என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பேட்டிங்கில் எங்களது ஷாட்கள் தவறாக இருந்தது.
    • கோவை அணி கேப்டன் ஷாருக்கான் பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்தி எங்களை கட்டுப்படுத்தினார்.

    கோவை:

    டி.என்.பி.எல். போட்டியில் நெல்லை அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. கோவையில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது.

    கேப்டன் அருண் கார்த்திக் 38 பந்தில் 47 ரன்னும் (பவுண்டரி, 2 சிக்சர்) சோனு யாதவ் 26 பந்தில் 43 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். கேப்டன் ஷாருக்கான், எம்.முகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 18.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் 48 பந்தில் 76 ரன்னும் (8 பவுண்டரி, 3 சிக்சர்), சுரேஷ் குமார் 55 பந்தில் 63 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    வெற்றி குறித்து கோவை கிங்ஸ் கேப்டன் ஷாருக்கான் கூறியதாவது:-

    டி.என்.பி.எல். தொடரில் தொடர்ந்து 10-வது வெற்றியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் 2 போட்டியில் கடுமையாக போராடி வென்றோம். இனி வரும் போட்டிகளிலும் எங்களின் முழு திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். சொந்த ஊரான கோவையில் வெற்றி பெறுவது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் முதல் தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் அருண் கார்த்திக் கூறும்போது, 'மழை பெய்ததால் பந்து வீச்சாளர்கள் பந்து வீச மிகவும் சிரமப்பட்டனர்'. பேட்டிங்கில் எங்களது ஷாட்கள் தவறாக இருந்தது. கோவை அணி கேப்டன் ஷாருக்கான் பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்தி எங்களை கட்டுப்படுத்தினார். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடுவோம் என்றார்.

    இன்று நடைபெறும் 'லீக்' ஆட்டங்களில் சேலம் ஸ்பார்ட்ன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் (மாலை 3.15), சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிரா கன்ஸ் (இரவு 7.15) அணிகள் மோதுகின்றன.

    • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் தற்சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
    • கபில் தேவ் தம்முடைய பென்சன் தொகையை அனுஸ்மானுக்கு கொடுப்பதாக அறிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் தற்சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்காக அவர் 12 வருடங்களில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமையை கொண்டவர். மேலும் 1990-களின் இறுதியில் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டார்.

    அவருடைய வழி காட்டுதலில் சார்ஜாவில் நடைபெற்ற கோகோ-கோலா கோப்பையை இந்தியா வென்றதை மறக்க முடியாது. அத்துடன் ஓய்வுக்கு பின் பிசிசிஐ நிர்வாகத்தில் அவர் முக்கிய பொறுப்பிலும் இருந்தார். தற்போது 71 வயதாகும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வருகிறார். எனவே தமக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்யுமாறு அவருடைய சார்பில் பிசிசி-ஐக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பிசிசிஐ-யிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இதனையடுத்து முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் தம்முடைய பென்சன் தொகையை தனது நண்பன் மற்றும் சக வீரரான அனுஸ்மானுக்கு கொடுப்பதாக அறிவித்தார். அத்துடன் மற்ற வீரர்களும் அவர்களுடைய குடும்பம் சம்மதித்தால் தங்களது பென்சன் தொகையை மருத்துவ உதவிக்கு கொடுக்கலாம் என கபில் தேவ் கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமான் கெய்க்வாடுக்கு நிதியுதவி வழங்க உடனடியாக ரூ.1 கோடியை வழங்க பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உத்தரவிட்டுள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தாரிடம் பேசி நிலைமையை விசாரித்து உதவிகளை வழங்கினார்.

    • 8 முறை உலக சாம்பியன் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன்.
    • மகன்கள் இருவரும் மாநில, மாவட்ட போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர்

    திருவனந்தபுரம்:

    பகலில் ஆட்டோ டிரைவர்.... இரவில் ஜிம்மில் பயிற்சி... சாதனை படைத்தும் நிதி இல்லாததால்... சாம்பியன் கோப்பை போட்டியில் பங்கேற்க முடியாத சூழல். இது கேரள மாநில ஆட்டோ டிரைவர் ஒருவரின் சோகம்.

