என் மலர்
விளையாட்டு
- 18 ஆண்டுகள் கழித்து இலங்கைக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
- இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 1997-ம் ஆண்டு கைப்பற்றி இருந்தது.
கொழும்பு:
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் 18 ஆண்டுகளுக்கு பின்பு மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது. அதாவது இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 1108 நாட்களுக்குப் பின் இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் இலங்கை வீழ்த்தி உள்ளது. கடைசியாக ஜூலை 2021-ல் இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் இலங்கை வீழ்த்தி இருந்தது.
இந்த நிலையில் 3-வது போட்டியில் இந்தியா வென்றால் இந்த தொடரை 1 - 1 என சமன் மட்டுமே செய்ய முடியும். ஒருவேளை இலங்கை அணி 3-வது போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை 2 - 0 என கைப்பற்றும். எனவே, இந்தியா இந்த தொடரை கைப்பற்ற வாய்ப்பு இல்லை. இதனால் 18 ஆண்டுகள் கழித்து இலங்கை அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டன. அதனால், அந்த தொடர் 0 - 0 என்ற அளவில் முடிவுக்கு வந்தது. அந்தத் தொடர் சமன் செய்யப்பட்டது.
அதேபோன்ற சூழ்நிலை இப்போதும் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கும் கூட இந்திய அணி 3-வது போட்டியில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் தொடரை சமன் செய்ய முடியும். ஒரு வேளை இந்திய அணி மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்தால் 27 ஆண்டுகளுக்குப் பின்பு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த மோசமான சாதனையை செய்யும்.
கடைசியாக 1997-ம் ஆண்டு இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தென்கொரிய வீராங்கனை தங்கம் வென்றார்.
- சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இன்று நடந்த பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தென்கொரிய வீராங்கனை அன் செ யங், சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவ் உடன் மோதினார். இதில் தென்கொரிய வீராங்கனை 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வென்று தங்கம் வென்றார். தோல்வி அடைந்த சீன வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில், சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவ் வெள்ளிப் பதக்கம் பெற்றதும், தன் கையில் ஸ்பெயின் நாட்டை நினைவு கூரும் வகையில் சிறிய பின் வைத்திருந்தார்.
அவரது இந்த செயல் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினுக்கு இந்தப் பதக்கத்தை சமர்ப்பிப்பது போல இருந்தது. சீனா வீராங்கனையின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அரையிறுதியில் கரோலினா மரின் முன்னிலை பெற்றிருந்தபோது காயத்தால் போட்டியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவுக்கு எதிரான 2-வது போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜெஃப்ரி வாண்டர்சே ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இப்போட்டியில் இலங்கை அணி வீரர் ஜெஃப்ரி வாண்டர்சே 10 ஓவர்கள் பந்து வீசி 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சிறப்பான ஆட்டத்திற்காக அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம் ஒரு சுழற்பந்து வீச்சாளராக, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சு வெளிப்படுத்திய வீரர்கள் வரிசையில் ஜெஃப்ரி வாண்டர்சே 3-வது இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக கடந்த 1989-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 41 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 3-வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது அதனை ஜெஃப்ரி வண்டர்சே முறியடித்துள்ளார்.
இந்த பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 30 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும், இலங்கையைச் சேர்ந்த அஞ்சதா மெண்டிஸ் 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
- டேபிள் டென்னிசில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
- துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதிபெற்றது
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் அனந்த்ஜீத் நருகா, மகேஸ்வரி சவுகான் ஜோடி போட்டியிட்டனர்.
இதில் இந்திய ஜோடி 146 புள்ளிகள் எடுத்து 4-வது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது.
- இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி 3-1 என வென்றது.
- ஒற்றையர் பிரிவின் 2 சுற்றிலும் மணிகா பத்ரா வென்றார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஜோடி ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கிரிஷ் காமத், ருமேனிய ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 11-9, 12-10, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது.
2வது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா 3-0 என வென்றார். இதன்மூலம் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றது.
3வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா 2-3 என தோல்வி அடைந்தார். இதன்மூலம் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.
4வது சுற்றில் இந்தியாவின் அர்ச்சனா காமத் 1-3 என தோல்வி அடைந்தார். இதன்மூலம் இரு அணிகளும் 2-2 என சமனிலை வகித்தன.
இறுதியில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது சுற்று நடந்தது. இதில் இந்தியாவின் மணிகா பத்ரா அபார வெற்றி பெற்றார். இதையடுத்து இந்தியா ருமேனியாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.
- இந்தியா-ஜெர்மனி ஆட்டம் நாளை (6-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு நடக்கிறது.
- மற்றொரு அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மோதுகிறது.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டியில் நேற்று கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. ஹர்மன் பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி கால் இறுதியில் இங்கிலாந்துடன் விளையாடியது. ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. 22-வது நிமிடத்தில் இந்திய அணிக்காக கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார். 27-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மார்டன் கோல் அடித்தார்.
