என் மலர்
விளையாட்டு
- டி.என்.பி.எல். தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடந்து வருகின்றன.
- டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
நெல்லை:
8-வது டி.என்.பி.எல். தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் தற்போது நெல்லையில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். சாய் சுதர்சன் ஓரளவு விளையாடி 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
19-வது ஓவரில் கோவை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 4 ரன்களை எடுத்தது. கேப்டன் ஷாருக் கான் 5 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 26 பந்தில் 51 ரன்கள் குவித்து அவுட்டானார்.
இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது.
மதுரை அணி சார்பில் அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டும், மிதுன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.
- மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
- முதல் போட்டியில் பாகிஸ்தான் யுஏஇ-யை எளிதில் வீழ்த்தியது.
தம்புல்லா:
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், பி பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து இடம்பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இன்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் யுஏஇ-யை எளிதில் வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ரன்களை குவித்துள்ளது. ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேமலதா 47 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 48 பந்தில் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சஜனா 10 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களைக் குவித்துள்ளது.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி களமிறங்குகிறது.
- ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது.
- டோக்கியோ ஒலிம்பிக்கில் வோண்ட்ரசோவா வெள்ளி வென்றார்.
பாரிஸ்:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து செக் நாட்டு வீராங்கனையான மார்கெட்டா வோண்ட்ரசோவா மற்றும் போலந்து வீரர் ஹ்யூபர்ட் ஹர்காக்ஸ் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வகையில் கவனம் செலுத்துவதற்காக ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுகிறேன் என வோண்ட்ரசோவா தெரிவித்துள்ளார்.
இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலந்து வீரர் ஹர்காக்ஸ் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
- ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணியில் இடம் பிடித்தவர் சேத்தன் சகாரியா.
- 2021-ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தார்.
ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணியில் இடம் பிடித்தவர் சேத்தன் சகாரியா. குஜராத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமானார். அந்த தொடரில் இடம் பெற்று விளையாடி 14 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும், டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார். ஆனால், ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இந்நிலையில் சேத்தன் சகாரியா மற்றும் மேகனா கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில், கடந்த 14-ம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று சகாரியா பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
- முதலில் பேட்டிங் செய்த யு.ஏ.இ. 103 ரன்கள் அடித்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 107 ரன்கள் எடுத்து வென்றது.
தம்புல்லா:
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான், யு.ஏ.இ. அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, யு.ஏ.இ. அணி முதலில் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.
இறுதியில், யு.ஏ.இ. அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் தீர்த்தா 40 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் சாடியா இக்பால், சந்து மற்றும் துபா ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்கம் முதல் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் 14.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
குல் பெரோசா 62 ரன்னும், முனீபா அலி 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். நடப்பு தொடரில் பாகிஸ்தான் பெறும் 2வது வெற்றி இதுவாகும்.
- இலங்கை தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்படுகிறார்.
- இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று இலங்கை சென்றடைந்தது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார்.
இந்நிலையில் கம்பீர் தலைமையில் முதல் வலை பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டனர். சஞ்சு சாம்சன் மற்றும் துபே ஆகியோருக்கு கம்பீர் ஆலோசனகளை வழங்கினார். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்திய அணின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட உள்ளார்.
- மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மா விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி சிஎஸ்கே அணியில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை:
ஐபிஎல் 2025-ம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூலை 30 மற்றும் ஜூலை 31 ஆகிய தேதிகளில் ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மீண்டும் நடக்கவுள்ளது.
ஏற்கனவே பல்வேறு அணிகளும் தங்களின் கருத்துகளை கூறியுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நிறைய வீரர்கள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
கடந்த சீசனில் குஜராத் அணியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஹர்திக் பாண்டியாவை திடீரென மும்பை அணி நிர்வாகம் கேப்டனாக அறிவித்தது. அதற்கு ரோகித் சர்மாவின் ரசிகர்கள் பலரும் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளார். ஐபிஎல் விதிகளின்படி 3 இந்திய வீரர்களை மட்டுமே ஒரு அணியால் தக்க வைக்க முடியும். இதனால் ரோகித் சர்மாவை தக்க வைக்க முடியாது என்றே பார்க்கப்படுகிறது. இதனிடையே மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மா விலகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி மெகா ஏலத்தில் ரோகித் சர்மா பங்கேற்றால், பல்வேறு அணிகளும் அவரை வாங்க முயற்சிப்பார்கள். சீனியர் வீரர் என்றாலும் பிராண்ட் மதிப்புமிக்க என்பதும், டி20 உலகக்கோப்பையை வென்ற கேப்டன் பெயரும் ரோகித் சர்மாவுக்கு சாதகமாக அமையும்.