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சவுகத் அலி. இவர் பொழுது போக்காக தனது பள்ளிப் பருவத்தில் மல்யுத்தம் செய்ய தொடங்கினார். உடற்பயிற்சி கூடம் சென்ற அவர், அங்கு கை மல்யுத்த விளையாட்டை அறிந்து அதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். படிப்புக்கு பிறகு ஆட்டோ டிரைவரான சவுகத் அலி, பல்வேறு போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    தேசிய கை மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப்பதக்கம், ஒரு வெண்கல பதக்கம் வென்ற அவர், அக்டோபர் மாதம் கோவாவில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கும், மால்டோவாவில் நடைபெற உள்ள உலக சாம்பியன் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். ஆனால் நிதி இல்லாமை காரணமாக அவர் உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க இயலாத நிலையில் உள்ளார்.

    இதுபற்றி சவுகத் அலி கூறுகையில், நான் படிக்கும் காலத்தில் விடுமுறையின் போது கட்டுமான தளங்களில் வேலை பார்த்தேன். அப்போது செங்கல் சுமந்தது, வலுவான தசைகளை உருவாக்க உதவியது. 18 வயதில் தொழில் ரீதியாக கை மல்யுத்தம் போட்டியில் பங்கேற்றேன். இது வரை தங்கம், வெள்ளி, வெண்கலம் என 14 பதக்கங்கள் வென்றுள்ளேன். 10 முறை தேசிய அளவிலான சாம்பியன் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். 8 முறை உலக சாம்பியன் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன். ஆனால் போதிய நிதி திரட்ட முடியாததால் அதில் பங்கேற்க முடிவதில்லை. தற்போதும் நிலுவை தேதிக்கு முன்னதாக ரூ.1.8 லட்சம் திரட்ட வேண்டி உள்ளது. அது என்னால் முடியாது.

    தற்போது எனது மனைவி நஜ்முன்னிசா, மகன்கள் முகமது இர்பான், முகமது ஷர்பான் ஆகியோரும் கை மல்யுத்தத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மகன்கள் இருவரும் மாநில, மாவட்ட போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர், மனைவி நஜ்முன்னிசா மாநில ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இருப்பினும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க முடியாமல் இருப்பது வேதனையாக தான் உள்ளது. ஆனால் என்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்கேற்கலாம் என்ற ஆர்வத்தில் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன் என்றார்.

    • இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
    • யஷஸ்வி ஜெய்ஸ்வால் 93 ரன்னும், சுப்மன் கில் 58 ரன்களை சேர்த்தனர்.

    ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது.

    இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-1 என முன்னிலையில் உள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 93 ரன்னும், ஷுப்மன் கில் 58 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

    இந்நிலையில் 160 ரன்களைச் சேர்த்தால் வெற்றி பெறலாம் என நினைத்தோம். ஆனால் இந்திய அணி பேட்டிங் செய்த விதத்தில் 180 ரன்கள் எடுத்திருந்தால் கூட போதுமானதாக இருக்காது என ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா கூறினார்.

    இப்போட்டியின் தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-

    இன்றைய போட்டிக்கான விக்கெட் சற்று ஈரமாக இருந்தது என்று நினைக்கிறேன். இதில் நாங்கள் 160 ரன்களைச் சேர்த்தால் வெற்றி பெறலாம் என நினைத்தோம். ஆனால் இந்திய அணி பேட்டிங் செய்த விதத்தில் 180 ரன்கள் எடுத்திருந்தால் கூட போதுமானதாக இருக்காது. ஒவ்வொரு விளையாட்டிலிருந்தும் நாங்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறோம்.