இதனால் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் இந்தியவீரர் அமித் ரோஹிதாஸ் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்தனர். இதனால் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. 10 வீரர்களுடன் விளையாடி இந்தியா பெற்ற இந்த வெற்றி சிறப்பானது.
இந்திய அணி அரை இறுதியில் ஜெர்மனியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் நாளை (6-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அரை இறுதியில் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்து விடும். ஜெர்மனியை வீழ்த்துவது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். அந்த அணி ஸ்பெயினிடம் மட்டுமே தோற்று இருக்கிறது. இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருவதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜெர்மனி அணி கால் இறுதியில் அர்ஜென்டினாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
நாளை நடைபெறும் மற்றொரு அரை இறுதியில் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. மாலை 5.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பெல்ஜியமும், வெள்ளி பதக்கம் கைப்பற்றிய ஆஸ்திரேலியாவும் கால் இறுதியிலேயே வெளியேறி விட்டன. வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணி மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
பெண்கள் பிரிவில் இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-சீனா (பிற்பகல் 1.30 மணி), அர்ஜென்டினா-ஜெர்மனி (மாலை 4 மணி ) , நெதர்லாந்து-இங்கிலாந்து (இரவு 9 மணி), பெல்ஜியம்-ஸ்பெயின் (இரவு 11.30 மணி) மோதுகின்றன.
- வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் இன்று மோதுகிறார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை ஜி பிங் ஜியாவ் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தென் கொரிய வீராங்கனை அன் செ யங், சீன வீராங்கனை ஜி பிங் ஜியாவ் உடன் மோதினார்.
இதில் தென்கொரிய வீராங்கனை 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். தோல்வி அடைந்த சீன வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 8 வீரர்களும் 10 நொடிகளுக்குள் தங்களின் பந்தய தூரத்தை எட்டியுள்ளனர்.
- ஒலிம்பிக் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறையாகும்.
பாரிஸ்:
33-வது ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 26-ந்தேதி பாரீசில் கோலாகலமாக தொடங்கியது. மறுநாள் 27-ந்தேதி முதல் போட்டிகள் ஆரம்பமானது. இந்த நிலையில் நேற்றைய 9-வது நாளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.
இந்த பந்தயத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நோவா லைல்ஸ் முதல் 30 மீட்டர் வரை 8-வது இடத்தில் தான் இருந்தார். ஜமைக்காவின் தாம்சன் முன்னிலையில் இருந்தார். ஆனால் 50 மீ தூரம் கடந்த பின் நோவா லைல்ஸ் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தினார். கடைசியாக நோவா, தாம்சன் ஆகியோர் ஒரே நேரத்தில் இலக்கை அடைந்தனர்.
இருவரும் 9.79 நொடிகளில் வந்திருந்தாலும், நோவா லைல்ஸ் - தாம்சன் இடையில் 0.784 மைக்ரோ நொடிகள் வித்தியாசம் இருந்துள்ளது. இதனால் தாம்சன் 2-வது இடத்தை பிடித்தார். 3-வது இடத்தை அமெரிக்காவின் கெர்லி பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.
இந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மற்றொரு முக்கிய சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. என்னவென்றால் 100 மீட்டர் ரேஸில் பங்கேற்ற 8 வீரர்களும் 10 நொடிகளுக்குள் தங்களின் பந்தய தூரத்தை எட்டியுள்ளனர். 4-வது இடத்தில் வந்த தென்னாப்பிரிக்காவின் அகானி 9.82 நொடிகளிலும், இத்தாலியின் ஜேகப்ஸ் 9.85 நொடிகளிலும், போட்ஸ்வானாவின் டிபோகோ 9.86 நொடிகளிலும், அமெரிக்காவின் கென்னத் 9.88 நொடிகளிலும், ஜமைக்காவின் செவில் 9.91 நொடிகளிலும் பந்தயத்தை முடித்துள்ளனர்.
ஒலிம்பிக் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறையாகும். வெற்றிக்கு, தோல்விக்கும் இடையிலான இடைவெளி என்பது மைக்ரோ நொடிகளால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்ததை விடவும், அதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பதை முடிவு செய்வதற்கு நடுவர்கள் அதிக நேரம் எடுத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
- அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
- உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கிறார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரகாம் தோர்ப். 55 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கிரகாம் தோர்ப் மறைவு குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அதில், "கிரகாம் தோர்ப், MBE, காலமானார் என்ற செய்தியை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். கிரகாம் தோர்ப் மரணத்தால் உணரும் ஆழ்ந்த அதிர்ச்சியை விவரிக்க பொருத்தமான வார்த்தைகள் இல்லை என்று தோன்றுகிறது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக 100 போட்டிகளில் விளையாடி உள்ள கிரகாம் தோர்ப் 82 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 1996 மற்றும் 1999 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கும் கிரகாம் தோர்ப் இங்கிலாந்து அணி கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.