அதேபோல் ஆர்சிபி, லக்னோ, பஞ்சாப் உள்ளிட்ட 3 அணிகளும் சரியான கேப்டன் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்காவுடன் ரோகித் சர்மா நெருங்கிய நட்பில் இருந்து வருகிறார். இதனால் லக்னோ அணியின் கேப்டன் பதவியை ரோகித் சர்மா ஏற்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
ரோகித் மட்டுமல்லாமல் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் மும்பை அணியில் இருந்து வெளியேற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
போன ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணி உரிமையாளர் மைதானத்தில் வைத்து கேஎல் ராகுலை கடுமையாக கண்டித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் மீண்டும் ஆர்சிபி அணிக்கு திரும்ப உள்ளார்.
இதேபோல் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட், சிஎஸ்கே அணிக்கு மாற உள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
அடுத்த ஐபிஎல் தொடரில் 4 அணியின் கேப்டன் மாற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இலங்கையின் அணியின் கேப்டனாக அசலங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- தனஞ்ஜெயா மற்றும் மேத்யூஸ் அணியில் இடம் பெறவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையின் அணியின் கேப்டனாக அசலங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தனஞ்ஜெயா மற்றும் மேத்யூஸ் அணியில் இடம் பெறவில்லை. சதீர சமரவிக்ரம மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோரும் அணியில் இருந்து வெளியேறினர். அதற்கு பதிலாக சமிந்து விக்ரமசிங்க, பினுர பெர்னாண்டோ மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ போன்றவர்களை தேர்வுக்குழு தேர்வு செய்தது.
இந்தியாவுக்கு எதிரான இலங்கை டி20 அணி விவரம்:-
சரித் அசலங்க (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனகா, வணிந்து ஹசரங்கா, துனித் வெல்லலகே, மகேஷ் தீக்ஷனா, சமிந்து விக்ரமசிங்க, மதீஷ பத்திரனா, நுவான் துஷாரா, துஷ்மந்த சமீரா, பினுர பெர்னாண்டோ.
- சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.
- பிப்ரவரி 19-ம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9-ம் தேதி முடிகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தும் தொடர் "சாம்பியன் டிராபி," இது மினி உலகக் கோப்பை தொடர் என்றும் அழைக்கப்படுகிறது. இதுவரை எட்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் நடைபெற்றுள்ளன. கடைசியாக 2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று அசத்தியது.
ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு துவக்கத்தில் பாகிஸ்தான் முதல்முறையாக நடைபெற இருக்கிறது.
பாகிஸ்தானில் நடைபெறுவதால் இந்த தொடரில் பாகிஸ்தான் பரிந்துரைக்கும் அட்டவணையை ஐசிசி அறிவிக்கும். ஒருவேளை பாகிஸ்தான் உருவாக்கிய அட்டவணையில் திருத்தங்கள் இருப்பின் அதுகுறித்து போட்டி நடத்தும் நாட்டிற்கு தகவல் தெரிவிக்கப்படும். இதனிடையே 2025-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு அணியை அனுப்பாமல் இந்தியா, இலங்கை மற்றும் வங்காள தேசத்தை பின்பற்றும் என ஆப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்படிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானுக்கு சென்று சாம்பியன்ஸ் டிராபியில் கலந்து கொள்ளும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இலங்கையின் கொழும்பில் நடந்த ஐசிசியின் ஆண்டு கூட்டத்தில் அதிகாரிகள் பிசிபி தலைவர் மோஷின் நக்வியை சந்தித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- 19 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்.
- ஒலிம்பிக்கில் இருமுறை ஒற்றையர் பிரிவில் தங்கமும், கலப்பு இரட்டையரில் வெள்ளியும் வென்றவர்.
லண்டன்:
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் டென்னிசில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
19 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையை பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்.
இதுதொடர்பாக, ஆண்டி முர்ரே எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது கடைசி டென்னிஸ் போட்டியாக ஒலிம்பிக்ஸிற்காக பாரிஸ் வந்தடைந்தேன். கிரேட் பிரிட்டனுக்காக போட்டியிடுவது எனது தொழில் வாழ்க்கையின் மறக்க முடியாத வாரங்கள். அதை ஒரு இறுதி முறையாகச் செய்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
ஆண்டி முர்ரே ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு இரட்டையரில் வெள்ளிப் பதக்கமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது.
- ஐ.பி.எல் தொடரில் இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராகுல் டிராவிட் கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டு ஐ.பி.எல் தொடர்களில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தாய்லாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
- சிறப்பாக பந்துவீசிய ரபீயா கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் தாய்லாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய தாய்லாந்து அணி வங்காளதேசம் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தாய்லாந்து அணியின் நட்டயா பூச்சாத்தம் (40 ரன்கள்) தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதன் காரணமாக தாய்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களையேசேர்த்தது. வங்காளதேசம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரபீயா கான் 4 விக்கெட்டுகளையும் சபிகுன் நஹர் ஜெஸ்மின் மற்றும் ரிது மோனி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
97 எனும் எளிய இலக்கை துரத்திய வங்காளதேசம் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை குவித்தது. இதன் மூலம் வங்காளதேசம் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியின் திலாரா அக்தர் 17 ரன்களையும், முர்சிதா கதுன் 50 ரன்களையும், இஷாமா தன்ஜிம் 16 ரன்களையும் சேர்த்தனர்.






