடங்கள் முறையே முரளிதரன் (800 விக்கெட்டுகள்), வார்னே (708) உள்ளனர்.

    இவரது ஓய்வுக்கு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கைதட்டி விடைக் கொடுத்தனர். ஆண்டர்சன் கண்கலங்கியபடி மைதானத்தில் இருந்து வெளியேறினார். டிரஸ்சிங் அறையில் இருந்த பயிற்சியாளர் மெக்கல்லமை கட்டியணைத்து சென்றார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உங்கள் ஓய்வு மகிழ்ச்சிகரமாக இருக்க வாழ்த்துகிறோம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களும் 2-வது இன்னிங்சில் 136 ரன்களும் எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் முதல் இன்னிங்சில் 7 விக்கெடும் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 7 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 371 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சை போலவே இந்த இன்னிங்சிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது. இதனால் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ், அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோசுவா டா சில்வா- அல்சாரி ஜோசப் ஆகியோர் களத்தில் இருந்தனர். ஜோசுவா டா சில்வா 9 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அல்சாரி ஜோசப் 8 ரன்னிலும் சமர் ஜோசப் 3 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 47 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 5 விக்கெட்டும் ஆண்டர்சன் 3 விக்கெட்டும் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது.

    • 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
    • இதில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 7 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 371 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சை போலவே இந்த இன்னிங்சிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது. இதனால் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ், அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஆறு ஆயிரம் ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது வீரர் என்ற பெருமையை ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். மேலும் ஆறு ஆயிரம் ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    இந்த பட்டியலில் முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கேரி சோபர்ஸ் உள்ளார். அவர் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8032 ரன்களும் 235 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் கல்லீஸ் உள்ளார். அவர் 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13289 ரன்களும் 292 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ஜாஸ்மின் பவுலினி, வெகிக் உடன் மோதினார்.
    • இதில் பவுலினி 2-6 என முதல் செட்டை இழந்தார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, குரோசிய வீராங்கனை வெகிக் உடன் மோதினார்.

    இதில் பவுலினி 2-6 என முதல் செட்டை இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (10-8) என வென்றார். இறுதியில், 2-6, 6-4, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் வென்ற பவுலினி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதன் மூலம் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீராங்கனை என்ற பெருமையை ஜாஸ்மின் பவுலினி பெற்றார்.

    ×