என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • எந்த அணியும் நான்கு முறை யூரோ கோப்பை வென்றதில்லை.
    • யூரோ கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று முடிந்தது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன. இதில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று அசத்தியது.

    இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி நான்காவது முறையாக யூரோ கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவரை எந்த அணியும் நான்கு முறை யூரோ கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதே போன்று யூரோ கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பையை தவறவிட்ட அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. முன்னதாக 2020 ஆண்டு நடைபெற்ற யூரோ கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.

     


    தற்போது நடைபெற்ற யூரோ கோப்பை இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வியடைந்துள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக இருமுறை யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த அணியாக இங்கிலாந்து உள்ளது.

    நடைபெற்று முடிந்த 2024 யூரோ கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. சர்வதேச அளவில் (யூரோ/ உலகக் கோப்பை) ஏழு போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றுள்ளது.

    முன்னதாக 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணி இதே போன்று ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயின் அணி நடந்து முடிந்த யூரோ கோப்பை தொடரில் 15 கோல்களை அடித்துள்ளது. யூரோ கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் ஒரே தொடரில் இத்தனை கோல்களை அடித்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • கோல் அடிப்பதில் முனைப்பு காட்டினர்.
    • நிகோ வில்லியம்ஸ் அதனை கோலாக மாற்றினார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    முதலாவது அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று நள்ளிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் துவக்கம் முதலே கோல் அடிப்பதில் முனைப்பு காட்டினர்.

    போட்டியின் முதல் பாதி வரை இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி வரை போட்டி 0-0 என்ற கணக்கிலேயே இருந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து கோப்பையை வெல்ல இரு அணி வீரர்களும் தீவிரமாக விளையாடினர். போட்டியின் 47 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் யமால் அசிஸ்ட் செய்ய நிகோ வில்லியம்ஸ் அதனை கோலாக மாற்றினார்.

     


    இதன்பிறகு ஆட்டம் சூடுபிடிக்க துவங்கியது. துவக்கம் முதலே போராடி வந்த ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. போட்டியில் ஒரு கோல் அடிக்கப்பட்டதை தொடர்ந்து விறுவிறுப்பாக மாறியது. ஸ்பெயின் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர்கள் பதில் கோல் அடிக்க தீவிரம் காட்டினர்.

    இதன் முயற்சியாக 73 ஆவது நிமிடத்தில் பெலிங்கம் அசிஸ்ட் செய்ய இங்கிலாந்து வீரர் கோலெ பால்மர் கோல் அடித்து அசத்தினார். இதனால் போட்டி முடியும் தருவாயில் பரபர சூழல் உருவானது. இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற கணக்கில் மற்றொரு கோல் அடித்து வெற்றி வாகை சூட இரு அணி வீரர்களும் களத்தில் மல்லுக்கட்டினர்.

    நீண்ட நேரம் நீடிக்காத போராட்டத்தால் 86 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மிகெல் ஒயர்சபால் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இவர் கோல் அடிக்க ககெரெல்லா அசிஸ்ட் செய்தார். இதைத் தொடர்ந்து போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி யூரோ கோப்பை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி நான்காவது முறைாக யூரோ கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. முன்னதாக 1964, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் ஸ்பெயின் அணி யூரோ கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. யூரோ கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மழையின் காரணமாக ஆட்டம் 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
    • ரவிசந்திரன் அஷ்வின் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 45 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.

    இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று இரவு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    ஆனால் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழையின் காரணமாக ஆட்டம் 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

    முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணியில் டாப் 4 பேட்ஸ்மேன்களில் 3 பேர் டக் அவுட்டாகி வெளியேறினர். ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரவிசந்திரன் அஷ்வின் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 45 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 7 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது திண்டுக்கல் அணி. சேப்பாக்க அணி தரப்பில் அபிஷேக் தன்வர், கணேசன் பெரியசாமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    65 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சந்தோஷ் குமார் துரைசாமி முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த நாராயண் ஜெகதீசன், பாபா அபார்ஜித் திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர்.

    4.5 ஓவர்களில் 65 ரன்கள் அடித்து சேப்பாக் அணி எளிதாக இப்போட்டியில் வென்றது. அதிரடியாக விளையாடிய நாராயண் ஜெகதீசன் 32 ரன்களும் பாபா அபார்ஜித் 31 ரன்களும் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இப்போட்டியில் வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 5 ஆம் இடத்திலிருந்து 3 ஆம் இடத்திற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முன்னேறியுள்ளது. 

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • விம்பிள்டன் டென்னிஸ் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    லண்டன்:

    டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இன்று இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசை ஜோகோவிச் எதிர்கொண்டார்.

    இப்போட்டியில் 6-2, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் அசத்தல் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    தொடர்ச்சியாக 2வது ஆண்டாக இறுதிப்போட்டியில் செர்பியாவின் நட்சத்திர வீரர் ஜோக்கோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கார்லோஸ் அல்காரஸ் வென்றுள்ளார்.