    கடைசி 5 ஓவர்களில் 8-10 ரன்கள் அதிகம் என்று நினைக்கிறேன். இந்த பிட்ச்சில் பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் பவுன்ஸ் கிடைத்தது. எனவே இன்னிங்ஸின் தொடக்கத்தில் நாங்கள் எங்களை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. இன்னிங்ஸ் இடைவேளையில் ஹெவி ரோலர் பிட்ச்சின் மீது பயன்படுத்தப்பட்ட காரணத்தால் நிலைமை அவர்களுக்கு சாதகாம செயல்பட்டது. இதன் காரணமாக அவர்கள் பேட்டிங் செய்யும் போது அது எளிதாக அமைந்துவிட்டது.

    இவ்வாறு ராஸா கூறினார்.

    • விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் சேசிங் செய்த அணி பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது.
    • இந்த பட்டியலில் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது.

    ஹராரே:

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதல் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்தது.

    இதில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-1 என முன்னிலையில் உள்ளது. ஜெய்ஸ்வால் 53 பந்தில் 93 ரன்னும், சுப்மன் கில் 39 பந்தில் 58 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதன் மூலம் இந்திய புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் சேசிங் செய்த அணி பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 200 ரன்களை சேசிங் செய்தது.

    விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமான 150-க்கும் மேற்பட்ட ரன் சேஸ்கள்

    பாகிஸ்தான் vs இங்கிலாந்து, கராச்சி, 2022 (இலக்கு: 200)

    நியூசிலாந்து vs பாகிஸ்தான், ஹாமில்டன், 2016 (இலக்கு: 169)

    இங்கிலாந்து vs இந்தியா, அடிலெய்டு, 2022 (இலக்கு: 169)

    இந்தியா vs ஜிம்பாப்வே, ஹராரே, 2024 (இலக்கு: 153)

    பாகிஸ்தான் vs இந்தியா, துபாய், 2021 (இலக்கு: 152)

    மேற்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 150க்கு மேற்பட்ட இலக்கை எட்ட குறைந்தபட்ச பந்துகளை எடுத்துக்கொண்ட போட்டிகளின் பட்டியலில் இன்றைய போட்டி முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 153 ரன்கள் இலக்கை 28 பந்துகள் மீதமிருந்த நிலையில் எட்டி இச்சாதனையை படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக 154 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 26 பந்துகள் மீதமிருந்த நிலையில் எட்டியது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி சார்பில் அதிகபட்ச பார்ட்னஷிப்பை குவித்த வீரர்கள் வரிசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இன்றைய ஆட்டத்தில் இருவரும் இணைந்து 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இவர்கள் இருவரும் இணைந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே இதுநாள் வரை சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேற்கொண்டு இந்திய அணிக்காக தொடக்க வீரர்கள் இணைந்து அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்கள் வரிசையில் யஷஸ்வி மற்றும் ஷுப்மன் கில் இருவரும் ஐந்தாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர். முன்னதாக ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 165 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • அர்ஜென்டினா, கொலம்பியா அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறின.
    • முதல் பாதியில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் துவங்கி இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

    இதனிடையே அரையிறுதியில் தோல்வியை தழுவிய கனடா மற்றும் உருகுவே அணிகள் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் 8-வது நிமிடத்தில் உருகுவே தனது முதல் கோலை அடித்தது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    மறுபுறம் கனடா அணி போட்டியின் 22-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தது. இதன் காரணமாக இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் அடுத்த கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டினர். எனினும், முதல் பாதியில் கனடா 1-1 உருகுவே அணிகள் சமநிலையில் இருந்தன.

     


    இதைத் தொடர்ந்து 2-வது பாதியில் வெகு நேரம் ஆகியும் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க முடியாத அளவுக்கு போட்டி நெறுக்கமாக இருந்தது. போட்டியின் 80-வது நிமிடத்தில் கனடா அணி தனது 2-வது கோலை அடித்து முன்னிலை பெற்றது.

    இதைத் தொடர்ந்து 90-வது நிமிடத்தில் உருகுவே அணியும் தனது 2-வது கோலை அடித்ததால் போட்டி மீண்டும் சமனுக்கு வந்தது. இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் இரு அணி வீரர்களால் வெற்றிக்கான கோல் அடிக்க முடியாமல் போனது.