- இஸ்தான்புல் நகரில் வைத்து நாம் விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
- . ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தனது முதல் எக்ஸ் கணக்கை தொடங்கியுள்ள யூசுப் வெளியிட்ட இரண்டாவது பதிவு இது
துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடந்த போட்டியில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைத் துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர்.
ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஒற்றைக் கையில் எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களை யூசுப் பற்றிய விவாதமே ஆக்கிரமித்துள்ளது.
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் யூசுப், எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கிடம் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார். அதாவது, எதிர்காலத்தில் வரவுள்ள ரோபோட்கள், ஒரு கையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வாய்ப்பிருக்கிறதா? இதைப்பற்றி கண்டங்களை ஒன்றிணைக்கும் கலாச்சார தலைநகரமான துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வைத்து நாம் விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாகவே யூசுபின் ஒலிம்பிக் ஸ்டைலை வியந்து பாராட்டிய எலான் மஸ்க் தற்போது அவரது பதிவுக்கு உடனே பதில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,எ திர்கால ரோபோட்கள் பலகையின் மையத்தைக் குறிவைத்தே சுடும் திறன் கொண்டிருக்கும். நான் இஸ்தான்புல் வரும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன், உலகின் சிறந்த நகரங்களில் ஒன்று அது என்று பதிலளித்துள்ளார்.
Robots will hit the center of the bullseye every time
— Elon Musk (@elonmusk) August 4, 2024
இவர்களின் உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தனது முதல் எக்ஸ் கணக்கை தொடங்கியுள்ள யூசுப் வெளியிட்ட இரண்டாவது பதிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.
- உசைன் போல்ட்டுக்கும் நோவா லைல்ஸ்-க்கும் வெரும் 0.16 நொடிகளே வித்தியாசம்.
- போட்டியில் பங்கேற்ற 8 வீரர்களில் 7 வீரர்கள் 9 நொடிகளில் போட்டியை நிறைவு செய்து இருந்தனர்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. ஆண் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நேற்று நடைப்பெற்றது. அதில் அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் முதலிடம் பிடித்தார்.
100 மீட்டர் தடக்களத்தை வெறும் 9.784 நொடிகளில் கடந்து தங்க பதக்கத்தை வென்றார். ஏற்கனவே உலகின் அதிவேக வீரரான உசைன் போல்ட் 9.63 நொடிகளில் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உசைன் போல்ட்டுக்கும் நோவா லைல்ஸ்-க்கும் வெரும் 0.16 நொடிகளே வித்தியாசம்.
போட்டியில் பங்கேற்ற 8 வீரர்களில் 7 வீரர்கள் 9 நொடிகளில் போட்டியை நிறைவு செய்து இருந்தனர். இதனால் யார் போட்டியில் முதல் இடத்தை பிடித்தார் என்று தெரிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. பின் நேரத்தை வைத்து பார்க்கும் போது நோவா 0.005 மில்லி நொடிகளில் கிஷேனை விட முன்கூட்டியே வந்ததால் போட்டியில் முதல் இடத்தை பிடித்தார்.
நோவா - 9.784 - முதல் இடம்
தாம்ப்சன் - 9.789 இரண்டாம் இடம்
நோவாவின் வெற்றி பலரால் கொண்டாடப்பட்டது. வெற்றிப்பெற்ற பின் நோவா அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் "எனக்கு ஆஸ்துமா. ஒவ்வாமை, டிஸ்லக்ஸியா, ஏடிடி, மன அழுத்தம் இருக்கிறது. ஆனால் நான் கூறுகிறேன் இது எல்லாம் இருந்தும் என்னால் முடிந்தது என்றால். ஏன் உங்களால் முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
நோவாவின் இப்பதிவு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று உத்வேகத்தை கொடுத்துள்ளது. இவரின் இந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
- முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது.
இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இலங்கை மற்றும் இந்தியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி நேற்றிரவு கொலம்போவில் நடைபெற்றது. துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் தோல்வியுற்ற பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் பற்றி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.
இது குறித்து பேசும் போது, "நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. எப்படி விளையாடினோம் என்பது பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், மிடில் ஓவர்களில் எங்களது பேட்டிங் பற்றிய பேச்சுவார்த்தை நிச்சயம் இருக்கும். ஒரு போட்டியில் தோல்வி அடையும் போது, எல்லாமே வலிக்கும்."
"அந்த பத்து ஓவர்களை மட்டுமே கூறிவிட முடியாது. தொடர்ந்து நன்றாக விளையாட வேண்டும், அந்த வகையில் இன்று நாங்கள் தோற்றுவிட்டோம். சிறிது ஏமாற்றமாகத் தான் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் நடக்கும். உங்கள் கண் முன் இருப்பதை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்," என்று தெரிவித்தார்.