    • சிக்கந்தர் ராசா வீசிய முதல் ஓவரில் டாஸ் பாலாக வந்த முதல் பாலை ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார்.
    • பிரீ ஹிட்டாக வந்த அடுத்த பாலையும் ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார்.

    ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையே 5 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

    இப்போட்டியின் முதல் ஓவரில் வீசப்பட்ட முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசி யஷஸ்வி ஜெய்ஷ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். முதல் ஓவரை சிக்கந்தர் ராசா வீசிய வீசினார். டாஸ் பாலாக வந்த முதல் பாலை ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார். அந்த பால் நோ பால் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பிரீ ஹிட்டாக வந்த அடுத்த பாலையும் ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி ஒரே பந்தில் 13 ரன்கள் குவித்தது.

    இதன்மூலம் டி20 போட்டியில் முதல் பந்திலேயே 13 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.

    மேலும், டி20 போட்டியில் முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசிய 2 ஆவது வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஷ்வால் படைத்துள்ளார்.

    இதற்கு முன்பு தான்சானியாவை சேர்ந்த இவான் இஸ்மாயில் செலிமானி என்ற வீரர் ருவாண்டா அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசியுள்ளார்.

    • 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது.
    • 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையே 5 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 12 ரன்னிலும் சுப்மன் கில் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.அடுத்ததாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 14 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    பின்னர் ஜோடி சேர்ந்த சாம்சன் - ரியான் பராக் சிறப்பாக விளையாடினார். நிதானமாக விளையாடிய சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    ரியான் பராக் 22 ரன்னிலும் சிவம் துபே 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழந்தது.

    இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக டியான் மியர்ஸ் 34 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டும் சிவம் துபே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

    • 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.

    இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 3 லீக் ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    • இன்று சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின.
    • திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.

    இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிமைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இன்று சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன் படி முதலில் களமிறங்கிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சஞ்சய் யாதவ் 33 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சேலம் அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    அடுத்ததாக களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வீரர்கள் திருச்சி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை மட்டுமே சேலம் அணி எடுத்தது.

    இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி அபார வெற்றி பெற்றது. சேலம் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது அட்னான் கான் 40 ரன்களும் விவேக் 33 ரன்களும் எடுத்தனர். திருச்சி அணி தரப்பில் சரவண குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • நிதானமாக விளையாடிய சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அவுட்டானார்.
    • 168 ரன்கள் என்ற இலக்கை துரத்தி ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்து வருகிறது.

    நிதானமாக விளையாடிய சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அவுட்டானார்.ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையே 5 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 12 ரன்னிலும் சுப்மன் கில் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.அடுத்ததாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 14 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    பின்னர் ஜோடி சேர்ந்த சாம்சன் - ரியான் பராக் சிறப்பாக விளையாடினார். நிதானமாக விளையாடிய சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    ரியான் பராக் 22 ரன்னிலும் சிவம் துபே 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது.

    168 ரன்கள் என்ற இலக்கை துரத்தி ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்து வருகிறது.

    5 போட்டிகள் டி20 தொடரில் 3 - 1 என்ற கணக்கில் ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் நடைபெற்றது.
    • உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி, சிரிப்பு நிறைந்ததாக இருக்கட்டும்.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    இந்நிலையில், ராதிகா மெர்ச்சண்ட் - ஆனந்த் அம்பானி தம்பதிக்கு இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில், "ராதிகா, உங்கள் பிரகாசமான புன்னகை என்றும் மறையாது. ஆனந்த், உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும் நீங்கள் காட்டும் அதே அன்புடனும் கருணையுடனும் ராதிகாவைத் தொடர்ந்து அன்புடன் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி, சிரிப்பு நிறைந்ததாக இருக்கட்டும். வாழ்த்துகள் விரைவில் சந்திப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • விராட் கோலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை வழங்கினார்.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்தது. தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவைத் தோற்கடித்து உலக கோப்பையை கைப்பற்றியது.

    20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

    2013 ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கு அடுத்து 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்றுள்ளது.

    2019 ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு விராட் கோலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை வழங்கினார். அப்போது இந்த முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    இந்நிலையில், ரோகித்தை கேப்டனாக்க முடிவு செய்தது குறித்து சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.

    "இந்திய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்தபோது எல்லோரும் என்னை விமர்சித்தனர். தற்போது ரோகித் தலைமையில் இந்திய அணி உலக கோப்பை வென்றதும் அனைவரும் விமர்சிப்பதை நிறுத்திவிட்டனர். மேலும், நான்தான் ரோஹித்தை கேப்டனாக நியமித்தேன் என்பதையே அனைவரும் மறந்துவிட்டனர் என்று என்று சவுரவ் கங்குலி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

    • இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 3 லீக் ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    கோவை:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.

    இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிமைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோத உள்ளன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 3 லீக் ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    அதேவேளையில், 2 ஆட்டங்களில் ஆடியுள்ள திண்டுக்கல் அணி 1 வெற்றி, 1 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் தங்களது 2-வது வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்த ஆட்டத்திற்கு முன்னதாக நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3.15 மணிக்கு நடைபெறுகிறது.

    ×