    இதன் காரணமாக பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது. இதில் 3-4 என்ற கணக்கில் உருகுவே வெற்றி பெற்றது அசத்தியது. இதன் காரணமாக நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் உருகுவே மூன்றாவது இடம்பிடித்தது.

    • இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 50 ரன்னும், யூசுப் பதான் 30 ரன்னும் எடுத்தனர்.
    • இந்திய அணி 19.1 ஒவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்றது.

    அப்போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா மற்றும் யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சோயப் மாலிக் 41 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அனுரீத் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து 157 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில் உத்தப்பா 10 ரன்னிலும் சுரேஷ் ரெய்னா 4 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனை தொடர்ந்து அம்பதி ராயுடு மற்றும் குர்கீரத் சிங் மான் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பதி ராயுடு அரை சதம் விளாசி அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் குர்கீரத் சிங் மான் 34 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த யூசப் பதான் அதிரடியாக விளையாடினார். அவர் 16 பந்தில் 30 ரன்கள் விளாசி அவுட் ஆனார்.

    இறுதியில் இந்திய அணி 19.1 ஒவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 50 ரன்னும், யூசுப் பதான் 30 ரன்னும் எடுத்தனர்.

    இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அம்பதி ராயுடுவும் தொடர் நாயகனாக யூசப் பதானும் தேர்வு செய்யப்பட்டனர்.

    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 26-ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • தற்போது இந்த போட்டி ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு வருகிற 27-ம் தேதி நடைபெறும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பல்லகெலேயில் வருகிற 26-ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது இந்த போட்டி ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு வருகிற 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதேபோல் 2-வது, 3-வது 20 ஓவர் போட்டியும் ஒருநாள் தள்ளிபோடப்பட்டு முறையே 28, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ஒருநாள் தொடரில் முதலாவது ஆட்டம் ஆகஸ்டு 1-ம் தேதியில் இருந்து 2-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 2-வது, 3-வது ஒருநாள் போட்டி ஏற்கனவே அறிவித்தபடி முறையே ஆகஸ்டு 4, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் கொழும்பில் அரங்கேறுகிறது.

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
    • இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.

    துபாய்:

    இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்தது. இதில் சிறப்பாக ஆடிய இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியுடன் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இந்தப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது.

    புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 68.52 சதவீதத்துடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 62.50 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 50 சதவீதத்துடன் 3-வது இடத்திலும், இலங்கை 50 சதவீதத்துடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 36.66 சதவீதத்துடன் 5-வது இடத்திலும் உள்ளன.

    வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், இங்கிலாந்து ஆகியவை 6, 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இறுதிப்போட்டியில் இத்தாலி வீராங்கனை தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.

    இதில் கிரெஜ்சிகோவா முதல் செட்டை 6-2 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பவுலினி 2வது செட்டை6-2 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கிரெஜ்சிகோவா 6-4 என கைப்பற்றி அசத்தினார். அத்துடன் சாம்பியன் பட்டமும் வென்றார். கிரெஜ்சிகோவாவுக்கு 28 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

    • ஏழு சீசனில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.
    • கடந்த மூன்று சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை.

    ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். தலைசிறந்த பேட்ஸ்மேனான இவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். கடந்த ஏழு சீசனில் இவரது தலைமையில் டெல்லி அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.

    இந்த சீசனில் 14 போட்டிகளில் ஏழு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அத்துடன் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், கடைசி மூன்று சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இந்த நிலையில் ரிக்கி பாண்டியை பிரிவதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தெரிவித்துள்ளது.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 152 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 156 ரன்கள் எடுத்து வென்றது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, இந்தியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் சிக்கந்தர் ராசா 28 பந்தில் 46 ரன்கள் எடுத்தார். டாடிவான்சே மருமானி 32 ரன்னில் அவுட்டானார். வெஸ்லி மாதவரே 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர்.

    இறுதியில், இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-1 என முன்னிலையில் உள்ளது.

    ஜெய்ஸ்வால் 53 பந்தில் 93 ரன்னும், சுப்மன் கில் 39 பந்தில் 58 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    ×